Aug 16, 2012

முகத்தின் அழகை கெடுக்கும் பருக்கள் நீங்க


முகத்தின் அழகை கெடுக்கும் பருக்கள் நீங்க
***************************************
அழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுக்கள் இருந்தாலே கவலை சூழ்ந்து கொள்ளும்.

இதனுடன் பரு, வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர்.

இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி.

பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எழுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிர வைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்த நாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.

எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள். மல்லி மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்திற்கு இரண்டுமுறை இவ்வாறு செய்தால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

அதேபோல் சந்தனப் பவுடருடன் கருப்பு உளுந்து பவுடரை கலந்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை இரவில் உறங்கும் போது அப்ளை செய்துவிட்டு மறுநாள் காலையில் கழுவலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

துளசி இலையை எடுத்து, நன்கு காய வைத்து பொடி செய்து, அதில் மஞ்சள் தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய் விடும்.

வெந்தய கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.

சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பாலித்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

அழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுக்கள் இருந்தாலே கவலை சூழ்ந்து கொள்ளும்.

இதனுடன் பரு, வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர்.



இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்



தாக்குதல் வதந்தி- பெங்களூரை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவர்
,Bangalore is safe, Govt assures students from North-East தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிளம்பிய பீதி காரணமாக, பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

அ முதல் ஃ வரை...டிரைவிங் லைசென்ஸ்---உபயோகமான தகவல்கள்,

அ முதல் ஃ வரை... லைசென்ஸ்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து பயந்து ஓட்டினார்கள்!

இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, லைசென்ஸ§க்கே விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று தவறான நினைப்பில் இருப்பவர்களும் நிறைய!

‘லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பல விதங்களில் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்’ என்கிறார், சென்னை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

லைசென்ஸ் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார் இங்கே...

பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?

உங்களுக்குப் பதினாறு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். பதினெட்டு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள்(வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

1. முகவரி ஆதாரம் (உ&ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).

2. வயது ஆதாரம் (உ&ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் & 1 (இந்தப் படிவத்தில் ‘அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, ‘நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்), மற்றும் படிவம் & 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.).

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, ரூ.30/& செலுத்தி பழகுநர் உரிமம் (LLR) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம்(Driving licence) லிவீநீமீஸீநீமீ) பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க வேண்டும்).

மேலும், இத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 1. பழகுநர் உரிமம், 2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ்), 3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம், 4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

இவற்றுடன் உரிமம் வழங்க ரூ. 200&ம் தேர்வுக் கட்டணமாக ரூ.50&ம் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பரீட்சை நடைபெறுகிறது?

வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால் ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?

உதாரணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போகிறீர்கள் என்றால், திருச்சியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேராகச் சென்று பழைய உரிமத்தைக் கொடுத்துவிட்டு புதிய விலாசம் கொண்ட உரிமத்தை வாங்க முடியாது.

விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்.

உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச் சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.

உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?

இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.

உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.

அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?

கூடாது. ஏனென்றால், தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்துபோனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு ‘நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து

பெண்களுக்கான சொத்துரிமை.... சட்டம் என்ன சொல்கிறது?--உங்களுக்கு உதவும் சட்டங்கள்



நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை.

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

ஒருநாள் வலியை பொறுக்கலாம்... வாழ்நாள் வலியை தவிர்க்கலாம்


சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !


'சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளைவிட, இப்போது சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது!’
- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?’ என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!
''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,

இயற்கை அழகு குறிப்புகள்


* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்
 
* முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்
 
* கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணமல் போகும்.

நாற்பதிலும் நலம்!



நாற்பதிலும் நலம்!

நாற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைசிஸ்’ என்று பல அடைமொழிகளைக் கொடுத்து வர்ணிக்கிறது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல திருப்புமுனைகள் நடக்கின்றன. குடும்பப் பொறுப்புகள், வாழ்வியல் எதிர்பார்ப்புகள், அத்தியாவசியத் தேவைகள் என எல்லாமும் சேர்ந்து அழுத்தும். உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படும்.

பெரும்பாலும் இந்த வயதை ஒருவர் கடக்கும்போதுதான், வயதான அவரது அப்பாவும் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள். இந்தக் காலத்தில்தான் ஒருவருக்கு குடும்பம், வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பதின்பருவத்தின் உச்சத்தில் இருப்பார்கள்.

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்! ---இய‌ற்கை வைத்தியம்





'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.
விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.

பாதுகாக்க 10 வழிகள்: கண்


கண்டதிப்பிலி ரசம் சளி,இருமலுக்கு—எங்க வீட்டு டயட்


Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...