Jun 30, 2013

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு!

கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.

இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.

இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.

இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார்.

இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன.

அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது.

நன்றி : Dinamani.


Jun 25, 2013

இந்தியா கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?

கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?டேராடூன்: உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி? கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்துக்கு வருபவர்களை சுற்றிக்காட்ட 4700 சுற்றுலா வழி காட்டிகள் இருந்தனர். வாகன ஓட்டுனர்கள் 500 பேரும், பூசாரிகள் 100 பேரும் ஓட்டல் தொழிலாளர்கள் சுமார் 700 பேரும் இருந்தனர். இவர்களில் ஆயிரம் பேர்தான் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

மணப்பெண் போல் மாற்றி வைக்கும் மகிழம்பூ!....இயற்கை தரும் இளமை வரம்!





கிழம்பூ... பேரைக் கேட்டாலே மனம் மலரும். மகிழ்ச்சியை மடை திறந்த வெள்ளமாகத் தருவதில் மகிழம்பூவுக்கு ஈடு இணையே இல்லை. வாடிப் போனாலும், வற்றாத வாசனையை வாரி வழங்கும் வள்ளலான மகிழம்பூவை தலையில் சூடும் போது கிடைக்கும் அழகைவிட, மூலிகையாக பயன்படுத்தினால் கிடைக்கும் அழகு... அளவில்லாதது. இளம்பெண்களின் சருமப் பிரச்னைகளை சடுதியில் போக்கிடும் அற்புத வித்தையும் இந்த மலரிடம் ஒளிந்து கிடக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் அள்ளிக் கொள்வோமா...?
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவுடன், அரை கப் குளிர்ந்த ரோஸ் வாட்டரை (ரோஜா பூக்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தும் சேர்க்கலாம்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் 'பேக்' போடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, பளபளக்கும்.

மகிழம்பூ பவுடர் (பூக்களை காய வைத்து அரைத்தது) - ஒரு டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வர, அன்று பூத்த மலராக முகம் பளீரென்று இருக்கும்.
மணப்பெண்ணுக்கு ஏற்ற அழகு சிகிச்சைகள்...
உடல்: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு, நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டுங்கள். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து குளியுங்கள். அரோமா தெரபி செய்து கொண்டதுபோல் உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வாசனையோடு கூடிய பளபளப்பு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்.
தலை: கால் கிலோ நல்லெண்ணெயுடன் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இதனுடன், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளியுங்கள். கண்டிஷனர் போட்டதுபோல் கூந்தல் மென்மையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மேலே உடல் மற்றும் தலைக்கு குறிப்பிட்டுள்ள தைலங்களை தேய்த்துக் குளித்தபிறகு, மகிழம்பூ போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் உடல் மற்றும் தலையை அலசுங்கள். புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்வதோடு அற்புதமான அழகும் சேர்ந்துகொள்ளும்.
தோல்: ஃப்ரெஷ் மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன், அதே அளவு பயத்தம்பருப்பு மாவைக் கலந்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். திட்டுக்கள், கருமை, வியர்வை நாற்றம் அத்தனையும் காணாமல் போய் தோல் பளபளவென மின்னும்.
உலர்ந்த மகிழம்பூ, மரிக்கொழுந்து, பூலான்கிழங்கு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் இந்தப் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். மாசு, மரு இல்லாத வாசனையுடன் கூடிய அழகு ஜொலிக்கும்.
தோலில் வறட்சி தலையில் செதில் போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கவும் மகிழம்பூ உதவுகிறது.
100 கிராம் வெந்தயத்தூளுடன், மகிழம்பூ பவுடர்(பூக்களை காய வைத்து அரைத்தது), புங்கங்காய்தூள், கடலை மாவு இவை தலா 50 கிராம் சேர்த்து கலப்பு பவுடர் தயாரித்துக் கொள்ளுங்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பவுடரில் சிறிது எடுத்து உச்சி முதல் பாதம் வரை தேய்த்து அலசுங்கள். செதில் பொடுகு, தொல்லை நீங்கி கூந்தல் நல்ல கண்டிஷனில் இருக்கும். தோலும் பளபளக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவைக் கலந்து கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கலப்பு பவுடருடன், வெள்ளரி விதை பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள் இரண்டும் தலா 50 கிராம் கலந்து குளித்தால் சருமம் நல்ல நிறத்தோடு மின்னும்.
மனக்கலக்கத்தை போக்கும் மகிழம்பூ!
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மகிழம்பூவைத் தலையில் சூடிக் கொள்வதால் உடல் சூடு தணிந்து மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
இந்தப் பூவை தினமும் முகர்வதால் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதியில்லாமல் தவிப்பவர்களின் மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள்,

தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!....நாட்டு வைத்தியம்




ந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக் கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்... எழுதிக்கோங்க!
தவசுமுருங்கை இலையை (பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க) ஒரு கைப்பிடி எடுத்து இடிங்க. அதுல கிடைக்கற சாறை குடிச்சா... அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும்.
மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம். அதை மறந்துட்டு, புளிக்குழம்பு, புளிசாதம்னு மூக்குப்பிடிக்க வெட்டிப்புட்டு, நோய் குணமாகலையேனு இந்த பாட்டியைத் திட்டித் தீர்க்கக் கூடாது.
பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா... சொறி சொறியா... முளைச்சு உயிரை எடுக்கும். இதையெல் லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம் இருக்கு.
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்ல குணம் தெரியும்.

இதயம் காக்க 25 வழிகள்

!





''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை

Jun 22, 2013

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு


அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
இந்த கப்பலில் ஒருவர் மாத்திரமே பயணம் செய்யலாம்.

9 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் தண்ணீருக்குள் 30 ஆழத்தில் பயணிக்கும் விதமாக வடிவமைத்துள்ளார்.

அதில் வயர்லெஸ், ரேடியோ தொடர்பு சாதனங்கள், சுவாசிக்க வசதி போன்றவை உண்டு. இந்த கப்பலை அங்குள்ள ஏரியில் விரைவில் வெள்ளோட்டம் விட திட்டமிட்டுள்ளார்.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவில் 6 மாத இடைவிடாத முயற்சியில் இதை உருவாக்கியதாக ஜஸ்டின் தெரிவிக்கிறார்.

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது


மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.
மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.

300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டதாக கருதப்படும்.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.
அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

Jun 20, 2013

அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்


19 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள்.
இதனால் அதிகளவு மென்பொருட்களை கணனியில் நிறுவ வேண்டிய தேவை காணப்படுவதுடன், கணனியின் வேகமும் மந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும் Free Opener எனும் ஒரு மென்பொருளின் மூலம் அனைத்து வகையான கோப்புக்களையும் திறக்க முடியும்.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருள் மூலம் MP3, WMV, MID, WAV, AVI, WMV, FLV, MPG, MOV மற்றும் MP4 கோப்புக்கள், PNG, JPEG, BMP, GIF, TIFF, ICO, RAW போன்ற புகைப்படக் கோப்புக்கள் உட்பட Word, PowerPoint, Excel, Outlook போன்ற அப்பிளிக்கேஷன்கள் மூலம் தயாரிக்கப்படும் கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி – இனி கருத்துரைகளில் படங்களையும் இணைக்கலாம்!


21 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.ஆனால் மொபைல் அப்ளிகேஷனில் கமெண்டுடன் கூடிய படத்தைப் பாவனையாளர்கள் பார்க்கமுடியும்.
இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பேஸ்புக் ஹேஸ்டெக் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும்.
பல புதிய வசதிகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் அண்மையில் அறிவித்திருந்தது. அதன் ஓர் அங்கமாக இதனைக் கருத முடியும். இதேபோல் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் செம்சுங்

விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்

19 Jun, 2013 அன்று எழுதப்பட்டது
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.
இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.
1. விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை

ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன்.
எலுமிச்சை
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி மிளகு
உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல்

வெங்காயத்தின் 50 வகையான மருத்துவ குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள்


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
  •  நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
  •  வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
  •  வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள்

பாகற்காய்’ நீரழிவு நோயை கட்டுப்படுத்துமா.

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.
மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தலாம். வெறும் பாகற்காய் மட்டும் நீரிழிவு நோய்க்கு மருந்தல்ல.
மூலம்: தினசரி காலை 2 தேக்கரண்டி அளவு பாகற்காய் இலைகளின் சாற்றை அரை டம்ளர் அளவு மோரில் கலந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகி வர மூல நோய் குணமாகும்.
பித்தம்: பித்தம் அதிகமாக உள்ளவர்களும் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் காலை வெறும் வயிற்றில் 2-3 தேக்கரண்டி அளவு பாகற்காய் சாற்றை தண்ணீரில் கலந்து பருகிவர நல்ல பலன் தெரியும்.
மூட்டுவலி: ரத்தத்தில் அதிகமான யூரிக் அமிலம் உள்ளதால் ஏற்படக்கூடிய ரூமாட்டிஸம்,ஆர்த்ரைடிஸ் மற்றும் கவுட் போன்ற மூட்டுவலி உடையவர்கள் பாகற்காயை உண்டுவர நல்ல பலன் தெரியும். வலி அதிகமாக உள்ள இடங்களில் பாகற்காயை அரைத்து பற்று போல போட்டு வர வலி குறையும். மூட்டுவலி நிவாரணம் கிடைக்கும்.

அதிகாலையில் கண் விழித்தால் மெல்லிய உடல் பெறலாம் (Slim)

அதிகாலையில் கண் விழிப்பவா்கள் மகிழ்ச்சியாகவும், ஆராக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவித்தள்ளது.
ரோகாம்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழும்புவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாகச்  செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக  அனுப்பி வைப்பார்கள் என்று  கூறியுள்ளனா். இரவு ஆந்தைகளைப் போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று  கூறுகின்றது அந்த ஆய்வு முடிவு.
அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள் தாமதமாக கண் விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேறகொண்ட ”டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப்”  ஆங்கில நாளிதளில் தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டமல்ல ஆராக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

வெள்ளரிக்காயின் சிறப்பு மற்றும் மருத்துவ குணம்

வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்கா
ய்ச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம்.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ்

மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள்

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.
மூலநோய் குணமாகும்
ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது.

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும்.இ ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது இரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?


வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்… அதனால் ஏற்படும் நீர் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!
உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் எனச் சிறுநீரக மண்டலத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம்.
சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?
பல்வேறு காரணங்கள்.  சுற்றுச்சூழல், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு என

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று. சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள். எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
  • சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!
சாப்பிடக்கூடிய பழங்கள்: ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, பப்பாளி
சாப்பிடக்கூடாத பழங்கள்:
மாம்பழம், வாழை, பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், தர்பூசணி,

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
 இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட.
இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன்

மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?

குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். குளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர். 
இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.
தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.
1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே  இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம்

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு



பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம்

இளைஞர் யுவதிகளே மாரடைப்பு உங்களுக்கும் வரக் கூடுமா?

Heart attack in Younger people

எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.
மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.
ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.
மாரடைப்பு எவ்வாறு?
மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு


தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்
அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப்  பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.
சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.
வலி!

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை. அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டிருந்தது. நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரியவந்தது.
ஒரிரு மாதங்களாக வலி இருக்கிறதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. ஆரம்பத்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்கவில்லை. அருகிலிருந்த மருத்துவரிடம் காட்டியபோது தசைப்பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். ஆயினும் அந்த ஊசியிலும்

பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப்

Jun 19, 2013

பேஸ்புக்கிலிருந்து வீடியோ, ஆடியோக்களை தரவிறக்கம் செய்ய


facebook video, audio downloading software மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பகிரப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் Upload செய்யப்பட்டு, அவற்றை நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் நமக்குத் தேவையெனில் அவற்றை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் பேஸ்புக் தளத்தில் இல்லை. எனினும் மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வீடியோ மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பொதுவாகவே இணையத்தில் வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கு காரணம் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருப்பது. காணும் வீடியோ கோப்பின் தரம் மிகுதியாக இருப்பது

e, ஆன்லைன் போட்டோஷாப், இலவச மென்பொருள், போட்டோஷாப் மென்பொருள்


வணக்கம் நண்பர்களே..!
போட்டோக்களை எடிட் செய்ய.. மாற்றம் செய்ய.. டிசைன் செய்ய என அனைத்து வேலைகளுக்கு போட்டோஷாப் மென்பொருள் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் போட்டோஷாப் மென்பொருள் பற்றிய அறிவு எதுவும் இல்லாமல்.. போட்டோஷாப் மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமலேயே ஆன்லைன் மூலம் உங்களுடைய போட்டோக்களை எடிட் செய்யலாம்..டிசைன் செய்யலாம்.. Pixlr என்ற இணையதளம் இந்த வசதிகளையும், மதிப்பு மிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.

Online Photoshop - creating, editing, effecting, designing photos


போட்டோஷாப்பில் இருக்கும் அத்தனை ஸ்டூல்களும் இதில் உள்ளன. ஆன்லைன் போட்டோஷாப், போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் இணையதளத்தின் முகவரி http://pixlr.com/.

இதில் போட்டோக்களை டிசைன் செய்ய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட

கூகிளில் தேட கற்றுக்கொள்ளுங்கள்

Tips to Search in Google search engine

வணக்கம் நண்பர்களே.. !

உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம். 


சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு. 


இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத்  என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம். 

'+' குறியீடு: 


தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக '+' சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக '+'  குறியிடப்பட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். 
உதாரணமாக Specifications of +Samsung Android smartphone

'-' குறியீடு: 


மேலே குறிப்பிட்ட செயலுக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது '-' குறியிடப்பட்ட வார்த்தை தேடல் முடிவுகளில் இடம்பெறாது. 
உதாரணமாக Specifications of -Samsung Android smartphone

'~' குறியீடு: 

கூகிள் தேடல் பெட்டியில் தேடுகின்ற சொல் அல்லது சொற்றொடரில் உள்ள வார்த்தைக்கு முன்பாக '~' சேர்த்து தேடும்பொழுது அச்சொல்லிற்கு இணையான (Synonym)சொற்களை தேடல் முடிவில் காட்டும்.. 

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட: 


உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளைப் பெற கூகிள் தேடல் பெட்டியில் site:techbeen.com/android என உள்ளிட்டு தேடல் முடிவுகளைப் பெறலாம்.. இதில் Site என்ற வார்த்தையானது, அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடும்படி கொடுக்கும் கட்டளையாகும். 

உதாரணமாக 
site:techbeen.com/android 
site:website url/search word

குறிப்பிட்ட சொல்லின் பொருளை தெரிந்துகொள்ள : 


ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருள் அறிய இந்த 'define' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது கூகிள் தேடல் பெட்டியில் define: HTC எனத் தேடினால் HTC என்றால் என்ன என்பதற்கான பொருள் கிடைக்கும். 
உதாரணமாக define:smartphone

"" குறியீடு:

இந்த இரட்டை மேற்கோள் குறிக்கு நடுவில் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளட்டு கூகிள் தேடல் பெட்டியில் தேடும்பொழுது எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் அப்படியே இடம்பெற்ற தளங்கள் தேடல் முடிவுகளாக கிடைக்கும். 
உதாரணம்: "Smartphone specifications, reviews, news"

'*' குறியீடு: 

இந்த குறீயீட்டை சொற்களின் பின்பகுதியில் பயன்படுத்தும்பொழுது அந்த

ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ் - எது பெஸ்ட்

Android OS, Apple iOS, Blackberry, Windows 8 which is the best? ஸ்மார்ட் போன் உலகில்  கொடிகட்டி பறக்கும் இயங்குதளம் என்ன என்பதைப் பற்றியே இன்றையப் பதிவு.

ஸ்மார்ட் போன்களில் இயங்ககூடிய இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் மட்டுமல்ல... மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்(Apple iOS). பிளாக்பெர்ரி(Blackberry), விண்டோஸ்8 (Windows phone 8) ஆகியவைகளை குறிப்பிடலாம்.  



கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Google Android OS) வரவிற்கு பின்பு, கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த விண்டோஸ்போன் இயங்குதளம், பிளாக்பெர்ரி, ஆப்பிள் ஐ.ஓ.எஸ். அனைத்துமே இறங்குமுகத்தை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டது.

காரணம் அந்நிறுவனங்களின் இயங்குதளங்களைவிட கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் (User Friendly),  தன்னுடைய இடத்தை நிலையாக பிடித்துவிட்டது.மற்ற இயங்குதளங்களின் இடத்தையும் 

மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்




மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்!!! (காணொளிகள்)


நேற்று புதன்கிழமை மாலை 17 மணியளவில் பரிசையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் (Ile de France) கடும் புயற்காற்றுடன் கூடிய பெருமழை தாக்கியது. பல வர்த்தக மையங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. ORLY விமான நிலையம் தற்காலிகமாக சிறிது நேரம் மூடப்பட்டது. இதன் Terminal T1 பகுதியில் ஆறு பேர் சிறு காயங்களுக்க உள்ளாகி உள்ளனர். 
பல வீடுகள் மின்னல் தாக்கி எரிந்துள்ளன. போக்குவரத்துக்கள் பெருமளவில் தடைப்பட்டன. பல இடங்களில் வீதிகள் வேகம் கொண்டு ஓடும் ஆறுகளாக மாறின. மரங்கள் வீழ்ந்து வீடுகள் சேமானதுடன் வீதிகளும் தடைப்படன. முக்கியமாக 77 வது மாவட்டமான Seine et Marne பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.Monterault, Fontainebleau, Pontault-Combault, Noisiel ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இன்னமும் இங்குள்ள வீடுகளினதும் வீதிகளினதும் சேதவிபரங்களை நகரசபைகளால் திரட்ட முடியாமல் உள்ளது.
Yvelines பகுதியில் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில்

Jun 18, 2013

இணையம் உலகத்தைச் சுருக்கி ஒரு சிறிய கிராமமாக மாற்றுகிறது என்றால், அதற்கு இன்றைய நாட்களில் துணை புரிவது, நெட்வொர்க்கிங் சைட்ஸ் (Networking Sites) என அழைக்கப்படும் இணைய சோஷியல் தளங்களே (Social Community Sites). இந்த தளங்களில் உறுப்பினர் களாகி, மற்ற உறுப்பினர் நண்பர் களுடன் அஞ்சல் பரிமாற்றம், உடனடி அரட்டை, குழுக்கள், நிகழ்வின் அடிப்படையில் குழுக்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பைல்கள் பரிமாற்றம் என உறவுகள் வலுக்கும் பல வசதிகள் இந்த தளங்களில் கிடைக்கின்றன.
இணையத்தில் வலம் வருபவர்களில் 95% பேர் நிச்சயம் இந்த தளங்கள் மூலம் நண்பர்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இணையத்தில் உள்ள சமுதாய இணைய தளங்கள் குறித்துச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1. ட்விட்டர் (Twitter): 2006 ஆம் ஆண்டில் ஜாக் டார்சி (Jack Dorsey)என்பவரால் தொடங்கப்பட்டது. எஸ்.எம்.எஸ்.க்குப் பதிலாக இணையம் தரும் மாற்றாக இயங்குகிறது. நிறுவனங்களோ, தனி நபர்களோ, தங்களுக்குள் சிறிய அளவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் அக்கவுண்ட் தொடங்குவது எளிது. முதலில் ஆங்கிலத்தில் தொடங்கினாலும், பின்னர் பிற மொழிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
2. யு-ட்யூப் (You Tube): வீடியோ பைல்களை இணையம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள, கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் இணைய தளம். “நீங்களாகவே உங்களை ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்’ என்ற இலக்குடன் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வுலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என, டைம் இதழ் நவம்பர் 2006ல், இந்த தளத்தினை அறிவித்தது. மிக எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். பல அறிவு சார்ந்த தேடல்களுக்கு நல்ல தீனி வழங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இருப்பினும் சில மோசமான அநாகரிகத் தகவல்களும் இடம் பெற வழி தருகிறது. இதன் சமுதாயத் தணிக்கை சரியானால், நன்றாக இருக்கும்.
3. பேஸ்புக் (Facebook): ஹார்ட்வேர் பல்கலைக் கழக முன்னாள் மாணவரான மார்க் ஸக்கர் பர்க் (Mark Zuckerberg) என்பவரால் தொடங்கப்பட்டது. மிக அதிகப்படியான எண்ணிக்கையில் வசதிகளைக் கொண்ட சமுதாய இணக்க இணைய தளமாக இது இயங்குகிறது. வெற்றிகரமான ஓர் தளமாக உலகெங்கும் புகழ் பெற்று இது இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றவர் களைத் தேடி அறிந்து அளவளாவவும், ஒரே மாதிரியான சிந்தனை உள்ளவர்களை அறிந்து நண்பர்களாக்கிக் கொள்வதிலும் இந்த தளம் உதவுகிறது. கணக்கற்ற அளவில் போட்டோக்களை அப்லோட் செய்திட உதவுகிறது. மொபைல் போன் வழி தொடர்பும் எளிதாக உள்ளது.
4. ஹி 5 (Hi 5): இந்திய மண்ணிலிருந்து உதயமான சோஷியல் நெட்வொர்க்கிங் தளமாகும். 2003ல் ராமு எலமாஞ்சி என்பவரால் தொடங்கப்பட்டது. 2008ல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 20 தளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. ஒருவருக்கொருவர் நட்பு தேடி, அழைப்புகளை அனுப்பி, அவர்களின் அனுமதி பெற்ற பின்னர் தொடரும் உறவுகளால் இந்த தளம் இயங்குகிறது. இதில் நாம் விரும்பும் பாடல்களைக் கேட்க, இந்த தளம் தனக்கென ஒரு மீடியா பிளேயரைக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.
5. ஆர்குட் (Orkut): கூகுள் நிறுவனத்தால், 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் ஊழியர் ஆர்குட் என்பவரால் இது வடிவமைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. எனவே அவர் பெயரையே இந்த தளமும் கொண்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் பிரேசில் நாட்டிலும் இது பிரபலமானது. பின்னர் உலகின் அனைத்து நாடுகளிலும் உறுப்பினர்களைக் கொண்டது.
வேவ், பஸ் (Wave, Buzz) போன்ற தளங்கள் தொடங்கப்பட்டு சில காலம் கழித்து நிறுத்தப்பட்டன. இவற்றைப் போலவே, பல சோஷியல் தளங்கள் உருவாகி, அவ்வளவாக ஆதரவு இல்லாமல் அப்படியே முடங்கிப் போய்விட்டன. இன்னும் பல தளங்கள் தோன்றலாம். சில பிரபலமாகலாம். சமூக உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறப்பான இடம் பெறலாம்.
இந்த தளங்கள் அனைத்தும் புதிய சமுதாய கூடல்களுக்கு இடம் தருகின்றன என்பது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். இருப்பினும் இந்த தளங்களில் நம் இடத்தைச் சற்று பாதுகாப்புடனே தான் அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகையில், உங்கள் விருப்பங்களையும், விரும்பாதவற்றையும் அழுத்தமாகவே குறிப்பிடவும். நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதைச் சந்தேகத்திடமின்றி விளக்க மாகத் தந்துவிடுங்கள். போட்டோ பதிப்பதாக இருந்தால், உங்களின் இன்றைய போட்டோவினைப் பதிக்கவும். இது உங்கள் நண்பர்கள் உங்களை அடையாளம் கண்டு, தொடர்பினைப் புதுப்பிக்க உதவும். பிரைவசி செட்டிங்ஸ் எந்த நிலைகளில் அமைக்கலாம் (‘All’, ‘Friends and Networking’,’Friends of Friends’, ‘just friends’, மற்றும் ‘personalised’) என்பதனை உணர்ந்து அமைக்கவும். எனப் பல நிலைகள் உள்ளன. இவற்றின் விளைவுகளைப் புரிந்து கொண்டு, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கவும்.
நீங்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தும் எந்த சொல் அல்லது சொல் தொடரையும் இந்த தளங்களில் எங்கும் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். உங்களை மற்றவர்கள் காண்பதைச் சற்று வரையறைகளுடன் அமைக்கவும்.
உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யார் பார்க்க வேண்டும் என்பதனைச் சரியாக செட் செய்திடவும். இந்த தளங்களைப் பயன்படுத்து கையில் அதீத கவனம் தேவை. இல்லை எனில் மற்றவர்கள் கைகளில் பட்டு, சிதறிவிடுவீர்கள்.

* எலும்பிற்க்கு உறுதியளிக்கும் ஆலிவ் ஆயில்






ஆலிவ் ஆயில் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. 

ஆய்வுக்காக எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் அவர்களது எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.
நீங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive) சேமிக்க உங்களை ஆச்சரியப்படுத்த விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் #1TB Flash drive

இந்த ஆண்டு மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும், அதாவது 1,000GB என்று சொல்லலாம்.512GB கொள்ளளவு கொண்ட விரலி தற்போது சந்தையில் கிடைகிறது. 

கிங்ஸ்டன் தனது அறிக்கையில் DataTraveler HyperX Predator 3.0 விரலியின் எழுதும் வேகம் விநாடிக்கு 160MB தரவுகளையும் , வாசிக்கும் போது விநாடிக்கு 240MB தரவுகளையும் பரிமாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை என சொல்கின்றது..

இதன் விலை தான் நமக்கு பெரிய ஏமாற்றம், இதன் விலைநிலவரத்தை வெளியிடாத கிங்ஸ்டன் தனது 512GB விரலியை சுமார் $1,750 விற்கிறது. அப்போ 1TB விலை நிச்சயமாக நாம் வாங்க முடியாத அளவில் இருக்கும் என்பது உறுதி.

இதன் உறை(Casing) நிலைப்பு தன்மை மற்றும் அதிர்ச்சி எதிர்ப்பு தன்மைக்காக துத்தநாகம் உலோக கலவையில் செய்யப்பட்டது. இது USB 2.0 வையும் ஏற்புடையதாக உள்ளது.

இந்த விரலி அனைத்து வகை விண்டோஸ் OS களிலும் இணக்கம்(compatible) கொண்டது.நீங்கள் கணனியில் சேமித்து வைத்து நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, ஆவணங்கள்,தரவுகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு விரலியில்(Pen drive) சேமிக்க உங்களை ஆச்சரியப்படுத்த விரைவில் வருகிறது கிங்க்ஸ்டனின் #1TB Flash drive

இந்த ஆண்டு மின்னணுவியல் கண்காட்சியில் கிங்ஸ்டன் நிறுவனம் தனது உலகின் மிக பெரிய கொள்ளளவு கொண்ட USB 3.0 விரலியை "DataTraveler HyperX Predator 3.0" என்ற பெயரில் வெளியிட்டது. இதன் கொள்ளவு 1 TB ஆகும்,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...