Apr 27, 2013

தொப்பையைக் குறைக்கும் ஸ்கிப்பிங்கின் இரகசியங்கள்!



News Service இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் 10 நிமிஷம் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு. முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக்

உலகையே அசைத்தவரின் மறுபக்கம்


News Serviceவிண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர். விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587இல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவி யால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலிய வற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.
  
படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி

ன்றாடம் உண்ணும் உணவுகளுக்கான அளவுகோல்

News Serviceநாம் உண்ணும் உணவு சரியானதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு எளிய அளவுகோல் உள்ளது. அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டு போகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.
   அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக் கொள்வில்லை என்பது பொருள். அதன்

முன்னர் கருதியதை விட 1000 டிகிரி அதிகமாகக் காணப்படும் புவி மைய வெப்பம்!




News Service பூவியின் உள்ளகமான (core) என்று அழைக்கப் படும் அதி ஆழமான பகுதியில் எரிமலைக் குழம்பு போல் வெப்பமான லாவா காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை முன்னர் அதாவது 1990 ஆண்டு முதல் 5000 டிகிரி எனக் கருதப் பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் நவீன ஆய்வுகளின் மூலம் இது தவறு என்றும் இதன் உண்மையான வெப்பநிலை இன்னமும் 1000 டிகிரி அதிகம் அதாவது 6000 டிகிரி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதில் ஆச்சரியாமன இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த உள்ளக வெப்பநிலையான 6000 டிகிரி சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்குச் சமனானது என்பதாகும். எக்ஸ் ரே (X-ray) கதிர்களைப் பயன்படுத்தி இரும்புத் துகள்களை அதி அழுத்தத்தில் வெப்பமாக்கி அது எவ்வாறு உருகி லாவா ஆகின்றது எனப் பரிசோதிக்கப் பட்டது.
  
ஏனெனில் பூமியின் மையப் பகுதியில் சந்திரனின் விட்டத்துக்குச் சமனான கோளப் பகுதி திண்ம இரும்புப் பந்து போல் உள்ளது. இதனைச் சுற்றி மிக இயங்கு தன்மை மிக்க திரவ இரும்பு மற்றும் நிக்கலின் கலவையினால் காணப்படுகின்றது. 1990 ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட பரிசோதனைகளின் போது இந்த இரும்பு உருகும் வெப்பநிலை 5000 டிகிரி என முடிவெடுக்கப் பட்டது.
எனினும் சமீபத்தில் ஐரோப்பாவின் சின்க்ரோட்ரோன் கதிர்வீச்சு கூடத்தில் அதே பரிசோதனை இன்னும் அதிக திறனுடைய X-ray இனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் பட்டது. இதன் போது இது திருத்தமாக 6000 டிகிரி என்பது ஊர்ஜிதமானது. தற்போது இந்தப் பரிசோதனை முடிவு புவிப் பௌதிகவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், புவியியக்கவியலாளர்கள் ஆகியோருக்கு மிக உபயோகமாகப் பயன்படவுள்ளது என்பதுடன் அவர்களின் கணணி மாதிரிகளிலும் இது திருத்திப் பதிவிடப்படவுள்ளது.

இன்று பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்! பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது,அதை பார்க்க முடியும். இன்று, 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

சாதாரணமாக, பூமி, சனி இடையே உள்ள தூரம், 142.7 கோடி கி.மீட்டர். சில நேரங்களில்,சனிக்கோள், பூமியிலிருந்து, 125 கோடி கி.மீட்டர் தூரத்திற்கு வரும். தற்போது, சூரியனுக்கு எதிராக, சனிக்கோள் வருகிற நேரத்தில், பூமியில் இருந்து, 132.2 கோடி கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது, சனிக்கோள், அதன் துணை கோள்கள் மற்றும் சனிக்கோளின் வளைவுகளை பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு, ஏப்.4ம் திகதி, அதுபோல், சனிக்கோள் பூமிக்கு அருகில் வந்தது.வரும், 28ம் தேதி முதல், 12 நாள்கள் இந்த நிகழ்வு தொடரும். வெறும் கண்ணால் இந்நிகழ்வை பார்க்கலாம். ஆனால், பிரகாசமான பொருளாக தான் சனிக்கோள் தெரியும். சனிக்கோளின் உட்கூறுகள் போன்றவற்றை, தொலைநோக்கியில் தான் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு, மீண்டும், 2014, மே, 10ம் தேதி, நடைபெற உள்ளது. சனிக்கோள், பூமிக்கு அருகில் வருவதால், எந்தவித பாதிப்பும் கிடையாது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...