Oct 13, 2014

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்


நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!
வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!
ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

நாம் பயன்படுத்தும் எண்ணெய்யில் எந்த எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம்?

vegetable-oil


பொதுவாக,விலை அல்லது விளம்பரத்தில் கூறப்பட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து வாங்குகிறார்கள். ஆனால், உடலுக்கு எந்த விதமான எண்ணெய் ஒத்துப் போகும் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது
இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.
சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,  லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.
ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.
பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
அரிசி உமி எண்ணெயில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது. எந்த எண்ணையாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நலம்

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி? தினமும் நூற்றுக்கணக்கான மொபைல்கள் காணாமல் போகிண்றன. தொலைந்த மொபைல் தற்போது இருக்கும் இடத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள முடியும் மேலும் அதன் பாஸ்வேட்டை மற்றவோ முழுவதுமாக நம் தகவல்களை அழிக்கவோ முடியும்.
சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் லேப்டாப்பை திருடி தகவல்களை திருட முயல்வான் அப்போது மூன்று முறை தவறான பாஸ்வேர்டை உபயோகப்படுத்திய உடன் எல்லா தகவல்களும் அழிந்து விடும். இப்போது இது போல ஒரு அசத்தலான விஷயத்தை உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலும் செய்ய முடியும். எப்போதும் நம் மொபைல் தொலைந்து போவது ஒரு கஷ்டமான விஷயம்தான் ஆனாலும் நம் தனிப்பட்ட தகவல்கள் ( நாம் புகைப்படங்கள் பின் நம்பர்கள் போன்றவை) தவறான கைகளுக்கு போகாமல் காப்பற்ற முடியும்.

உலகின் 100 சிறந்த பிராண்டுகள் பட்டியல் முதலிடம் பிடித்த ஆப்பிள்!


appleஉலகின் 100 சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஐஃபோன் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நிறுவனமான டாடா, பிரிட்டனில் தயாரிக்கும் லாண்ட் ரோவர் கார் 91-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஐஃபோன், மாக் கம்ப்யூட்டர், ஐ-பேட், ஐ-பாட் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 119 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 7.14 லட்சம் கோடி) உள்ளது.
இந்தப் பட்டியலில் கூகுள் இரண்டாமிடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 107 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 6.42 லட்சம் கோடி). 3-ஆம் இடத்தில் கோகா-கோலா உள்ளது. ஐபிஎம் 4-ஆம் இடத்திலும், மைக்ரோஸாஃப்ட 5-ஆம் இடத்திலும் உள்ளன.
4.47 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 27,000 கோடி) மதிப்புடன், லாண்ட் ரோவர் கார் உள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்படும் இந்தக் காரைத் தயாரிக்கும் நிறுவனமானது டாடா குழுமத்தைச் சேர்ந்தது.
வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையாத நாடுகள் என பாகுபாடு இல்லாமல், உலகெங்கும் அறியப்பட்ட பெயராக உள்ள நிறுவனங்கள், சாதனங்கள் அடங்கிய “100 சிறந்த பிராண்ட்’ பட்டியலை இன்டர்பிராண்ட் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் படி இவ் இரு நகரங்களுக்குமான பிரயாண இடைவெளி ஆறு மணித்தியாலங்களாக சுருக்கமடைகின்றது.

இதன்படி யாழ்-கொழும்பு தொடரூந்துச் சேவையின் நேர அட்டவணை தொடரூந்து ரகங்களுக்கேற்ப பின்வருமாறு,






‪யாழ் நகரிலிருந்து கொழும்பு கோட்டை வரை‬

1.யாழ்தேவி - காலை 7.25க்கு புறப்பட்டு பிற்பகல் 3.47க்கு சென்றடையும்

2.இன்ரசிற்றி - முற்பகல் 11.00க்கு புறப்பட்டு பிற்பகல் 5.40க்கு சென்றடையும்

3.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - பிற்பகல் 1.45க்கு புறப்பட்டு இரவு 8.00க்கு சென்றடையும்

4.தபால் தொடரூந்து - இரவு 7.05க்கு புறப்பட்டு அதிகாலை 4.23க்கு சென்றடையும்

5.விசேட தொடரூந்து - ஞாயிறுகளில் மட்டும் முற்பகல் 10.00க்கு புறப்பட்டு பிற்பகல் 6.11க்கு சென்றடையும்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்நகர் வரை‬

1.குளிரூட்டிய அதிவேக தொடரூந்து - காலை 5.50க்கு புறப்பட்டு முற்பகல் 11.57க்கு வந்தடையும்

2.யாழ்தேவி - காலை 7.15க்கு புறப்பட்டு மாலை 3.00க்கு வந்தடையும்

3.இன்ரசிற்றி - முற்பகல் 11.50க்கு புறப்பட்டு பிற்பகல் 6.15க்கு வந்தடையும்

4.தபால் தொடரூந்து - மாலை 7.45க்கு புறப்பட்டு அதிகாலை 5.07க்கு வந்தடையும்

5.விசேட தொடரூந்து - சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9.40க்கு புறப்பட்டு பிற்பகல் 5.20க்கு வந்தடையும்

தேங்காயின் பலன்கள் என்ன?


Our life is meant to be attached to the coconut. However, we are fully aware of its specialties. Here ... terincikkunka about the virtues of coconut ...தேங்காய் நம் வாழ்வில் ஒன்றி இருக்கும் பொருள். ஆனாலும் அதன் சிறப்பு பற்றி நமக்கு முழுமையாக தெரிவதில்லை. இதோ... தேங்காயின் சிறப்புகள் பற்றி தெரிஞ்சிக்குங்க...

தேங்காயை உணவு சம்மந்தமாக மட்டும் இல்லாமல் அழகு சாதனமாகவும் பயன்பாட்டில் உள்ளது. கேரளா மற்றும் தாய்லாந்தில் தேங்காய் இல்லாத உணவு இருக்காது. இதில் பல மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா, பங்கஸ், வைரஸ் கிருமிகள் மற்றும் வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மையுடையது. தினமும் ஒரு சின்ன துண்டு தேங்காய் சாப்பிடுவது நல்லது. தேங்காயில் வைட்டமின், மினரல், அமினோ ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்


The eyes of the world appreciates. Kankalukkuullatu key role in the development of manஉலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில்  ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும்  ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி  பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால்  கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும்  பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால்,

இருமலை குணப்படுத்தும் துளசி



The main character of Tulsi in the cooling caused by cough syrup nikkuvatutan kapattai. Although the name is variously spelled, natureஇருமல் சிரப்புகளில் துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாறாக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள். துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். திருத்துழாய் என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...


மாற்றம் செய்த நேரம்:9/18/2014 5:24:39 PMCirruntiyo today, without onion, broth vakaikalo, do not even think about doing vakaikalo Savouriesவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு  ருசி சேர்ப்பதே வெங்காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு  நிகர் ஏது?

வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் 

இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

Guava is one of the fruits available at the cheapest price. This fruit is not cheap. Has several benefits. Get 4 apple a good one

மாற்றம் செய்த நேரம்:10/13/2014 5:41:26 PM

மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...