Mar 2, 2013

பல நோய்களுக்கு மருந்தாகும் கிரீன் டீ!


Green Tea


  • 0
     

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.
கிரீன் டீயின் நன்மைகள்……..
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

Mar 1, 2013

லெமூரியா கண்டம் உண்மையா?

லெமூரியா கண்டம் உண்மையா?


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013


இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா

::. பட்டமளிப்பு விழாவின் பகிடிகளுடன் கூடிய புகைப்படங்கள் (Photos) .:: newJaffna.com

::. பட்டமளிப்பு விழாவின் பகிடிகளுடன் கூடிய புகைப்படங்கள் (Photos) .:: newJaffna.com

விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!




  • 0
     

drinking_the_poisonஎலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என்று விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும்.
விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.
விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.
வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால் அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.
மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்

விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!





  • 0
     
drinking_the_poisonஎலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என்று விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும்.
விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.
விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.
வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால் அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.
மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்.
- See more at: http://www.tamilcloud.com/2013/02/28/first-aid-for-poison-drinking#sthash.cPLWUuKL.dpuf

நீரிழிவு ,இதயநோய் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த பீர்!




  • 0
     

how-alcohol-travelsபீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பீரானது உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு மற்றும் இதயநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மது உடலுக்கு கேடு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பருகும் உற்சாக பானமான பீர் உடல் எடையை குறைப்பதோடு நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறதாம்.ரத்த அழுத்தம் இல்லை
ஸ்பானிஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 57 வயதிற்கு மேற்பட்ட 1249 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் தினமும் மிதமான அளவு பீர் உட்கொண்டவர்கள் உடல் எடை குறைவாகவும்இ குண்டாகமலும் இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்களுக்கு சர்க்கரை நோய்இ ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் தாக்கப்படாமல் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.உடல் எடை குறைகிறது
20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் மிதமாக பீர் குடித்த பெண்களின் உடலில் கொழுப்பு சேராமல் உடல் பிட்டாக இருந்தது தெரியவந்தது.குண்டாக இருந்த பெண்கள் பீர் குடித்த பின்னர் உடல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதயநோய் பாதிப்பு
அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஒயின் மற்றும் பீர் குடிக்கும் 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.அவர்களில் மிதமான அளவு பீர் குடித்து வருபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறைந்து இருந்தது.அதாவது 31 சதவீதம் பேர் இருதய நேய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தனர்.
இதற்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் நோய் ஏற்படாததே காரணம் என கூறப்படுகிறது.அதிகம் குடித்தால் ஆபத்து.பீர் பானத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் அதை குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலை உடல் குறைந்த அளவில் மட்டும் எடுத்து கொள்கிறது.
இதனால் குறைந்த அளவில் பீர் குடித்தால் இருதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால் பாதிப்பு ஏற்படும் என மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.அதுக்காக பெரிய ‘பீர்பாலாகி’ விடாதீர்கள் தொப்பை எக்குத்தப்பாக வந்து விடும்

சூரியனில் ஏற்பட்ட நெருப்பு மழை – பூமிக்கும் ஆபத்தா? (Video)

fire_earthஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் Solar Dynamics Observatory எனும் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பிரிவானது சூரியனில் ஏற்பட்ட நெருப்பு மழையினை வீடியோவாக பதிவு செய்துள்ளது.
எனினும் இச்சூரிய மழையினால் பூமிக்கோ அல்லது ஏனைய கிரகங்களுக்கோ ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.

Feb 28, 2013

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்


வியாழன், 28 பிப்ரவரி 2013

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும்.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான 72 மாடி ஹோட்டல்

வியாழன், 28 பிப்ரவரி 2013

உலகின் மிக உயரமான 72 மாடி ஹோட்டல் கட்டிடம் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு ஹோட்டல், உலகின் மிக உயரமான ஹோட்டல் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

துபாய் நகரம் தனது சாதனை பட்டியலில், 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.

மொத்தம் 1608 அறைகளைக்கொண்ட இந்த ஹோடல்லில் மக்களின் வசதிக்காக அனைத்து அதிநவீன அம்சங்களும் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்






அருகம்புல் பவுடர் :
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் :
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

கடுக்காய் பவுடர் :
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் :
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்




அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம்




சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. 

லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

1. கீ போர்ட் ஷார்ட்கட் பயன்பாடு:

மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+1 தொடங்கி, கண்ட்ரோல் + 8 வரை அழுத்தினால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். 

இதன் செட்டிங்ஸ் மாற்ற ஆல்ட்+எப் அல்லது ஆல்ட் +இ (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம். 

Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.

Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.

Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது. 

Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது. தேடலுக்கான சொல்லை அமைத்து என்டர் தட்டினால் போதும். 

Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது. 

Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.

Ctrl+Sht+N இன் காக்னிடோ எனப்படும், செயல்பாடுகளைப் பின்தொடராத தனி நபர் பயன்பாட்டிற்கு வழி கிடைக்கிறது.

Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது. இப்படியே இறுதியாக மூடப்பட்ட பத்து டேப்களை, அவற்றில் இயங்கிய இணையதளங்களுடன் திறக்கலாம்.

இவை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள். இது போல இன்னும் நிறைய பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம். Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். 


2. செயல் தளங்கள் செல்ல குறுக்கு வழி:

குரோம் பிரவுசர் அட்ரஸ் பார் வழியாகவே, சில செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய தளங்களை நமக்குக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்லலாம். chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும். 

இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும். ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும். இந்தச் சொற்களை புக்மார்க் ஆக சேவ் செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்து பெறலாம்.


3. புதிய டேப் தரும் வசதிகள்:

குரோம் பிரவுசரில், புதிய டேப் மற்ற பிரவுசர்கள் தராத சில வசதிகளைக் கொண்டுள்ளது. புதிய டேப் பக்கத்தினை Ctrl+T அழுத்தியோ அல்லது குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடனேயோ பெறலாம். இங்கு நீங்கள் இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன்கள், அப்போது மூடப்பட்ட தளங்கள், வெப் ஸ்டோர் என அனைத்தும் காட்டப்படுகின்றன. இவற்றில் தேவை யானதைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம். 


4. பிரவுசருக்கான டாஸ்க் மானேஜர்:

விண்டோஸ் சிஸ்டத்திற்கு இருப்பதைப் போல, குரோம் பிரவுசர் தன் செயல் பாட்டினைக் கண்காணிக்க, தனியே ஒரு டாஸ்க் மானேஜரைக் கொண்டுள்ளது. இதனை, Shift+Esc கீகளை அழுத்திப் பெறலாம். 

இதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்படுகிறது, சி.பி.யு.நிலை, இணையத்திலிருந்து பெறப்பட்ட பைட்ஸ், அனுப்பப்பட்ட பைட்ஸ் அளவு, டேப்ஸ், அப்ளிகேஷன்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பிரவுசர் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகையில், சிக்கல் எங்கு என அறிந்து தீர்ப்பது எளிதாக இருக்கும். 


5. தடயம் அறியா இணைய உலா:

குரோம் பிரவுசர் இன் காக்னிடோ என்ற வகை பிரவுசிங் வசதியினைத் தருகிறது. இதனை இயக்கி, இணைய தளங்களைப் பார்வையிடுகையில், அவை குறித்த தகவல்களை குரோம் பிரவுசர் குறித்து வைக்காது. நாம் தேடும் தளங்களை, அதில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். Ctrl+Shift+N அழுத்தி இந்த வகை பிரவுசிங் செயல் பாட்டினை மேற்கொள்ளலாம். 


6. ஆம்னிபாக்ஸ் தேடல்:

குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரை, தேடல் கட்டமாகப் பயன்படுத்தி, நாம் இணையத் தேடலை மேற்கொள்ளலாம். இதனால், தேடல் வேகம் அதிகரிக்கிறது. தேடும்போது இந்தக் கட்டத்தினை ஆம்னிபாக்ஸ் (Omnibox) என குரோம் அழைக்கிறது.


7. டேப்களை மாற்றி அமைக்க:

குரோம் பிரவுசரின் டேப்கள் நிலையானது அல்ல. நம் வசதிப்படி அவற்றின் இடத்தை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் சில தின இதழ்களின் டேப்களை அடுத்தடுத்து அமைத்துப் பார்க்க விரும்பினால், அவற்றை இழுத்து வரிசையாக அமைத்துக் கொள்ளலாம். டேப்கள் அதிகம் இடம் எடுத்துக் கொள்ளாத வகையில் அட்ரஸ் பாருக்குக் கீழாக பின் அப் செய்தும் வைக்கலாம்.


8. தானாகத் தளங்கள் திறக்கப்பட:

குறிப்பிட்ட இணைய தளங்களை, பிரவுசர் திறந்தவுடன் திறந்து பயன்படுத்துபவரா நீங்கள்? அவ்வாறெனில், பிரவுசர் திறக்கும் போதே, இவையும் திறக்கும் வகையில் செட் செய்திடலாம். இதற்கு, Alt +F/Alt+E அழுத்தி செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். இங்குள்ள On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். 

அடுத்து Set Pages என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் இங்கு அமைத்திடும் தளங்கள் அனைத்தும், பிரவுசர் திறக்கப்படுகையில் திறக்கப்படும். அதேபோல, எந்த இணையதளம் பார்த்துக் கொண்டிருக்கையில், பிரவுசர் மூடப்பட்டதோ, அதே இணையதளத்துடன் மீண்டும் பிரவுசரைத் திறக்கும் வகையிலும் செட் செய்திடலாம். செட்டிங்ஸ் பிரிவில், Continue Where I Left Off என்பதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்தால் போதும். 



Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...