Jun 25, 2013

இந்தியா கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?

கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி?டேராடூன்: உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத் பகுதியில் மட்டும் 5ஆயிரம் பேர் பலி? கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்துக்கு வருபவர்களை சுற்றிக்காட்ட 4700 சுற்றுலா வழி காட்டிகள் இருந்தனர். வாகன ஓட்டுனர்கள் 500 பேரும், பூசாரிகள் 100 பேரும் ஓட்டல் தொழிலாளர்கள் சுமார் 700 பேரும் இருந்தனர். இவர்களில் ஆயிரம் பேர்தான் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

மணப்பெண் போல் மாற்றி வைக்கும் மகிழம்பூ!....இயற்கை தரும் இளமை வரம்!





கிழம்பூ... பேரைக் கேட்டாலே மனம் மலரும். மகிழ்ச்சியை மடை திறந்த வெள்ளமாகத் தருவதில் மகிழம்பூவுக்கு ஈடு இணையே இல்லை. வாடிப் போனாலும், வற்றாத வாசனையை வாரி வழங்கும் வள்ளலான மகிழம்பூவை தலையில் சூடும் போது கிடைக்கும் அழகைவிட, மூலிகையாக பயன்படுத்தினால் கிடைக்கும் அழகு... அளவில்லாதது. இளம்பெண்களின் சருமப் பிரச்னைகளை சடுதியில் போக்கிடும் அற்புத வித்தையும் இந்த மலரிடம் ஒளிந்து கிடக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் அள்ளிக் கொள்வோமா...?
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவுடன், அரை கப் குளிர்ந்த ரோஸ் வாட்டரை (ரோஜா பூக்களைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்தும் சேர்க்கலாம்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் 'பேக்' போடுங்கள். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் முகம் மிருதுவாகி, பளபளக்கும்.

மகிழம்பூ பவுடர் (பூக்களை காய வைத்து அரைத்தது) - ஒரு டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இரண்டையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். அதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்து வர, அன்று பூத்த மலராக முகம் பளீரென்று இருக்கும்.
மணப்பெண்ணுக்கு ஏற்ற அழகு சிகிச்சைகள்...
உடல்: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு, நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டுங்கள். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து ஊற வைத்து குளியுங்கள். அரோமா தெரபி செய்து கொண்டதுபோல் உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வாசனையோடு கூடிய பளபளப்பு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷாக உணர வைக்கும்.
தலை: கால் கிலோ நல்லெண்ணெயுடன் 50 கிராம் ஃப்ரெஷ் மகிழம்பூவை சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இதனுடன், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தலா 25 கிராம் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளியுங்கள். கண்டிஷனர் போட்டதுபோல் கூந்தல் மென்மையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
ஒரு கப் ஃப்ரெஷ் மகிழம்பூவை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். மேலே உடல் மற்றும் தலைக்கு குறிப்பிட்டுள்ள தைலங்களை தேய்த்துக் குளித்தபிறகு, மகிழம்பூ போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் உடல் மற்றும் தலையை அலசுங்கள். புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் குடிகொள்வதோடு அற்புதமான அழகும் சேர்ந்துகொள்ளும்.
தோல்: ஃப்ரெஷ் மகிழம்பூவை ஊற வைத்து அரைத்த விழுதுடன், அதே அளவு பயத்தம்பருப்பு மாவைக் கலந்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளியுங்கள். திட்டுக்கள், கருமை, வியர்வை நாற்றம் அத்தனையும் காணாமல் போய் தோல் பளபளவென மின்னும்.
உலர்ந்த மகிழம்பூ, மரிக்கொழுந்து, பூலான்கிழங்கு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தலா 100 கிராம் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் இந்தப் பவுடரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளியுங்கள். மாசு, மரு இல்லாத வாசனையுடன் கூடிய அழகு ஜொலிக்கும்.
தோலில் வறட்சி தலையில் செதில் போன்ற தொல்லைகள் வராமல் தடுக்கவும் மகிழம்பூ உதவுகிறது.
100 கிராம் வெந்தயத்தூளுடன், மகிழம்பூ பவுடர்(பூக்களை காய வைத்து அரைத்தது), புங்கங்காய்தூள், கடலை மாவு இவை தலா 50 கிராம் சேர்த்து கலப்பு பவுடர் தயாரித்துக் கொள்ளுங்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பவுடரில் சிறிது எடுத்து உச்சி முதல் பாதம் வரை தேய்த்து அலசுங்கள். செதில் பொடுகு, தொல்லை நீங்கி கூந்தல் நல்ல கண்டிஷனில் இருக்கும். தோலும் பளபளக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கடலை மாவுக்குப் பதிலாக பயத்தம்பருப்பு மாவைக் கலந்து கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கலப்பு பவுடருடன், வெள்ளரி விதை பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள் இரண்டும் தலா 50 கிராம் கலந்து குளித்தால் சருமம் நல்ல நிறத்தோடு மின்னும்.
மனக்கலக்கத்தை போக்கும் மகிழம்பூ!
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மகிழம்பூவைத் தலையில் சூடிக் கொள்வதால் உடல் சூடு தணிந்து மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
இந்தப் பூவை தினமும் முகர்வதால் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
வேலைப் பளு, குடும்பப் பிரச்னைகளால் மன நிம்மதியில்லாமல் தவிப்பவர்களின் மூளை எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள்,

தோல் நோயை விரட்ட குப்பைமேனி குளியல்!....நாட்டு வைத்தியம்




ந்த... அரிப்பு, படை, அலர்ஜினு வியாதிங்க வந்துட்டா... உடம்புல அங்கங்க தடிச்சிப் போய், பாக்கறதுக்கு கொடுமையா இருக்கும். அதனால வர்ற அவஸ்தை அதை விட கொடுமையா இருக்கும். இதையெல்லாம் விரட்டியடிக் கறதுக்கு நாட்டுப்புறத்துல ஏகப்பட்ட சங்கதி இருக்கு. அதுல ஒண்ண எடுத்துவிடறேன்... எழுதிக்கோங்க!
தவசுமுருங்கை இலையை (பல பேரு இது என்ன செடினு தெரியாமலே வீட்டுல வளர்த்துக்கிட்டிருக்காங்க) ஒரு கைப்பிடி எடுத்து இடிங்க. அதுல கிடைக்கற சாறை குடிச்சா... அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும்.
மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம். அதை மறந்துட்டு, புளிக்குழம்பு, புளிசாதம்னு மூக்குப்பிடிக்க வெட்டிப்புட்டு, நோய் குணமாகலையேனு இந்த பாட்டியைத் திட்டித் தீர்க்கக் கூடாது.
பொதுவா, தோல் வியாதிங்க வந்துட்டாலே மனுஷன ஆட்டிப் படைச்சிடும். நாலு இடத்துக்கு பந்தாவா போய் வரக்கூட முடியாத அளவுக்கு கை, கால், முகம்னு வெளியில தெரியற இடத்துலயெல்லாம்கூட பட்டை பட்டையா... சொறி சொறியா... முளைச்சு உயிரை எடுக்கும். இதையெல் லாம் குணப்படுத்தவும் கைவசம் வைத்தியம் இருக்கு.
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா... நல்ல குணம் தெரியும்.

இதயம் காக்க 25 வழிகள்

!





''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...
 மாரடைப்புக்கான காரணம்
உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!
1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...