Jul 19, 2012

கேரளா என்றாலே பசுமை போர்த்திய மலைப் பிரதேசங்களுடன் நேந்திரம்  சிப்ஸ் உள்ளிட்ட ஸ்பெஷல் உணவுகளும் கண்முன்னே வந்து நிற்கும். அந்த அளவுக்கு உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது கேரளா. அவற்றிலிருந்து 30 அயிட்டங் களை 'கேரளா சமையல்’ என இந்த இணைப்பிதழில் செய்து காட்டி அசத்து கிறார், சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
 ''அடைப் பிரதமன், ஓலன், எரிசேரி, உண்ணியப்பம், நேந்திரம் பழ சாண்ட்விச் என்று வரிசை கட்டி நிற்கும் இந்த ரெசிபிகள் வழக்கமான சமையலில் இருந்து ஒரு 'சேஞ்ச்’ தருவதுடன், 'சமையல் ஸ்டார்’ என்ற பெருமையையும் உங்களுக்குப் பெற்றுத் தரும்'' என்று என்கரேஜ் செய்யும் தீபாவின் ரெசிபி களை... கலை நயம் மிளிர

கிராம்பு

மருத்துவ குணங்கள்

    பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
    வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
    உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.
    antioxident,
    இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.
    வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.
    உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும்,

இதயநோயை குணமாக்கும் பிரண்டை!


இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும்.

Jul 18, 2012

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள் --வீட்டுக்குறிப்புக்கள்


  1. சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும். 
  1. ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
  1. அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.    
  1. அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். 
  1. அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம். 
  1. காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா


தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால்

பலம் தரும் பால் பொருட்கள்


நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா


''கொஞ்சம் அந்த சென்ட் பாக்டரியை மூடறியா?'' - நண்பர்களுக்குள் சகஜமான  'மூக்குப்பிடி’ வசனம் இது. கூட்டம் நிறைந்த பஸ் பயணத்தின்போதோ, கோடைக் காலத்தில் அலுவலகத்திலோ சிலர் கையை உயர்த்தினாலே, வியர்வை நாற்றம் முகம் சுளிக்கவைக்கும்.
 அக்குள் பகுதியில் நாற்றம் வீசுவதற்கு முக்கியமான காரணம் வியர்வை. உடலில் சரியான காற்றோட்டம் கிடைக்காத பகுதிகளில் அதிகமாக வியர்வை தோன்றும். அப்படிப்பட்ட பகுதிதான் அக்குள். ஆனால், உண்மையில் வியர்வை என்பது நமக்கு நன்மை செய்வதுதான். தாங்க முடியாத வெயில், கடுமையான உடற்பயிற்சி, டென்ஷன் என்று எப்போதெல்லாம் நமது உடம்பு உஷ்ணம் ஆகிறதோ... அப்போதெல்லாம், 'கூல்... கூல்’ என்று சொல்லாமல் சொல்லி நமது உடம்பைக் குளிர்விக்க உதவி செய்வதுதான் வியர்வை. ஆனாலும், அக்குளில் சுரக்கும் வியர்வை சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.
அக்குள் தூய்மைகுறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணரான எஸ்.சுகந்தன் விரிவாகப் பேசினார்.
''வயது வந்த அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்னைதான் இது. பொதுவாக, வியர்வைக்கு - அது எங்கிருந்து சுரந்தாலும் - இயற்கையில் மணம் கிடையாது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசையிலும் வியர்வையிலும் வளரும் பாக்டீரியாக்களே வியர்வைக்கு நாற்றத்தைக் கொடுக்கின்றன'' என்று விளக்கம் கொடுத்த டாக்டர் சுகந்தன் தொடர்ந்து நமது சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.
'அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?'

'ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''
''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''

''அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''

''லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''
''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''

''பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''
''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''

''கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''
 முடி மற்றும் தோல் பராமரிப்பு அழகியல் நிபுணரான  எம்.ஹஸீனா சையத் அக்குள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
''ஈரத்தை உறிஞ்சக்கூடிய பருத்தி இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம்.
இரவு உறங்கச் செல்லும் முன் அக்குளை நன்கு கழுவிச் சுத்தமாக ஈரம் போகத் துடைப்பது முக்கியம்.
உணவுக்கும் வியர்வை வாடைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உதாரணமாக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலாக்கள் நிரம்பிய உணவு வகைகளை அதிகமாக வியர்க்கும் காலத்தில் தவிர்க்கலாம்.
தினசரி இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். காக்கைக் குளியல் உதவாது. அக்குளுக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கழுவி சுத்தமான துண்டுகொண்டு நன்கு துடைக்க வேண்டும். குளித்த பிறகு அக்குளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு டியோடரன்டுகள், பேபி பவுடர்

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?


நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

இதயத்தை காக்கும் மூலிகை!--இய‌ற்கை வைத்தியம்

மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கதனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படுமசெம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...