Aug 30, 2013

தெரிந்து கொள்ளுங்கள்.


இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,

ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,

டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,

நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,

எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்


நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

nkpathmanathan
யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.

எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.

தனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.

இவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து கொண்டார்கள்.

பத்மாதன் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். 1968ம் ஆண்டில் சென்னை மியூசிக் அக்கடமியிலும், பின் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் நாதஸ்வரம் வாசித்து பாராட்டுப் பொற்றுள்ளார். 1979இல் இலண்டனில் இருக்கின்ற பிரபலமான இசைக்கூடங்களில் ஒன்றான West Minister Hall இல் இவரது இசைக்கச்சேரி இடம்பெற்றது.

1963ம் ஆண்டு சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தான கும்பாபிடேகத்தில், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பத்மநாதன் அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருக்கின்றார்கள். 1964இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இவருக்கு “நாதஸ்வர கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே 47 வருட காலம் ஆஸ்தான வித்துவானாகவும் பணிபுரிந்த இவருக்கு, 1982ம் ஆண்டு இலங்கையில் கலைஞர்களுக்கான உயரிய விருதான கலாசூரி விருது கிடைத்தது.

தன் இறுதிக்காலம் வரையில் ஒரு நாதஸ்வரக் கலைஞனாகவே வாழ்ந்த கலசூரி பத்மநாதன் அவர்கள், தனது 72 ஆவது வயதில் 2003ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி இறையடி சேர்ந்தார்.நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

nkpathmanathan
யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.

எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.

தனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.

இவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து

இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது.


இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது. சென்னை நகரை தமிழர் நகரமாக மீட்டெடுக்க இன்று நாம் சூளுரைப்போம்.

வரலாற்று ரீதியாக சென்னை நிலப்பரப்பை தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். சோழர்களின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்துள்ளது. பிற்காலத்தில் பல்லவர்கள் , நாயக்கர்கள், ஆங்கிலேயர் , பிரெஞ்ச் இனத்தவர் கட்டுப்பாட்டிலும் சென்னை நகரம் இருந்துள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது சென்னையை ஆந்திராவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் தெலுங்கர்கள். 'மதராஸ் மனதே' என்று முழக்கமிட்டனர். ஆனால் தமிழர்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக சென்னை மீட்கப்பட்டது. ஆனால் தமிழர் வழிபாட்டுத் தலமான திருப்பதியை நாம் இழக்க நேரிட்டது.

இன்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னை வந்துவிட்டாலும் வேற்றின மக்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது சென்னை . தமிழர்கள் வாடகை வீட்டிலும் , வேற்றின மக்கள் சொந்த வீட்டிலும் வாழ்கின்றனர். சென்னையை தமிழர்களின் நகரமாக முழுவதும் மாற்ற முடியாத சூழ்நிலையே இப்போது

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...