Mar 15, 2014

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!



ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.
மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, ஆகியவை குணமாகும்.
இதேபோல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப்படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்.

கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி


கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு தர்பூசணி பழத்தினை உண்டால் உடம்பெல்லாம் குளுகுளுவென்று இருக்கும்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும்.
இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.
நீர் கடுப்பையும், மூளைக்கு பலத்தையும் தரக்கூடிய பழம். கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை உண்ணலாம் குழந்தை அழகாக பிறக்கும் என்கிறார்கள். சீதளம் மற்றும் குளிர்ச்சி தேகம் உடைவர்கள் சிறிதளவே உண்ணவேண்டும். இதை அதிகமாக சாப்பிட்டால் பித்தத்தை தரக்கூடியது.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள்


காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை  தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர்.

தொடரும் மாயம்: விமானம் திட்டமிடப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளது, அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டிருக்கலாம், விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது


காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 7ஆம் திகதி சென்ற மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
 
இதுநாள் வரையிலும் விமானம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
 
 
 
அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டதாக தகவல்
 
இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
 
விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது 2 பேர் விமானத்தை கடத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சமிக்ஞைகள் தானாக செயலிழக்கவில்லை, அது மனிதர்களால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதனை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
விமானம் கடத்தலின் பின்னணி குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், விமானம் கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருவதாக கூறினார்.
 
ஆயினும் மாயமான விமானம் பற்றி இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
விமானத்தின் தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் மலேசிய தீபகற்பத்தில் பறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்
 
இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
மலேசிய விமானம் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே அதன் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.
விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகளைச் சேர்ந்த 42 விமானம், 39 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமானதும் முதலில் தென் சீன கடல் பகுதியில் தேடினோம். அந்த தேடுதல் பணியை முடித்துக் கொள்வதாக இருக்கிறோம்.
 
விமானம் அதன் பாதையில் இருந்து ஏன் விலகிச் சென்றது என்பதை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
 
செயற்கோள் தகவல்கள், விமானம் வடக்கு தாய்லாந்தில் இருந்து கஸகஸ்தான் பகுதி அல்லது இந்தோனேசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம் என தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஊடகங்களில், மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானாலும் மற்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 
 
 
அந்தமான் பகுதிக்கு சென்றதா?
 
அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது.
கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அமெரிக்கா அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியினை தொடங்கவுள்ளது.
 
 
 
இன்னும் சிக்னல் இருக்கு...
 
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் சகல தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மாத்திரம் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த செட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது.  இதனை 'ஹேன்ட்ஷேக்' என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த 'ஹேன்ட் ஷேக்' இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
 
கடத்தல்காரர்கள் விமானத்தை மலேசிய தீபகற்பத்து நேர் மேற்கில் திருப்பியுள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மேற்குக் கரைப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் மடகாஸ்கர் வரையிலான ஏதோ ஒரு பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
   

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...