Jul 23, 2012

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை



நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.

 தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?


படம் 1
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின்
காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.


படம் 2
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.

தொண்டைக்கட்டு, எரிச்சல்


நம் முன்னோர்கள் சளி, ஜுரம், தலைவலி போன்றவை தம்மை அணுகாமல் ஆரோக்கியமாக உடலையும், மனதையும் காக்கும் வழி முறைகளை அறிந்திருந்தனர். உடலுழைப்பின் சிறப்பை செவ்வனே அறிந்திருந்த அவர்கள் நவீன உலகில் நாம் சந்திக்கும் அனேக பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அறிந்திருக்கவில்லை. சமையலறையில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுடன், கடைகளில் எளிதாகக் கிடைக்கும் ஆயுர்வேத மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டு மருத்துவரிடம் செல்வதை கூடுமானவரையில் தவிர்த்து வந்தனர். அவற்றில் அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் என்று நினைத்து சில குறிப்புகளை எழுதுகிறேன்.

கண்டந்திப்பிலி பொடிகண்டந்திப்பிலி எனப்படும் இக்குச்சிகள் ' தாசவரம் குச்சிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இதை வாங்கி வறுத்து சுடு சாதத்துடன் நெய் விட்டு உண்ண குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டைக்கட்டு, எரிச்சல் முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். .


தேவையான பொருட்கள்:கண்டந்திப்பிலி குச்சிகள் - 25 gms,பெருங்காயம் - சிறிது, சிகப்பு மிளகாய் - ஐந்து,சுவைக்கேற்ப - சிறிது புளி, உப்பு .செய்முறை:எண்ணெய் விடாது எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொண்டு ஒன்றாக இடித்துக் கொண்டு சலித்து உபயோகிக்கவும்.


சுக்குத்தண்ணீர்இரண்டு பெரிய துண்டு சுக்குடன் இரண்டு ஏலக்காய் முதலியவற்றை நசுக்கிக் கொண்டு ஒரு தேக்கரண்டி ஜீரகம் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து முக்கால் கப்பாக நீர் குறைந்தவுடன் பனை வெல்லம் அல்லது வெல்லம் சேர்த்துக் குடித்தால் அஜீரணம், பசியின்மை, உடல் வலி நீங்கும்

Compliant Control - Pole / Arm Climb

Jul 22, 2012

ஒரே சீனில் 40 முறை நடித்த நடிகை



kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம். இது பற்றி அவர் கூறியதாவது: வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.

தமிழுக்கு வரும் ஜான் ஸினா?

 
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில்

Jul 21, 2012

இன்றைய சிந்தனை


பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர்

பட்டுப்போன்ற கூந்தல் தரும் செம்பருத்தி--அழகு குறிப்புகள்


செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
 
உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி

சப்போட்டா பழ அழகு குறிப்புகள்


நமது சருமத்தை மிருதுவாக்கி, முகத்திற்கு அழகு கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு குறிப்புகளை பார்க்கலாம்..
 
• ஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால்

தைராய்டு தொல்லைக்கு தீர்வு


எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன உணவு மருத்துவம்--உணவே மருந்து


நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சோரியாசிஸ் குணமாகும்!

சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்---உணவே மருந்து,


நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
இன்று உடல் நலனுக்கு நலம் பயக்கும் எண்ணெயாக கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் முதலிய எண்ணெய் வகைகள் பயன்படுகின்றன. இப்போதெல்லாம் இதய நோய் அதிகரித்து வருவதால், எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இந்த மூன்றிலும் சிறந்தது நல்லெண்ணெய்யே. அடுத்து சஃபோலா, மூன்றாவதாக சூரியகாந்தி.
சூரியகாந்தியில் 65%ம், நல்லெண்ணெயில் 85%ம் நன்மை தரும் அமிலங்கள் உள்ளன. இன்றும் கூடக் காயகல்ப மருந்தில் முக்கியமாக நல்லெண்ணெய்தான்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...