Jun 20, 2013

மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள்

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.
மூலநோய் குணமாகும்
ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
மலடு நீங்கும்
ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது.

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும்.இ ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது இரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?


வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும்… அதனால் ஏற்படும் நீர் பற்றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்!
உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரியும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் எனச் சிறுநீரக மண்டலத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உருவாகலாம்.
சிறுநீரகக் கல் ஏன் உருவாகிறது?
பல்வேறு காரணங்கள்.  சுற்றுச்சூழல், பழக்கவழக்கம், குடும்ப வரலாறு என

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று. சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள். எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
  • சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!
சாப்பிடக்கூடிய பழங்கள்: ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, பப்பாளி
சாப்பிடக்கூடாத பழங்கள்:
மாம்பழம், வாழை, பலாப்பழம், சப்போட்டா, திராட்சை, சீதாப்பழம், தர்பூசணி,

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது.
 இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட.
இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன்

மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?

குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். குளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர். 
இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.
தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.
1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே  இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம்

இருதய நோய் சம்மந்தமான ஒரு விழிப்புணர்வு



பிப். 22: இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருகிறது. இதயநோய், நீரிழிவு, மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த ரூ.11,37,600 கோடி (237 பில்லியன் யு.எஸ் டாலர்) தேவை. இந்தியாவில் எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட பரவக்கூடிய நோய்கள் குறைந்து வருகிறது. தற்போதுள்ள 36.2 சதவீதத்திலிருந்து 2030-ல் 21 சதவீதமாக குறைந்துவிடும். ஆனால் இதய நோய் 29 சதவீதத்திலிருந்து 2030-க்குள் 36 சதவீதமாக உயர்ந்துவிடும்.

ஆனால் அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளில் இதயநோய் சதவீதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 35 வயது முதல் 64 வயது வரையிலானவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. பொருளாதார அளவில் நாம் வளர்ச்சி ஊற்றுள்ளதால் உயர்தர சிகிச்சை பெற்று வாழ்நாள் நீடித்துள்ளது. தற்போது 75 முதல் 80 வயது வரை வாழ்கின்றனர். வருமானம்

இளைஞர் யுவதிகளே மாரடைப்பு உங்களுக்கும் வரக் கூடுமா?

Heart attack in Younger people

எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.
மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.
ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.
மாரடைப்பு எவ்வாறு?
மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு


தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்
அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப்  பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.
சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.
வலி!

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை. அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டிருந்தது. நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரியவந்தது.
ஒரிரு மாதங்களாக வலி இருக்கிறதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. ஆரம்பத்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்கவில்லை. அருகிலிருந்த மருத்துவரிடம் காட்டியபோது தசைப்பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். ஆயினும் அந்த ஊசியிலும்

பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...