Feb 11, 2013

சூரிய புயல் விரைவில் பூமியை தாக்கும் அபாயம்? : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

லண்டன்: விரைவில் சூரிய புயல் பூமியை தாக்கும். இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் இல்லாமல் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனில் இருந்து நெருப்பு போன்ற சிறுசிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் அவை கரைந்து

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வால் நட்சத்திரம்


நிலவை விட 15 மடங்கு பிரகாசமான வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நோக்கி வர உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தோன்றும் இந்த வால் நட்சத்திரத்திற்கு இஸ்கான் என்று பெயரிட்டுள்ளனர்.
இதனை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பகலில் காண முடியும். இந்த நட்சத்திரம் நிலவை விட 15 மடங்கு பிரகாசமாக இருப்பதால் இதைக் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த வால் நட்சத்திரத்தை ரஷ்யாவை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் அறிவியல் ஆப்டிகல் ஒருங்கிணைப்பு தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இது

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?

உடல் நோயை தீர்க்கும் பாகல்

மாற்றம் செய்த நேரம்:2/11/2013The leaves of bitter gourd has high medicinal properties. Bitter gourd juice extracted from leaves, arumaruntakum for many diseases.   Grind the leaves drop throughout the body by the force of ten, rash, itching, parantoti would like.பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு  அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து  விடும்.

120 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் திடீர் ராஜினாமா



வாடிகன்சிட்டி : முதுமை காரணமாக பணியை செவ்வனே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதி அவர் விலகுகிறார். 600 ஆண்டுகளில் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவது இது முதல் முறை. உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்குபவர் போப் ஆண்டவர். வாடிகன்சிட்டியின் தலைவராகவும் இவர் இருப்பார். தற்போது போப் ஆண்டவராக ஜெர்மனியை சேர்ந்த 16ம் பெனடிக்ட் உள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 2ம் ஜான்பால் இறந்ததை

உடல் நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 28ந் தேதி அன்று பதவி விலகுகிறார் போப்பாண்டவர்

ரோம்: புனித 16வது பெனடிக்ட் பதவியில் இருந்து விலகப்போவதாக போப்பாண்டவர் அறிவித்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 28ந் தேதி பதவி விலக தான் முடிவு செய்திருப்பதாக போப் கூறினார். கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபகாலமாக அவரால் போப்பாண்டவருக்கான பணிகளை மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புனித 16வது பெனடிக்ட் பதவியில் இருந்து விலகப்போவதாக போப்பாண்டவர் அறிவித்துள்ளார். போப்பாண்டவராக பதவியில் இருக்கும் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

'விஸ்வரூபம்' 4 நாட்களில் ரூ.120 கோடி வசூல் சாதனை

 
Kamal Haasan's 'Vishwaroopam' earns Rs 120 crores in four days'விஸ்வரூபம்' 4 நாட்களில் ரூ.120 கோடி வசூல் சாதனை

2/11/2013
பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளிவந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.120 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்புகளை சந்தித்து சில நாட்கள் தாமதமாக வெளிவந்த நடிகர் கமலஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.120 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளன. ரசிகர்களின் கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்




செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.
உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10

செரிமானத்தை தூண்டும் சோம்பு


அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. விதைகளில் இரண்டு வகை உண்டு.
பண்டைய வல்லுநர்கள் இத்தாவரத்தினை பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மத்திய காலங்களில் இதனை சூனிய செயல்களுக்கு எதிரான தாவரமாக பயன்படுத்தியுள்ளனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இனிப்பு வகை சோம்பில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களான

ஆரோக்கிய வாழ்வுக்கான 10 உணவுகள்


உணவு மருந்து' என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு 'மருந்தே உணவு' என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...