Apr 1, 2013

எமது நிறைவான உடல் ஆரோக்கியம் உணவுப் பழக்கத்திலேயே தங்கியுள்ளது


எமது உடல் ஆரோக்கியத் திற்கும், நாம் உண்ணும் உணவுக்குமிடையே நிறையத் தொடர்புண்டு. தேவையான உணவு வகைகளை உண்ணாது விட்டாலும் தேக ஆரோக்கியம் குன்றிவிடும். அதே வேளை தேவைக்கு அதிகமாக உண்டாலும் தேக நலன் பாதிக் கப்படும். எமக்கு என்னென்ன உணவு வகைகள் தேவையோ, அவற்றை தேவையான அளவில் மட்டும் உண்ண வேண்டும். இதன் மூலம் நாம் சுகதேகியாக வாழ்வ தற்கான வாய்ப்பு கிட்டுகிறது.
இன்று பரவலாக பெருகிவரும் தொற்றா நோய்கள் தொற்று நோய்களையெல்லாம்

சுதர்சன சக்கர மகிமை


உலக உயிர்களையெல்லாம் காத்தருளுகின்றவர் விஷ்ணு பகவான். ஏனெனில் காத்தல் தொழிலைச் செய்வது அவரே. விஷ்ணுவானவர் இந்த தொழிலை புரியும் நிலையில், ஒரு கையில் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் மற்றொரு கையில் பான்ய சன்னியம் எனும் சங்கையும், இன்னொரு கையில் கெளமோதகம் எனும் கதையையும் தாங்கிய வடிவில் விளங்குகிறார்.
இவ் ஆயுதங்கள் அனைத்திலும் மேன்மை மிக்கது சுதர்சனச் சக்கரமாகும். விஷ்ணு பகவானிற்கு எத்தகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்தி இச் சக்கரத்திற்கும் உள்ளது. ஆயுதங்களின் அரசன் என போற்றப்படுவதும் இதுவாகும். இதனால் இதனை சக்கரத்தாழ்வார் எனவும் அழைப்பர். எனவே இந்த சிறப்பு மிக்க சக்கரத்தாழ்வாரின் பெருமைகளை இங்கே காண்போம்.
இன்னல் நீக்கி இன்பம் அளிக்கவல்லது சுதர்சன சக்கரமாகும். கஜேந்திரனின் அவலக் குரல் கேட்டு அவ்விடம் வந்த விஷ்ணு பகவானின் கையிலிருந்து விரைந்து சென்ற சுதர்சனப் பெருமான் கஜேந்தரனை பிடித்திருந்த முதலையை பிளந்து அவனை காத்தருளி மீண்டும்

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

Health Mix 'many nutritional cereals that are available in stores. Can it be breakfast for children to attend school?




ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக்  கொடுக்கலாமா?

பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன்

ஆர்த்ரோஸ்கோபி எப்படி பரிசோதிக்கிறது?


Explain that examines how arthroscopy. Treatment is to brainstorm a joint arthroscopy. This operation is called pore
ஆர்த்ரோஸ்கோபி எப்படி பரிசோதிக்கிறது என்பதை விளக்கவும்.

மூட்டில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின்  மருத்துவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டுகாயங்களுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கிளமெண்ட் ஜோசப் பதிலளிக்கிறார்.

ஆர்த்ரோஸ்கோபி என்பது மூட்டு உள்நோக்கு சிகிச்சை ஆகும். இது நுண்துளை அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. அதாவது நுண்துளை  வழியாக மூட்டினுள் ஒளியை பாய்ச்சி சிறிய லென்சு மூலம் மூட்டினுள் உள்ள பிரச்னைகளை துல்லியமாக வெளியிலுள்ள திரையில் பார்த்து சிறிய  அளவிலான நவீன கருவிகளை வைத்து சிகிச்சை செய்யப்படுகிறது. மூட்டை திறக்காமல் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்படுவதால்  விரைவிலேயே குணமடைந்து அவரவர் வேலைக்கோ அல்லது விளையாடவோ செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலமாக தோள் மூட்டு, முழங்கால்  மூட்டு, மணிக்கட்டு மற்றும் கணுக்கால் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

எனது இடது உள்ளங்கைக்கு கீழ் நாடி பார்க்குமிடத்திற்கு மேல் வலது புறத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏதோ துருத்தி கொண்டு உள்ளது. அது  எலும்பா, எலும்பு மூட்டா, வலியில்லை. நான் லேப்டாப் பயன்படுத்துகிறேன். அதனால் ஏற்பட்டிருக்குமா?

கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஆர்.எஸ்.ஐ.எனப்படும் பிரச்னை வருவதுண்டு. அதாவது கை விரல், மணிக்கட்டு, கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில்  தொடர்ந்து வலி ஏற்படும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். எனவே அதை தவிர்ப்பதற்கு  சரியான கோணத்தில் அமர்ந்து கணினியை உபயோகிக்க வேண்டும். அது தவிர அதற்கு தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு  கை மணிக்கட்டில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டால் தான் கண்டுபிடிக்க முடியும்.  எனவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

நான் ஒரு விபத்தில் கீழே விழுந்து கால் மூட்டில் அடிபட்டது. தசை நார் கிழிந்திருக்கும் என்றார்கள். அதன் அறிகுறிகள் என்ன? தசை நார்  கிழிந்திருப்பதை உறுதி செய்வது எப்படி?
முழங்கால் மூட்டு தசைநார் கிழிந்திருந்தால் அடிக்கடி மூட்டு விலகும். கால் ஊன்றும்போது மூட்டு பிறழும். காலை நேராக ஊன்ற முடியாது மற்றும்  மூட்டுவலி போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும். தசைநார் கிழிந்திருப்பதை எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிறகு  ஆர்த்ரோஸ்கோபி மூலம் சிகிச்சையின்போதும் தெரிந்து கொள்ளலாம்.

யூரிக் ஆசிட் உள்ள உணவுகள் மூட்டு வலிக்கு காரணமாக கூறப்படுகிறது. அது உண்மையா? உண்மையானால் தவிர்க்க வேண்டிய உணவுகள்  எவையெவை?

சில சமயங்களில் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதாவது சில சமயங்களில் யூரிக் அமிலமானது அதிகமாகும்போது அனைத்து மூட்டிலும்  படிந்து மூட்டை பாதிக்கிறது. அதை தவிர்க்க அசைவ உணவு, புரத சத்து மிகுந்த உணவு வகைகள்,ஆல்கஹால் மற்றும் உலர் கொட்டை வகைகளை  சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சம்மணம் போட்டு அமர்வதால் கால் மணி மூட்டுக்கு பிரச்னை ஏற்படுமா? எவ்வளவு நேரம் அமர்ந்தால் பிரச்னையில்லை?

சம்மணம் போட்டு அமர்வதால் கால் மணி மூட்டுக்கு பிரச்னை வராது. மாறாக கால்மணி மூட்டுக்கு வெளியே உள்ள தோல் கருப்பு நிறமாகவும்  காய்ப்பு காய்த்ததை போல தடிமனாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் ஏற்கனவே பிரச்னை ஏதேனுமிருந்தால் அதனால் பாதிப்பு வரலாம்.

மூட்டு வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி, யோகா, சூரியநமஸ்காரம் செய்யலாமா?
மூட்டு வலி உள்ளவர்கள் தரையிலமர்ந்து யோகா செய்வதையும், குத்துக்கால் போடுவதையும் தவிர்த்தல் நல்லது. ஏனென்றால் இதன் காரணமாக  மூட்டு தேய்மானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

வயிற்றில் புண் இருந்தால் வாய் புண் வருமா?

For questions about endoscopic treatment NGA Coimbatore Founder and laparoscopy and endoscopy specialist doctor of hospital   treatment. Manoharan answer.



எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும்  எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யலாமா? அல்லது பிரச்னை  எதுவும் வந்த பின்னர் பரிசோதனை செய்யவேண்டுமா?

வயிற்று சம்பந்தமாக ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டும் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்தால் போதுமானது.

எனக்கு வெளி மூலம் உள்ளது. இதுவரை எந்த சிகிச்சைக்கும் செல்லவில்லை. மலம்

Mar 31, 2013

வழமைக்கு மாறாக குறைந்த நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தினை நோக்கிய பயணம்

News Service பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம் வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில் நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார் எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்ணேற்ற தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட் பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலமாக பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐம்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த முறை பயணம் சென்றவர்கள் ஆறு மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
  
இதற்கு முன் சென்ற பயணங்களில் எல்லாம் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து சுமார் முப்பது

1400 ஆண்டுகால அதிசயமாகத் திகழும் சூரிய ஒளிக் கடிகாரம்

விளக்கெண்ணையில் மறைந்துள்ள இரகசியங்கள் - பக்டீரியாவையும் அடித்து விரட்டுமாம்!

News Service விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
  
ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும். மேலும்

நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:


நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:

**இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

** சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

**3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு

இந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்


சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகள் திறக்கப் பட்டு அங்கிருந்த கற்பனைக்கெட்டாத பொக்கிஷங்கள் இன்று உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது .

இந்தியாவிலுள்ள பணக்கார கோவில்கள் வரிசையில் முதல் 5  இடங்களை பிடித்திருக்கும் கோயில்களை பார்ப்போம் .

1.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் 


108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலின் இன்றைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட  2  லட்சம் கோடி .

2 .திருப்பதி வெங்கடேச பெருமாள் சுவாமி கோவில்


இக்கோவில் தனது கட்டிடத்திலேயே 1  டன் தங்கத்தை கொண்டுள்ளது.வருடத்திற்கு சராசரியாக 650  கோடிக்கு மேல் வருமானம் வருகிறது .தினமும் சராசரியாக 60000  பேர் சுவாமி தரிசனம் செய்ய

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...