Apr 18, 2012

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும். நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

furuits













மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள்

மாரடைப்பு போது முதலுதவி குறிப்புக்கள் உங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன? 1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும். 2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும் 3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும். 4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்

உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு

மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதை புரிந்து கொண்டு, துல்லியமாக விடையளிக்கக் கூடிய ஒரு சூப்பர் ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் கம்ப்யூட்டர் தான் வாட்சன். இதை வடிவமைத்தது ஐ.பி.எம் நிறுவனம். இந்த ஆண்டு 2011 ஆம் ஆண்டு வாட்சன் கணினி, ஜியோபார்ட்டி என்கின்ற நிகழ்ச்சியில் ஒரு டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட இரு போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது. ஜியோபார்ட்டி என்பது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். வரலாறு,புவியியல், பொழுதுபோக்கு,இலக்கியம்.அரசியல்,சமூகம்,கணிதம்,அறிவியல் என எந்த துறையிலிருந்தும் கேள்விகள் வரலாம். கேள்விகள் நேரடியாகவோ அல்லது துப்புகள் மூலமாகவோ அல்லது அனுமானமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்கப்பட்ட கேள்விகளை, அதனுடைய சூழல் புரிந்து சரியான பதிலை விரைவாக சொல்ல வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனிதர்களின் பேச்சு மொழி வழக்கிலேயே கேள்விகள் கேட்கப்படும்

செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர்

மனிதனுடைய மூளைக்கு அடங்கிய கம்ப்யூட்டர் இயங்கினாலும் மனித மூளையைவிடப் பன்மடங்கு ஆற்றலுடன் கம்ப்யூட்டர் செயல்படுகிறது. மனித மூளையை விடதட தீவிரமாக வேலை செய்யும் கம்ப்யூட்டர் கள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. மனித மூளை செயல்படுவதைத் துல்லியமாக விளக்க முடியாது. கம்ப்யூட்டர் செயல்படுவதை விளக்க முடியும்.மூளையில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் பயன்படுத்த முடியாது.பல தகவல் அடி மனதில் பதிவாகி இருக்கும்.அவற்றை எளிதில் மீட்டுக் கொண்டு வர முடியாது. கம்ப்யூட்டர் நினைவகத்தில் பதிவாகியுள்ள எந்தத் தகவலையும் எந்த நேரத்திலும் மீட்டுக் கொண்டு வரமுடியும்.அது முழுமையானதாகவும் இருக்கும்.இந்த வகையில் மனித மூளையை விடக் கம்ப்யூட்டரே சிறந்தது என்று கூறலாம். மனித மூளை தன் நினைவில் உள்ள ஒன்றை சற்று மாறுபட்டாலும் கூட இனங் கண்டு கொள்ளும். கம்ப்யூட்டரினால் அது முடியாது.மூளை செயல்படுவதற்குத் தேவையான ஆற்றல் முழுவதும் மூளையிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வெளியிலிருந்து நாம் கம்ப்யூட்டருக்குக் கொடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரில் பிழை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டு விட்டாலும் அவை வெளியிடும் தகவல்கள் முடிவுகள் அர்த்தமில்லாதவையாக இருக்கும். ஆனால் மனித மூளையில் சிறு சிறு தவறுகளினால் பெரும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. கம்ப்யூட்டர் தானாகச் சிந்தித்து ஒரு சிக்கலுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றதாக இருக்கின்றது.ஆனால் மனிதனின் அன்றாட செயற்பாட்டில் சூழ்நிலை பணியின் தன்மை முதலியவற்றிற்கேற்ப சிந்தித்து செயற்படுதல் முக்கியமாகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பல இலட்சம் கட்டளைகளை ஒரு வினாடியில் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டரின் செயல் வேகமோ பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் நினைவக வசதியோ உதவியாக இருப்பதில்லை. மனித மூளையைப் போன்று சிந்தித்துச் செயலாற்றும் நுண்ணறிவு கம்ப்யூட்டருக்குத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிற இந்த மனித நுண்ணறிவினை நாம் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். செயற்கை நுண்ணறிவுத் திறனின் மூலம் உயிரற்ற கருவியாகிய கம்ப்யூட்டரை மனிதனைப் போன்று சிந்தித்துச் செயற்படுத்துவதற்கேற்ப நுண்ணறிவு வாய்ந்த கருவியாக வடிவமைக்க முடியும். இவ்வகையான கணிப்பொறிகள் மனிதனின் ஜம்புலன்களின் செயல்திறான பார்த்தல் கேட்டல் தொடு உணர்ச்சி பேசுதல் முதலிய அனைத்தையும் பெற்று விளங்கும். இயந்திர மனிதர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவினைக் கொடுத்து மனிதர்களைப் போலவே படங்களையும் செய்திகளையும் காட்சிகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொள்ளவும் செய்யலாம். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனைப் போன்று சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு வாய்ந்த கணணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையான கணணிகள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது கற்பனைக்கெட்டாத பல கடினமான பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராச்சிகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

பி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்

பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா! பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண்டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடுத்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும். இந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப் பட்டும் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங்கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள். அப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப் படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும். உங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக்கும். அப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது. இதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது. இந்த தளத்தின் சேவைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், அதற்கு நன்கொடையை நீங்கள் அனுப்பலாம். ஆனால், சேவைகள் முற்றிலும் இலவசமே.

கம்ப்யூட்டர் இயக்கம் "டிவி'யில் காண

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம். கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம். 1.எச்.டி.எம்.ஐ. (HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 2. டி.வி.ஐ. (DVI): இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம். 3. வி.ஜி.ஏ. (VGA): இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம். 4. எஸ்-வீடியோ (Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...