May 22, 2012

இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் 11 வயது மகனை நிலக்கரி

இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் 11 வயது மகனை நிலக்கரி கிடங்கில் ஒருவருடம் அடைத்துவைத்த பெற்றோர்

வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்த பொருட்களை எடுத்த குற்றத்திற்காக 11 வயதான சிறுவனை ஒரு வருடகாலம் கடும் குளிரான அருவருப்பு மிக்க நிலக்கரி கிடங்கொன்றில் சிறைப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படும் அச் சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தை ஆகியோரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்தின் பிளெக்பூல் பகுதியில் ஜன்னல்களற்ற வெளிச்சமற்ற இந்

யோகாவை பதஞ்சலி முனிவர் முதல் பல சித்தர்கள் வரை போதித்துள்ளனர்.

சித்தர்கள் முதல் ரிஷிகள் வரை மனித ஆரோக்கியத்தை முதனிலைப்படுத்தியே வந்தனர். தங்களின் தவ வலிமையால் கண்டறிந்து சொன்ன முறைகளில் மருந்திலா மருத்துவ முறையும் ஒன்றாகும்.
நோய் வரும் முன் தடுக்கும் முறையே மருந்தில்லா மருத்துவமுறையாகும்.
நோய் வரும் முன் தடுக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் அரை மணி நேரமாவது செய்தல் நல்லது. இந்த வகையில் யோகா செய்வது எப்படி, அதன் பயன் என்ன? என்பதைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒரு யோகாசனம் பற்றி அறிந்து வருகிறோம்.
இந்த இதழில் அர்த்த சந்த்ராசனம் என்று அழைக்கப்படும் யோகாசனத்தைப் பற்றி அறிவோம்.
அர்த்த சந்த்ராசனம்:
சமஸ்கிருதத்தில் அர்த்த என்றால் பாதி என்று பொருள். சந்திரா என்றால் நிலா என்று பொருள். இந்த ஆசனம் பாதி நிலா வடிவில் இருப்பதால் இதனை அர்த்த சந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை:
முதலில் விரிப்பின் மீது காலை அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும்.
வலது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள

உடலெனும் பிரபஞ்சம் ஆலோசகப்பித்தம்…



அழல் எனும் பித்தமானது தீயின் தன்மை கொண்டது. இயற்கை நிலையில் செரிப்பித்தல், பார்வை, பசி, நீர்வேட்கை, சுவை, ஒலி, அறிவு, வன்மை, மென்மை அதாவது கண்பார்வை, நீர்வறட்சி, உடலுக்கு பிரகாசம், மனம், புத்திக்கூர்மை, எதிலும் நிதானம், ஞாபகசக்தி என உடலை இயக்கும் அனைத்து சக்திகளையும் அடக்கி ஆள்வது பித்தம்தான். இதனால்தான் “பித்தமே பிரதானம்” அதுவே உயிர் சக்தி என சித்தர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பித்தமானது சீர்குலையும் போது மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் பாதிப்படைகிறது. இதையே “பித்தம் பிசகினால் பேசாமல் போய் விடும் சக்தி” என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
மனித எண்ணங்களும், செயல்பாடுகளும் பித்தத்தின் நிலையைப் பொறுத்து அமைவதால் பித்தமே பிரதானமாக அமைந்துள்ளது. இந்த பித்தமானது உடலில், அதன் செயல்களுக்கு ஏற்ப ஐந்து வகைகளாக செயல்படுகிறது. அவற்றில் அனற்பித்தம், இரஞ்சக பித்தம், சாதகப் பித்தம், ஆலோக பித்தம் பற்றி விரிவாக கடந்த இதழ்களில் அறிந்தோம். இந்த இதழில் பிரகாசபித்தத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பிரகாச பித்தம்:
சருமத்திற்கு ஒளியைத் தரும் பண்புடையது. சருமத்தில் வாழ்ந்து கொண்டு சருமத்திற்கு பிரகாசத்தைக் கொடுத்து ஒளிரச் செய்யும்.
அதிக வெப்பம், அதிக குளிர் போன்ற புறக் காரணிகளால் உடல் பாதிக்காதவாறு பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இப்பித்தத்திற்கு உண்டு. வியர்வைப் பெருக்கி உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுகிறது.
பிரகாச பித்தமானது உடலெங்கும் வியாபித்திருக்கும் பித்தமாகும். இப்பித்தமே புறச் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உடலின் வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்கிறது.
உடலைப் பாதுகாக்கும் சருமத்தை பாதுகாத்து பொலிவுபெறச் செய்யும் பித்தம் தான் பிரகாச பித்தம்.
பிரகாச பித்தம் தான் உணர்வு நரம்புகளைத் தூண்டி செயல்படுத்தும் பித்தமாகும். அனிச்சைச் செயல்களை விரைவுபடுத்தி உடலை விரைவாக செயல்படுத்துகிறது.
சுறுசுறுப்பையும், புத்துணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் பித்தமும் இதுதான். மன எண்ணங்களுக்கு ஏற்ப அவற்றை செயல்படுத்தும் ஆயுதமாகவே இப்பித்தம் செயல்படுகிறது.
இந்த பிரகாச பித்தமானது அலர்ஜியுறும் போது அதிக கோபம், பயம், விருப்பமின்மை, சோம்பல், மயக்கம், உணர்வின்மை, சுறுசுறுப்பின்மை, கை, கால் நடுக்கம், சருமச் சுருக்கம், நரம்பு பலவீனம், கண்பார்வைக் கோளாறு போன்றவற்றை உண்டு பண்ணுகிறது. மேலும் சருமமானது பலமிழந்து சரும நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக்குவதும் பிரகாச பித்தமே தான்.
அதீத மன உளைச்சல், மன அழுத்தம், பயம் போன்றவற்றால் பிரகாச பித்த அலர்ஜி உண்டாகிறது. இதனால் சருமத்தில் அதிக வியர்வை, சரும பொலிவின்மை, சரும வறட்சி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை ஏற்பட்டு உடல் பாதிப்படைகிறது.
பிரகாச பித்தமானது உணவு முறை மாறுபாட்டால் அதிகம் பாதிப்படைகிறது. அதாவது உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உண்பதால் அஜீரணம் உண்டாகி அதனால் பித்தம் அதிகரிக்கும்போது பிரகாச பித்தம் பாதிப்படையும்.
அதுபோல் தேவையற்ற துர்வாசனைகளை நுகரும்போது சரும நரம்புகள் பாதிக்கப்பட்டு சருமமும் பாதிப்படைகிறது.
சித்தர்கள், ஞானிகள், தங்களின் தவப்பயனால் பித்தத்தை சீர்படுத்தி இப்பிரகாச பித்தத்தை செயல்படச் செய்து சருமம் பொலிவுடன் ஒளிரச் செய்தனர்.
ஆன்மீக உணர்வுகள் மூலமும், உணவின் மூலம் பிரகாச பித்தத்தை சீர்படுத்தலாம். சரசுவாச முறைகளைக் கடைப்பிடித்தால் பிரகாச பித்தம் சருமத்தை ஒளிரச் செய்து பொலிவு கொடுக்கச் செய்யும்.
தோலுக்கு அதிக சக்தியைக் கொடுத்து பிரகாசிக்கச் செய்யும் தன்மை பிரகாச பித்தத்திற்கு உண்டு. இளம் மஞ்சள் மேனியைக் கொடுக்கும் தன்மை பிரகாச பித்தத்திற்குண்டு. ஞானிகளின் உடல் பொன்போல் பிரகாசிப்பது பிரகாச பித்தத்தினால்தான்.
நிதானமான மனம், அமைதியான குணம், நேர்மையான பேச்சு, இவையால் பிரகாச பித்தமானது சீராக செயல்படும்.
மரங்கள் : சந்தனம்…

மரம், செடி, கொடி, புல், பூண்டு இவையனைத்தும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. இவைதான் மனிதர்கள் உயிர் வாழ ஆதாரமாக இருப்பவை. இயற்கை இவற்றின் மூலமே அதிகளவு மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இவற்றை மனிதன் தன் சுயலாபத்திற்காக அழித்ததன் விளைவுதான். புயல், மழை, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்கள்.
“மரம் வளர்ப்போம். மழை பெருவோம்” என்ற வாசகம் விளம்பரப் பலகையில் தான் உள்ளது. மனிதர்களின் மனதில் இல்லை. இப்படி மனிதர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. இதை அன்றே சித்தர்கள் கண்டறிந்து பல நூல்களில் எழுதி வைத்தனர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களுள் சந்தன மரமும் ஒன்று. சந்தன மரத்தின் தூள் சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் கொண்டது. நம் முன்னோர்கள் சந்தனத்தூளை நீரில் கரைத்து மேனியெங்கும் பூசிக் கொள்வார்கள்.
தற்போது நறுமனப் பொருட்களில் சந்தனத்தூள், சந்தனத் தைலம் முக்கிய இடம் பெறுகிறது.

சந்தன மரம் மாற்றடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டது. உலர்ந்த கட்டை நறுமணம் கொண்டது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதிகலிலும் அதிகம் வளர்கிறது. மலைப்பாங்கான பகுதியில் நன்கு வளரும். 20 வருடங்களுக்கு மேல் பழமையான மரமே பயன்படுத்தப்படுகிறது. சந்தன மரம் உயிருடன் இருக்கும்போது மணப்பதில்லை, வெட்டிய கட்டைகளே அதிகம் மணம் பரப்பும்.
Tamil      – Chandanam
English     – Sandal wood
Sanskrit     – Shri gandha, chandanam
Telugu     – Gandeapu – chikka
Kanada     – Gadnhad chehke
Malayalam     – Chandana
Botanical Name    – Santalum album
நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் – மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து

- பதார்த்த குணபாடம் – பாடல் (209)
பொருள் : நல்ல சந்தன மரக்கட்டையை முறைப்படி பயன்படுத்துவோருக்கு அறிவும், மனமகிழ்ச்சியும், உடல் அழகும் கூடும், பெண்களுக்கு வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்.
சந்தன மரத்தில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றும் மருத்துவப் பயன் கொண்டவை.
மருத்துவப் பயன்கள்
சரும நோய் நீங்க:
அகச் சூழ்நிலையாலும், புறச் சூழ்நிலையாலும் மனித உடலில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு சருமம் தான். சருமத்தில் சொறி, சிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வெண்குட்டம், கருமேகம், வீக்கம், முகப்பரு, தழும்பு, முகக் கறுப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகி பலர் வேதனைப்படுவார்கள்.  இவர்கள் சந்தன மரக்கட்டையை எலுமிச்சப் பழச்சாறு விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
வெட்டைச் சூடு தணிய:
சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைப் போக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும்,  சந்தனத்தூள் உபயோகப்படுகிறது.
சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
மார்புத் துடிப்பு நீங்க
சந்தனத்தூள்  20 கிராம் எடுத்து 300 மி.லி. நீரிலிட்டுக் காய்ச்சி 150 மி.லி.யானவுடன் வடிக்கட்டி வேளைக்கு 50 மி.லி.  என காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத்துடிப்பு மந்தம், இதயவலி போன்றவை நீங்கும்.
சந்தனத்தூளைப் புகைத்து நறுமணம் வீசச் செய்தால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கி சுவாசத்தைச் சீராக்கும். மனதிற்கு சாந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும்.
சந்தனத் தைலம்:
சந்தனத் தைலத்தை சருமத்தின் மீது தடவினால் சரும நோய்கள் ஏதும் அணுகாமல் சருமத்தைப் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
சந்தனத்தின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
சீறுநீரகம் காக்கும் சிறுநெருஞ்சில்…

புவி அமைப்பில் அதன் தட்பவெப்ப நிலைக்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் காணப்படும் மூலிகைகள் அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என்பது காலம் அறிந்த உண்மை. இந்த மூலிகைகள் இன்று பல வகைகளில் அழிக்கப்பட்டு வருகிறது. வீடுகளைச் சுற்றி வளர்ந்த மூலிகைகள் பல இன்று கான்கீரிட் தளங்களால் காணாமல் போய்விட்டன. மலைப் பிரதேசங்களில் மட்டுமே தற்போது மூலிகைகள் வளர்கின்றன என்று நினைத்தால் அங்கேயும் மலைகளைக் குடைந்து தாதுக்கள் எடுப்பதால் அங்கும் மூலிகைகள் இல்லாமல் போய்விட்டது.
நவீன சூழலில் சிக்கி இரசாயன வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை நாம் அன்றாடம் உண்டு வருவதால் நோய்களின் பிடியில் நிரந்தரமாக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கு தீர்வுதான் என்ன என்பதை அறிந்த மேலைநாட்டினர் நம் தேசத்தையும், முன்னோர்களின் பாரம்பரிய மருத்துவத்தையும் தேடி அலைந்து அதைக் கண்டறிந்து அதற்கான உரிமையையும் நம்மை ஏமாற்றி பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள அபூர்வ மூலிகைகளை நாம் பாதுகாப்பது அவசியமாகிறது. இப்படிப்பட்ட மூலிகைகளுள் சித்தர்களால் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கற்ப மூலிகைகள் உடலை நோய் என்றும் அணுகாதபடி பாதுகாத்து வருகின்றன. நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கற்ப மூலிகை பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் சிறு நெருஞ்சில் பற்றி அறிந்து கொள்வோம்.
நெருஞ்சிலைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் இந்த காயின் மீதுள்ள முட்களின் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்கள் எவரும் இல்லை எனலாம். தரையோடு படர்ந்த சிறு கொடி, மஞ்சள் நிறங்கொண்ட மலர்களைக் கொண்டது. இந்த மலர்கள் சூரியத் திசையோடு திரும்பும் தன்மை யுடையவை. இதன் காய்களின் மேல் மாட்டின் கொம்பைப் போன்று காணப்படும். சிறு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என இரு வகைகள் உள்ளன. இதில் சிறு நெருஞ்சில் இந்தியா முழுமைக்கும் காணப்படும் கொடியாகும். குறிப்பாக தமிழகமெங்கும் சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. சிறு நெருஞ்சிலின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயன் கொண்டவை.
சிறுநெருஞ்சில் திரிகண்டம், அசுவட்டிரம், சுவதட்டம், கோகண்டம், காமரசி, சுதம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil     –     Nerunjil
English     –     Land Caltrops
Sankrist     –     Gokshura
Malayalam     –     Nerinnil
Telugu     –     Chinni Palleru
Botanical Name     –     Tribulus terrestris
நல்ல நெருஞ்சிலது நாளுங்கி ரிச்சாரத்தை
வல்ல சுரமனலை மாற்றுங்காண் – மெல்லியலே!
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்
கூனுறுமெய் வாதமும் போக்கும்
- அகத்தியர் குணபாடம்

பொருள்:
சிறு நெருஞ்சிலானது சொட்டு நீர் வெளியேறுதல், கல்லடைப்பு, நீரடைப்பு, முடவாயு, சிறுநீர் எரிச்சல், நீர் வேட்கை, வெப்பம் இவற்றைப் போக்கும்.
நெருஞ்சிலின் சமூலம் (இலை, கொடி, காய், பூ விதை) அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
மருத்துவ பயன்கள்
கண் நோய் பாதிப்பு நீங்க:
நெருஞ்சில் சமூலம் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் அருகம்புல் ஒரு கைப்பிடி சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இரு வேளையும் 50 மி.லி. அளவு அருந்தி வந்தால் கண் படலம், கண்ணில் நீர்வடிதல், கண்புகைச்சல், கண் நரம்புகளின் வறட்சி போன்றவை குணமாகும்.
சிறுநீர் தொந்தரவுகள் நீங்க
சிறு நெருஞ்சிக்காய்  68 கிராம் எடுத்து இடித்து அதனுடன் கொத்தமல்லி விதை 8 கிராம் சேர்த்து 700 மி.லி. நீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 40 மி.லி. அளவு அருந்தி வந்தால் சிறுநீரக கல்லடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலத்துடன், கீழாநெல்லி சமூலம் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலந்து உணவு இடைவேளைக்கு இடையில் அருந்தி வந்தால் நீர் தாரை எரிச்சல், சிறுநீர்க்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு, போன்றவை குணமாகும்.
சிறுநெருஞ்சில் சமூலத்தை இடித்து சாறு பிழிந்து 30 மி.லி. அளவு எடுத்து அதனுடன் மோர் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் சிறுநீருடன் கலந்து இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
மேலும், இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீரைவெளியேற்றும். சிறுநீரக கல்லடைப்பைத் தடுக்கும். நீர்க்கடுப்பு, நீர் தாரை எரிச்சல் போன்றவை நீங்கும்.
பெண்களுக்கு கருப்பை நோய்கள் நீங்க
சிறு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து இடித்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி வடிகட்டி, ஆறிய பின்பு தேன் கலந்து அருந்தி வந்தால் பெண்களின் கருப்பை நன்கு வளர்ச்சியடையும். கருப்பை கட்டி வராமல் தடுக்கும். மோருக்கு பதிலாக இளநீரிலும் கலந்து அருந்தலாம்.
வெள்ளைபடுதல் மாற
சிறு நெருஞ்சில் காயையும், வேரையும் பச்சரிசியோடு சேர்த்து வேகவைத்து கஞ்சியை வடித்து பனைவெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான வெள்ளைபடுதல், மாதவிலக்கு தொந்தரவு போன்றவை நீங்கும்.
சிறு நெருஞ்சில் சமூலம்    -    10 கிராம்
சுக்கு     –     5 கிராம்
மிளகு     -    5 கிராம்
திப்பிலி     –     5 கிராம்
இலவங்கம்     –     4 கிராம்
ஏலக்காய்    –     3
சாதிக்காய்     –     4
மூங்கில் அரிசி     –     5 கிராம்
என இவற்றை எடுத்து இடித்து பொடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை அரை லிட்டராக மாற்றி, 50 மி.லி. தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும். சிறுநீர் நன்கு வெளியேறும். சிறுநீரக நோய்கள் ஏதும் உண்டாகாது.
தாது விருத்திக்கு
நெருஞ்சில் வித்து, சமூலம், இவற்றை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை  ஒரு ஸ்பூன் எடுத்து இளநீரில் கலந்து அருந்தி வந்தால் தாதுவை விருத்தி செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். வியர்வைப் பெருக்கி உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீர்களை வெளியேற்றும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்களைப் பிரிக்கும். இரத்தத்தின் கடினத்தன்மையைக் குறைத்து, இரத்த நாளங்களில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைப் பிரித்து வெளியேற்றும். உடல் சூட்டைத் தணிக்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
சிறு நெருஞ்சில் நம் காலில் குத்துவதை எண்ணி அதை ஒதுக்கி விடாதீர்கள். இதனை களையாக நினைத்து அகற்றி விடாமல் அதன் மருத்துவப் பயனை முழுமையாக பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.
மலரும் மருத்துவமும் வாழைப் பூ…
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.
பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். தோட்டங்களிலும் சாகுபடி செய்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அகத்தியர் பெருமான் குணபாடத்தில் எட்டு வகை வாழையைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
வாழைப்பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சித்தர்கள் அகத்தியர் பெருமான்
வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டை பித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் – ஆழியனல்
என்னஏரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குத்தாறுவை
- அகத்தியர் குணபாடம்

பொருள் :  குருதிமுனை, வெள்ளை, வெறி உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல் எருவாய்க் கருப்பு, இருமல், கை, கால் எரிச்சல் இவைகளைப் போக்கும் ஆண்மையைப் பெருக்கும்.  வாழைப்பூ துவர்ப்புத் தன்மை கொண்டது.
மருத்துவப் பயன்கள்:
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்றுப்புண் நீங்க:
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி         5 கிராம்
பூண்டு பல்         5
நல்ல மிளகு         1 ஸ்பூன்
சீரகம்         1 ஸ்பூன்
சோம்பு         1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை     1 ஸ்பூன்
கறிவேப்பிலை     5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும்.  ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.
நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

வேம்பின் மருத்துவ குணங்கள்
[ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 02:23.39 மு.ப GMT ]
வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பந்தழையின் இலை வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், மஞ்சள் காமாலை, நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.
வேம்பின் சாறில் 10 அரிசி, நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்தாலும் கட்டுப்படாத நோய்கள், இளைப்பு தீரும். உடம்பு கெட்டிபடும், நரை மாறும்.வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பித்த வெடிப்பு, கட்டி, பரு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம் குணமாகும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் குணமாகும்.
Click Here

மனிதன் சிருஷ்டிக்கப் பிறந்தவன்; இறைவனையொத்தவன்; இறையம்சம் நிறைந்த ஆத்மாவை உடையவன்; இறையோடு கலத்தலில் இன்பிக்கக் கூடியவன். இறைவனின் பாதங்களில் சரணாகதி அடைந்து, தன் நற்செயல்களின் மூலம் முற்பிறவி கர்மாக்களைத் தொலைத்து ஆத்ம சுத்தி பெற ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.
ஆத்ம சுத்தி ஒன்றே சிருஷ்டிக்கான வழியாகும். மானுடன் ஆத்ம சுத்தியை சாதாரண வாழ்வியல் சூழலிலிருந்தே பெற்றுவிட முடியும். தேர்ந்தெடுத்த உணவுகள், தெளிவான பழக்க- வழக்கங்கள், சீர் தூக்கிக் காணும் நுட்பமான சிந்தனை, ஜீவகாருண் யம், மனித நேயம், சமூகம் சார்ந்த சேவைப் பாங்கு இவையனைத்துமே ஆத்ம சுத்திக்கான படிக்கட்டு களாகும்.
ஆத்ம சுத்தி செய்து கொண்ட ஆணும் பெண் ணும் திருமண பந்தத்தில் இணைந்து துய்க்கும் இன்ப நிலையே ஏற்புடையது. இவர்களின் இல்லறத் தில் உண்டாகும் குழந்தை மதிநுட்பம், ஆரோக் கியம், தேக காந்தி, வசீகரம் போன்ற அம்சங்களைப் பெற்று திறமைசாலியாய்ப் பிறக்கும்.
இங்கு நாம் நல்ல சந்ததி விருத்திக்காக அடையாளம் காணப்பட்ட கோரைக் கிழங்கு, எம்பிரான் சிவபெருமானின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்ட உணவுப் பொருளாகும். சிவாலயங்களில் அரிசி மாவுடன் கோரைக் கிழங்கும் சேர்த்துத் தரப் படுவதை நாம் அறிவோம்.
“என் நினைப்புடன்- ஆத்ம சுத்தியுடன் இல்லறத் தில் இணையுங்கள்’ என்பதே எம்பிரானின் கட்டளை. அத்தகைய கோரைக் கிழங்கை மருந் தாக்கும் மகத்துவத்தை இனி அறிவோம்.
உயிரணுக்கள் பெருக…
கோரைக் கிழங்கு, நெருஞ்சில், தண்ணீர்விட் டான் கிழங்கு, ஆலவிதை, அரசவிதை, ஓரிதழ் தாமரை ஆகிய அனைத்தையும் வகைக்கு நூறு கிராம் வீதம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை பசும்பாலில் கலந்து, காலை- இரவு இருவேளையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக் கள் அதிகரிக்கும்.
ஆண்மை சக்தி மேம்பட…
கோரைக் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, ஜாதிக்காய், வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை- இரவு இருவேளையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கை- கால் நடுக்கம், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாக…
கோரைக் கிழங்கு, அம்மான் பச்சரிசி, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை காலை- மாலை இருவேளை யும் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இவ்வாறு 28 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், மாத விடாய்க் கோளாறுகள், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
குடல் சார்ந்த நோய்கள் தீர…
கோரைக் கிழங்கு, வில்வ ஓடு, மாதுளை ஓடு, ஓமம் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் அளவு எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இந்தத் தூளை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடல் வலு உண்டாக…
கோரைக் கிழங்கு, பனங்கிழங்கு, அதிமதுரம், வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் அளவு எடுத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை இருவேளையும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
கருப்பை நோய்கள் தீர…
கோரைக் கிழங்கு, அசோக பட்டை, மருதம் பட்டை, ஆலம் பட்டை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை காலை- மாலை இரு வேளையும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
சிவனருள் பெற்ற கோரைக் கிழங்கை முறைப்படி பயன்படுத்தி, சிறந்த மானிடர்களாய் விளங்குவோம்.
(தொடரும்)
உடல் எடையை குறைக்கும் தேன்

எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் தேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட, இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது.குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.இதுதவிர சுவாசக்கோளாறு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், தீப்புண், விக்கல் போன்றவையும் குணமாக்குகிறது.இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஒல்லியாக மாறலாம்.
Click Here

எளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களுக்கு…

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது.  இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.
· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது.  அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும்.  வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
· தூதுவளை பொடியை தேனில் கலந்து  1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள்  காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.
· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து  சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும்.  உடல் பலம் பெறும்.  உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.
· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி.  இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..
அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
Click Here

குழந்தை மருத்துவம்…

சில குழந்தைகள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல் தான் காணப்படும். இவ்வாறு மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு வயிறு மட்டும் பெருத்து குட்டி பானைபோல் காணப்படும்.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதைக் கண்டறிய முதலில் தாய்மார்கள் குழந்தையை கவனிக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட்ட உணவானது செரியாமை உண்டாகி குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடலானது வீங்கி காணப்படும்.
இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும்.  சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும்.  இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது.
இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள்.  மாந்தம் என்பது குடலானது செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான்.
இந்த நிலையில் குழந்தையின் கல்லீரலானது சிறிதளவு பாதிப்படைந்துதான் இருக்கும்.
இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் பொருமல் உண்டாகும்.
இந்த வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம் அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது,  அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புற சூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இந்த வயிற்றுப் பொருமலால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும்.   மூக்கில் நீர் வடிந்துகொண்டிருக்கும்.  கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும்.
இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும்.
புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும்.
குழந்தைகளின் ஞாபகத் திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம்.  ஞாபக சக்தியைத் தூண்டுவது பித்தம்தான்.  அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.  கல்லீரலைப் பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும்.  மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும்.  கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும்.
கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு  ஒரு காரணமாகிறது.  உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.
இந்த வயிற்றுப் பொருமல் உண்டானால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும்.  அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையைத் தூண்டக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.  மேலும் வயிற்றுக் கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்றுப் பொருமல் மாறி இரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும்.
குழந்தைகளுக்கு நோயின் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க தாய்மார்களின் கவனிப்பு தான் சிறந்தது.  தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும்.
குழந்தையானது அன்பு, பாசம், பரிவு என எல்லாமலே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும்.  அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும்.  இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும்.
பழங்காலத்தில் தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் இரண்டே மாதத்தில் நிறுத்திக் கொள்கின்றனர்.  இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்கின்றனர்.  ஆனால் அது தவறான எண்ணமாகும்.  குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.  தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது.
இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம்,  செயல், பாசம், பரிவு என்ற தாய்பாசமும் அவசியமாகிறது.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும், மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

தேங்காயின் மருத்துவ குணங்கள்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.தேங்காய் பால்: தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
Click Here
மனித இனம் தழைத்தோங்கவும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், சித்தர்கள் தங்களின் ஞான சிருஷ்டியால் ஆராய்ந்து   கண்டறிந்து சொன்ன சித்த மருத்துவம் மிகச்சிறந்த மருத்துவமாகும்.  எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருத்துவமாகும்.
இயற்கையிலேயே மருத்துவ குணம் கொண்ட புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்றவற்றைப்  பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர்.  அவற்றைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.   இந்த இதழில் அகில் மரம் பற்றித் தெரிந்துகொள்வோம்.
அகில் பெருமர வகுப்பைச் சார்ந்தது.  இமய மலையின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.  தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகளில் தானாக வளருகிறது.  இதுபோல் நேபாளம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா நாடுகளின் காடுகளில் காணப்படுகிறது.
இதற்கு அசுரு, அகருக்கட்டை, அகிற்கட்டை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil        – Agil
English        – Aloewood
Sanskrit        – Agaru
Telugu        – Krishnagaru
Malayalam    – Kayagahru
Hindi        – Agar
Botanical name – Aquilaria agallocha

அகில் மரத்தின் கட்டையே மருந்தாகப் பயன்படுகிறது.
தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும்- வளர்ந்திகழு
மானே யகிற்புகைக்கு வாந்தியரோ சுகம்போத்
தானே தளர்ச்சியறுஞ் சாற்று
-அகத்தியர் குணவாகடம்

பொருள் -  அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும்.  இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும்.  புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும்.  அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
அகில் கட்டை தைலம்
அகில் கட்டையை  சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு  அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும்.  மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.
· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.
· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.
· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும்.  வலி நீங்கும்.
· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.
· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.
· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும்  பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும்.  உடல் பொலிவுபெறும்.
· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும்.  வாந்தி சுவையின்மையைப் போக்கும்.
· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன்  வாழ்ந்தார்கள்.  அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.
இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால்  அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.  மேலும்,  அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.
பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.  மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.  ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது.  சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்    – 100 மி.லி.

சீரகம்        – 1 ஸ்பூன்
சோம்பு        – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்    – 3
கறிவேப்பிலை    – 2 இணுக்கு
கொத்தமல்லலி    – சிறிதளவு
நெல்லி வற்றல்    – 10 கிராம்
வெட்டிவேர்        – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.
Click Here

பாட்டி வைத்தியம்

தை பிறக்கப்போவதற்கான அடையாளங்கள் பாட்டி வீட்டில் நிறையவே காணப்பட்டது.

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.  பித்தமானது பல காரணங்களால்  மிகுதியாகி  ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.  உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.
உள்ஜுரம் ஜுரத்தா லெழும்பி
உதித் தெழும் பித்த தோஷம்

என்று அகத்தியர் பெருமான் அகத்திய வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.
இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.    இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.
மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது.  சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்  சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு.  ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை  ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது  மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி         – ஒரு கைப்பிடி
சீரகம்        -  1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில்  சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.
· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.
· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
· நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிக்குச் செல்லும் நிலை வந்துள்ளது.
போதிய கல்வியறிவு, எத்தகைய செயல் களையும் திறம்பட முடிக்கும் தன்மை பெண்களுக்கும் உண்டு என்பதை தற்போதுதான் ஆணாதிக்க சமூகம் உணரத் தொடங்கியுள்ளது.
பொருளாதார சூழ்நிலையில் இன்று ஆண், பெண் இருவரும் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் தற்போது உள்ளது..
இத்தகைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக் குறைபாடுகள் உண்டாகிறது.  இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது.
இதனால்தான் நம் முன்னோர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்கவைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து வந்தனர்.  மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர்.  ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது.  மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின்போதே உண்கின்றனர் , அல்லது பட்டினி கிடக்கின்றனர்.  போதிய உணவு உண்ண நேரமின்மை, காலந்தவறிய உணவு, அவசர அவசரமாக உண்ணும் நிலை இவற்றால் பெண்களுக்கு குடலில் புண் உண்டாகிறது.
இதனால் பித்தம் அதிகரித்து அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.  மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.
இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியத் தேவையாகும்.  அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல.  அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை.
இவர்கள் உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும்.  முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த சூப் செய்து அருந்தலாம்.
மணத்தக்காளிக் கீரை    – 1 கைப்பிடி
ஆரைக்கீரை        – 1 கைப்பிடி

கொத்தமல்லி    – 1 கொத்து
கறிவேப்பிலை    – 2 இணுக்கு
சின்ன வெங்காயம்    – 3
பூண்டு        – 2 பல்
இஞ்சி        – 1 துண்டு
காரட்        – 1
புதினா        – சிறிதளவு
சீரகம்        – 1 ஸ்பூன்
மிளகு        – 5
சோம்பு        – 1 1/2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை    – 1
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து வாரம் இருமுறை சூப் செய்து அருந்தி வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மலரும் மருத்துவமும் தாமரை…

புல் பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  இவை பருவ காலத்திற்கும் வளரும் பகுதிக்கேற்பவும் அவற்றின் குணங்கள் சிறிது மாறியிருக்கும்.
இவ்வாறு மனிதர்களுக்கு பயன்படுபவையில் மலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை.  இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது.  இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும்  அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர்.  தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.
தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil    – Thamarai
Sanskrit    – Padma
English    – Lotus
Telugu    – Tamara
Malayalam    – Thamara
Botanical Name     – Lelumbo nucifera
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்

-அகத்தியர் குணவாகடம்
பொருள் – வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும்.  தேக எரிச்சல் நீங்கும்.
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை  வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும்.  மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.  இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.  நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.  அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான  பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில்  தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..
இந்த  பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..
அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…?
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.  இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள்.
தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.
உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.  இந்த மிளகு இந்தியாவிற்கு மிகுந்த அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.  வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.  வயிற்றில்   சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.  மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது.  இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது.  மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.  இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.
இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.  வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
Click Here

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.   அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று.  இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.
1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.  இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.  இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர்.  இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.
சப்மாண்டிபுலர் சுரப்பி
இது பரோடிட்  சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது.   இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
சப்லிங்குவில் சுரப்பி
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.  இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது.  இது அதிக என்ஸைம்களைக் கொண்டது.  இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது.  இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது.  இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..
உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல்  வாழலாம்  என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.   மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.
பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை
தமிழ் மக்களின் உணர்வோடும் உள்ளத்தோடும் கலந்த விழாதான் பொங்கல் திருவிழா.
கடவுள் எனும் முதலாளி.. கண்டெடுத்த தொழிலாளி..
எனப் போற்றப்படும் விவசாயி தங்களின் உழைப்பால் நிலத்தைத் திருத்தி ஆழ உழுது நெல் பயிரிட்டு வளர்த்து அறுவடை செய்த பின் தனக்கு உதவியாக இருந்த இயற்கையை வழிபட்டு

பித்தமே மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா இவற்றை சீராக இயக்கும் சக்தி


இத்தகைய சிறப்பு வாய்ந்த செயல்களைச் செம்மைப்படுத்தி உடலை இயங்கவைக்கும்  பித்தமானது உடலில் பல பாகங்களில் இருந்துகொண்டு மேற்கண்ட செயல்களை நிறைவேற்றுகிறது.  இதன் செயல்பாடுகள், இருக்குமிடம் ஆகியவற்றைக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவற்றின் இயக்கம் மற்றும் தன்மை பற்றி தெளிவாகக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
அவை பாசகம், இரஞ்சகம், சாதகம், பிரகாசம், ஆலோசகம் என்பவையாகும்.
கடந்த இதழ்களில் பாசகம், இரஞ்சகம் என இருவகைப் பித்தத்தின் செயல்பாடுகளை விரிவாக அறிந்தோம்.
இந்த இதழில் சாதகப் பித்தத்தின் இருப்பிடத்தையும், செயல்பாடுகளையும் பற்றி அறிந்துகொள்வோம்.
சாதகப் பித்தம்
சாதகப் பித்தத்தை சாதனைப்பித்தம் என்றே கூறலாம்.  இது இதயத்திலிருந்து மூளை, வரை தொடர்புடையது.
மனம், புத்தி, ஆசை, பற்று, எண்ணம், செயல் இவற்றைச் சீர்படுத்தும் பித்தமாகும்.
பலப்பல சாதனைகளைச் செய்து வாழ்வின் வெற்றியாளனாக மாற்றுவது
நிதானம் என்பது அமைதியான நிலை.  அதுதான் மனிதனுடைய ஆற்றலையும் அறிவையும் தூண்டும் நிலை.  இதைத்தான் உலகிற்கு வாழ்ந்து காட்டிய பெரியோர்கள் முதல் ஞானிகள் வரை தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்றார்கள்.  இம்மூன்றும் மனிதனை மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும். இந்த நிலையைத்தான் நிதானம் என்கின்றனர். இதுவே ஆன்ம நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலை.
நிதானம் சீராக அமையுமானால் 18 அடங்கலும்
மனிதனின்  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது.  காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர்.  அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.  அது வெள்ளை நிறப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...