Oct 11, 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் (பாம்பு விஷகடி - முறிவு) பாகம் -1


நமது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ‘சஞ்சீவி’ மூலிகையைப் பற்றி, செவிவழிச் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த மூலிகை பல அதிசய சக்திகள் கொண்டது என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது பற்றி விவரம் தெரியும்?

அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும். தாய் கழுகு இதை தேடி செல்லும் வரை நாம் காத்திருந்து, அதன் பின்னர் நாம் கூட்டில் இருக்கும் குஞ்சுக் கழுகின் கால்களில் சிறிய இரும்புச் சங்கிலியைக் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து கொள்ள வேண்டும். இரையுடன் திரும்பிய தாய்க் கழுகு, தனது குஞ்சுகள் சங்கிலியால் கட்டப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுவிப்பதற்காக, சஞ்சீவி மூலிகையை தேடிச் செல்லும். சிறிது நேரத்திலேயே அதைக் கொண்டு வந்து தனது குஞ்சுகள் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலி மீது வைக்க அவை இரண்டாக தெறித்து விடுபடும். அதன் பிறகு, மீண்டும் அது இரை தேடி புறப்படும் வரை நாம் காத்திருந்து, பின்னர் மேலே ஏறி கூட்டில் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒரு மூலிகை வேர் இருக்கும். அதை எடுத்து வந்து நெருப்பில் போட்டால் வேகாது எனவும், ஓடும் நீரில் போட்டால் எதிர்த்துச் செல்லும் எனவும், இதை பூட்டிய பூட்டின் மேல் வைக்க அது திறந்து

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு



சஞ்சீவி மூலிகையின் தேடுதலின் போது அதன் இன்னொரு பரிணாமத்தை எனக்கு ஒரு மகான் உபதேசித்தார். நமது புராண காவியங்களில் ஒன்றான ராமாயணத்தில் ஸ்ரீராம பிரான் சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்கும் போது நடந்த போரில் ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் ஏவியதில் ஸ்ரீராமர், லட்சுமணன் ஆகியோர் மூர்ச்சையாகி விட இதனால் மனம் கலங்கிய ஹனுமனிடம், ஜாம்பவான் சஞ்சீவி மலையினை பெயர்த்து வரச் செய்து இம் மூலிகையினைக் கொண்டு இருவரையும் உயிர் பெறச் செய்தார் என்று ராமாயணம் சஞ்சீவி மூலிகையின் மகிமையை பறை சாற்றுகிறது.

மேற்கண்ட ‘நாகாஸ்திரம்’ என்பது நாகப் பாம்பின் விஷத்தினால் தயார் செய்யப்பட்ட ஒரு ஆயுதம். இதன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகையே ‘சஞ்சீவி’ என்பதாகும். இறைவனின் படைப்பில் எங்கெல்லாம் நஞ்சு உள்ளதோ, அதன் அருகிலேயே அமிர்தமும் படைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமான உண்மை. தேவர்கள் சாகாவரம் தரும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம் தான் வெளி

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி


இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி


தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம்  புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம்  தொடர்பு கொண்டாலும்,தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும்,ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும்,காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்,மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும்

இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.

---------------------------------------------------------------------------------------

நோயனுகா விதி
நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு
என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு  :   ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும்.
வாரமிரண்டு : வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
 வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி!
இமயகிரி சித்தர்  

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன.அதில் -246-வகை
பாம்புகள் இந்தியாவில் உள்ளன.அயர்லாந்து,நியூசிலாந்து,ஆர்ட்டிக்
போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள்
காணப்படுகின்றன.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது
சில வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ 
மற்றவையே.இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப்
பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,
1.நல்ல பாம்பு  - 2.கட்டு வீரியன்- 3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு - 5.கரு நாகம் - 6. ராஜ நாகம்.
மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில்
பெருமளவு காணப்படுகின்றன.பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்


பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் உலகோர்க்

கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு

வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் 

அணுகாது குடியோடிப்போம் நன்றான நாகதாளிக் கிழங்கு 

தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா அன்றான 

ஆகாசகருடன் மூலி அம்மனையிலிருக்க விடமற்றுப்போம் 

ஹலோ டாக்டர்,
1.உணவில் உப்பைக் குறைத்துக் கொள்வதால் இருதயத்திற்கு நல்லதா?
உப்பு ஊறுகாய் அப்பளம் வடகம் போன்றவற்றை சாப்பிடுவது தவறா? - திருமதி .உமா சண்முகம் (ஈரோடு)

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம்
புதுவருடப் பிறப்பு, பொங்கல் என்று பல விடுமுறைகளும் விழாக்களும் நிறைந்துள்ள நேரத்திற்கு பொருத்தமான கேள்வி. நாம் உண்ணும உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல் தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் க்ளோரைட் (Sodium Chloride) எனப்படும் உப்பு, சுவைமட்டும் அளிக்கும் ஒரு பொருள் அல்ல. அது


இருதய நோய் வல்லுநர் – டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம்
மதுசூதனன் – சென்னை.
ஹலோ டாக்டர்
இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா?

இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை,இருதயம், ஈரல், மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும்.
இருதயமானது ஒரு தசையும் நாணும் இனைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், இரத்த ஓட்டம் அந்த நான்கு அறை (chambers) வழியாகவும்
கேள்வி:வணக்கம். என் பெயர் .gm எனக்கு 78 வயதாகிறது.பேஸ் மேக்கர் வைத்துள்ளேன். பேஸ் மேக்கர் வைத்து 11 மாதம் ஆகிறது. இத்தனை நாள் தலைச் சுற்றல் இல்லை.இப்பொழுது குனிந்தாலோ நிமிர்ந்தாலோ தலை சுற்றுகிறது. இதனால்தான் ஏற்படுகிறதா? நான் ஒரு நாளைக்கு 2 முறை 2 மாடி ஏறி இறங்கலாமா? தயவு செய்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்பது நாம் முன்பே அறிந்த உண்மை. மேலும் இருதயமானது ஒரு தசையும் நாணும் இணைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்த ஓட்டம் அந்த நாலு அறை (chambers) வழியாகவும் செல்லுவதை ஒரு வழிப்படுத்துவதற்கு என்று சாதனங்கள், வால்வ், (valves) உண்டு. இரண்டு ஏட்ரியம்(atrium) மற்றும் இரண்டு வென்ட்ரிகிள் (ventricle) என்ற அறைகள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...