Jul 22, 2013

விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11


Posted: 20 Jul 2013

விரைவில் வெளியாக இருக்கும், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இயங்கும் வகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியானபோது, முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசர் வெளியாகவில்லை. விண்டோஸ் 8ல் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது. 
பின்னர், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பினைக் கண்ட, மைக்ரோசாப்ட், விண்டோஸ்7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 ஐ வெளியிட்டது. 
விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளாமலேயே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பதிப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்கு மகிழ்ச்சியான தகவலாக அமையும். 
விண்டோஸ் 8.1 பொதுமக்களுக்கு வெளியிடப்படும் போதுதான், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 உடன் வெளியாகும். இருப்பினும் இதன் சோதனைப் பதிப்பைத் தற்போது, மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜிமெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப


Posted: 21 Jul 2013

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். 

ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா! போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப விரும்புபவர்கள், அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர். 
அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. பல வாசகர்கள் இது குறித்து விளக்கங்கள் கேட்டு கடிதம் எழுதி உள்ளனர். ஜிமெயில் அஞ்சலில் படம் ஒன்றை ஒட்டி அனுப்பும் வழி முறைகளை இங்கு காணலாம். 
ஜிமெயில் தளத்தைத் திறந்து, Gmail Labs செல்லவும். (இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால், ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) 
இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும். இதில் “Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் “Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அப்படியே கீழாகச் சென்று, “Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும். 
இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து, அவற்றை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். 
போட்டோ குறித்த குறிப்புகளைக் கீழாக எழுதலாம். இவ்வாறு போட்டோவினை இணைக்கையில் கூகுள் Remember: Using others’ images on the web without their permission may be bad manners, or worse, copyright infringement” என ஓர் எச்சரிக்கை தரும். 
ஏனென்றால், போட்டோ மற்றும் படங்களின் உரிமையாளரின் அனுமதி இன்றி, அவற்றை உங்கள் மெயிலில் பயன்படுத்துவது தவறாகும்.
நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன், ஜிமெயில் அதனை நீங்கள் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டிவிடும். 
இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம். அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது. அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஜேர்மனி செய்தி ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் பாரிய காட்டுத் தீ




[ திங்கட்கிழமை, 22 யூலை 2013
ஜேர்மனியின் பிரண்டன் பேர்க்கில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்கு, 200 வரையிலான தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர்.எனினும் 17 ஹெக்டர் வரையிலான காடுகள் அழிந்து நாசமாகியுள்ளது.
இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த 43 குடும்பங்கள் தீயணைப்பு படைவீரரகளால் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தற்போது அப்பகுதியின் வெப்பநிலையானது 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக காணப்படுவனால் தீ வேகமாக பரவுகின்றது எனவும், இந்நிலை தமது நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக காணப்படுகின்றது எனவும் தீ அணைப்பு படைவீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பேர்லின் மற்றும் ட்ரெஸ்டனிற்கு இடைப்பட்ட 13A வீதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதனால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சில் முஸ்லிம்கள் போராட்டம்: 20 கார்கள் எரிந்து சாம்பலானது


[ திங்கட்கிழமை, 22 யூலை 2013,
பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை கண்டித்து தலைநகர் பாரிசில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பர்தா அணிந்து வந்த பெண்ணை காவல்துறையினர் கண்டித்தனர்.
இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் பொலிசை தாக்கினார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும்படி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது கார்களை தீ வைத்து கொளுத்தியதில், 20 கார்கள் எரிந்து சாம்பல் ஆனது.
பின்னர் போராட்டக்காரார்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

பெல்ஜியத்தின் புதிய மன்னரானார் பிலிப் (வீடியோ இணைப்பு





[ திங்கட்கிழமை, 22 யூலை 2013,
பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்(வயது 79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு வழங்கினார்.ஜனநாயக மரபுகளின்படி 20 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவர் இரண்டாம் ஆல்பர்ட்.
இந்நிலையில் முதுமை காரணமாக, மன்னருக்கான தனது அதிகாரங்களை மகன் பிலிப்பிடம் ஒப்படைத்தார்.
மேலும் தனது மன்னர் பதவியை துறப்பதாக பிரதமர் எல்யோ டி ருப்போ முன்னிலையில் கையொப்பமிட்டார்.
இதனையடுத்து மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக புதிய மன்னர் பிலிப் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நேற்று பெல்ஜியத்தின் தேசிய தினம் என்பதால், இராணுவ அணிவகுப்பையும் புதிய மன்னர் ஏற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய மன்னருக்கு மகிழ்ச்சியுடன் கரங்களை அசைத்து நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இசை கலைஞர்களைக் கொண்டு புதிய உலக சாதனை படைத்த ஜப்பான்


[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 11:16.14
ஜப்பான் நாட்டில் அதிகளவான இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து தேர்மின்(Theremin) எனும் இசையை இசைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
Leon Theremin என்பவரால் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இசையை ரஷ்யாவில் பயின்றவர்களே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதன் போது 272 கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவை புரட்டிப்போட்டது கனமழை 300 கிராமங்கள் தத்தளிப்பு 294 ஏரிகள் உடைப்பு


சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கம்மம், கரீம்நகர், வாரங்கள், ஆதிலாபாத், நிஜாமாபாத், கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 294 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர்.கோதாவரி மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், இப்பகுதியில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.கம்மம் மாவட்டம் பத்ராச்சலம் பகுதியில் 140 கிராமங்களுக்கான சாலைகள் மழைநீரில் சேதமடைந்துள்ளதால், அப்பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

300க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.கோதாவரி மாவட்டங்களில் நதிக்கரை ஓரம் தாழ்வான பகுதியில் உள்ள 70 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் தங்குவதற்கு இடமின்றியும், உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேற்கு கோதாவரி

சனிக்கிரகத்தில் இருந்து போட்டோ எடுத்த 'கஸ்சினி



சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த 'கஸ்சினி' விண்கலம்.


 நியூயார்க்,ஜூலை. 23 - சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கிணங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கூடி, விண்ணில் கஸ்சினி விண்கலம் இருக்கும் திசையை நோக்கி கையசைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை


ஆண் குழந்தை --- கேட் , வில்லியம் தம்பதியர் ( ஆவணப்படம்)
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.

குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
கேட் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் மருத்துவமனைக்கு வெளியே பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது.

20,000 வீடுகள் தரைமட்டம் சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான 2 நிலநடுக்கங்களில் 90 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 20,000 வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளை அகற்ற, அகற்ற சடலங்கள் வந்து கொண்டிருப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று காலை 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் மலைப்பகுதி, பாலைவனம், சமவெளி என்று கலவையான நிலப்பரப்பு உள்ளது. காலை 7.45 மணிக்கும், அதைத் தொடர்ந்து 9.12 மணிக்கும் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால், மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டிங்சி, மாகாணத்தின் தலைநகர் லான்ஜோ ஆகியவற்றில் கட்டிடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சரிந்து

ஆஸ்ட்ரியாவில் கருணாநிதிக்கு தபால்தலை


திங்கள், 22 ஜூலை 2013

திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம்.

இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.

அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.

தனிப்பட்ட முறையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டாலும் இதை அங்குள்ள தபால்களில் பயன்படுத்த முடியும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்


கொழுப்பை குறைக்கும் உணவுகள். திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு

how get clean acne free face தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர். அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள். how get clean acne free face வழிகள்: 1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும். 2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும். 3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம். 4. வெள்ளரிக்காயை

இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்





இந்தியாவில் தெய்வ நம்பிக்கைகள் அதிகம் உள்ளன. அதற்கேற்றாற் போல் கோவில்களும் நிறைய உள்ளன. அதுவும் தெருவோரத்தில், மரத்தின் அடியில், ஏன் எங்கு திரும்பினாலும் சிறு கோவில்களை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பிரபலமானதாக இருப்பதில்லை. இருப்பினும் ஒருசில கோவில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷம் போன்றும் இருக்கின்றன. ஏனெனில் அத்தகைய கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது.
எனவே அந்த கோவில்களுக்கு தினமும் நிறைய பேர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதனால் அந்த கோவில்களுக்கு நிறைய நன்கொடைகளும் வரும். இந்த நன்கொடைகளால் கோவில்களை பலவாறு மேம்படுத்துகின்றனர். இப்போது இந்தியாவின் பொக்கிஷமாக இருக்கும் சில பணக்கார கோவில்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, செல்லாத கோவில்களுக்கு உடனே சென்று வாருங்கள்...






பத்மநாபசுவாமி கோவில்

கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கோவிலில் பல கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் பிரபலமான கோவிலாகும்.






திருமலை திருப்பதி

ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் இரண்டாவது பணக்கார கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு 650 கோடிக்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் உள்ளது. எனவே தான் இந்த கோவில் பணக்கார கோவில்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.






வைஷ்ணவ தேவி கோவில்

இந்த கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள கோவில்களுள் ஒன்றாகும். இங்கு மாதா தேவியின் ஆசியைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.






சித்தி விநாயகர் கோவில்

இது மற்றொரு பணக்கார கோவிலாகும். இந்த கோவிலில் நிறைய பாலிவுட் நடிகர், நடிகைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு நன்கொடையாக 3.5 கிலோ தங்கத்தை கொல்த்தாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளார். இதனை வைத்து இந்த கோவிலின் குவிமாடம் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.






ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில்

சீக்கிய யாத்ரீகத்தில் மிகவும் பிரபலமானதாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில் உள்ளது. இந்த கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் 'ஆதி கிரந்த' (குரு கிரந்த சாஹிப்) விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதித்தார்.




சோம்நாத் கோவில்

பல முறை அழிக்கப்பட்டும், ஜோதிலிங்கம் இன்றும் ஆன்மீக பக்தர்கள் செல்லும் தளங்களுள் ஒன்றாக உள்ளது.





பூரி ஜெகன்னாத்

ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பூரியில் உள்ள மிகவும் பழமையான கோவில் தான் ஜெகன்னாத். இதுவும் செல்வம் அதிகம் பொங்கும் கோவில்களுள் ஒன்றாகும்.
இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!



காசி விஸ்வநாதர் கோவில்

வாரணாசியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் பணக்கார கோவிலில் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!



மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பணக்கார கோவில்களுள் ஒன்றானது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...