Feb 26, 2014

Nayanthara Hansika Fight in Chennai Airportசென்னை விமானநிலையத்தில் நயன்தாரா, ஹன்சிகா நேருக்கு நேர் மோதல் (வீடியோ இணைப்பு)

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் கூட்டணி கதவு மூடப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கிருஷ்ணகிரி, பிப்.27-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடைப்பெற்றது.

விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான அஸ்லம்ரஹ்மான் ஷெரீப், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் மாதன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் வேல்மணி, காங்கிரஸ் நகர பொருளாளர் குருந்தப்பன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 806 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது
நைஜீரியா, பிப்.27-

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அச்சிறுவனை பல இடங்களில் தேடினர். பின்னர் சேரிஸ் எலிவிஸ்சிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் வீடு முழுவதும் தேடினர்.

அப்போது எலிவிஸ் தனது 4 வயது மகனை கடுமையாக தாக்கி கொலை செய்து உடலை மறைந்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் அடிக்கும் போது கத்தாமல் இருக்க சிறுவனின் வாய்க்கு பூட்டு போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் எலிவிஸ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது போலீஸார் தாக்கல் செய்த மனுவில், "எலிவிஸ், அவரது மகனை கடுமையாக தாக்கி உள்ளார். சூடான இரும்பு கம்பியால் உடல் முழுவதும் சூடு வைத்து உள்ளார். பின்னர் ஒரு பிளாஸ்டிக் டிரம்பில் போட்டு அடைத்து உள்ளார்" என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணையில் எல்விஸ்க்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தையே மகனை இவ்வாறு கொடுமைப்படுத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்


இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா


இஸ்ரோவுடன் இணைந்து ஏவுகணை செலுத்தும் நாசா

நியூயார்க், பிப். 26–
பூமியின் நிலம், காற்று, விண்வெளி போன்றவை குறித்து ‘நாசா’ மையம் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக செயற்கை கோள்களை பறக்க விட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்தி வருகின்றனர்.
அதன் மூலம் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பூமி குறித்து 34 புதிய ஆய்வு திட்டங்களை நடத்த நாசா முடிவு செய்துள்ளது.
அதன் மூலம் பூமியில் உள்ள தண்ணீர் மற்றும் காற்று வீச்சின் வேகம் கணக்கிடப்படும். அதற்காக இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து நாசா ஏவுகணை செலுத்துகிறது. இந்த திட்டம் 7 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இந்த தகவலை நாசா தெரிவித்துள்ளது

நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு கிடைத்த தங்கப் புதையல்

நாயுடன் வாக்கிங் சென்ற தம்பதியருக்கு கிடைத்த தங்கப் புதையல்
நியூ யார்க், பிப். 26-

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதியர் நாயுடன் வாக்கிங் சென்றபோது கிடைத்த தங்க நாணய புதயலை கண்டு திக்குமுக்காடிப் போய் உள்ளனர்.

5, 10 மற்றும் 20 அமெரிக்க டாலர் நாணயங்களாக 1427 தங்க நாணயங்கள் இவர்களுக்கு கிடைத்துள்ளன. இந்த நாணயங்கள் 1847 மற்றும் 1894-ம் ஆண்டுகளுக்கிடையில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.

நாணய தயாரிப்பு கூடத்தில் இருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாகவே தங்கசாலையில் இருந்து கடத்திவந்த சிலர் இவற்றை பிற்கால தேவைக்காக பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நாணயங்களின் தற்கால முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தான். ஆனால், இவற்றில் சில நாணயங்கள் மிகவும் அரிதானவை என்பதால் இவை ஒவ்வொன்றும் 10 லட்சம் டாலர்கள் வரை விலை போகும் வாய்ப்பும் உள்ளது என பழங்கால நாணயங்களை வாங்கி விற்கும் சிலர் தெரிவித்தனர்.

எனினும், வாக்கிங் போகும் போது ஒரு மரத்தின் கீழே இருந்த மண்ணை நாய் தோண்டிய போது இந்த தங்கப் புதையல் கிடைத்திருப்பதால், இதை நாயால் கிடைத்த அதிர்ஷ்டம் எனவே கருத வேண்டியுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...