Jul 18, 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள் --வீட்டுக்குறிப்புக்கள்


  1. சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும். 
  1. ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
  1. அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.    
  1. அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். 
  1. அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம். 
  1. காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா


தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால்

பலம் தரும் பால் பொருட்கள்


நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா


''கொஞ்சம் அந்த சென்ட் பாக்டரியை மூடறியா?'' - நண்பர்களுக்குள் சகஜமான  'மூக்குப்பிடி’ வசனம் இது. கூட்டம் நிறைந்த பஸ் பயணத்தின்போதோ, கோடைக் காலத்தில் அலுவலகத்திலோ சிலர் கையை உயர்த்தினாலே, வியர்வை நாற்றம் முகம் சுளிக்கவைக்கும்.
 அக்குள் பகுதியில் நாற்றம் வீசுவதற்கு முக்கியமான காரணம் வியர்வை. உடலில் சரியான காற்றோட்டம் கிடைக்காத பகுதிகளில் அதிகமாக வியர்வை தோன்றும். அப்படிப்பட்ட பகுதிதான் அக்குள். ஆனால், உண்மையில் வியர்வை என்பது நமக்கு நன்மை செய்வதுதான். தாங்க முடியாத வெயில், கடுமையான உடற்பயிற்சி, டென்ஷன் என்று எப்போதெல்லாம் நமது உடம்பு உஷ்ணம் ஆகிறதோ... அப்போதெல்லாம், 'கூல்... கூல்’ என்று சொல்லாமல் சொல்லி நமது உடம்பைக் குளிர்விக்க உதவி செய்வதுதான் வியர்வை. ஆனாலும், அக்குளில் சுரக்கும் வியர்வை சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.
அக்குள் தூய்மைகுறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணரான எஸ்.சுகந்தன் விரிவாகப் பேசினார்.
''வயது வந்த அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்னைதான் இது. பொதுவாக, வியர்வைக்கு - அது எங்கிருந்து சுரந்தாலும் - இயற்கையில் மணம் கிடையாது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசையிலும் வியர்வையிலும் வளரும் பாக்டீரியாக்களே வியர்வைக்கு நாற்றத்தைக் கொடுக்கின்றன'' என்று விளக்கம் கொடுத்த டாக்டர் சுகந்தன் தொடர்ந்து நமது சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.
'அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?'

'ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''
''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''

''அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''

''லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''
''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''

''பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''
''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''

''கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''
 முடி மற்றும் தோல் பராமரிப்பு அழகியல் நிபுணரான  எம்.ஹஸீனா சையத் அக்குள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
''ஈரத்தை உறிஞ்சக்கூடிய பருத்தி இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம்.
இரவு உறங்கச் செல்லும் முன் அக்குளை நன்கு கழுவிச் சுத்தமாக ஈரம் போகத் துடைப்பது முக்கியம்.
உணவுக்கும் வியர்வை வாடைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உதாரணமாக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலாக்கள் நிரம்பிய உணவு வகைகளை அதிகமாக வியர்க்கும் காலத்தில் தவிர்க்கலாம்.
தினசரி இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். காக்கைக் குளியல் உதவாது. அக்குளுக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கழுவி சுத்தமான துண்டுகொண்டு நன்கு துடைக்க வேண்டும். குளித்த பிறகு அக்குளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு டியோடரன்டுகள், பேபி பவுடர்

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?


நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

இதயத்தை காக்கும் மூலிகை!--இய‌ற்கை வைத்தியம்

மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கதனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படுமசெம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல்

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!



உதாரணமாக சொல்வதென்றால், ஏதோ காரணத்தால் வருகின்ற தலைவலிக்கு சுக்கை (கா‌ய்ந்த இஞ்சி) நீர் விட்டு இழைத்து நெற்றியில் பற்று போட்டால் சில நிமிடங்களில் தலைவலி பறந்து போகும். இது அனுபவப்பூர்வமான உண்மை. இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு சைனஸ் தொந்தரவும், பொடுகுத்தொல்லையும் வந்து பாடா‌ய்ப்படுத்தியது. என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலனில்லை.

சைனஸுக்காக எனக்குத்தெரிந்த காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்றபோது ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றார். வீடு திரும்பிய நான், ஏற்கனவே இயற்கை வைத்தியம் பற்றி அறிந்து வைத்திருந்ததால் எனக்கு நானே சுயபரிசோதனை செ‌ய்து கொண்டேன். அதாவது, நொச்சி இலையை பறித்து வந்து அதனுடன் சிறிது நல்லெண்ணெ‌ய் கலந்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தேன். சூடு ஓரளவு ஆறியதும் பொறுக்கும்சூட்டில் உச்சந்தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தேன். எண்ணெ‌ய் பிசுக்கு போவதற்காக சீயக்கா‌ய் தே‌ய்த்தேன். வாரத்துக்கு இரண்டுநா‌ள் வீதம் சுமார் ஒன்றரை மாதம் செ‌ய்தேன். மூக்கடைப்பு மெல்லமெல்ல விலகி சைனஸ் தொந்தரவிலிருந்து மீண்டேன். ஆனாலும் இப்போதும்கூட தயிர், மோர், குளிர்ந்த பானங்க‌ள் சாப்பிட்டால் கொஞ்சம் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது கொஞ்சம் வெந்நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஆனால் இதே சைனஸுக்காக ஆபரேஷன் செ‌ய்தால் மீண்டும் மீண்டும் அந்த தொந்தரவு வரும், ஆபரேஷன் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் இயற்கை வைத்தியமுறை நல்ல தீர்வாக அமையும். அடுத்ததாக எனக்கு வந்த பொடுகுத்தொல்லைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயத்தை எடுத்து நைசாக அரைத்தேன். அதன்பிறகு நாட்டுக்கோழி முட்டையின் வெ‌ள்ளைக்கருவை மட்டும் எடுத்துகொண்டு அதனுடன் சேர்த்து அடித்தால் ஷாம்பு மாதிரி வரும். அதை தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் (சீயக்கா‌ய் தே‌ய்த்து) குளிக்க வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை என ஒருமாதம் செ‌ய்தபோது பொடுகுத்தொல்லையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது.

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம் -2 --இய‌ற்கை வைத்தியம்


அதாவது அம்மான்பச்சரிசி என்னும் சிறு செடியினம் ஒன்று உ‌ள்ளது. இதன் தண்டுப்பகுதியை உடைத்தால் பால் வரும். அந்த பாலை கால் ஆணி உ‌ள்ள இடத்தில் சுமார் 20 முதல் 30 நாட்க‌ள் வரை தடவி வந்தால் முழுமையாக குணம் கிடைக்கும். இது எனது அனுபவ வைத்தியத்திற்கு நல்லதொரு சாட்சி. என்னுடன் பணிபுரியும் சிலருக்கு மூலம், சைனஸ் கோளாறுகளுக்காக சில மருந்துகளை செ‌ய்து கொடுத்து‌ள்ளேன். ஏற்கனவே எனக்கு வந்த சைனஸ் கோளாறுக்காக நான் செ‌ய்துகொண்ட மருத்துவம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிலருக்கு உ‌ள்ளுக்கு சாப்பிடும் மருந்து தயார் செ‌ய்து கொடுத்தேன். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, ஓமம், ஆகியவற்றை நன்றாக பொடி செ‌ய்து கொடுத்தேன். நல்ல நிவாரணம் கிடைத்தது.

மூல நோயால் அவதிப்பட்ட 2 பேருக்கு சாப்பாட்டில் கலந்து உண்ணும் பொடி

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!


ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்கு, அதை சொல்றேன், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க!

வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டர

கறிவேப்பிலை தைலம் தலைச் சுற்று நீங்க


தலைச் சுற்று நீங்க:

கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி

கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக்

மயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை


கொத்தமல்லி 200 கிராம்
சீரகம் 20 கிராம்
ஓமம் 20 கிராம்
மிளகு 20 கிராம்
சுக்கு 20 கிராம்
அதிமதுரம் 20 கிராம்

செய்முறை

கொத்தமல்லியை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீரகத்தையும் இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஓமத்தை சிறிது நெய்யிட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகையும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் பால் ஊற்றி மூன்று

குழந்தைகளுக்கு தொண்டையில புண்ணா


குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, எச்சில் விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதை உடனே கவனிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொண்டை பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து விடும் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்.
பாக்டீரியா நோய் தொற்று
தொண்டை வீக்க நோய் என்பது பாக்டீரியா தொற்றினால் உண்டாகிறது. இதனுடைய முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல்

கூந்தல் நன்கு வளர்வதோடு ஆரோக்கியமாக இருக்க


கூந்தல வளர வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு எப்போது, எந்த நேரத்தில் கூந்தலை வெட்ட வேண்டும் என்று தெரியவில்லை. ஆகவே கூந்தலை வெட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் கூந்தலின் வளர்ச்சி மற்றும் தற்போது கூந்தலானது எப்படி உள்ளது என்பதை நன்கு அறிந்து வெட்ட வேண்டும். மேலும் அவ்வப்போதும் கூந்தலை வெட்ட வேண்டும். அப்போது தான்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?


விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது

விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…


விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…
மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்
கண்ணாடி விரியன்:பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.
நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.
தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை

சாமியார் மடங்களைத் தேடி ஓடும் பிரபல நடிகைகள்!



போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன(ர்)!
சரி அது அவர்கள் பாடு...
பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.
இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம்.
ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய புது உலகை இந்த இடம் அவருக்கு காட்டுவதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இப்போது, புதிதாக சந்நியாசத்துக்கு மாறியுள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை

கருப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க..


.

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கபதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று
நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!

அழகுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் அதிகம் பயன்படுத்துவது நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் உள்ள பாஸ்டன்
குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க...

கர்ப்பம் தரிக்கும் போது மருத்துவர்கள் ஆலோசனை என்னவென்று கேட்டால், சரியான எடை இருக்க வேண்டும் என்பது தான். மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க எளிதான உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது அதிக எடையோடு இருந்தால், பிறந்த பின்னும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே குழந்தையின் எடை அதிகமாக இல்லாமல் சரியான அளவு இருக்க குழந்தையை பிறந்ததிலிருந்தே சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு குழந்தை நல மருத்துவர் கூறும் பராமரிப்பு அறிவுரைகளை படித்து தெரிந்து

குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய்

!

ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய அபூர்வ நோய் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' எனப்படும் தசைத்திறன் குறைவு நோய். இது குழந்தையின் உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆண்குழந்தைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் அபூர்வமாக பெண்

மாட்டுக்கறி சாப்பிட்டால் உடம்புக்குக் கெடுதலா?



இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பிச் சாப்பிட்டாலும் கூட மாட்டுக் கறி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.
மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும்,

உடல் எடையை கட்டுப்படுத்தும் தக்காளி


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது.

அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக்


* முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

*  முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

*  இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

*  துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

*  முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

*  இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

பொன்னான பொன்னாங்கண்ணி


*தினமும் உணவில் கீரைகளை  சேர்த்து சாப்பிட்டால்  உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து  மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர்.

*கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க

வெள்ளரிக்காய் மருத்துவம்


வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.
வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு.

இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

மருந்தாகும் மூலிகைகள்

அந்த காலத்திலெல்லாம் இவ்வளவு பிணிகளும் இல்லை; மருத்துவ மனைகளும் இல்லை. மூலிகை நாட்டு மருந்துகளின் மூலமாகவே மக்கள் நிவாரணம் பெற்றனர். பெரிய நோய்களைத் தவிர அன்றாடம் வாழ்வில் சாதாரணமாக ஏற்படும் உடல் சீர்கேடுகளை வீட்டில் செய்யப்படும் கை வைத்தியத்தின் வாயிலாக போக்கிக் கொண்டனர். எல்லாமே இயற்கையாக இருந்ததால் நோய்களும் குறைவாகவே வந்தது. நாமோ அவற்றின் மகிமைகளை மறந்துவிட்டோம். இத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்க்கையை பெற மூலிகைகளே துணை என்னும் நோக்கில்

மருத்துவ பயன் நிறைந்த இஞ்சி


உணவுகளில் சிலர் இஞ்சி உபயோகிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் பயன் பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் பயன் பற்றி பாட்டிகளை கேட்டால் அதன் மருத்துவ குணம் பற்றி சொல்லுவார்கள்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு



இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு  சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...