Jan 3, 2022

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – அதிரவைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழிமுறைகளும்!

 

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – அதிரவைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழிமுறைகளும்!


கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழி முறைகளும்!
நாம் எப்போதெல்லாம்
கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னு ம், கழிவறையைப் பயன்படு த்தியபிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்தபிறகு எனத் தே ர்ந்தெடுத்த சில வேலைக ளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டு மென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பய ன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினை க்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச் சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக் கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நி னைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிக ள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக் டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசு வோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூ ட்டரில்தானே வேலை பார்க்கி றோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இரு ந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும்.
கிருமிகளின் பட்டியல்
லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுக ளைப்பரிசோதனைக்கு உட்படுத் தினார்கள். அதில் ஒரு கம்ப்யூ ட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீ ரியா அளவை விட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திரு க்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவ றை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலி பார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப் பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்க ளே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத் தி வந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியா ன வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர் கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தம் உங்கள் கையில்
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறு த்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப் பும் அமைகிறது. பலர் கழிப்பறை யைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்த ம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட் டரின் முன்னால் அமர்ந் து கொண்டு கைக்குட்டை யால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவது ம் சகஜம்.
இதுபோன்ற பழக்கங்களா லும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளி யோ,இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர்பயன்படுத்திய கீபோர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போ தும். அவருடைய நோய்கள் நம க்கும் மிக எளிதாகத் தொற்றி  விடும்.
நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொ ண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வ துதான், நமக்குக் கைவந்த கலையா யிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வே லை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்ப தைப் பலரும் வழக்கமாக வைத்திரு க்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப் யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உண வுத் துணுக்கை ஆதாரமாகக் கொண் டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும்.
சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப் யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கி றோம்? கீ போர்டில் தூசுப் படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார் த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல் லையென்றால் இது அலுவ லக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள் வார்கள் என்றநினைப்பு, சுத்தத்தைத்துரத்திவிடுகிறது.
சிலஅலுவலகங்களில் இடம்மாறியோ, வேலைநேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படு த்த நேரிடும். இதுபோன்ற சூழ்நி லையில் சுத்தம் செய்வது எவ்வ ளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.
என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட கால இடைவெளி யில் கீ போர்டு, மவுஸ், செல் போன் ஆகியவற்றைச்சுத்தப் படுத்தவேண்டும். கீபோர்டை த் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூல ம் அதனுள்ளே சிக்கியிருக்கு ம் உணவுத் துணுக்குகளையோ, சிறியகுப்பையையோ அகற்றலா ம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத் தெடுக்கலாம்.
  • இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத் தம். எங்கெல்லாம் கிருமித்தொ ற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பி றகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண் ணீரிலோ அல்லது சுத்திகரிப் பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக் கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக்கு றைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்து க் கழுவ வேண் டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொ றிப்போ எதையும் தூசி பறக்கு ம், மனிதர்கள் அதிகம் நடமாடு ம் பகுதிகளிலோ சாப்பிடுவதை த் தவிருங்கள். இப்படிச் சுத்தத் தைப் பரா மரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?

 

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?



அது ஏற்படுவதற்கான காரணம் என்ன‍? அதனால் ஏற்பட்ட‍ பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன‍? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  சுனா மியில் ஏற்பட்ட‍ பேரழிவுகள் யாவை?
நில நடுக்கம்
ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்க‍முடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன அல்ல‍வா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்ப‍தால்
தானே இக்கட்டிடங்கள் விழுந்து விடாமல் நிலைத்து நிற்கின்றன என்று கேட்டதும்புரிகின்றது.
ஆனால் அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வ‍ப்போ து நிலநடுக்கம் எனப்படும் பூகம்ப ம் ஏற்பட்டு பெருத்த‍ளவில் சேதங்கள் உண்டாகி வருவது நாம் அறி ந்ததே!
2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இந்தோனேஷியாவில் ஏற் பட நிலநடுக்க‍ம் மற்றும் அத னைத் தொடர்ந்து உண்டான சுனாமி அலைகளின் தாக்கு தலுக்கு 2 லட்சத்திற்கும் மே ற்பட்டோர் பலியாயினர்.
2001ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் காலை நாம் குடிய ரசு தின விழாக் கொண்டாட் டங்களைத் துவக்க‍ இருந்த சமயத்தில் குஜராத் மாநிலத் தில் ஏற்பட்ட‍ நில நடுக்க‍த்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரழ ந்தனர். 4,00,000 வீடுகள் இடிந்து விழுந்தன•
1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் அதிகாலை அனைவரும் உறங் கிக் கொண்டிருந்தனர். அப்போது மகா ராஷ்டிர மாநிலம்லாத் தூர் பகுதியில் ஏற்பட்ட‍ நிலநடுக்க‍த்தில் 10,000 பேரு க்கு மேல் இடி பாடுகளுக்குஇடையே சிக்கி உயிரழந்தனர். 30,000க்கும் மே ற்பட் டோர் காயமடைந்தனர்.  
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் மு ழுவதும்பெரிய அளவிலான நிலநடுக் கங்களைத் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன• இதனால் ஏராளமான அளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் உண்டாகின்ற ன• ஆகபூமியின் மேற்பகுதியில் அ வ்வ‍ப்போது திடீரென நில அதிர்வு கள் ஏற்பட்டு பூமி ஆட்ட‍ம் காணும் நிகழ்வே நில நடுக்க‍ம் அல்ல‍து பூகம்பம் எனப்படும். பெரிய அளவில் முதல் நில நடுக் க‍ம் ஏற்பட்ட‍பி ன் சிறு அளவிலான அதிர்வுகள் நெடுநாள் வரை தொடர்ந்து நிகழ்ந் து கொண்டே இருக்கும். இவை பின் அதிர்வுகள் எனப் படும்.
நிலநடுக்கம் ஏன் எவ்வாறு ஏற்படுகின்றது?
பூமியின் உட்பகுதி பல அடுக்கு களைக்கொண்டிருக்க‍ அமைந் துள்ள‍து.
மேற்பரப்பான முதலடுக்கு திட த் தன்மையுடன் காணப்படுகின் றது. அதற்குக்கீழே அமைந்துள் ள‍ இரண்டாமடுக்கு ஓர் உலை களின்போல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்ப‍தால், இந் த அடுக்கு அதிக வெப்ப‍நிலையைப்பெற்றுள்ள‍து. (எரிமலைச்சீற்ற‍த்தின்போ து லாவா  எனப்படும் பாறக் குழ ம்புகள் வெளியேறுவது இதனா ல்தான் இதன் காரணமாக இங் குள்ள‍ பாறைகள், கனிம தாது ப்பொருட்கள் அனைத்தும் உரு கி, பாகுபோன்ற நிலையில் உ ள்ள‍ன• பூமியின் மேல் அடுக்கு இதன்மீது மிதந்த வாறு, தொட ர்ந்து அசைந்து கொண்டே உள் ள‍து. பூமியின்மேல் அடுக்கு பூமித்தட்டு என்றும் அழைக்கப்படும். பூமித்தட்டில் ஆங்காங்கே பிள வுகள் காணப்படுகின்றன• இப்பிளவுகளின் விளிம்பு எல்லையை ஓட்டி பூமித்தட்டுகள் அசைந் தவாறு நகர்ந்து கொண்டுள் ள‍ன•
ஒருசிறு மூங்கில்குச்சியை இ ருகைகளிலும் பிடித்துக் கொ ண்டு வளைத்தால் ஒரு குறிப் பிட்ட‍ அளவுக்கு அது வளைந் து கொடுக்கும். அதன்பின்ன‍ர் நாம் கொடுக்கும் அழுத்த‍ம் தாளமாட்டாமல், குச்சி இரண்டாக உ டைந்துவிடும் அதே போலத்தான் பூமித்தட்டுக்களின் இயக்க‍த்திலு ம் நிகழ்கின்றது.
இரண்டுபூமித்தட்டுக்கள் தத்தம் விளி ம்பு எல்லைகளை ஒட்டி வெவ்வேறு திசைகளில் நகரும்போது ஒரு குறிப் பிட்ட‍ எல்லைவரை அவை வளைந் து கொடுக்கும் பூமித்தட்டுக்களின் நகர்வு குறிப்பிட்ட‍ அளவைத் தாண் டும்போது மேலே சொன்ன‍ உதாரண த்தில்கூறியதுபோல் பூமித்தட்டுக்க ள் நகர்வு இயக்க‍த்தின் அழுத்த‍ம் தாங்கமுடியாமல் உடைந்து விடு ம். அப்போது அளவற்ற‍சக்தி வெளியேறுகின்றது. நிலநடுக்கம் ஏற் பட்டு நில அதிர்வுகள் உண் டாவது இதனால்தான். பூமியி ன் விழுகின்றன• இது தவிர எண்ண‍ற்ற‍ பாதிப்புகளும் உண்டாகின் றன•
பூமித்தட்டுக்கள் உடைந்து ஏற்பட்ட‍ வெடிப்பு  
ஜப்பான், இந்தோனேஜியா போன்ற நாடுகளில் அடிக்கடி நில நடுக்க‍ ங்கள் ஏற்படுகின்றன• இதற்கு காரணம் என்ன‍? பசிபிக் பெருங் கட லைச் சூழ்ந்துள்ள‍ பூமித்தட்டின் விளிம் புப்பகுதி நெருப்புவளையம் என்று அழை க்கப்படுகின்றது. இப்பகுதிகளில் பூமித் தட்டுக்களின் அசைவு இயக்க‍ம் அதிகமா க உள்ள‍து. இதனமைப்புத்தான் இந்நெ ருப்பு வளையத்தின்மீது அமர்ந்து உள்ள‍ ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நா டுகளில் அடிக்கடி பெரிய நில நடுக்கங்க ள் ஏற்படுகின்றன•
நிலநடுக்க‍ம் மற்ற‍ இடங்களுக்கு எவ்வாறு பரவுகின்றது.
நிலநடுக்க‍த்தின் போது பூமிக்குள் ஒரு குறிப்பிட்ட‍ புள்ளியிலிருந்து திடீரென்று அளவற்ற‍ஆற்ற‍ல் வெளிப்படும். இப்புள்ளிக்கு குவியம்  என்று பெயர். இப் புள்ளியில் தோன்றும் நிலநடு க்க‍மானது, அதிர்வலைகள் மூலமாக மற்ற‍ இடங்களுக் கும் பரவச் செய்கின்றது. இப் புள்ளிக்கு நேர் செங்குத்தாக பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள‍ இடம் வெளி மையம் எனப்ப டும்.
குவியம், வெளி மையம்
குளத்து நீரில் கல்லைப் போட்டா ல் நீரில் கல் விழுந்த இடத்திலிரு ந்து அலைகள் உருவாகி வட்ட‍ வடிவில் பரவிஃ செல்வதைக் கா ணலாம். இவ்வாறுதான் நில நடு க்க‍த்தின் அதிர்வு அலைகளும் பரவிச் செல்கின்றன• நீர்நிலைகள் அதன் மேற்பரப்பில் கிடைமட்ட‍மாகப் பரவிச் செல்லும். நில அதிர்வு அலைகள் முப்ப‍ரிமாண வடிவில் அனைத்து திசைகளிலும் பரவிச் செல்லும். ஆற்ற‍ல் வெளிப்படும் குவியப் புள்ளியிலிருந்து தூரம் அ திகரிக்கும்போது அதற்கும்மோது அதற்குத் தகுந்தவாறு அதிர்வு அலைகளின் சக்தியும் குறைந்து கொண்டே செல்லும்.
குவியப்புள்ளி பூமியின்வெகு ஆழ த்தில் இருந்தால் அதிர்வலைகள் பூமியின் மேற்பரப்பை வந்தடையு ம்போது அவற்றின் ஆற்ற‍ல் பூமியின் மேற்பரப்பை வந்தடையும்போ து அவற்றின் ஆற்ற‍ல் குறைந்துவிடு ம். இதன் காரணமாக ஏற்படும் பாதிப் புகளும் குறைவாக இருக்கும். குவிய ப் புள்ளி பூமியின் மேற்பரப்புக்கு வெகு அருகில் இருந்தால் நில அதிர்வு மிக வும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இத ன் பாதிப்புகளும் தீவிரமாக இருக்கும்.
நில நடுக்கம் பதிவு செய்யும் விதம்
நில அதிர்வுமானி  என்ற கருவியின் மூலம் நிலநடுக்க‍த்தின்போது ஏற்ப டும் அதிர்வலைகள் பதிவு செய்ய‍ப் படுகின்றன• நம்மால் உணர இயலா த மிகவும் துல்லியமான அதிர்வுக ளைம் இக்கருவி அறிந்துகொள்ளும் .
நில நடுக்க‍ அதிர்வலைகள் இக்கரு வியினால் உணரப்பட்டு மின் அலை களாக மாற்ற‍ப்படும் பின்ன‍ர் இவை மின் கருவியில் பதிவு செய்ய‍ ப்படும். கணிணியின் உதவிகொண்டு இப்பதிவுகளை ஆய்வு செய் தால் நிலநடுக்க‍ம் ஏற்பட்ட‍ இடம், ஏற்பட்ட‍ நேரம், நிலநடுக்க‍ சக்தி யின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள‍லாம். குறைந்தது மூ ன்று வெவ்வேறு இடங்களில் செய்ய‍ப் பட்ட‍ பதிவுகள் தேவைப்ப டும்.
நிலநடுக்க‍ம் சக்தியை அளவீடு செய்யும் விதம்
நிலநடுக்க‍ம் எந்த அளவு சக்தி வா ய்ந்தது என்பது அது வெளியிடும் ஆற்ற‍லைப் பொறுத்து மதிப்பீடு செ ய்ய‍ப்படுகின்றது. இவ்வாறு மதிப்பிடப்பட்டு நடைமுறைக்குக் கொ ண்டு வரப்பட்ட‍து. தான் ரிக்டர் அளவு கோல் ஆகும். அமெரிக்கா வைச் சேர் ந்த சார்லஸ் ரிக்டர் என்ற புவி அறிவி யல் ஆய்வாளர் 1935ஆம் ஆண்டு இந் த அளவுகோல் முறையைக் கண்டறி ந்து நடைமுறைக்குக் கொண்டு வந் தார். இதன் வரையறை 1லிருந்து 10 வகை மதிப்புடையதாக உள்ள‍து. ரிக் டர் அளவுகோலில் 1 என்பது குறைந்த சக்திகொண்ட நில நடுக்க‍ த்தைக் குறிக்கும். இதை நாம் உணர இ யலாதளவுக்கு மிகவும் குறை வாக இருக்கும். அதிகபட்சமாக 9.3வரை நிலநடுக்க‍ங்கள்பதிவு செய்ய‍ப்பட்டுள்ள‍ன• இது தீவிர மான நில நடுக்க‍த்தைக் குறிக் கும்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இந்தோனேஷியாவில் நில நடுக்க‍ம் மற்றும் அதனைத் தொ டர்ந்து ராட்சத அளவில் சுனாமி அலைகள் ஏற்பட்ட‍ன• அல்ல வா? இவற்றின் பாதிப்புகளால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்த‌து நாம் அறிந்த தே!
ரிக்டர் அளவுகோலில் இந் நில நடுக்க‍த்தின் சக்தி 9 எண் கொ ண்டதாக பதிவுசெய்ய‍ப்பட்ட‍து. இதன்சக்தி 1500 ஹிமோஷிமா அணு குண்டுகளுக்கு சமமானதாகும். எனவே இதன் தீவிரத்தன் மையை நீங்களே கற்பனை செய்துபார்க்க‍லாம்.

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்

 

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்


இணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள் உள்ளன. ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.
catch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம். நீங்களும் தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.

உங்கள் செல்போனில் IMEI நம்பர்

 

உங்கள் செல்போனில் IMEI நம்பர் இருப்பது தெரியும்,.? But ICE நம்பர் இருக்கிறதா?


நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.
சர்வ தேச அளவில் பின்பற்றக்கூடிய ஓரு நல்ல பழக்கத்தை நாமும் பின்பற்றவோம்.!

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்

 

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்


இணையப் பயணர்களின் இணை பிரியாத பங்காளி தான் இந்த பேஸ்புக் (Facebook) எனப்படும் சமூக வலைத் தளம். இணையத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அநேகமாக இங்கு ஒரு கணக்கு இருக்கும். (இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாளுக்கு நாள் இதன் அங்கத்தவர்கள் பெருக, கூடவே இந்தத் தளம் சம்பந்தமான சர்ச்சைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் 24x7 ஆன்லைன் (online) ஆசாமிகளின் ஆட்டம் இருக்கும் வரை இந்தத் தளம் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சரி இனி தலைப்பிற்கு வருவோம்.

இவ்வாறான Fake Profiles எனப்படும் போலி முகங்கள் இணையத்தில் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போலிகள் பேஸ்புக்கையும் விட்டு வைக்கவில்லை. இது சம்பந்தமான நான் அறிந்த அனுபவ ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கையைப் பொருத்தமட்டில் இப்போலி கணக்குகள் அதிகம் ஆண்களாலேயே உண்டாக்கப் படுகின்றன. (பெண்களுக்கு போலிக் கணக்குகள் இல்லை என்று சொல்ல வரவில்லை).

பொதுவாக பெண்கள் முகம்தெரியாத ஆண்களிடமிருந்து வரும் Friend Request களை Accept பண்ணுவதில்லை. ஆனால் இதே ஒரு முகம்தெரியாத பெண்ணாக இருந்தால் அவர்கள் அவ்வளவாக சிந்திப்பதில்லை. ஆனால் இவ்வாறு பெண்களின் பெயர்களாலேயே ஆண்கள் அதிகம் போலிக் கணக்குகளை வைத்திருப்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஒரு சில சூட்சுமமான ஆசாமிகள் ஒரு படி மேல் சென்று போலியாக உண்மையான ஒரு பெண்ணின் பெயரை வைத்தே போலிக் கணக்கை உண்டாக்கின்றனர். இதனால் அந்தப் பெண்களைச் சார்ந்தவர்களுடன் இந்தப் போலி ஆசாமிகள் இலகுடன் தொடர்புகளை உண்டுபண்ண சந்தர்ப்பம் கிட்டுகிறது. எனவே பெண்களே உஷார்...!!!

அடுத்ததாக இவ்வாறு பெண்கள் பெயர்களில் உண்டாக்கப்படும் போலிக் கணக்குகளால் இவர்கள் ஆண்களையும் ஏமாற்றுகின்றனர். பெண்களின் பெயரில் Request வந்தால் பாய்ந்து சென்று அதை Accept பண்ணும் நபர்களே இதன் மூலம் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். ( எனக்கு தெரிந்த ஒரு நபர் இவ்வாறு ஒரு போலிக் கணக்கினால் ஏமாற்றப் பட்டு குறித்த அந்தக் கணக்கை வைத்திருக்கும் நபரின் கைப்பேசிக்கு ஆயிரக்கணக்கான ரூபாக்களை மீள்நிரப்பி (Reload) விஷயம் தெரிந்த பின் கை சேதப் பட்டது வேறு கதை )

சரி இனி இவ்வாறான போலிக் கணக்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ள எனக்கு தெரிந்த சில முறைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்;

ஆண்களோ பெண்களோ சரி, யாராவது தெரியாத பெயர்களிடமிருந்து Request வந்தால் உஷாராகி விடுங்கள். அந்தக் கணக்கின் பின்னணியை தேடுங்கள். உண்மையான Profile Pic போடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். (சிலர் உண்மையான வேறு நபர்களின் படங்களை கொண்டும் போலிக் கணக்குகளை உருவாகின்றனர்.)
குறித்த கணக்கில் எதாவது ஆபாச ரீதியான வாசகங்கள் அல்லது படங்கள் இருந்தால் கொஞ்சம் உன்னிப்பாக இருங்கள். எந்த நபரும் தன் ஆபாச நிலைகளை படம் போட்டு காட்ட விரும்புவதில்லை.
பெண்களே, உங்கள் தோழியின் பெயரிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப் படலாம். இந்த ஆசாமிகள் சூட்சுமமாக பொதுவான நண்பர்கள் (Mutual Friends) பட்டியலைக் கூட்டிக் கொண்டு உங்களுக்கு Request கொடுக்கலாம்.ஆகவே எதாவது சந்தேகம் தோன்றினால் குறித்த உங்கள் நண்பிக்கு அழைப்பை எடுத்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண்களே, தெரியாத பெண்கள் பெயரில் வரும் Request களை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டாம். (உங்கள் மனதை கொஞ்சம் கட்டிப் போடுங்கள்
உங்கள் நண்பர்களின் பெயரிலேயே போலிக் கணக்குகள் காணப்படுவதால் சந்தேகங்கள் ஏற்படும் சந்தர்பங்களில் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறான கணக்குகளை இனங்காண எனக்குத் தெரிந்த சில முறைகள்:

குறிப்பாக இந்தக் கணக்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அதிலும் அதிகம் ஆண்களே இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு பெண்ணுக்கு பெண்களை விட அதிகம் ஆண் நண்பர்கள், அதுவும் ஆயிரத்தையும் தாண்டி.. உஷார் ..!!!

ஆபாசமான படங்கள் காணப்படும். அதிலும் அந்த ஆபாசமான படங்களிற்கு கொடுக்கப் பட்டிருக்கும் ஆபாசமான பின்னூட்டல்களிற்கு (comments) அந்த நபரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருப்பார்.
குறித்த கணக்கின் Profile, இலகுவான பாதுகாப்பு நிலைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது அக்கணக்கின் சுவரை (wall) யாருக்கும் பார்க்கலாம், நண்பர் இல்லாவிடினும்.

குறிப்பாக சிலர் உண்மையான படங்கள் இல்லாததனால் அதிகம் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். (தான் பெண் என்று நிரூபிக்க

பொதுவாக Looking for, Interested in பகுதிகளில் எல்லா தெரிவுகளையும் தெரிவு செய்து இருப்பார். (குறிப்பாக Looking for a relationship)
அடிக்கடி கொஞ்சம் அப்புடி இப்படியான Pages, Groups களில் இணைவாங்க.

அதோட கொஞ்சம் கவர்ச்சியான யாரோ ஒருத்தரின் படங்களை தன் படம் என்று பகிந்து கொள்வாங்க. (இதுக்குப் போய் சில அப்பாவிப் பசங்க Hai, u r soooo beautiful என்று சொல்லும் கொடுமை இருக்கே... அப்பா சொல்லிப் பிரயோசனம் இல்லை

முக்கிய குறிப்பு: இவ்வாறான தன்மை கொண்ட எல்லா கணக்குகளும் போலி என்று சொல்லி விட முடியாது. இப்படியான தன்மைகளுடன் உண்மையான கணக்குகளை வைத்திருப்பவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல நபர்களின் Wall, நண்பர் இல்லாவிடினும் பார்க்கக் கூடிய பாதுகாப்பு தன்மையையே கொண்டிருக்கும். (Open to Everyone)

அது சரி இவ்வளவு சொல்லும் என் கணக்கிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட போலி ஆசாமிகள் குந்தி இருக்கிறார்கள். ஏன் இன்னும் தூக்காம இருக்கிறேன் என்று கேக்குறீங்களா..? பதிவிட அவர்களின் தொழிற்பாடுகளைப் பற்றி அனுபவம் இருக்க வேண்டும் தானே...!

(இங்கு வாசிப்பவரின் இலகு கருதி தேவையான இடங்களில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். பேஸ்பூக்கிற்கு மூஞ்சிப் புத்தகம் அல்லது முகநூல் என்று தமிழாக்கம் செய்வதில் இஷ்டமில்லை. Yahoo, Google, Orkut... இதுக்கெல்லாம் தமிழாக்கம் கேட்டா வில்லங்கம் தானே...

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

 


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin)  இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

 * தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

 * இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...