Mar 31, 2013

வழமைக்கு மாறாக குறைந்த நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தினை நோக்கிய பயணம்

News Service பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம் வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில் நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார் எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்ணேற்ற தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட் பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலமாக பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐம்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த முறை பயணம் சென்றவர்கள் ஆறு மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
  
இதற்கு முன் சென்ற பயணங்களில் எல்லாம் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சுமார் முப்பது

1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்

விளக்கெண்ணையில் மறைந்துள்ள இரகசியங்கள் - பக்டீரியாவையும் அடித்து விரட்டுமாம்!

News Service விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
  
ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும். மேலும்

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:


நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:

**இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

** சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

**3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு

இந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்


சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .

இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5  இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .

1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 


108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  2  லட்சம் கோடி .

2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்


இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1  டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650  கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000  பேர் சுவாமி தரிசனம் செய்ய

Mar 30, 2013

சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தம்: மரபுகளை தகர்த்தெறிந்த புதிய போப்!



ரோம்: சிறை கைதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டு இதுவரையிலான: மரபுகளை தகர்த்தெறிந்துள்ளார் புதிய போப்பாண்டவரான போப் பிரான்சிஸ்.
உலகம் முழுவதும் இன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சிலுவையில் அறையப்படும் முன்பு தனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் புனித வியாழன் வழிபாடு, வாடிகன் நகரத்தில் நேற்று நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளை தகர்த்தெறிந்து,

மார்ச் 31 - பிரான்ஸ் நாட்டின் ஈபில் டவர் திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று... வருடம் 1889


மார்ச் 31 - பிரான்ஸ் நாட்டின் ஈபில் டவர் திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று... வருடம் 1889

How to Build a Computer from Scratch (Senior Project)

மைக்ரோசொப்டின் புதிய இயங்குதளம் விண்டோஸ் புளூ!




News Service இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக கருதப்படும் Windows Blue எனும் புத்தம் புதிய இயங்குதளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வியங்குதளமானது 32-bit மற்றும் 64-bit பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள்:

News Service* உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் 'வாசலின்' தடவிக் கொள்ளலாம்.
* ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். உருளை, கருமையை எடுத்துவிடும். நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் வகைகளை அருந்துவதும் அவசியம்.
  
* வைட்டமின்-சி குறைபாட்டால் சிலருக்கு கைகளில் தோல் உரியலாம். டிடர்ஜென்ட் பவுடர், சோப் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் உரியலாம். 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* நகத்தின் நிறம் சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச்சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெதுவெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.
* அதீத வெயிலோ, கடும்குளிரோ சட்டென நம்மை பாதிக்கும்போது, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை கை, விரல், நகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவடையும்.
* உள்ளங்கை, கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரியும்.
* நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.

மாரடைப்பினால் அவதிப்படுபவர்களுக்கு பயனளிக்கும் புதிய சிகிச்சை முறை


News Service யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் ஆஞ்சியோ பண்ணிடலாம், ஸ்டென்ட் வைத்து விட்டால் போதும் என்பார். ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ஸ்டென்ட் சிகிச்சை கைகொடுக்கிறது என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலும் இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ஸ்டென்ட் பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன் பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு ஸ்டேன்ட் பொருத்திய பின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.
  
ஸ்டென்ட் என்றால் என்ன? ஸ்டென்ட் என்பது மிகச்சிறிய வலைகுழாய், உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வரை டியூப் ரத்த குழாயில்

இருபத்தியொரு வயதோடு வளர்ச்சி நின்று போய் விடும் மனித உடலில்

News Service மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும் ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
  
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை

இரட்டைத்தலை சுறா - அமெரிக்காவில் முதல்முறையாக கண்டுபிடிப்பு!

News Service அமெரிக்காவில் இரட்டைத்தலை சுறாமீன், ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு உடல் இரு தலைகளுடன் சிலர் அபூர்வமான பிறப்பதை திரைப்படக்களில் பார்த்திருக்கிறோம், நிஜத்திலும் கேள்விப்பட்டிருக்கிறோம். இரட்டை தலை கொண்ட பாம்புகள் கூட இருக்கின்றன. இந்த வகையில் இரட்டை தலை கொண்ட சுறா மீன் ஒன்று முதல் முறையாக அமெரிக்காவில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.கடலில் சிக்கிய இந்த அதிசய சூறாமீனை புளோரிடாவிலுள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்டது.
  
அங்கு போதுமான ஆய்வு நடத்த வசதிகள் இல்லாததால், சுறாமீன் தீவிர ஆய்வு நடத்தப்படுவதற்காக மிஷிகனிலுள்ள கடல் உயிரின ஆய்வு பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தது. பேராசிரியர் வாக்னெர் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த சூறாமீனை ஆய்வு செய்ததில் அது ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என்பதை கண்டுபிடித்தார்கள்.இந்த சூறாமீனுக்கு 2 தலைகள் மட்டுமின்றி 2 இருதயம், 2 குடல் பகுதியும், ஒரு வால் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உடல் நலம் தரும் சமையலறை மருந்து


100 grams of coriander seeds, known as coriander, try removing the nerve to the skin up to 100 grams (Chuck always have to use nerve removed) and 1 tsp cardamom powder 100 g varuttu slight amount of treble. As tikaksan daily coffee making, milk or honey mixed in a drink.

தனியா எனப்படும் கொத்துமல்லி விதை 100 கிராம், தோல் சீவி நரம்பு நீக்கிய சுக்கு 100 கிராம் (எப்போதும் சுக்கை நரம்பு நீக்கி உபயோகிக்க வேண்டும்) ஏலக்காய் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து. தினசரி காபி டிகாக்ஷன் போல் தயாரித்து, பால் அல்லது தேனில் கலந்து பருகவும்.

மணத்தக்காளி வற்றல்:

மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக

Mar 29, 2013

6 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து சாதனை!

News Service
கசகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று சோயூஸ் விண்கலம் ஏவப்பட்டது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் வினோக்ரடாவ், அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் நாசாவைச் சேர்ந்த கிரிஸ் கேசிடி ஆகிய மூவரும் பயணம் செய்தனர். இவர்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி சென்றனர். பொதுவாக பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். ஆனால் இந்தக் குழுவினர் புதிய வழித்தடத்தில் பயணித்து வெறும் 5 மணி நேரம் 45 நிமிடத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.
  
விண்வெளி நிலையத்தை விரைவில் சென்றடையும் வகையில் விமானங்கள் பயணிக்கும் புதிய வழித்தடத்தை கண்டறிவதற்காக ரஷ்ய விஞ்ஞானிகள் கடந்த 3 வருடங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த விரைவு வழித்தடத்தை ஆளில்லா சரக்கு விமானங்களைப் கொண்டு 3 முறை சோதனை செய்துள்ளனர்.இந்த சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளனர். கடந்த 6 மாதமாக இந்த பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர்

Mar 28, 2013

உடலுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கும் ஒரு இரத்தப் பரிசோதனை நிலையம்



அரை அங்குலம் நீளமும் தீக்குச்சி தடிமனுமே கொண்ட கருவி இதுநம்முடைய தோலுக்கு அடியில் பொருத்தப்படுகின்ற ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத் தாம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின் தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
நம் இரத்தத்திலிருந்து ஐந்து உட்கூறுகளின் அளவுகளை இந்தக் கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம்.
இந்தக் கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள் ரேடியோ அலைகள்

Mar 27, 2013

சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா?


சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், "சீட்"டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

"டீன் ஏஜ்" வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், "அடடா, கொழுப்பு கூடிவிட்டதே" என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை "ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா"படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை "எரிக்க" வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் "கொழுப்பாக தேங்கிய" கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.

எந்த ஜூசில் அதிக கலோரி?

காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ் - 55

திராட்சை ஜூஸ் - 55

மாம்பழ ஜூஸ் - 58

ஆரஞ்சு ஜூஸ் - 44

பைனாப்பிள் ஜூஸ் - 52

கரும்பு ஜூஸ் - 36

தக்காளி ஜூஸ் - 17

தேங்காய் பால் - 76

இளநீர் - 24

காபி (ஒரு கப்) - 98

டீ (ஒரு கப்) - 79

கோக்கோ (ஒரு கப்) - 213

பசும்பால் - 65

ஸ்கிம் மில்க் - 35

தயிர் - 51

"ப்ரைடு" உணவுகளா? "டீன்" பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி "ப்ரைடு" அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் "வேலையை" காட்டிவிடுமாம்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில "ப்ரைடு" உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை "டிரான்ஸ் ஃபேட்" என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த "ப்ரைடு" உணவுகளால் ஏற்படும் "டிரான்ஸ் பேட்" எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.
-

கருப்பு திராட்சை





ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி உள்ளதை மருந்தாக்கி உள்ளனர். சிறப்பு விருந்தில் முக்கியப் பங்கு திராட்சைக்கு உண்டு.

திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக திராட்சை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக திராட்சை விதைகளின் உயர்வினை அறிந்து பயன்பாட்டில் வைத்துள்ளனர். உலகில் மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம்

வாயு தொல்லையா?

வாயு தொல்லையா?

இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்

வெந்தயத்தின் மருத்துவக்குணம்


வெந்தயத்தின் மருத்துவக்குணம்

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17கி எடுத்து 340கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட இரத்தம் பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல்,

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்

சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்

கிருமிகளை அழிக்கும் பலா!



 முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது

Mar 26, 2013

முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய வசந்தோற்சவ இரதபவனி



கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா பத்மாவதி ஸமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு தேவஸ்தான வசந்தோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இவ்வாலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை தினமும் காலை 5 மணி முதல் அப்ரயாத பூஜை, சந்திப் பூஜை, உற்சவ மூர்த்திக்கு நவகலச ஸ்நபனா அபிஷேகம், மூலவருக்கு விசேட பூஜை, வசந்த மண்டபப் பூஜை என்பவற்றுடன் நண்பகல் 12.30 மணிக்கு உச்சிக் காலப் பூஜை நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பல்லக்கிலும் நாளை 4ஆம் திகதி காலை சிம்ம வாகனத்திலும் மாலை அன்ன வாகனத்திலும் 5ஆம் திகதி காலை கற்பக விருட்சக வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும் 6ஆம் திகதி காலை மோகினி அவதாரத்திலும் மாலை சர்ப்ப (சேஷ) வாகனத்திலும் 7ஆம் திகதி காலை அனுமான் வாகனத்திலும் மாலை யானை வாகனத்திலும் 8ஆம் திகதி காலை சூரியப்

கண்களுக்கும் உடற்பயிற்சி




உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும்.
யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.
இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கண்களுக்கு பயிற்சி செய்ய வேண்டிய முறைகள்:
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.
2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
3. கண் மசாஜ்:    * வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.    * முழு முக மசாஜ்: சூடான நீரில் ஒரு துண்டை ஊற வைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.   கண்ணிமை மசாஜ்: கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.
4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.
5. அமைதியாக உட்கார்ந்து, பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.
6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.
7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.
8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.
9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.
10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

தேங்காயில்" உள்ள மருத்துவ குணம்





தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

 ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்



இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன.
அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும்.
இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர்.
அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள்.
ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர்.
மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை. ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம்.
எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.
அதிலும் அத்தகைய உணவுகளை தினமும் சாப்பிடுவது போர் தான். இருப்பினும் அவற்றை சாப்பிட்டால், நிச்சயம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
சரி. இப்போது அத்தகைய ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளைப் பார்ப்போமா!!!


மீன்: மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய இரதோற்சவம்




கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரத உற்சவம் இன்று இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற இரதோற்சவத்தில் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




கைரேகை பலன்கள் – ஒரு பொதுவான அலசல்!


பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக் கையில் உள்ள ரேகைகளும், மேடுகளும்

Mar 24, 2013


யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட் செய்ய...


வீடியோ என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையான ஒன்று யூட்யூப். யூட்யூப் தளத்திற்கு தற்போது மாதம் நூறு கோடி பயனாளர்கள் வருகை தருகிறார்கள். வீடியோக்களை பகிர உதவும் யூட்யூப் தளத்தில் புகைப்படங்களை பகிரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

நமது புகைப்படங்களை Slideshow வீடியோவாக பகிரும் வசதியை யூட்யூப் தருகிறது.

யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட்செய்ய:



1. யூட்யூபில் வீடியோவை அப்லோட் செய்யும் பகுதிக்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் Photo Slideshow என்று இருக்கும். அதன் கீழுள்ள Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்யுங்கள்.

4. புகைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.

5. முன்னோட்ட வீடியோவுக்கு கீழ் உள்ள அமைவுகளை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளுங்கள்.

6. விருப்பமிருந்தால்ஆடியோக்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யூட்யூபில் விளம்பரம் பெற்றிருந்தால் ஆடியோ சேர்க்க வேண்டாம். சேர்த்தால் அந்த வீடியோக்கான வருமானம் உங்களுக்கு வராது.

7. வீடியோ விவரங்களைக் கொடுத்து பப்ளிஷ் கொடுங்கள். அவ்வளவுதான்! 

தெளிவாக புரிந்துக் கொள்ள வீடியோவை பார்க்கவும்.

மாதிரி வீடியோ:

600 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, இரு போப் ஆண்டவர்கள் சந்திப்பு!



News Service பதவி விலகிய போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்டை புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சந்தித்து பேசினார். 600 ஆண்டு வரலாற்றில் 2 போப்கள் சந்திப்பது இதுவே முதல் முறை. உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். இந்த பதவியில் இருந்த 16ம் போப் பெனடிக்ட், கடந்த மாதம் 28ம் தேதி பதவி விலகினார். முதுமை காரணமாக போப் ஆண்டவருக்கு உரிய பணிகளை தம்மால் மேற்கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
  
கடந்த 600 ஆண்டு கால வரலாற்றில் ஒரு போப் பதவி விலகுவது இது முதல்முறை. இதன்பின், புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பொறுப்பேற்றார்.தெற்கு ரோமில் போப் ஆண்டவர் கோடைகாலத்தில் தங்கும் காஸ்டெல் கன்டோல்போ மாளிகை உள்ளது. இங்குதான் பழைய போப் பெனடிக்ட் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வாடிகனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போப் பிரான்சிஸ் நேற்று காஸ்டெல் கன்டோல்போவுக்கு வந்தார். அங்கு போப் பெனடிக்ட்டை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். இருவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அவர்கள் சந்திப்பை முன்னிட்டு, காஸ்டெல் கன்டோல்போ சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்

Mar 23, 2013


இஸ்லாமிய மருத்துவம்...



1. பேரிச்சம்பழம்

செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோஎந்தவிதமான விஷமோ, ய்வினையா அவரை அண்டாது.
வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க
“அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம்40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்.

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால்மறந்து போனது நீங்கி இரத்த

ஓட்டம் சீராகி விடும்.

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய
“அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

அழகான குழந்தை பிறக்க
“கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம்,இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.


4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
சர்க்கரை வியாதி நீங்கிட
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும்.

மாரடைப்பிற்கு வழிகோலும் புத்துணர்ச்சிப் பானங்கள் - ஆய்வில் வெளியானது அதிர்ச்சித் தகவல்!

உடலரிப்பை ஏற்படுத்தும் படைகளை இலகுவாக நீக்கும் நெட்டிலிங்கம்!

News Service வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள். பொதுவிடங்களில் இது போல் சொறிவதால் பிறரின் கேலிக்கும், ஏளனத்துக்கும் ஆளாக வேண்டிவரும். சிலர் வெளியிடங்களில் அரிப்பு ஏற்பட்டால் சொறியாமல், கஷ்டப்பட்டு அரிப்பை அடக்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்தவுடன் நன்கு சொறிந்து தள்ளிவிடுவார்கள். இதனால் அரிப்புள்ள இடங்களெல்லாம் இரத்தக் களறியாக மாறிவிடும். பின் எரிச்சல் அதிகரித்து, வலி தாங்காமல் ஏதாவது எண்ணெயை தடவி அரிப்பை தணித்துக்கொள்வார்கள். வெயில்காலத்தில் மட்டும் இந்த அரிப்பு அதிகமாவது ஏன் தெரியுமா? நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே அரிப்புக்கு காரணமாகும்.
  
பூஞ்சைக் கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விடயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின்

சிறுநீரகக் கற்களால் அவதிப்படுகின்றீர்களா? எலுமிச்சை இருக்க கவலை எதற்கு?

News Service இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.
  
அந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் விரைவில்...அறிமுகமாகின்றது #

News Service பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய இரண்டும் இணையத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாக மாறிவிட்டன. தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரு ஜாம்பவான்களாக இவற்றைக் குறிப்பிடுவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவது இல்லை. குறிப்பாக அரபு வசந்தத்தில் இவற்றின் பங்குகள் அளப்பரியன. மத்திய கிழக்கில் சில நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவை பெருந் துணையாக இருந்தன. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் பொதுவாக சமூக வலையமைப்புகள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டாலும், மேலெழுந்தவாரியாக ஒரே மாதிரியானதென குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இவை இரண்டினதும் நோக்கம் என்னவோ தகவல் பரிமாற்றம், இணையத்தோடு இணைந்திருத்தல் என தெரிவிக்கப்பட்டாலும்

முக அழகு - பயன்தரும் எளிய குறிப்புக்கள்..

MS Powerpoint - இல் படங்களை விரும்பிய கோணங்களில் மாற்றியமைப்பதற்கு...

News Serviceபவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும், சிறிய அளவிலாவது அது மாறுதலாகக் காட்சி அளிக்கும். ஆனால், சில வழிகளை மேற்கொண்டால், ஆப்ஜெக்டுகள் அனைத்தும் நாம் விரும்பிய வழிகளில், கோணங்களில் அவை அமையும். அவற்றை இங்கு காண்போம்.
  
1. மாறுதலான வகையில் தோற்றமளிக்க விரும்பும் ஆப்ஜெக்டை முதலில் தேர்ந்தெடுக் கவும்.

Mar 22, 2013

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்

There are numerous benefits to everyone in attippalat. Vitamin A, high in fiber, these nutrients are abundant attippalat.
அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. 

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். 

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். 

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?


What explains the Special Nutrition Ambika banana Shekhar ... '' A lot of important nutrients, including Banana fruit types. Tamil culture   is one of three fruilts. Food suitable for all seasons. banana in vitamin C, potassium, fiber, nutrients are included.
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல் நியூட்ரிஷியன் அம்பிகா சேகர் விளக்குகிறார்...   ‘‘நிறைய சத்துகளையும் உள்ளடக்கிய பழ வகைகளில்  வாழைப்பழம் முக்கியமானது. தமிழ்ப் பண்பாடு சொல்லும் முக்கனிகளில் ஒன்று. எல்லா பருவங்களிலும் சாப்பிடுவதற்கு ஏற்றது. வாழைப்பழத்தில்  வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. 

வளரும் குழந்தைகளுக்கு இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, ஆரோக்கியமாகவும்  வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. எனர்ஜி லெவலை  எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு உண்டு. 

செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம்.  வாழையில் சர்க்கரை அதிகம்

உடல் நலம் தரும் சமையலறை மருந்து

100 grams of coriander seeds, known as coriander, try removing the nerve to the skin up to 100 grams (Chuck always have to use nerve removed) and 1 tsp cardamom powder 100 g varuttu slight amount of treble. As tikaksan daily coffee making, milk or honey mixed in a drink.

தனியா எனப்படும் கொத்துமல்லி விதை 100 கிராம், தோல் சீவி நரம்பு நீக்கிய சுக்கு 100 கிராம் (எப்போதும் சுக்கை நரம்பு நீக்கி உபயோகிக்க வேண்டும்) ஏலக்காய் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து. தினசரி காபி டிகாக்ஷன் போல் தயாரித்து, பால் அல்லது தேனில் கலந்து பருகவும். 

மணத்தக்காளி வற்றல்: 

மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண் ரணத்திற்கு மிகவும் நல்லது. மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் மணத்தக்காளி வற்றலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். காரக்குழம்பு வைக்கிறபோது அதிலும் மணத்தக்காளி வற்றலைச் சேர்த்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி வற்றலை விட மணத்தக்காளிக் கீரையை, சிறிதளவு பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும். 

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் அவற்றை சுண்டைக்காய் வற்றல் ஒழிக்கும். பெரியவர்களாக இருந்தால் சுண்டைக்காயை வறுத்து,  உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவும் சாப்பிடலாம். வறுத்து எடுத்த சுண்டைக்காயைப் பொடி செய்து சாம்பார் ரசத்திலோ பொரியலிலோ கூட சேர்த்த்து விடலாம். குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள். பொதுவாக வாரம் ஒருமுறை சாப்பிடுவது நல்லது. 

வயிற்றில் பூச்சி தொல்லை இருந்தால் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அமீபியாசிஸ் காரணமாக வரும் வயிற்றுப் போக்குக்கு சுண்டைக்காய் வற்றல் மிகவும் நல்லது. 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...