Apr 8, 2013

பொதுஅறிவு:- *நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் 
தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.


via - சுபா ஆனந்தி

மார்கரெட் தாட்சருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு

மார்கரெட் தாட்சருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குஇங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் (வயது 87) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

வழக்கமான தலைவர்களுக்கு அரசு மரியாதையுடன் நடக்கும் இறுதிச்சடங்கை விட தாட்சரின் இறுதிச்சடங்கு சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளது. அதாவது, ராஜகுடும்பத்தினர் மற்றும் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்களுக்கான ராஜமரியாதை அவருக்கு வழங்கப்படுகிறது. செயின்ட் பால் தேவாலயத்தில் இச்சடங்குகள் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வேறு இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று, ராஜகுடும்பம் அல்லாத வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதையுடனான இறுதிச்சடங்கு, கடைசியாக 1965ல் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.


ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்



பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள்

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?



ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?

1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ
https://www.facebook.com/photo.php?fbid=234010550071819&set=a.234010536738487.1073741869.117333541739521&type=1&relevant_count=8

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை



உலக அதிசயப்படியலில் இடம்பெறாத
தமிழர்களின் கட்டிடக்கலை
மற்றும்
பொறியியல் அதிசயமான
இசைத்தூண்கள் ..!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்:


உலக அதிசயப்படியலில் இடம்பெறாத
தமிழர்களின் கட்டிடக்கலை
மற்றும்
பொறியியல் அதிசயமான
இசைத்தூண்கள் ..!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்:

அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்

திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
ஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)
அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்

திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
ஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)

கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா?

கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா?

கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா?


கிரீன் டீயின் இரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள்  ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்.. 
  
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. 
* உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. 
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற

அவ்வையார் ஒருவர் அல்ல 8 அவ்வையார்கள் வாழ்ந்துள்ளனர்

Picture 

ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது
டிரைவர்களின் கவனத்திற்கு..........!!

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது, யாரேனும் உங்களுடைய கார் கண்ணாடியின் மீது முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம், துடைப்பானையும் (Wiper) உபயோகிக்க வேண்டாம்.

ஏனெனில் முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப்பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு, பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்,

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு திருடர்கள் தற்போது இந்த வழியையே பின்பற்றுகின்றனர்.

எச்சரிக்கையோடு இருப்பது நல்லது...
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று 
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ....

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் 
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம் ..

காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும் 
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும் .....

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் 
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா 
கொடுக்க எதுவும் இல்லை என் குழப்பம் முடிந்ததடா ......

கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா .......மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று ....

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம் வெறும் பந்தம் வளர்த்துவிட்டோம் ..

காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்து விடும் .....

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவும் இல்லை என் குழப்பம் முடிந்ததடா ......

கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா .......

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இன்று காலமானார். பிரிட்டனின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்படும் இவர் சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு வயது ( 87 ) . பிரிட்டனில் 19 ம் நூற்றாண்டு முதல் அதிக காலம் பிரதமராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் இவரே பிரிட்டனின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.
‘ இரும்பு பெண்மணி ’-

பிரிட்டன் பிரதமராக கடந்த 1979 முதல் 1990 வரை இவர் பதவி வகித்து வந்தார். இவரது தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 3 முறை வெற்றியை தழுவி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவர் அமெரிக்க நாட்டுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தார், இந்நாட்டுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளார். பிரிட்டனில் பொருளாதார முன்னேற்ற பணிகளை ஏற்படுத்தியதில் இவருக்கு தனிச்சிறப்பு உண்டு. இவர் ‌எந்‌தவொரு முடிவையும் தைரியமாக எடுக்க கூடியவர். பால்க்லாண்டு தீவு தொடர்பான பிரச்னையில், கடந்த 1982ல் அர்ஜென்டினாவுடன் போர் நடத்தினார்.இதனால் இவர் இரும்புபெண்மணி என பெயர் பெற்றார்.

பதவியிழந்த போதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் கடந்த 2002 முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். சமீப காலமாக இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மறைவு பிரிட்டன் மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் அரசு தரப்பில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...