Jan 1, 2013

2013 பு‌த்தாண்டு ராசி பலன்கள் (12 ராசிகளுக்கும்)

செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்த யோக நன்னாளில் சூரி ய உதயத்தை அடிப் படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34 க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரக மான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டு மென்ற எண்ணம் வரும். 2013 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌ வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

மேஷம் ராசி !

இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிஸ் சாதன ங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலை யுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடை க்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடை க்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும் பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர் கள். உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலே யே காரியங்களை சாதிப்பீர்க ள். பழைய சொந்தம் பந்தஙகள் தேடி வருவார்கள்.
வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்ப தால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்க ளுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட் டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும்.
12.10.2013 முதல் டிசம்பர் முடிய கேதுபகவான் அசுவனி நட்சத்திர த்தில் செல்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்கள் இக்காலக் கட்டத் தில் விபத்துகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.
3.2.2013 முதல் 11.10.2013 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வ தால் பரணி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் மன உளைச்ச ல், ஆரோக்ய குறைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
1.1.2013 முதல் 2.2.2013 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
10.4.2013 முதல் 26.5.2013 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனமடைவதால் வீடு, மனை வாங்குவது, மற்றும் பண விஷயத் தில் உஷாராக இருக்க வேண்டும்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக் கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.
மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரும், புதிருமாக பேசி க் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த் தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்களை சுற்றியி ருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழு பறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட் டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண் டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வ தாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறா னவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...