May 5, 2012

சில இஸ்லாமிய தளங்கள் | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

சில இஸ்லாமிய தளங்கள் | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

இளநீர்

பெற்ற பிள்ளை கவனிக்கா விடினும் தென்னை தினமும் பசி நீக்கும். எல்லாவற்றையும் தரும் மரமாக இருக்கும் தென்னையை கற்பக விருட்சம் என்கின்றனர். தேங்கனி, தேங்காய், தாழை, தெங்கு, தென்னை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மாதர்கனி, முக்கனி, இரசபலம், சுராகாரம், பானி விருக்கம் என பல பெயர்களால் பாராட்டப்படுகிறது.
  • எல்லா இட‌ங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இளநீர் ஒரு அருமையான இயற்கை பானம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடலாம்.குளிர்ச்சியும் சத்தும் மிகுந்த பானம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். இளநீர் உருவாகி ஓரிரு மாதங்களில் இருந்து பயன்படுத்தலாம்.
  • தென்னையில் தேங்காய் உருவாகி முழுமையடைய பத்து மாதங்கள் ஆகின்றன. மனித கருவின் முழு வளர்ச்சிக் காலமும் பத்து மாதங்கள்.
  • மேலும் பிற பழங்களை முற்றாத போது காயாக இயற்கையாக சாப்பிட இயலாது. ஆனால் தென்னையில் தேங்காய் உருவான பின் ஒரு சில மாதங்களில் இளநீராகவும், பின் வழுக்கையாகவும், தேங்காய் கொப்பரையாகவும் எப்போதும் பயன்படுத்தும் வகையில் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி இது.
  • இளநீர் இனிப்பும், தேவையான இயற்கை உப்புச் சத்துக்களும் கலந்த அற்புத பானம்.
இளநீர்இளநீர்இளநீர்
இளநீரில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=95%
  2. பொட்டாசியம்=310 மி.கிராம்
  3. குளோரின்=180 மி.கிராம்
  4. சோடியம்=100 மி.கிராம்
  5. கால்சியம்=30 மி.கிராம்
  6. மக்னீசியம்=30 மி.கிராம்
  7. பாஸ்பரஸ்=37 மி.கிராம்
  8. சல்ஃபர்=25 மி.கிராம்
  9. இரும்பு=0.15 மி.கிராம்
  10. காப்பர்=0.15 மி.கிராம்
  11. வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில்  உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • சிறுநீரகப் பணிகள், சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது.
  • காலராவுக்கு அற்புத மருந்து.
  • உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானீக்காக வேலை செய்கிறது.
  • விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும்.
  • உடல் பருமன், இரத்த அழுத்த அன்பர்கள் இளநீரால் நல்ல பலன் அடைவர்.
  • பொட்டாசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் B இதயம், நரம்புகள், ஜீரண உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
  • தள்ளாத வயதிலும் இளநீர்
மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால் கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால் மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=36%
  2. புரோட்டின்=4.5%
  3. கொழுப்பு=42%
  4. தாது உப்புக்கள்=1%
  5. நார்ச்சத்து=3.6%
  6. மாவுப்பொருள்=13%
  7. கால்சியம்=10 யூனிட்
  8. பாஸ்பரஸ்=240 யூனிட்
  9. இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
  • மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
  • புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.
குறிப்பு:
  • தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக்

இஞ்சின் சத்துக்கள்

இஞ்சி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன.
இஞ்சியில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 80.9 gm
  2. புரதம் = 2.3 gm
  3. கொழுப்பு = 0.9 gm
  4. கனிமங்கள் = 1.2 gm
  5. நார் பொருள் = 2.4 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 12.3 gm
  7. வலிமை சக்தி = 67 kcal
  8. கால்சியம் = 20 mg
  9. பாஸ்பரஸ் = 60 mg
  10. இரும்பு = 2.6 mg
  11. கரோட்டின் = 40 mg
  12. தையாமின் = 0.06 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.03 mg
  14. நியாசின் = 0.6 mg
  15. வைட்டமின் சி = 6 mg

மிளகின் சத்துக்கள்

மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன. காய்ந்த மிளகு 95% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 13.2 gm
  2. புரதம் = 11.5 gm
  3. கொழுப்பு = 6.8 gm
  4. கனிமங்கள் = 4.4 gm
  5. நார் பொருள் = 14.9 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 49.2 gm
  7. வலிமை சக்தி = 304 kcal
  8. கால்சியம் = 460 mg
  9. பாஸ்பரஸ் = 198 mg
  10. இரும்பு = 16.8 mg
  11. கரோட்டின் = 1080 mg
  12. தையாமின் = 0.09 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.14 mg
  14. நியாசின் = 1.4 mg
இவை அனைத்தும் நன்றாக காய்ந்த மிளகில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

மிளகின் சத்துக்கள்

மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன. மிளகின் சத்துக்கள் மிளகு 81% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 70.6 gm
  2. புரதம் =4.8 gm
  3. கொழுப்பு = 2.7 gm
  4. கனிமங்கள் = 1.8 gm
  5. நார் பொருள் = 6.4 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 13.7 gm
  7. ஆற்றல் சக்தி = 98 kcal
  8. கால்சியம் = 270 mg
  9. பாஸ்பரஸ் = 70 mg
  10. இரும்பு = 2.4 mg
  11. கரோட்டின் = 540 mg
  12. தையாமின் = 0.05 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.04 mg
  14. நியாசின் = 0.2 mg
  15. வைட்டமின் = 1 mg
இந்த அனைத்தும் பச்சையாக இருக்கும் மிளகில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

பச்சைப்பயறு முளைதானியப் பால்

தேவையான பொருட்கள்:
  1. முளைக்கட்டிய பச்சைப்பயறு.
  2. தேன்.
  3. பால்.
செய்முறை:
  • பச்சைப்பயிற்றை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  • பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
  • பின்பு முளை விட்ட பச்சைப்பயிற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • இதனுடன் தேன், பால் சோ்ததுக் கொள்ளவேண்டும்.

இயற்கைத் தேனீர் (டீ)

தாமரைப்பூரோஜாப் பூசெம்பருத்திப் பூ
தேவையான பொருட்கள்:
  1. ஆவாரம் பூ.
  2. ரோஜாப் பூ.
  3. தாமரைப்பூ.
  4. செம்பருத்திப் பூ.
  5. பால்.
  6. சீனி.
செய்முறை:
  1. ஆவாரம் பூ, ரோசாப் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து நிழலில் காய வைத்து நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு அந்த பொடியை  தேவையான அளவு  பாலில்  சீனி கலந்து காய்ச்சி அருந்தலாம்.

முள் முருங்கை அடை


தேவையான பொருட்கள்:
  1. முள் முருங்கை கீரை-சிறிதளவு
  2. பச்சரிசி மாவு-1 கப்
  3. உளுந்து மாவு- கால் கப்
  4. உப்பு-தேவயான அளவு
  5. மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
செய்முறை:
  • முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும்.
  • இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.
  • இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
  • இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:
  1. முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.
  2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
Rating: 5.0/5 (2 votes cast)

ஈரப்பலாக்காய்க் கறி





தேவையான பொருட்கள்:
  1. நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
  2. வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் -1
  4. தேங்காய்ப் பால் – ¼ கப்
  5. பூண்டு- 4 பல்லு
  6. இஞ்சி – 1 துண்டு
  7. மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்
  8. மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன்
  9. மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
  10. உப்பு – தேவைக்கேற்ப
  11. புளிப்பேஸ்ட்  – தேவைக்கேற்ப
  12. கடுகு- சிறிதளவு
  13. கறிவேப்பிலை – சிறிதளவு
  14. எண்ணெய் – 1டீ ஸ்பூன்
செய்முறை:
  • பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டிகொள்ளவேண்டும்.
  • உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்க வேண்டும் .
  • தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் மிளகாய் வெட்டி கொள்ளவேண்டும்.
  • எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
  • வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
  • தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து

கேரட் அல்வா


தேவையான பொருட்கள்:
  1. பெரிய கேரட் – 1/4 கிலோ
  2. சர்க்கரை – 200 கிராம்
  3. பால்- 1/2 லிட்டர்
  4. நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  5. முந்திரி – 10 – 15
  6. கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன்
  7. ஏலப்பொடி – 1 பின்ச்
  8. குங்குமப்பூ – சிறிது
செய்முறை:
  • கேரட்டை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு  கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
  • 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும்.
  • வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
  • சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் பழம், முந்திரி

நூல்கோல் வடை.

தேவையான பொருட்கள்:
  1. நூல்கோல் – 2
  2. பொட்டுக்கடலை மாவு – 1 கப்
  3. பச்சை மிளகாய் – 3
  4. இஞ்சி – 1 துண்டு
  5. வெங்காயம் – 3
  6. கறிவேப்பிலை – சிறிது
  7. பூண்டு - 10 பல்
  8. உப்பு – 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் – 1/4 கப்
  10. கடுகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
  • நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
  • நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • இதில் கொத்துமல்லித்தழையைப்பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதை

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருள்கள்:
  1. முட்டைகோஸ் = அரை கிலோ
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 2
  4. மஞ்சள் தூள் = சிறிதளவு
  5. மிளகாய் தூள் = 3 தேக்கரண்டி
  6. கடுகு = சிறிதளவு
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. உளுந்து = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முட்டைகோஸை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டடையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி வெந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு முட்டைகோஸை போட்டு சிறிது சிறிது புளி தண்ணீர் விட்டு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு ந‌ன்றாக கிளறி மூடி வைத்து இடையிடையே திறந்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முட்டைகோஸ் காரக்குழம்பு தயார்.
மருத்துவ குணங்கள்:
  • முட்டைக்கோஸில் வைட்டமின் “C” மற்றும் வைட்டமின் “B6″, வைட்டமின் “A”அதிக அளவில் உள்ளது.
  • மேலும் கொழுப்பு 0.1g 0%, சோடியம் 16mg 1%, கார்போஹைட்ரேட்டுகள் 5.2g 2%, நார்ச்சத்து உணவு 2.2g 9%, சர்க்கரைகள் 2.8g, புரதம் 1.1g 2%, கால்சியம் 4%, இரும்பு 2%, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவைமுட்டைக்கோஸில் காணப்படுகிறது.
  • முட்டைக்கோஸ் தாவரத்தின் இலை பகுதியை தான் நாம் உணவாக சாப்பிடுகிறோம். இந்த முட்டைக்கோஸ் நுரையீரல் மற்றும் வயிற்று வலி, குடல் புண்கள் போன்ற வயிறு
இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி,  வட்டமான சில மலர்களை உடையது. பொதுவாக நீலநிறமாகவும், அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படும். விஷ்ணுக் கிரந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது. செடிகள் முழுவதும் மருத்துவக் குணமுடையது.


மருத்துவக் குணங்கள்:
  1. விஷ்ணுக் காந்தி நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், கோழையகற்றியாகவும், வியர்வை பெருக்கியாகவும், தாது பலமூட்டியாகவும் செயல்படுகிறது.
  2. விஷ்ணுக் காந்தி சமூலம் 5 கிராம் எடுத்து பால்விட்டு நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாதம், பித்தம்

நிலக்கடலைப்பால்




தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை-1கப்
    முந்திரி-5
    ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை:

    நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
    பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
    இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
    பின்பு   இவைகளுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்  அரைக்க வேண்டும்.
    இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.

மருத்துவக் குணங்கள்:

    மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
    எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
    ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட

சதாப்பு இலை




இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 – 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 – 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாதத்தில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இதற்கு சதாப்பு இலை என்று வேறு பெயரும் உண்டு. இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ,

அழிஞ்சில்


அழிஞ்சிலின் தாவரவியல்பெயர்-ALANGIUM LAMARCKII ஆகும். ALANGIACEAE என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. இது கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்கள் என வேறுபட்டு காணப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை ஆகியவைகள் மருந்தாக பயன்படுகிறது.  அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். ( 15-20 அடி உயரம் ) நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள் உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அழிஞ்சில்மருத்துவக் குணங்கள்:

    நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது.
    அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு,

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்




    என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
    தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
    இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
    மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
    இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
    தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
    இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
    மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
    நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
    மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
    வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
    உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
    மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
    குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
    ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
    கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

இலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்






    அருகம்புல் சாறு அருகம்புல் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழகங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக்கொள்ளவேண்டும். எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதிதாக க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்குப் புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சத்துக்களை அளிக்கிறது.இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...