Aug 18, 2013











தலையை துண்டித்தாலும் தீண்டும் கோர பாம்பு (பரபரப்பு

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில் இது சரிதான் போல இருக்கு. உலகில் உள்ள பல உயிரினங்களின் தலையை வெட்டினால் அவை நொடிப் பொழுதில் இறந்துவிடும். இல்லை என்றால் செயல் இழந்து துடிக்கும். பின்னர் அசைவற்றுப் போகும். ஆனால் பாம்பு சற்று வித்தியாசமான இனம் போல இருக்கிறது. காரணம் என்னவென்றால், ஒரு மனிதர் சற்று வித்தியாசமாக யோசித்து ஒரு செயலைச் செய்துள்ளார். அவர் விஷப் பாம்பு ஒன்றைப் பிடித்து, அதன் தலையை வெட்டியுள்ளார். முண்டமான அப் பாம்பின் உடல் பல நிமிடத்துக்கு அசைகிறது. அது எவ்வாறு அசைகிறது என்று அவர் படம்பிடித்துக்காட்டிக்கொண்டு இருக்கும் வேளை திடீரென மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
OLYMPUS DIGITAL CAMERA
அதாவது வெட்டப்பட்ட பாம்பின் உடல் துடித்துக்கொண்டு இருக்க, அதன் வால் பகுதி தெரியாமல் பாம்பின் தலையுடன் மோதிக்கொள்கிறது. உடனே வெட்டப்பட்ட பாம்பின் தலை அப்படியே வாலைக் கடிக்கிறது. அதன் பற்களில் இருந்து வெள்ளை நிறத்தில் நஞ்சு ஊறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதாவது தனது வாலையே அப் பாம்பு கடிக்கிறது. இவை சுமார் 2 நிமிட நேரம் வரை நீடிக்கிறது. அப்படி என்றால், நீங்கள் ஒரு பாம்பை கண்டு அதனை அடித்தால் கூட, மற்றும் கொன்றுவிட்டோம் என்று நினைத்தால் கூட அது கூட மிகவும் ஆபத்தான் விடையம் தான். அதன் வாய்க்கு அருகே உங்கள் கைகளை கொண்டு சென்றால் அது நிச்சயம் கடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வீடியோவைப் பாருங்கள் பாம்பால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று தெரியும். (யூ ரியூப் வீடியோ இது) சிலவேளைகளில் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்று கேட்க்கும். ஏன் எனில் இக் காட்சிகள் கோரமானவை. –

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்


முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.

இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம்

எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்


செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. 

மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். 

இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.

செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. 
ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 
செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள்

ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ உதவும் மிகச்சிறந்த உணவுப்பழக்கங்கள்!

News Serviceஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம் என்பதால் நாம் அனைவருமே கட்டுக்கோப்புடனும், பருவகால நோய்களை எதிர்க்கும் சக்தியுடனும் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். மேலும் அனைவரது விருப்பப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்த ஆசையும் ஒன்றாகும் என்பதை யாருமே மறுக்க முடியாது. பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடவேண்டிய காலக்கட்டத்தில், உணவைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. நமது வயிறு பசிக்கும் போது அல்லது ஏதாவது உணவுப் பொருளை பார்க்கும் போது மட்டுமே நமக்கு சாப்பிடத் தோன்றுகிறது. ஆகவே சரியான முறையில் உணவை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆசைப்பட்டால், கீழ்கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

அறிந்துகொள்ளுங்கள் - வெங்காயம் வெட்டும்போது சுவிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது!


News Serviceவெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
   தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக

நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க அதிக நீரைப் பருக வேண்டுமாம்.

News Serviceநரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க நன்றாக உறங்க வேண்டும். மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...