Nov 17, 2012

காசாவில் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்குவோம்: இஸ்ரேல்

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 11:48 ஜிஎம்டி

நான்காவது நாளாக வான் தாக்குதல்கள் நீடிக்கின்றன
மத்தியகிழக்கின் காசாவில் ஹமாஸையும் அதன் ஆயுததாரிகளையும் இலக்குவைத்து நான்கு நாட்களாக தொடர்ந்து குண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் தாங்கள் மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கவேண்டியிருப்பதாகக்

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலிகாசா, நவ. 17-

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை ஆளுவதில் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கி இப்போது ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இன்று பாலஸ்தீன ஹமாஸ் அரசுத் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் முக்கியப் பகுதிகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. கடந்த புதன் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் சினிமாவை போன்ற இந்த விமானத் தாக்குதலுக்கு இதுவரை 40 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க எகிப்து மற்றும் இத்தாலி முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொலஸ்டிரால் பிரச்சனைக்கு இயற்கை மருந்து சப்போட்டா பழம்

News Serviceஉடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம். சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.
   100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால்

உடல் சூட்டை தணிக்கும் விளக்கெண்ணெய் பல்வேறு நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது


News Service கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.   
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.
ஆமணக்கு வேலி
மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய்,

பூமியைப் போல் தண்ணீர் உடைய, உயிரினங்கள் வசிக்கத் தக்க Super earth எனும் புதிய கிரகம் வானியலாளர்களால் கண்டுபிடிப்பு



News Service பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது அத்திப்பழம்



News Service அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.
  
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன. அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான்.
பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட்

தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் பெற சீரகம் சிறந்த மருந்து

தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் பெற சீரகம் சிறந்த மருந்து

News Service சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
  
மந்தத்தைப் போக்கும். நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல

குளிர் காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பை நீக்க சில வழிகள்..

குளிர் காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பை நீக்க சில வழிகள்..

News Service பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும்.
  
அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அவை..
* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.
* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல்

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..

News Service நிறைய மக்கள் அதிகம் நடப்பதற்கு உடல் எடையை குறைப்பதற்கு இல்லாமல், உடல் எடையை கட்டுப்பட்டுவதற்குத் தான். ஆகவே உடல் எடை அதிகரித்து அசிங்கமான தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள். உடல் எடை எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
  
ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர் நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அந்த நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால், எந்த பயனும் இல்லை. ஆனால் அதையே நன்கு சுறுசுறுப்போடு, தினமும் அரை மணிநேரம் செய்தால் உடலில் இருந்து 150 கலோரிகள் கரையும். அதிலும்

முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருவளையத்தை நீக்க இலகு வழி

முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருவளையத்தை நீக்க இலகு வழி

News Service இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.
  
மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி வாய்ந்தது மிளகு

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி வாய்ந்தது மிளகு

News Service சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
  
இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...