Mar 3, 2013

கூகுள் குரோம் உலாவியில் காணப்படும் சூட்சுமங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

News Serviceசிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
  
1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:
மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த

விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது

News Service
கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
  
அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில்

சருமமே சகலமும்!

தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும்

முதுமைத் தோற்றமா? கவலையை விடுங்க

முதுமைத் தோற்றமா? கவலையை விடுங்கஇந்த உலகில் பிறந்த அனைவரும் எப்போதும் இளமையோடு இருக்க முடியாது. ஆனால் முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டதால், அவர்கள் நீண்ட நாட்கள் இளமையோடு வாழ்ந்தனர். 

தற்போதோ மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளை உண்பதால்,அவர்கள்30 வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைகின்றனர். அதிலும் முகத்தில்,கழுத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை காணப்படுகின்றன. அவ்வாறு தோற்றமளிக்க ஆரம்பித்தால், கவலைப்படாமல் ஒரு சில உணவுகளை உண்டாலே அந்த தோற்றத்தை தடுக்கலாம். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.

நாவல் பழம்: இந்த பழம் மிகவும் சிறந்த முகச்சுருக்கத்தை தடுக்கும் பழம். ஏனெனில் இதில் உள்ள ஆன்தோசைனோசைடு, முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் முகச்சுருக்கம்,பார்வை குறைவு போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதில் 40% ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு,அழகாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதல் இருக்கும் வைட்டமின் சி, உடலில் இருக்கம் கொலாஜென் உருவாக்கத்தை உறுதிப்படுத்துவதால், முதுமையை தடுக்கிறது.

தக்காளி : இது மற்றொரு சிறந்த உணவுப் பொருள். இதனை உண்பதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். மேலும் இதன் ஜுஸை முகத்திற்கு தடவி வந்தால்,முகமானது பளபளப்புடன் இருக்கும். ஏனென்றால் தக்காளியில் இருக்கும் லைக்கோபீன் என்னும் கெமிக்கல், முகத்தில் தோன்றும் கோடுகளை தடுப்பதோடு, செல்கள் பாதிப்பு மற்றும் சரும தோற்று நோய்கள் வராமலும் தடுக்கும்.
மீன் எண்ணெய் : கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்கள் இளமையோடு காட்சியளிக்க காரம் என்னவென்று தெரியுமா? ஏனேனில் மீன் மற்றும் மீன் எண்ணெயை அவர்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், சருமம் இறுக்கமடைந்து அளமை தோற்றதை அளிக்கிறது. அதிலும் குளிர்ந்த தண்ணீரில் வாழும் சாலமன்,டுனா போன்ற மீனில் அதிகமான அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் இருப்பதால், சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை கிடைப்பதோடு, சுருக்கங்களும் மறையும்.

கிரீன் டீ : பானங்களில் கிரீன் டீ மிகவும் ஆரோக்கியமானது. கிரீன் டீ குடிப்பதால் செரிமானத் தன்மை சரியாக நடப்பதோடு, உடல் எடையும் குறைந்து,முகச்சுருக்கமும் குறையும். முக்கியமாக முகச்சுருக்கம் வருவதற்கு டி.என்.ஏ பாதிப்பும் ஒரு காரணமாகும். இந்த டி.என்.ஏ பாதிப்பை கிரீன் டீ தடுக்கும். எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ குடித்தால், முகம் அழகாக சுருக்கம் இல்லாமல் இருப்பதோடு, கூந்தல் உதிராமல், எடை குறைந்து ஸ்லிம்மாக அழகாக இருக்கலாம்.

சொக்லேட் :சொக்லேட் ஃப்ளேவர் மிகவும் பிடிக்கும் என்றால் அந்த சாக்லேட் ஃப்ளேவர் சாப்பிடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. சாக்லேட் சாப்பிட்டால், அதில் இருக்கும் கொக்கோ என்னும் பொருள், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாவதோடு, சுருக்கம் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடுங்க, இளமையோடு இருங்க.
மேற்கூறிய உணவுப் பொருட்களையெல்லாம் சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், தினமும் அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் சருமத்தில் சுருக்கும் ஏற்படுவதை தடுக்கலா

பிரம்மாண்டமாக தயாராகிறது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா!




  • 0
     

cinemaநூறாண்டு காணும் இந்திய சினிமாவைக் கொண்டாட பிரமாண்ட விழா எடுக்கிறது தமிழ் சினிமா. இந்த விழாவில் இந்திய சினிமாவின் சாதனை நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாஸன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள். இந்திய மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த விஷயம் சினிமா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, வங்காள, ஒரியா, போஜ்புரி மொழிகளில் சினிமாக்கள் ஏராளமாக தயாராகி வருகின்றன.
இந்தியாவில் சினிமா படங்கள் உருவாக ஆரம்பித்து. 100 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம்,

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால்


அனைவருக்குமே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்வது நன்கு தெரியும். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை அதிகரித்து, வறட்சியால் கூந்தல் உதிர்தலை தடுக்கலாம் என்பது தெரிந்தது. ஆனால் எப்படி தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் சிறந்த பொருளாக உள்ளதோ, அதேப் போல் தேங்காய் பாலும் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதற்கு தேங்காய் பாலை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். 
 
அதுமட்டுமின்றி, தேங்காய் பால் கூந்தலை அடர்த்தியாக்கவும் உதவும். எனவே சமைக்கப் பயன்படும் தேங்காயை கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நீளமாக அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள். இப்போது அந்த தேங்காய் பாலை வைத்து எப்படியெல்லாம் முடி  பேக் போடலாம் என்று பார்ப்போமா!!! 
 
தேங்காய் பால்முடி  பேக்குகள்: 
 
தேங்காய் பால்: தேங்காய் பால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இந்த தேங்காய் பால் கடைகளிலும் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு தேங்காயை நன்கு அரைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும. வேண்டுமெனில் இதனை ஷாம்பு போட்டு குளித்தப் பின்னரும் போடலாம். 
 
இதனால் கூந்தல் நன்கு மென்மையுடன் இருக்கும். தேங்காய் பால் மற்றும் தேன்: இந்த முறையில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, தேங்காயை நறுக்கி போட்டு, நீரை நன்கு 5-10 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் அதனை குளிர வைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் கூலுந்தலை அலசினால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும். 
 
தேங்காய் பால், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு: தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள எலுமிச்சை சாறு கூந்தல் உதிர்தலை தடுத்து, ஸ்கால்ப்பில் இருக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லையை போக்கும். மேலும் இதில் உள்ள தயிரும் கூந்தலுக்கு ஏற்ற ஒரு பொருள். எனவே இந்த முடி பேக்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்தலோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும். 
 
தேங்காய் பால் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்: இயற்கையாகவே கூந்தல் உதிர்தலை தடுப்பதற்கு இந்த முடி பேக்கை  செய்து பார்க்கலாம். இதற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து, தலைக்கு மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளித்தால், சிறந்ததாக இருக்கும்.
 
 
தேங்காய் பால் மற்றும் வெந்தயம்: இந்த முடி  பேக்கில் வெந்தயப் பொடியில் தேங்காய் பால் ஊற்றி, பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று மென்மையாக, பட்டுப் போன்று மின்னும். இவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் முடி  பேக்குகள்

சருமம் பொலிவாக வேண்டுமா?


கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். 
 
ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம். சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!! 
 
* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். 
 
* தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம். 
 
* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும். * இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம். 
 
* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும். இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். 
 
ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும்.

வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படி?



 காய்ச்சல் என்பது உடலில் சத்துக்கள் குறைவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் ஏற்படும். இன்றைய காலக்கட்டத்தில் உணவிலும், நீரிலும், காற்றிலும், அனைத்திலும் கிருமி, பாக்டீரியா என்று பரவி காய்ச்சலை உண்டாக்குகிறது. ஸ்வைன் காய்ச்சல், சிக்கன் குனியா என்று புது புது காய்ச்சல்களை கேள்விப்பட்டு வருகிறோம். இத்தகைய காய்ச்சலுக்கு தேவை நல்ல ஓய்வு மற்றும் நீரேற்றம் மிக முக்கியம். மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அவர் தரும் மருந்துகள் காய்ச்சலை குணப்படுத்த உதவும். 
 
முதியவர்களுக்கு அல்லது நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, இத்தகைய காய்ச்சல் மிகவும் ஆபத்தை உண்டாக்கும். அதனால் காய்ச்சலுக்கு நல்ல சிகிச்சை கொண்டு, அதைத் தடுக்க குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.

வீட்டு சிகிச்சை:
 
வீட்டிலேயே காய்ச்சலுக்கு நல்ல மருந்து நல்ல தூக்கத்தை மேற்கொள்வது தான். நன்கு தூங்கி ஓய்வெடுத்து, தெளிவான திரவங்களை குடிப்பது மற்றும் உடலுக்கு முடியாத கடுமையான வேலைகளை செய்யாமல் இருப்பது, சீக்கிரம் குணமடைய ஏதுவாயிருக்கும் . 
 
காபி அல்லது ஆல்கஹால் போன்ற எந்த உணவு பண்டங்களையும் எடுத்துகொள்ள வேண்டாம். அத்தகைய பானங்கள் உடலில் நீர் அகற்றலை ஏற்படுத்தும்.
 
 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை இழக்க நேரிடும். ஆகவே ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்து கொள்வதன் பொருட்டு நோயை எதிர்த்து போராட உதவும். குறிப்பாக தெளிவான சூப் குடிப்பது நல்லது. இது ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் நீறேற்றத்தை உண்டாக்க உதவுகிறது. 
 
காய்ச்சல் மருந்துகள்: 
 
காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. ஆகவே அதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே ஆன்டி-வைரஸ்களை எடுத்து கொள்வது சிறப்பாகும். மேலும் அருகில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ, இத்தகைய காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தால், அவர்களை உடனே இந்த ஆன்டி-வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ள சொல்லவும். இதனால் இந்த காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். 
 
காய்ச்சல் தடுப்பூசி: 
 
காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதுவே சிகிச்சைக்கு முற்றிலும் சிறந்த வழி. ஒவ்வொரு புது காய்ச்சல் உரு கொண்டதும், அதற்கான தடுப்பூசி வெளியிடப்படுகிறது. ஆகவே இந்த தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம், காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக கஷ்டத்தைக் கொடுக்கும. இத்தகையவர்கள் ஒவ்வொரு வருடமும், பொருத்தமான காய்ச்சல் தடுப்பூசியை எடுத்து கொள்வது நல்லது.
 
கூடுதலாக, நல்ல சுகாதாரத்தை மேற்கொள்வதும், உடற்பயிற்சியை மேற்கொள்வதும் சிறந்தது. கழிவறைக்கு சென்று வந்தால், உடனே கைகளை அலம்புவது அல்லது வெளியில் சென்றாலோ அல்லது பொது போக்குவரத்து வாகனங்களில் கிருமி நிரப்பப்பட்ட சூழலில் இருந்து வீடு வந்ததும், கை கால் அலம்புவது நோயை எதிர்கொள்ளும். முக்கியமாக யாராவது தும்மினாலோ இருமினாலோ, உடனே கண்களை அல்லது மூக்கை தேய்க்க வேண்டாம். உடனே கை கழுவுவது மிகவும் நல்லது. 

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!


 கொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு என்றும் கருதப்படுகிறது. அதீத கொழுப்பு உடலில் இருந்தால் தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இத்தகைய கொழுப்புக்களை உணவு முறைகள் மூலம் குறைக்கலாம். ஏனெனில் பொதுவாக உடலில் கொழுப்புக்கள் சேர்வது உணவுகளால் தான். இத்தகைய கொழுப்புக்கள் உள்ள உணவுகளை உண்டால், இதய நோய் எளிதில் வந்துவிடும். 
 
எனவே கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் இருந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கலாம். இப்போது மாதிரியான உணவுகளை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்பனவற்றைப் பார்ப்போம்.
 
செறிவூட்டப்பெற்ற கொழுப்புள்ள உணவுகள்
 
 
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செறிவூட்டப்பெற்ற கொழுப்பின் மூலம் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே செறிவூட்டப்பெற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை குறைவாகவோ, முடிந்தால் அவற்றை முழுமையாக நீக்கவிம். ஆனால் சில உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே அந்த சந்தர்ப்பங்களில், அவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி போன்ற விலங்குகளில் அதிக கொழுப்புக்கள் இருக்கும். மேலும் காய்கறிகளின் செறிவூட்டப்பெற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும். 
 
இவையும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. இப்போது கொழுப்பின் அளவை குறைக்கும் சில உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
 
 
கொழுப்பை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டுமானால், அதிக நார்ச்சத்து உள்ள உணவான, குறிப்பாக அதிகம் சுத்திகரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட ரொட்டி போன்றவற்றை உண்ண வேண்டும். கூடுதலாக அதனுடன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராளமாக உண்ண வேண்டும். 
 
இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும். அதிக கலோரிகள் உடலால் இயற்கையாகவே கொழுப்பாக மாற்றப்படுகின்றன. அதிக கொழுப்புள்ள உணவை உண்டால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும்.
 

காய்கறிகள் மற்றும் பழங்கள்
 
ஒருவர் தன் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ விரும்பினால், அவர்கள் உணவில் முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
காய்கறிகளுடன் கூடுதலாக பழங்களையும் உண்ண வேண்டும். இந்த உணவுகளில் கொழுப்பின் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. இந்த உணவுகளில் இயற்கையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
 
இறைச்சி மற்றும் மீன்
 
 
கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவு வகைகளில் மீனை தாராளமாக சேர்க்கவும். உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பை நீக்க உதவும் சத்தான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சுறா, சால்மன் மற்றும் சூரை வகை மீன்களில் உள்ளன. எனவே முடிந்த அளவு மீனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. 
 
மேலும் இறைச்சி உணவை தவிர்க்க முடியாதவர்கள், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியை உண்ணலாம்.
 
சரியான அளவில் உண்ணவும்
 
 
கொழுப்பின் அளவை குறைக்க அல்லது கட்டுப்படுத்த உணவை அதிகமாக சேர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடாது. சரியான அளவில் உணவுகளை உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும், 3 முதல் 5 முறை காய்கறி வகைகளையும், 2 முதல் 4 முறை பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள முடியும்

கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள்



கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. 
 
 
எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
* கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும். எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். 
 
* கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். 
 
* ஸ்கால்ப் பிரச்சனை: வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். 
 
* பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.

பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்




அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும். 
 
பேரீச்சையின் சத்துப்பட்டியல்... 

* எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். 

* பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. 

* டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். 

* 'வைட்டமின் ஏ', பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. 

* சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. 

* பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. 

* பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. 

* கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது. 

சாப்பிடும் முறை.......... 

உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும். 

பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து 'டேட்ஸ் சிரப்' தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...