Jan 25, 2013

250 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிநவீன 'சூப்பர் பஸ்'



250 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் உலகின் அதிநவீன 'சூப்பர் பஸ்'
ஹாலந்து நாட்டை சேர்ந்த வின்வெளி வீரரும், முன்னாள் பார்முலா-ஒன் காற்றியக்கவியல் வீரருமான அண்டோனியா டெர்சி உலகின் அதிநவீன 'சூப்பர் பஸ்' ஒன்றினை வடிவமைத்துள்ளார். சொகுசு விமானத்திற்கு இணையாக காட்சியளிக்கும் இந்த சூப்பர் பஸ், 49 அடி நீளமும், 8 அடி அகலமும், 5 1/2 அடி உயரமும் உடையதாகும்.

23 பேர் அமர்ந்து பயணம் செய்யத்தக்க வகையில் உள்ள இந்த சூப்பர் பஸ்சில், அதிகபட்சமாக 250 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல்மிக்க என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

முற்றிலுமாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த சூப்பர் பஸ்சை துபாயில் வசிக்கும் செல்வந்தர் ஒருவர் வாங்கியுள்ளார். இதன் விலை 7 மில்லியன் பவுன்டுகள் என தெரிகின்றது.

கொலஸ்ட்ரால்(Cholestrol) என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்


கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?


LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)

கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.

  • Total Cholesterol <—>200 mgm%  மொத்த கொலஸ்ட்டிரால்
  • LDL Cholesterol <—>100 mgm%  குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • VLDLCholesterol <—>30 mgm% மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்
  • Triglycerides <130 font="" mgm="">
  • HDLP Cholesterol <50 font="" mgm="">

மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.



கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

  • எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.
  • ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.
  • இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.
  • கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.
  • பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
  • ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.
  • இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.
  • அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.
  • ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.

ஒமேகா 3 உள்ள உணவுகள்

  • மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்
  • ஒமேகா 6 உள்ள உணவுகள்
  • சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.

எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.

கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


  • · சீரான உடற்பயிற்சி
  • · உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.
  • · புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.
  • · மது அருந்துவதைத் தவிர்ப்பது
  • ·அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.
  • · அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.
  • · பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .
  • · யோகாசன பயிற்சி செய்வது,
  • · தியானப் பயிற்சி செய்வது .

சுகர் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - நீங்களே அறிந்து கொள்ள!



இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சுகர் (Sugar), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:


சுகர் (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml) வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110  ---நன்றாகவே இருக்கிறது

111 லிருந்து  125   ---சுமார் ரகம்தான்

125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

Post Prandial (PP) உணவுக்கு 2 மணி நேரத்திற்குப் பின்:

120 லிருந்து 140  ---நன்றாகவே இருக்கிறது

141 லிருந்து  200   ---சுமார் ரகம்தான்

200  க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 ---நன்றாகவே இருக்கிறது

140/90 ---சுமார் ரகம்தான்

அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கொலஸ்ட்ரால் (Cholesterol):

Cholesterol mg/100ml:

200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது

200லிருந்து  240   ---சுமார் ரகம்தான்

240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நல்ல கொலஸ்ட்ரால்:

(HDL) mg/100ml):

45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது

35லிருந்து  45   ---சுமார் ரகம்தான்

35க்குகுறைவு  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது

100லிருந்து  129   ---சுமார் ரகம்தான்

130க்குமேல்  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நன்றி: Management of Diabetes Mellitus.

மிளகு - ஒரு முழுமையான மருந்து!

மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு,புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன்,பெருபிரைன்,பிபிரோனால்,கேம்ஃபினி,அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறு

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் எழுத்து வகைககள் (Fonts)




சிலருக்கு விதவிதமான Fonts -ஐ தன்னுடைய கம்பியூட்டரில் வைத்திருப்பது ரொம்ப பிடிக்கும். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான Fonts  வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.



1.http://www.fawnt.com/ : டிசைனர்கள், டெவலப்பர்கள், இணைய தள வடிவமைப்பாளர்களின் கற்பனைக்குத் தீனி போடும் வகையில் இங்கு பாண்ட் வகைகள் கிடைக்கின்றன.விண்டோஸ் சிஸ்டம் மற்றுமின்றி மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் எழுத்து வகைகள் கிடைக்கின்றன. 9,348 எழுத்துவகைகள் இலவசமாய் இங்கு உள்ளன.

2. http://www.abstractfonts.com/: இங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.

3. http://freefonts.co.in/: விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.

4. http://www.dafont.com/: பத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.

5. http://www.urbanfonts.com/:: அகரவரிசைப்படி அடுக்கப்பட்ட வகையிலும் இதில் எழுத்து வகைகள் உள்ளன. 8,000க்கும் மேற்பட்ட வகைகள் கிடைக்கின்றன.

6. http://www.dailyfreefonts.com : இங்கு 4,500 வகை களுக்கும் மேலாக எழுத்துவகைகள் கிடைக்கின்றன. இவற்றை எதற்காக, என்ன காரணங்களுக்காக, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைகளும் தரப்பட்டுள்ளன.

7. http://simplythebest.net/fonts/: ஆயிரக்கணக்கில் எழுத்து வகைகள் இருந்தாலும், எவை எவை இலவசம் என்று காட்டப்பட்டுள்ளது. மற்றவற்றிற்கான வரையறைகள் தரப்பட்டுள்ளன.

8. http://www.freefonts.com/: எழுத்து வகைகளுக்கான சர்ச் இஞ்சின் போல இது செயல்படுகிறது. 55,000 எழுத்து வகைகளுக்கு மேல் இதில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் பெயர்கள் தரப்படவில்லை. எந்த பாண்ட் நமக்குத் தேவைப்படுகிறதோ, அவற்றின் பெயரை நினைவில் கொண்டு நாம் தேட வேண்டும்.

மேலே கூறப்பட்ட தளங்களில் இருந்து பாண்ட் பைல்களை டவுண்லோட் செய்த பின் என்ன செய்திட வேண்டும்? அவை ஸிப் பைலா இருந்தால், அவற்றை அன்ஸிப் செய்து பாண்ட் பைலாக மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் சிஸ்டம் விஸ்டா எனில் அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Install" என்பதில் அழுத்தவும். பாண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

எக்ஸ் பி சிஸ்டம் என்றால், பாண்ட் பைலை, விண்டோஸ் டைரக்டரியில் உள்ள பாண்ட்ஸ் என்னும் போல்டரில் காப்பி செய்துவிடவும். மேக் சிஸ்டம் எனில் பாண்ட் பைலில் டபுள் கிளிக் செய்திடவும். பின் "Install font" என்னும் பட்டனை அழுத்தவும்.


நன்றி: தகவல் தொழில்நுட்பம் - வலைத்தளம்

இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு.

இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.
இந்திய தேசப்படம்
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாச்சல் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பிஹார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஒரிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தரகண்ட்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டிகர்
  3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. லட்சத்தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி

இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்


இந்தியா டுடே இந்தியாவில் வெளிவரும் ஒரு முக்கிய இதழ் ஆகும். இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 23 தேதியிட்ட இதழ் ஒரு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அந்த இதழில் இந்திய நாட்டின் 60 சிறப்புமிக்கவர்களைக் குறித்தக் கட்டுரைகள் வெளிவந்தன.[1] இந்தச் சிறப்பிதழுக்காக இணையம், குறுஞ்செய்தி ஊடகங்கள் வழியே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பெறப்பட்ட 18928 வாக்குகளில் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி ஆகியோருக்கு முறையே 37%, 27%%, 13% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவு செய்திருந்தனர் என்பதும், மகாத்மா காந்தி அறப்போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. மேலும், 60 பேரில் பத்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.[2]

ஆண்களின் இதயத்துக்கு ஆபத்து!



வயதானவர்களைத் தாக்கும் நோய்களின்  பட்டியலில் முதலிடத்தில் இருந்த மாரடைப்பு, இன்று  இளவயதுக்காரர்களிடம் இடம் பெயர்ந்திருக்கிறது. அதிலும் ஆண்களே அதிகம். ‘ஆம்பிளைங்களுக்கென்ன... பிரச்னையா? கவலையா? வீட்டை விட்டு வெளியேறிட்டா, அவங்க உலகமே வேற... ஃபிரெண்ட்ஸ், ஊர் சுத்தல்னு பிரச்னைகளை மறக்க அவங்களுக்கு ஆயிரம் வழி...’ என்பது பொதுவான கருத்து! உண்மை நிலவரமோ வேறு... வேலையிடத்துப் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாகவும், இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும்

பூமி மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது: அதிர்ச்சி தகவல் வெளியானது - NASA

நாம் வாழும் பூமியின் பெரும் பகுதி சுருங்கி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம் ஆண்டு விண்ணில்
ஏவப்பட்டது.

கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.

மேலும் இரண்டரை மில்லியன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள நிலபரப்பின் நிலை குறித்த

மாடர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிகளை விட வீக் ஆனவர்களாம்




மாட்ர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிமார்களை விட வலுவில்லாமல் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தற்போதைய தலைமுறையினா் அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலுவின்றி உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள தற்போதைய தலைமுறையினருக்கு அவர்களின் மூதாதையர்களுடன் ஒப்பிடுகையில் உடல் வலு குறைவாகவே உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பெண்களின் உடல் வலு குறைந்துள்ளதாம்.

லண்டனைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்மி மார்கோ கூறுகையில், தசை சத்தே இல்லாமல் வீக்காக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை

இதயம் துடிக்கவும் மின்சாரம்.




தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்'.
மின் விநியோகம் சரியா இருக்கா?

‘சைனஸ் நோட்' பகுதியில் இருந்து இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...