Jul 18, 2012

மருந்தாகும் மூலிகைகள்

அந்த காலத்திலெல்லாம் இவ்வளவு பிணிகளும் இல்லை; மருத்துவ மனைகளும் இல்லை. மூலிகை நாட்டு மருந்துகளின் மூலமாகவே மக்கள் நிவாரணம் பெற்றனர். பெரிய நோய்களைத் தவிர அன்றாடம் வாழ்வில் சாதாரணமாக ஏற்படும் உடல் சீர்கேடுகளை வீட்டில் செய்யப்படும் கை வைத்தியத்தின் வாயிலாக போக்கிக் கொண்டனர். எல்லாமே இயற்கையாக இருந்ததால் நோய்களும் குறைவாகவே வந்தது. நாமோ அவற்றின் மகிமைகளை மறந்துவிட்டோம். இத்தகைய சூழலில் மக்கள் நல்வாழ்க்கையை பெற மூலிகைகளே துணை என்னும் நோக்கில்

மருத்துவ பயன் நிறைந்த இஞ்சி


உணவுகளில் சிலர் இஞ்சி உபயோகிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் பயன் பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் பயன் பற்றி பாட்டிகளை கேட்டால் அதன் மருத்துவ குணம் பற்றி சொல்லுவார்கள்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை

ஆரோக்கிய வாழ்வு தரும் மிளகு



இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோய்யும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.

மிளகு  சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம்

Jul 17, 2012

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்



உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருபவர்கள் ஏராளம்.ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன. ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்



உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட.
இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்




பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும்.

Jul 15, 2012

நீரிழிவிற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயை தடுப்பது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு

சிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்



ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று

நீரிழிவுக்காரர்களுக்கு ஆலோசனை


சர்க்கரை நோய் இன்று உலகை ஆட்டிபடைத்து கொண்டு மக்களின் இன்பத்தை குலைத்து வருகிறது.. வராமல் தடுப்பது எப்படி? மேலும் வந்தபின் நம்மை எப்படி கட்டுபாட்டுடன் வைத்துக்கொள்வது எப்படி?

சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு, கொழுப்பு, சத்துள்ள பண்டங்களை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது உடனே ஆறாது. அதனால் கை மற்றும் கால்களை காயம் படாமல் மேலும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நார்சத்து மிகுதியான உணவுகளில் ஒன்று அரிசி உணவுகள், அதனால் அரிசி வகை உணவை குறைத்து கோதுமை, ராகி போன்ற நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும்.

சர்க்கரை நோய் அதிகமானால் முதலில் பாதிக்கபடுவது கண்கள் அதை தொடர்ந்து கிட்னி, இதயம், பலவீனப்படும். இதை அடுத்து கை கால்கள் தோல்

Jul 14, 2012

திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)

Photo: திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)
(முன்னாள் யாழ். அபிவிருத்தி சபை உப அலுவலக அல்லைப்பிட்டி ஆசிரியர்)
அன்னை மடியில் : 6 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2012
 

மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்கள் 13-07-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

உமாபதிசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷன், கிருஷிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திராவதி(இலங்கை), சந்திரா(பிரான்ஸ்), தங்கநாயகி(இலங்கை), வேலும்மயிலும்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம், கணேசமணி, செவ்வேன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கனகரெத்தினம்(இலங்கை), ஸ்ரனிஸ்லொஸ்(பிரான்ஸ்), சாந்தலிங்கம்(இலங்கை),  லெட்சுமி(பிரான்ஸ்), மகாலிங்கசிவம்(சுவிஸ்), றஞ்சினி(கனடா), சுகநாதசிவம்(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), சோதிசிவம்(டென்மார்க்), பொற்கிளி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகநாயகி, திவ்வியராணி, தனேஸ்வரி ஆகியோரின் சகலியும்,

கோகிலன், குபேரன், கோமகன், தர்ஷன், தர்ஷிகா, தனுஷா, சன்ஜீவன், ஜதீஷா, பார்த்தீபன், ரிஷாயினி, விதுரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனிஸ்ரா, துளசிகா, அனுசிகா, சாரங்கன், சித்திராங்கன், நிருத்திகா, கோபிலக்ஷன், வதனலக்ஷன், மிதுஷன், விதுரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்த்தீபன் அவர்களின் சிறிய தாயும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி(சின்னக்கிளி)
(முன்னாள் யாழ். அபிவிருத்தி சபை உப அலுவலக அல்லைப்பிட்டி ஆசிரியர்)
அன்னை மடியில் : 6 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 13 யூலை 2012


மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடம
ாகவும் கொண்ட உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்கள் 13-07-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஏரம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் பாசமிகு

Jul 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

Friday, July 13, 2012



கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...