Aug 9, 2013

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . . .!

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . . .! – மருத்துவர் நித்ய பிரியா



சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …! 
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.
2.கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவு ங்கள். விரல் இடுக்குகளில் கரபெரள வராமல் பார்த்துக் கொள்ளு ங்கள்.
3. சர்க்கரை நோயினால் நரம்புகள் பாதக்கப் படுவதால் வியர்ப்பது குறைந்து தோல் வறண்டு விடும், வறண்ட தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்பட்டுத் தொற்று ஏற்படலாம், எனவே தோல் வறண்ட நிலை ஏற்பட்டால் அதனை ஈரப்படுத்துங்கள்.
4. இரத்த ஓட்டம் ஒழுங்காக நடைபெற உட்கா ரும்போது கால்களைத் தூக்கி வையுங்கள்.மேலும் கணுக்கால் களையும் விரல்களையும் அசைத்துக்கொண்டே இருக்கவும். இறுக் கமான காலுறைகளை அணிய வேண்டா ம். கால் மேல்

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக:

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: ‪#‎கூகுள்‬ நேரடி ‪#‎தமிழ்‬ தட்டச்சிற்கான மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ....மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..... http://www.google.com/intl/ta/inputtools/windows
SHARE THIS: தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது http://www.google.com/intl/ta/inputtools/windows/ தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது . நண்பர்களே நீங்களும் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். http://www.google.co.in/inputtools/windows/ > Select Tamil from the List வலது புறத்தில் உள்ள மொழிகளில் தமிழை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நன்றி... உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Please Share this in your Facebook Wall / Blogs
-------------------------------------------------------------
அல்லது இணைய இணைப்பில் இருந்தவாறு கணினியில் நிறுவாமல் பயன்படுத்த இன்னொரு வ்ழி http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/
----------------------------------------------------------------
இன்னொரு இலகுவான மென்பொருள் என் எச் எம் எழுதி. இதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி அறிய.. https://www.facebook.com/note.php?note_id=10150386278969710 / பதிவிறக்கம் செய்ய> http://software.nhm.in/products/writer

#நன்றி
#தமிழ் #தமிழர் #தமிழ்மொழி #Tamil

நீரிழிவு நோய்க்கு..

நீரிழிவு நோய்க்கு......
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு

தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

பாதத்தின் ஆணிகூடுகள்..

பாதத்தின் ஆணிகூடுகள்..
பாதத்தில் ஆணிக் கூடுகள்.(Plantar warts) பற்றிய தகவல்கள்:-


ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான். 

ஒரு வகை வைரஸ் தொற்று நோய். 

Human papillomavirus என்ற வைரஸ்சால் ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது. 

உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். 

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை. 

தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு 
(callus) போல வளர்கிறது.

மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோயாக இருக்கிறது. 

நூற்றுக்கு ஐம்பது 50% வீதமானோர் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். 

இளம் பருவத்தினரிடையே தோன்றுவது அதிகம். 

அறிகுறிகள்

ஓருவர் நடக்கும்போது தனது அடிப்பாதத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்து அவ்விடத்தை சுலபமாகப் பார்க்க முடியாதலால், தடவிப் பார்க்கும்போது தோல் தடிப்பாக இருப்பதைக் கொண்டே தமக்கு இது ஏற்பட்டிருப்பதை அதிகமானோர் கண்டறிவார்கள்.

சிலருக்கு முதல் அறிகுறி நாரிவலி அல்லது கால் வலியாக இருப்பது. 

மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலிக்கான காரணத்தைத் தேடும்போது ஆணிக்கூடு இருப்பதைக் கண்டறிவதும் உண்டு. நாரிவலிக்கும்

ஆணிக்கூட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?;

நடக்கும்போது அவ்விடத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க தாம்மைறியாமலே கால்களை சமனின்றி வைத்து நடப்பதால் வலி தோன்றும். 

இதன் தோற்றங்கள் பலவடிவாக இருப்பதுண்டு.

சொரசொரப்பான தடிப்புகள்,

செதில் போல உதிரும் தடிப்புகள்,

பஞ்சு போன்ற மிருதுவான தடிப்புகள் எனப் பலவகையாகத் தோன்றலாம்.

பெரும்பாலும் அதன் மத்தியில் கருமையான புள்ளி இருப்பதுண்டு. 

இதற்குக் காரணம் அவ்விடத்தில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களில் குருதி உறைவதாலேயே ஆகும்

இவை எப்பொழுதும் சொரப்பான தடிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. 

கருமஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மிருதுவான மேற் பரப்புடன் தோன்றுவதுமுண்டு.

ஏற்கவே கூறியபோல பாதத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகின்ற குதிக்கால், அல்லது விரல்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் ஏற்படுவது அதிகம்.

கூடு என்று சொன்னபோதும் இது உருண்டையாக இருப்பதில்லை. 

தட்டையாகவே இருக்கும். நடக்கும்போது பாதத்தில் ஏற்படும் தொடர் அழுத்தத்தினால் அவை தேய்ந்து தட்டையாக இருக்கும். 

அருகருகில் உள்ள பல ஆணிக்கூடுகள் இணைந்து கூட்டுக் கூடுகளாக (Mosaic Warts) மாறுவதும் உண்டு.

மருத்துவம்

இது ஒரு வைரஸ் நோய் என்றோம். இந்த வைரசை அழிப்பதற்கெனப் பிரத்தியேக மருந்துகள் எவையும் இது வரை கிடையாது. 

எனவே மருந்துகளை உட்கொள்வதால் பிரயோசனம் இல்லை.

இருந்த போதும் உடலில் அந்நோய்க்கு எதிரான நோயெதிர்பு வலுவடையும் போது தானாகவே மறைந்துவிடும்.

ஆயினும் அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். 

அதற்கிடையில் நோயால் ஏற்படும் வலி, நடப்பதில் சிரமம் போன்றவை காரணமாக தற்காலிகமாக சிகிச்சை எடுக்க நேரிடுகிறது.

வீட்டில் வைத்தியம்

சூரியக் கற்களால் தேய்ப்பது, பிளேட்டினால் வெட்டுவது போன்ற நடைமுறைச் சிகிச்சைகளை பலரும் செய்வதுண்டு. 

அவ்விடத்தை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்ட பின்னர் செய்தால் சருமம்; மெதுமையாகி அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும். 

இருந்தபோதும் முற்று முழுமையாக அகற்ற முடியாது. மேற்புறத்திலிருந்து வலியைக் கொடுக்கும் பாகத்தை மட்டுமே அகற்ற முடியும். 

சில காலத்தின் பின் பார்த்தால் அது மீண்டும் வளர்ந்திருப்பது தெரியும்.

ஆனால் இவ்வாறு சுயமாகச் செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். 

இரத்தம் கசியுமளவு ஆழமாக வெட்டி அகற்றினால் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. 

அதனால் சாதாரண தொற்று முதல் ஏற்புநோய் வரை ஏற்படக் சுடிய சாத்தியம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். 

நீரிழிவு நோயுள்ளவர்களும் காலில் விறைப்புத்தன்மை உள்ளவர்களும் அறவே செய்யக் கூடாது. 

சுயசிகிச்சைக்குப் பின்னர் அவ்விடத்தில் வலி, வேதனை, காச்சல் போன்ற ஏதாவது தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

மருத்துவரிடம் சிகிச்சை

மருத்துவர்கள் எடுத்தவுடன் சத்திரசிகிச்சை போன்றவற்றிற்குச் உடனடியாகச் செல்ல மாட்டார்கள். 

சலிசலிக் அமிலம் போன்றவற்றையே அவர்களும் தரக் கூடும்.

ஆயினும் அவற்றினால் குணமடையாதபோது வேறுசிகிச்சைகளை நாடுவர்.

வழமையான சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 

முக்கியமானது வெட்டி அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்தில் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதாலாகும். 

வெட்டி அகற்றிய இடத்தில் ஏற்படும் மறுவானது பொதுவாக வலியை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது காரணமாகும். 

திரவ நைதரசனால் உறைய வைத்து அகற்றல். இச்சிகிச்சையின் பின்னர் அது கறுத்து சில நாட்களில் உதிர்ந்துவிடும்.

விறைக்க மருந்து ஊசி ஏற்றி அவ்விடத்தை மின்சாரத்தால் எரித்து அகற்றுவார்கள்.

எத்தகைய மருத்துவம் செய்தாலும் பூரண சுகத்தையிட்டு உறுதி கூறமுடியாது. 

ஏனெனில் இது வைரஸ் கிருமியால் வரும் நோய் என்பதால்தான். 

தடிமன் காச்சல் எப்படி திடீரென வருகிறதோ அதுபோல திடீரென மீண்டும் தோன்றலாம். 

இருந்தபோதும் 60% சதவிகிதத்திற்கு அதிகமானவர்களுக்கு அது எவ்வாறு வந்ததோ அவ்வாறே திடீரென தானாக மறைந்தும் விடுகின்றன.


எனவே கடுமையான சிகிச்சை முறைகளுக்கு அவசரப்பட வேண்டியதில்லை


நன்றி ஹாய் நலமா
பாதத்தில் ஆணிக் கூடுகள்.(Plantar warts) பற்றிய தகவல்கள்:-


ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான்.

ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

Human papillomavirus என்ற வைரஸ்சால் ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது.

உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை.

தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு
(callus) போல வளர்கிறது.

தமிழ் -கருத்துக்களம்-

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

@[492721517462288:274:ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.]

-------------------------------------------------
Like & Share : @[115109758557124:274:தமிழ் -கருத்துக்களம்-]விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

மனிதருள் மாணிக்கம்' இவர் யார்?

'மனிதருள் மாணிக்கம்' இவர் யார்?

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

  
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள்

கம்பெனிகளின் பெயர்களும் - விளக்கங்களும்

உங்களுக்கு தெரியுமா....?
கம்பெனிகளின் பெயர்களும் - விளக்கங்களும்


கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.
சில சுவாரஸ்யமானவை.


Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.


Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.


ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).


STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.


ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.


Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.


COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.


VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.


Wipro- ன் விரிவாக்கம் Western India Products.


googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல்
பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.


MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.


IBM-ன் விரிவாக்கம் International Business Machines.


Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.


HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.


HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.


MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.


TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.


Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.


Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.


Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.


KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.


Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.


இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.


நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.

...


Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது
பெயர்களும் - விளக்கங்களும்

ஒவ்வொரு போனிலும் பேஸ்புக்



பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக, இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி.
ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளுடன் கேமரா, வண்ணத்திரை மற்றும் சாதாரண இணைய இணைப்பு கொண்ட மொபைல் போன்கள் அனைத்திலும் பேஸ்புக் தளத்திற்கான இணைப்பை எளிதாக வழங்க பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது. 
அதன் ஒரு வழியாகவே “Facebook for every phone” என்னும் இந்த அப்ளிகேஷன் தரப்படுகிறது. இது இலவசமாகவே, மொபைல் போனில் பதிந்து தரப்படுகிறது. இதில் செய்திகள், மெசஞ்சர் மற்றும் படங்களை அனுப்புதல் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் அதிக செலவின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில், ஸ்மார்ட் போன் வாங்காமலேயே, சாதாரண மொபைல் போன்களில் மக்கள் இந்த வசதிகளை அனுபவிக்க முடிகிறது. இணைய இணைப்பிற்கான வழிகளைக் கொண்ட குறைந்தவிலை மொபைல் போனாக பேஸ்புக் தரும் இந்த அப்ளிகேஷன் கொண்ட மொபைல் போன்கள் இருக்கின்றன.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனமான ஸ்நாப்டு (Snaptu) வடிவமைத்தது. இந்நிறுவனத்தினை பேஸ்புக் 2011 ஆம் ஆண்டில், விலைக்கு வாங்கியது.


தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, எக்ஸ்பி பயன்படுத்தும் நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பயன்படுத்துவது சரியல்ல என்று எச்சரிக்கை தந்துள்ளது. வரும் 2014 ஏப்ரல் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான தன் ஆதரவை விலக்கிக் கொள்ள இருக்கிறது. 
இதனால், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்பாட்டிற்கான பாதுகாப்பு புரோகிராம்களை மைக்ரோசாப்ட் வெளியிடாது. 
எனவே, எக்ஸ்பியில் இயங்கும் சிஸ்டங்கள் இணைய இணைப்பில் மற்ற வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 
இந்தச் சூழ்நிலையில், தங்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் காப்பாற்றிக் கொள்ள, தகவல்கள் திருடு போகாமல் இருக்க, அனைவரும் அடுத்த சிஸ்டத்திற்கு இப்போதே மாறிக் கொள்ள வேண்டும். 
அப்போதுதான், புதிய சிஸ்டத்தினை முழுமையாகப் புரிந்து கொண்டு அதிகப் பயனடைய முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை நாளுக்குப் பின்னர், எக்ஸ்பி சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், டேட்டா திருட்டு ஏற்பட்டால், நிச்சயம் டிஜிட்டல் பாதுகாப்பு துறையினர் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதுவும் உறுதியாகிறது.

பிரான்சில் 500 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பாரிஸ் கோபுரம்



பிரான்சில் 500 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட பாரிஸ் கோபுரம்

பிரான்சில் 500 ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்டுள்ள வரலாற்று பாரிஸ் கோபுரமானது சுற்றுலாப்பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டில் 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியினால் செயிண்ட் ஜாக்ஸ் டி லா போச்செரி (Saint-Jacques-de-la-Boucherie) கோபுரமானது தாக்கப்பட்டது. இதனால் இந்த கோபுரத்தினை பாதுகாக்கும் பொருட்டு பொலிசரால் மூடப்பட்டது.
இந்த கோபுரமானது 62 மீற்றர் உயரமும் மற்றும் 300 படிக்கட்டுகள் கொண்டு பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரமானது பாரிஸ் நகரத்தின் நடுவே அமையப்பெற்றது.
இக்கோபுரத்தின் உச்சியில் இருந்து நகரத்தை முழுமையாக காண முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு
நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணச்செல்கின்றனர். மேலும் பார்வையாளர்களின் அனுமதி சீட்டானது 6 யூரோவிற்கு விற்கப்படுகிறது,
ஆனால் இந்த நினைவுச் சின்னமானது செப்டம்பர் 15ம் திகதியுடன் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!


* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.

* ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சில சாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை. அதனால்தான் ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை. எந்தக் கருங்கல் சிலையும் பொதுவாக சொரசொரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...