Apr 11, 2014

உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்




உங்களுடைய கணினி பற்றிய பூரணமான தகவல்களை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் மென்பொருள்களின் துணையின்றி கணினி பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஒவ்வொரு விடயங்களை பார்ப்பதற்கும் ஒவ்வொரு பகுதிக்கு செல்லவேண்டும். அவ்வாறு அல்லாமல் கணினி பற்றிய அத்தனை விடயங்களையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

இதற்கு உதவி செய்கிறது SIV எனப்படும் சிறிய மென்பொருள். இது உங்கள் கணினி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. 4.25 Mb அளவுடைய Zip File இல் இந்த மென்பொருள் வருகிறது. கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. Zip File ஐ Extract பண்ணி மென்பொருளை Open பண்ணலாம்.

இம் மென்பொருளை Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணினி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். மென்பொருளின் கீழ் பக்கத்தில் பல Tab கள் காணப்படும். முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் அதில் விரிவாக காணலாம்

அடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது.

Photo: அடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது. 

அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது Microsoft நிறுவனம்.

இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்திக்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட மென்பொருள் இரண்டு கணனிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தரவுகளை Data Cable மூலமாகவோ LAN வலையமைப்பினூடாகவோ தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்களும் Microsoft இன் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

http://sarfan.blogspot.com/2014/04/windows-xp.htmlஅடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது.

அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது Microsoft நிறுவனம்.

இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்திக்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட மென்பொருள் இரண்டு கணனிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தரவுகளை Data Cable மூலமாகவோ LAN வலையமைப்பினூடாகவோ தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்களும் Microsoft இன் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Seagate அறிமுகப்படுத்தும் உலகின் வேகம் கூடிய 6TB Hard Disk


Seagate அறிமுகப்படுத்தும் உலகின் வேகம் கூடிய 6TB Hard Disk

Seagate நிறுவனமானது உலகின் வேகம் கூடிய நான்காம்
தலைமுறை வன்றட்டினை (Hard Disk) அறிமுகம் செய்துள்ளது.

3.5 அங்குல அளவுடைய இவ்வன்றட்டானது 6TB சேமிப்பு கொள்ளளவினை உடையதாகவும் 7200 rpm உடையதாகவும் காணப்படுவதுடன், இது ஏனைய 6TB வன்றட்டுக்களுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வேகம் கூடியதாகவும் காணப்படுகின்றது.

இவற்றில் 12 Gb/s அல்லது 6 Gb/s வேகம் கொண்ட பதிப்புக்கள் கிடைக்கப்பெறுவதுடன் தரவுப்பரிமாற்ற வேகமானது செக்கனுக்கு 226 Mb ஆகவும் அமைந்துள்ளது.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள்


இணையத்தில் இலவசமாக பெற!?
என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், அதற்கு பிறகு அந்த மென்பொருள் Register பன்ன வேண்டும் என ஒரு செய்தியை எமக்கு காட்டும்.
அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.
மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவதுஅனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாககிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். (அதான் இப்ப தெரிந்து விட்டதே),
குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாகத்தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை
இணையத்தளங்களை பார்வையிட..
http://sarfan.blogspot.com/2014/04/blog-post_10.html

விமான தேடல்: ஏற்கனவே சிக்னல் கிடைத்த இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது

விமான தேடல்: ஏற்கனவே சிக்னல் கிடைத்த இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது Posted by: Siva Published: Thursday, April 10, 2014, 18:32 [IST] Ads by Google பெர்த்: இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடுகையில் ஏற்கனவே கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்த அதே இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது. விமான தேடல்: ஏற்கனவே சிக்னல் கிடைத்த இடத்தில் இன்று மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக கூறப்படும் மலேசிய விமானத்தை பல நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன. விமானத்தை தேடி வரும் சீன விமானம் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை கடந்த வாரம் கண்டறிந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் சிக்னலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கண்டறிந்துள்ளது. பின்னர் ஆஸ்திரலேய கடற்படை கப்பல் மீண்டும் கடலில் கருப்புப் பெட்டி சிக்னலை கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தது. சிக்னல்கள் வந்த இடத்தில் விமானங்களும், கப்பல்களும் மலேசிய விமானத்தை தேடி வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே சிக்னல்கள் வந்த இடத்தில் ஆஸ்திரேலிய விமானம் ஒன்று இன்று மீண்டும் சிக்னலை கண்டறிந்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரி ஆயுள் கடந்த 7ம் தேதி முடிந்துவிட்டதால் அதில் இருந்து வரும் ஒலியின் அளவு குறைந்து வரும் 12ம் தேதி சுத்தமாக நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவி இஸ்ரேல் சாதனை



இஸ்ரேல் புதிய உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவி, புவியின் சுற்று வட்டப்பாதையில் நிறுத்தி சாதனை படைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த புதிய உளவு செயற்கைகோளை, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களை கண்காணிக்க பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான வான்வெளி தொழிற்துறை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய உளவு செயற்கைகோளான 'ஓபெக்-10' நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே, அந்த செயற்கைக்கோள் தகவல் மற்றும் படங்களை அனுப்ப தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முழுமையான செயல்பாட்டிற்கு வரவுள்ளது. ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலகுரக செயற்கைக்கோள், நாளின் எந்த நேரத்திலும், எவ்விதமான வானிலை சூழ்நிலையிலும் கூர்மையான படங்களை எடுத்து அனுப்பும் திறன் பெற்றது. இதனால் இஸ்ரேல் நாட்டின் உளவு திறன்கள் மேம்படுத்தப்படும். இஸ்ரேல் தமது அண்டை நாடுகளைவிட மிகப்பெரிய அளவில் தர மற்றும் தொழில்நுட்ப உத்திகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மற்ற சாதாரண செயற்கைக்கோள்களை விட,  படமெடுக்கும் ரேடாரை திசை திருப்பி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி குறிவைத்து இயக்கும் திறன் கொண்டது.

பொதுவாக மற்ற நாடுகள் புவி சுற்றுவட்டப்பாதையின் கிழக்கு திசையை நோக்கியே செயற்கைகோள்களை ஏவும். ஆனால் இஸ்ரேல் இந்த புதிய உளவு செயற்கைகோளை அதற்கு நேர்மாறாக புவி சுற்றுவட்டப்பாதையின் எதிர்திசையில் அதாவது மேற்கு நோக்கி ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து: நிறவெறிக்கு எதிரான இந்திய மருத்துவர்களின் வழக்கு தோல்வி

இங்கிலாந்து: நிறவெறிக்கு எதிரான இந்திய மருத்துவர்களின் வழக்கு தோல்வி


லண்டன்; ஏப். 11- 

இங்கிலாந்தில் பொது மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வை நடத்துகின்றன.

இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர்.

எனவே இவர்களின் தேர்வு முறையில் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்திய வம்சாவளி மருத்துவர்களின் பிரிட்டிஷ் அமைப்பு(பேபியோ) வழக்கு தொடுத்திருந்தது.  இந்த வழக்கின் விசாரணை கடந்த 8ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி மிட்டிங் நேற்று வெளியிட்ட தனது தீர்ப்பில்

கோளாறு காரணமாக வையோ லேப்டாப்பை திரும்பப்பெறும் சோனி நிறுவனம்

கோளாறு காரணமாக வையோ லேப்டாப்பை திரும்பப்பெறும் சோனி நிறுவனம்டோக்கியோ, ஏப்.11-

ஜப்பானின் பிரபலமான சோனி நிறுவனம் தாங்கள் விற்பனை செய்துள்ள புதிய வையோ பிட் 11ஏ லேப்டாப்பில் பேட்டரி அதிக அளவில் சூடாகும் பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ள அந்நிறுவனம் தாங்கள் விற்பனை செய்துள்ள 26,000 சாதனங்களையும் திரும்பப் பெற உள்ளதாகவும், அதுவரை பாதுகாப்பு கருதி அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிமுகத்தினை டேப்லெட் வடிவிலும், பாரம்பரியமான கம்ப்யூட்டர் வடிவிலும் உபயோகப்படுத்தமுடியும் என்பது அதன் சிறப்பாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்ட இந்த வகை விற்பனையில் இதுவரை 25,905 சாதனங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களுக்குள் பழுது பார்த்தல் உட்பட மேலும் பல விபரங்களை வெளியிடுவதாகவும் சோனி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பேட்டரி அதிக சூடாவதால் லேப்டாப்பின் பாகங்கள் சேதமடையக்கூடும், எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தங்களின் லேப்டாப் கருவிகளை உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த லேப்டாப்பில் உபயோகப்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள் அவர்களின் போட்டி நிறுவனமான பானாசோனிக்கால் தயாரிக்கப்பட்டது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மகாபாரதம்பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும்.

Photo: மகாபாரதம்பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும்.

மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை பற்றிய பிணக்கு ஆகும். இரு சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப் போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது

மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.

~sri~மகாபாரதம்பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும்.

மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை பற்றிய பிணக்கு ஆகும். இரு சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப் போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது

மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.

~sri~

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...