Apr 26, 2012

நிலக்கடலைப்பால்








தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை-1கப்
    முந்திரி-5
    ஏலக்காய்-சிறிதளவு

செய்முறை:

    நிலக்கடலைப் பருப்பை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவும்,
    பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
    இத்துடன் ஊறிய முந்திரிப் பருப்பை சேர்க்கவும்.
    பின்பு   இவைகளுடன்  சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்  அரைக்க வேண்டும்.
    இப்பொழுது சுவையான நிலக்கடலைப்பால் தயார். இதை உணவாகப் பருகலாம்.

மருத்துவக் குணங்கள்:

    மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
    எல்லாவிதமான ரத்தப்போக்கை
தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
    ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.
    வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
    ஏலக்காய் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
    ஏலக்காய் செரிமானத்தை தூண்டுவதற்கும், குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகள் தீரவும் பயன்படுகிறது.
    ஏலக்காய் மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும் பயன்படுகிறது .

மருத்துவக் குணங்கள்:

    எண்ணெய் வித்துக்களில் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுவது நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ஏகப்பட்ட அளவிற்கு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. நாம் உணவு தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் கூட நிலக்கடலையிலிருந்து தான் எடுக்கப்படுகின்றன. கடலை எண்ணெய் பயன்படுத்தினால் அளவிற்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உண்டாகின்றது என்பதால் தற்காலத்தில் கடலை எண்ணெயை பலர் தவிர்க்கின்றனர்.
    உடம்பு மெலிதாக இருப்பவர்கள் தினம் சிறிது அளவு நிலக்கடலை பருப்பை சாப்பிடலாம். நிலக்கடலை சாப்பிடும்போது நிறைய உலர்ந்த முற்றிய கடலையை சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் எண்ணெய் சத்து முதிர்ந்த கடலையில் அதிகம் இருப்பதால் அது வாந்தியையும் உண்டு பண்ணிவிடக் கூடும். நிலக்கடலையிலிருந்து பால் எடுத்து பயன்படுத்தலாம்.
    கெட்டுப் போகாத சோடையில்லாத நல்ல நிலக்கடலை பருப்பில் நூறு கிராம் எடுத்து ஒரு சல்லடை தட்டில் பரப்பவும். அதன்மீது சுத்தம் செய்யப்பட்ட மணலைப் பரப்பி தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் தட்டில் நிற்காமலும் மண் காயாமலும் ஒரு நாள் முழுவதும் காற்று வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் நிலக்கடலை முளைத்து விடும். பொதுவாக முளைத்த தானியங்கள், பயிறுகள், முளைக்காதவைகளை விட ஏழு மடங்கு சத்துக்கள் உடையவை. ஒரு சில சத்துக்கள் மட்டும் 23 மடங்கிற்கு மேல் உயருகின்றன. காற்றிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் மண்ணின் உதவியுடன் இந்த சத்துக்கள் முளைவிட்ட பயறுகளுக்கு வந்து சேருகின்றன.
    நூறு கிராம் எடையுள்ள பருப்பு தண்ணீரிலும், மணலிலும் நனைந்தவுடன் முந்நூறு கிராம் அளவிற்கு எடை அதிகரித்து விடும். இதிலிருந்து பால் எடுத்து உணவுக்காகப் பயன்படுத்தலாம். நிலக்கடலை சாப்பிட்டவுடன் சிறிது அச்சு வெல்லமோ, சர்க்கரையோ சாப்பிட வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. ஏனெனில் சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டவுடன் தொண்டை கரகரப்பு ஏற்படலாம். அதற்குத்தான் நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு நிறைய பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...