May 12, 2013

MS Office முக்கிய ஷார்ட்கட் கீகள்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.


வேர்ட் தொகுப்பு:

Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.

Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா. 

Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது. 

Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.

May 11, 2013

கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?



கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம். மடிக்கணணிகளில் புதிதாக பற்றரிகள் கூடுதலான நாட்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

1. ஸ்லீப் மோட்(Sleep mode): இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக்கம் டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் Pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கணணியின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படும்.
இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் நினைவகத்தில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில்

விண்டோஸ் 7யை முழுமையாக தமிழில் பயன்படுத்த வேண்டுமா.?


விண்டோஸ் 7யை முழுமையாக தமிழில் பயன்படுத்த வேண்டுமா.?
கணனி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விடயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விடயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. அந்த வகையில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட கணனியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணனியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணனியில் நீங்கள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்

May 12, 2013 

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.      

அன்னையர் தினம் 12.05.2013




'அம்மா' என்பது உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வான ஒன்றாகும். அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது. எதை வேண்டுமானாலும் இரண்டாக வைத்துக்கொள்ளலாம், அம்மா என்பது ஒன்றே.
அந்த உத்தம உறவின் தியாகங்களை நினைவு கூற உலக நாடுகள் எங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் எந்த நாட்டிலும் ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஒரு உயிர் அம்மா மட்டுமே.


அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள். எமது தாய்க்குலத்தை ஒரு நாளாவது நினைப்பது என்பது பொருள் அல்ல, ஒவொரு நாளும் அவள் சேவை செய்கின்றாள், எனவே ஒவொரு நாளும் நினைத்தாலும் அது ஈடாகாது. தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

இவா பெரோன்... அர்ஜென்டினாவின் எம்.ஜி.ஆர்!

இவா பெரோன்... முப்பது வயதுக்குள் இந்தப் பெண் தொட்ட உயரங்கள் சொல்லில் அடங்காதவை.

அர்ஜென்டாவின் சின்ன நகரத்தில் பிறந்த இவருக்கு, உடன் பிறந்தவர்கள் ஐவர். இவரின் தந்தைக்கு இரண்டாவது சட்டப்படியான மனைவி என்கிற அங்கீகாரம் பெறாதவராகவே இவரின் அம்மா இருந்தார். அப்பாவின் மரணத்தின்பொழுது வெளியே நிற்க வைக்கப்பட்டு அவமானத்தை சுவைக்க வேண்டிவந்தது. இவா கொஞ்சமாக அழுதார். வேலை தேடி நாட்டின் தலைநகருக்கு வந்தார்.

கையில் இருந்தது முப்பது பெசோக்கள். கொஞ்சம் நம்பிக்கை. ஏகத்துக்கும் அலைந்தார். நாடகங்கள், ரேடியோ ஷோக்கள் என என்னென்னமோ பண்ணிப் பார்த்தார். ஹிட் அடிக்க முடியாமலே இருந்தது. நடுவில் அழகைக்கூட்டி கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொள்ள பணம் சேர்த்து வைத்திருந்தார். உறவுக்காரர் ஒருத்தருக்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த பல நாள் உழைப்பில் கிடைத்த பணத்தை முழுக்க கொடுத்துவிட்டு வந்தவருக்கு, வாழ்க்கை புன்னகையை பரிசளிக்க காத்துக்கொண்டு இருந்தது. 

சரித்திர மாவீரன் நெப்போலியன்!

    . தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்

    எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

    வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
    பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன்

இன்றும் நாளையும் (மே 12, 13) உலக வலசைப் பறவைகள் தினம்


ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டம் வரை நான்-ஸ்டாப்பாகப் பறக்கும் பறவைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவற்றை வலசை போகும் பறவைகள் என்பார்கள். உலக நாடுகளின் நட்புறவுக்கு முன்னோடிகள், இந்த வலசைப் பறவைகள்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதிலும் இப்பறவைகளும் முன்னிலையில் இருப்பது வருத்தத்துக்கு உரியது.

இந்த வலசைப் பறவைகளின் வாழ்க்கையைக் காப்பதற்கு, மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த, 2006-ல் இருந்து, உலக வலசைப் பறவை தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மற்றுமோர் உன்னத காரணம்!

பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கிறார் நவாஸ் ஷெரீப்

Photo Gallery
பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கிறார் நவாஸ் ஷெரீப்பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப், சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

342 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் வெற்றி

லாகூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார் நவாஸ் ஷெரீப். (வலது) கராச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் சனிக்கிழமை இரவு வாக்குகளை எண்ணும் பணியில் தேர்தல் ஊழியர்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவருமான நவாஸ் ஷெரீப், முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரி-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல்

வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்


1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

5. அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...