Mar 3, 2013

சருமம் பொலிவாக வேண்டுமா?


கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் தர்பூசணி. அதிலும் தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட, நிலையில் தர்பூசணியும் அதிகம் மார்கெட்டில் வந்துவிட்டது. எனவே இந்த சீசன் பழத்தை கிடைக்கும் போதே வாங்கி சாப்பிட்டு, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். 
 
ஏனெனில் இந்த காலத்தில் தான், இந்த பழம் மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இத்தகைய பழம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம். சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!! 
 
* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். 
 
* தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம். 
 
* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும். * இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம். 
 
* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும். இவையே தர்பூசணியின் சருமத்திற்கான நன்மைகள். எனவே இந்த பழத்தை அதிகம் வாங்கி சாப்பிட்டு, உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். 
 
ஆகவே சருமத்தை பொலிவோடு வைப்பதற்கு, தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பவர்கள், தர்பூசணியின் சாற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவ வேண்டும்.

வைரஸ் காய்ச்சலை குணமாக்குவது எப்படி?



 காய்ச்சல் என்பது உடலில் சத்துக்கள் குறைவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் ஏற்படும். இன்றைய காலக்கட்டத்தில் உணவிலும், நீரிலும், காற்றிலும், அனைத்திலும் கிருமி, பாக்டீரியா என்று பரவி காய்ச்சலை உண்டாக்குகிறது. ஸ்வைன் காய்ச்சல், சிக்கன் குனியா என்று புது புது காய்ச்சல்களை கேள்விப்பட்டு வருகிறோம். இத்தகைய காய்ச்சலுக்கு தேவை நல்ல ஓய்வு மற்றும் நீரேற்றம் மிக முக்கியம். மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் அவர் தரும் மருந்துகள் காய்ச்சலை குணப்படுத்த உதவும். 
 
முதியவர்களுக்கு அல்லது நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, இத்தகைய காய்ச்சல் மிகவும் ஆபத்தை உண்டாக்கும். அதனால் காய்ச்சலுக்கு நல்ல சிகிச்சை கொண்டு, அதைத் தடுக்க குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.

வீட்டு சிகிச்சை:
 
வீட்டிலேயே காய்ச்சலுக்கு நல்ல மருந்து நல்ல தூக்கத்தை மேற்கொள்வது தான். நன்கு தூங்கி ஓய்வெடுத்து, தெளிவான திரவங்களை குடிப்பது மற்றும் உடலுக்கு முடியாத கடுமையான வேலைகளை செய்யாமல் இருப்பது, சீக்கிரம் குணமடைய ஏதுவாயிருக்கும் . 
 
காபி அல்லது ஆல்கஹால் போன்ற எந்த உணவு பண்டங்களையும் எடுத்துகொள்ள வேண்டாம். அத்தகைய பானங்கள் உடலில் நீர் அகற்றலை ஏற்படுத்தும்.
 
 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை இழக்க நேரிடும். ஆகவே ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்து கொள்வதன் பொருட்டு நோயை எதிர்த்து போராட உதவும். குறிப்பாக தெளிவான சூப் குடிப்பது நல்லது. இது ஆரோக்கியமான ஊட்டச்சத்து மற்றும் நீறேற்றத்தை உண்டாக்க உதவுகிறது. 
 
காய்ச்சல் மருந்துகள்: 
 
காய்ச்சல் ஒரு வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. ஆகவே அதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே ஆன்டி-வைரஸ்களை எடுத்து கொள்வது சிறப்பாகும். மேலும் அருகில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ, இத்தகைய காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தால், அவர்களை உடனே இந்த ஆன்டி-வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்ள சொல்லவும். இதனால் இந்த காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். 
 
காய்ச்சல் தடுப்பூசி: 
 
காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதுவே சிகிச்சைக்கு முற்றிலும் சிறந்த வழி. ஒவ்வொரு புது காய்ச்சல் உரு கொண்டதும், அதற்கான தடுப்பூசி வெளியிடப்படுகிறது. ஆகவே இந்த தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம், காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு காய்ச்சல் அதிகமாக கஷ்டத்தைக் கொடுக்கும. இத்தகையவர்கள் ஒவ்வொரு வருடமும், பொருத்தமான காய்ச்சல் தடுப்பூசியை எடுத்து கொள்வது நல்லது.
 
கூடுதலாக, நல்ல சுகாதாரத்தை மேற்கொள்வதும், உடற்பயிற்சியை மேற்கொள்வதும் சிறந்தது. கழிவறைக்கு சென்று வந்தால், உடனே கைகளை அலம்புவது அல்லது வெளியில் சென்றாலோ அல்லது பொது போக்குவரத்து வாகனங்களில் கிருமி நிரப்பப்பட்ட சூழலில் இருந்து வீடு வந்ததும், கை கால் அலம்புவது நோயை எதிர்கொள்ளும். முக்கியமாக யாராவது தும்மினாலோ இருமினாலோ, உடனே கண்களை அல்லது மூக்கை தேய்க்க வேண்டாம். உடனே கை கழுவுவது மிகவும் நல்லது. 

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!


 கொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு என்றும் கருதப்படுகிறது. அதீத கொழுப்பு உடலில் இருந்தால் தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இத்தகைய கொழுப்புக்களை உணவு முறைகள் மூலம் குறைக்கலாம். ஏனெனில் பொதுவாக உடலில் கொழுப்புக்கள் சேர்வது உணவுகளால் தான். இத்தகைய கொழுப்புக்கள் உள்ள உணவுகளை உண்டால், இதய நோய் எளிதில் வந்துவிடும். 
 
எனவே கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் சரியான கட்டுப்பாடும், கவனமும் இருந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கலாம். இப்போது மாதிரியான உணவுகளை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்பனவற்றைப் பார்ப்போம்.
 
செறிவூட்டப்பெற்ற கொழுப்புள்ள உணவுகள்
 
 
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் செறிவூட்டப்பெற்ற கொழுப்பின் மூலம் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே செறிவூட்டப்பெற்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை குறைவாகவோ, முடிந்தால் அவற்றை முழுமையாக நீக்கவிம். ஆனால் சில உணவுகளை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆகவே அந்த சந்தர்ப்பங்களில், அவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி போன்ற விலங்குகளில் அதிக கொழுப்புக்கள் இருக்கும். மேலும் காய்கறிகளின் செறிவூட்டப்பெற்ற கொழுப்பை தவிர்க்க வேண்டும். 
 
இவையும் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. இப்போது கொழுப்பின் அளவை குறைக்கும் சில உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
 
 
கொழுப்பை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டுமானால், அதிக நார்ச்சத்து உள்ள உணவான, குறிப்பாக அதிகம் சுத்திகரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட ரொட்டி போன்றவற்றை உண்ண வேண்டும். கூடுதலாக அதனுடன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராளமாக உண்ண வேண்டும். 
 
இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும். அதிக கலோரிகள் உடலால் இயற்கையாகவே கொழுப்பாக மாற்றப்படுகின்றன. அதிக கொழுப்புள்ள உணவை உண்டால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும்.
 

காய்கறிகள் மற்றும் பழங்கள்
 
ஒருவர் தன் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ விரும்பினால், அவர்கள் உணவில் முட்டைகோஸ், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
காய்கறிகளுடன் கூடுதலாக பழங்களையும் உண்ண வேண்டும். இந்த உணவுகளில் கொழுப்பின் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. இந்த உணவுகளில் இயற்கையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
 
இறைச்சி மற்றும் மீன்
 
 
கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவு வகைகளில் மீனை தாராளமாக சேர்க்கவும். உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கொழுப்பை நீக்க உதவும் சத்தான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சுறா, சால்மன் மற்றும் சூரை வகை மீன்களில் உள்ளன. எனவே முடிந்த அளவு மீனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. 
 
மேலும் இறைச்சி உணவை தவிர்க்க முடியாதவர்கள், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியை உண்ணலாம்.
 
சரியான அளவில் உண்ணவும்
 
 
கொழுப்பின் அளவை குறைக்க அல்லது கட்டுப்படுத்த உணவை அதிகமாக சேர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடாது. சரியான அளவில் உணவுகளை உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும், 3 முதல் 5 முறை காய்கறி வகைகளையும், 2 முதல் 4 முறை பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள முடியும்

கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள்



கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. 
 
 
எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
* கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும். எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும். 
 
* கூந்தல் வளர்ச்சி: உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். 
 
* ஸ்கால்ப் பிரச்சனை: வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும். 
 
* பொடுகுத் தொல்லை: தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவையே கூந்தல் பராமரிப்பில் வெங்காயத்தின் நன்மைகள். இதுவரை நீங்கள் கூந்தலைப் பராமரிக்க வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளீர்களா? இல்லையெனில் உடனே ஆரம்பியுங்கள்.

பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்




அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும். 
 
பேரீச்சையின் சத்துப்பட்டியல்... 

* எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். 

* பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. 

* டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். 

* 'வைட்டமின் ஏ', பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. 

* சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. 

* பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. 

* பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. 

* கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது. 

சாப்பிடும் முறை.......... 

உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும். 

பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து 'டேட்ஸ் சிரப்' தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.

Mar 2, 2013

பல நோய்களுக்கு மருந்தாகும் கிரீன் டீ!


Green Tea


  • 0
     

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.
கிரீன் டீயின் நன்மைகள்……..
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

Mar 1, 2013

லெமூரியா கண்டம் உண்மையா?

லெமூரியா கண்டம் உண்மையா?


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013


இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா

::. பட்டமளிப்பு விழாவின் பகிடிகளுடன் கூடிய புகைப்படங்கள் (Photos) .:: newJaffna.com

::. பட்டமளிப்பு விழாவின் பகிடிகளுடன் கூடிய புகைப்படங்கள் (Photos) .:: newJaffna.com

விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!




  • 0
     

drinking_the_poisonஎலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என்று விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும்.
விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.
விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.
வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால் அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.
மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்

விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி!





  • 0
     
drinking_the_poisonஎலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என்று விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும்.
விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.
விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.
வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால் அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.
பாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.
மருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்.
- See more at: http://www.tamilcloud.com/2013/02/28/first-aid-for-poison-drinking#sthash.cPLWUuKL.dpuf

நீரிழிவு ,இதயநோய் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த பீர்!




  • 0
     

how-alcohol-travelsபீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.பீரானது உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு மற்றும் இதயநோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
மது உடலுக்கு கேடு என்று விளம்பரம் செய்யப்படுகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பருகும் உற்சாக பானமான பீர் உடல் எடையை குறைப்பதோடு நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறதாம்.ரத்த அழுத்தம் இல்லை
ஸ்பானிஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 57 வயதிற்கு மேற்பட்ட 1249 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் தினமும் மிதமான அளவு பீர் உட்கொண்டவர்கள் உடல் எடை குறைவாகவும்இ குண்டாகமலும் இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்களுக்கு சர்க்கரை நோய்இ ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் தாக்கப்படாமல் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.உடல் எடை குறைகிறது
20000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் மிதமாக பீர் குடித்த பெண்களின் உடலில் கொழுப்பு சேராமல் உடல் பிட்டாக இருந்தது தெரியவந்தது.குண்டாக இருந்த பெண்கள் பீர் குடித்த பின்னர் உடல் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதயநோய் பாதிப்பு
அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஒயின் மற்றும் பீர் குடிக்கும் 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.அவர்களில் மிதமான அளவு பீர் குடித்து வருபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறைந்து இருந்தது.அதாவது 31 சதவீதம் பேர் இருதய நேய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தனர்.
இதற்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் நோய் ஏற்படாததே காரணம் என கூறப்படுகிறது.அதிகம் குடித்தால் ஆபத்து.பீர் பானத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் அதை குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலை உடல் குறைந்த அளவில் மட்டும் எடுத்து கொள்கிறது.
இதனால் குறைந்த அளவில் பீர் குடித்தால் இருதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால் பாதிப்பு ஏற்படும் என மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.அதுக்காக பெரிய ‘பீர்பாலாகி’ விடாதீர்கள் தொப்பை எக்குத்தப்பாக வந்து விடும்

சூரியனில் ஏற்பட்ட நெருப்பு மழை – பூமிக்கும் ஆபத்தா? (Video)

fire_earthஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் Solar Dynamics Observatory எனும் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பிரிவானது சூரியனில் ஏற்பட்ட நெருப்பு மழையினை வீடியோவாக பதிவு செய்துள்ளது.
எனினும் இச்சூரிய மழையினால் பூமிக்கோ அல்லது ஏனைய கிரகங்களுக்கோ ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...