Sep 27, 2012

ஸ்டீவியோ சைட்
நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்!
தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடிசைட்' சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. ஸ்டீவியா கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மையை கொண்டிருந்தாலும் மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு

சிறு குறிஞ்சா எனும் சக்கரைக்கொல்லி


சிறு குறிஞ்சா எனும் சக்கரைக்கொல்லி
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்” எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்” ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக” உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் சுரோணிதம் / எனப்படும் ஆண்

கருவேப்பிலை


கருவேப்பிலை

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும். இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும், மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின் வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே கூறலாம்.

தூதுவளை

தூதுவளை
சோமாசி  மாறர் எனும் நாயன்மார்களில் ஒருவர் அவர் தான் ச ெய்யும் யாகத்திற்கு சிவனையே அழைக்க தீர்மானித்தார் .சிபாரிசு செய்ய அவர் தோழரான  சுந்தரரை நாட தீர்மானித்தார் .அனால் சுந்தரரை இவருக்கு தெரியாது ,எனவே சுந்தரர் வீட்டில் தினமும் தூது வளை கீரை கொடுத்து நண்பரானார். எனவே தூது போய் நண்பரை வளைத்ததால் தூது வளை என்பெயர் வந்ததாம் .இது கதைதான் .
ஆதிமுதல் இதே பெயர் இருந்துள்ளது. வள்ளலார் இதை மிக சிறப்பாக

குப்பை மேனி

குப்பை மேனி

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது
போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.

தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில்  பொதுவாக இந்தியாவில் எங்கும்
நெல்லிக் காய்
தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான் ,தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ?
நெல்லி ஒரு காயகல்ப்ப மூலிகை. அதன் காய் ஒரு காயகல்ப்பம் ,சந்தேகமே

வல்லாரை


செயலில் "வல்லாரை
அறிவில் "வல்லாரை
ஆற்றலில் "வல்லாரை
அதுவே மூலிகையில்
ஒரு "வல்லாரை
"வல்லார உண்டோரிடம் மல்லாடாதே'  என்பது பழமொழி.
சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகை .

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும்.
கீழாநெல்லி - கீழ்காய் நெல்லி
தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி  என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் .
ஆனால் அணுபான  முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி  மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க்

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி
வீடுகளில்  அழகுக்காக வளர்க்கப்படும்  மணி பிளானட்  போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .  சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே

இது  தேரையர் குணபாடம் கூறுவது.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும்.

இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.  இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.
இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக்  காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .
பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு

(அகத்தியர் குணபாடம்)

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

தாவர  பெயர்   Coleus Aromaticus.
வேறு பெயர்  ஓம வள்ளி

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும்  நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.
இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர்.  வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.
இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட, கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.

நோய் தீர்க்கும் மருந்தாக மூலிகைகளும் மரக்கறி வகையும்


நம்உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம்

Sep 26, 2012

உலகில் பரவும் ஆபத்தான புதிய வைரஸ் நோய் - ஐ.நா எச்சரிக்கை!
[Wednesday, 2012-09-26
சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபி யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வைரசை இங்கிலாந்து சுகாதார மையம் ஆய்வு செய்தது. இதுவரை மனிதனை தாக்காத புதிய வகை வைரஸ் என்று சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது.இந்த வைரஸ் மேலும் பரவினால் பெரும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதார மையம் கூறுகிறது. இதையடுத்து உலக சுகாதா நிறுவனம் உலகம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரசை அழிக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...