Jul 18, 2013

கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்..

கொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்..

பழங்களிலேயே விலை குறைவானதும்,

அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதும்,

அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதுதான் கொய்யா.

முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும்.

மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல்

அவரைக்காய்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்

.* அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

* அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.

* அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.

* நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

* பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்

. * அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

* காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.*

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

* மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்*

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.* சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

வல்லாரை

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.
இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.
வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.
இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
வல்லாரை வைத்தியம்
1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.
5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.
6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்

முருங்கைகீரை


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற

சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-

சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை. ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர்.
இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம்.

இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இக்கீரையின் மருத்துவப் பயன்கள் :-

குடற்புண் குணமாக

உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில்

மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-

மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது 
மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

Visit our Page -► தமிழால் இணைவோம்
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.


ஆஸ்த்மா பற்றிய தகவல்கள்:

ஆஸ்த்மா பற்றிய தகவல்கள்:-

ஆஸ்த்மா பற்றி......

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.

எந்த வயதினரையும் தாக்கக் கூடியது 

நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும். 

தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. 

அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

 அறிகுறிகள் 

இருமல்

இழுப்பு

மூச்சு எடுப்பதில் சிரமம்

நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்
போன்றவை இதன் அறிகுறிகளாகும்

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்

தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்

சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.

விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.

கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.

சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.

நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு

கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.

கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.
thanks:- ஹாய்  நலமா-

ஆஸ்த்மா பற்றி......

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.

எந்த வயதினரையும் தாக்கக் கூடியது

நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும்.

தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது.

அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

அறிகுறிகள்

இருமல்

இழுப்பு

மூச்சு எடுப்பதில் சிரமம்

நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்
போன்றவை இதன் அறிகுறிகளாகும்

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்

தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்

சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.

விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.

கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.

சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.

நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு

கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.

கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.
thanks:- ஹாய் நலமா

Jul 17, 2013

SD Card பயன்பாட்டில் சிக்கல்கள்



மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. (SDSecure Digital) கார்ட்களே. 

மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது. 

அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம். இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான். காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை. 
காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை. மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும். எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.
இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது. 
1. தவறான பார்மெட்: 
உங்களிடம் எந்த டேட்டாவும் இல்லாத எஸ்.டி. கார்ட் ஒன்று உள்ளது. அதனைப் பயன்படுத்த நீங்கள் தயாராகிறீர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ, அது செயல்பட மறுக்கிறது. கார்டைச் சபிக்காமல், ஏற்கனவே அதனை எந்த சாதனங்களில் பயன்படுத்தினீர்கள் என எண்ணிப் பார்க்கவும். பலவகை மொபைல் போன்கள், கேமராக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தினீர்களா? பிரச்னை அங்குதான் உள்ளது. 
உங்களிடம் உள்ள எஸ்.டி. கார்ட் வேறு ஒரு வகை சாதனத்திற்காக பார்மட் செய்யப்பட்டதாயிருக்கும். எப்படி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பார்மட் செய்யப் பட்ட ஹார்ட் டிஸ்க், வேறு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படாதோ, அதே போலத்தான் இதுவும். 
இந்த மாதிரி பிரச்னை ஏற்பட்டால், முக்கிய பைல் ஏதேனும் கார்டில் பதியப்பட்டிருந்தால், அதனை இயக்கும் சாதனத்தைப் பயன்படுத்தி, பைலைப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, தற்போதைய சாதனத்திற்காக பார்மட் செய்திடவும்.
2. பாதுகாப்பில்லாத வழியில் எடுத்தல்: 
நம்முடைய எஸ்.டி. கார்ட்களைப் பயன்படுத்திய பின்னர், அதன் சாதனத்தில் இருந்து பாதுகாப்பான முறையில் (safely remove), இணைப்பை நீக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் நீக்கினால், விபரீத விளைவு ஏற்படும். அந்த எஸ்.டி. கார்ட் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகலாம். 
வேகமாக பல சக்கரங்களுடன் இயங்கும் ஓர் இஞ்சினில், ஒரு பெரிய குறட்டினைத் தூக்கி எறிந்தால் என்னவாகும்? அந்த விளைவுதான், ஓர் எஸ்.டி. கார்ட் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், சாதனத்திலிருந்து நீக்கப்பட்டால் ஏற்படும். இந்த விளைவு உடனே ஏற்படாது. 
பைல்கள் கெட்டுப் போகாமல் காட்டப்படும். நாமும் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்து வோம். திடீரென அதன் இயக்கம் முடங்கிப் போகும். இந்தச் சூழ்நிலையைச் சந்திக்காமல் இருக்க, பிளாஷ் ட்ரைவ் கார்டினைப்பாதுகாப்பான முறையில்தான் நீக்க வேண்டும்.
3. கவசம் சேதம் அடைந்திருத்தல்: 
எஸ்.டி. கார்ட்களைக் கொண்டிருக்கும் கவசம் சேதம் அடைந்திருந்தால், நம்மால் அந்தக் கார்ட்களைப் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் பேக் அப் செய்து வைத்த பைல்களை மீண்டும் பெற இயலாமல் போய்விடும். இந்த பைல்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரும் சேவையினைச் சில பொறியாளர் கள் செய்து தருகின்றனர். ஆனால், அதற்கென நாம் செலுத்த வேண்டிய கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.
4. பூட்டப்பட்ட கார்ட்: 
எஸ்.டி. கார்ட்களைப் பூட்டி வைக்கலாம். இந்த வசதி கார்ட்களில் உள்ளதனைப் பலரும் அறியாமல் இருக்கிறோம். இதன் மூலம் அதில் பதியப்பட்ட பைல்கள் அழிக்கப்படாமலும், திருத்தப்படாமலும் பாதுகாக்கலாம். கார்டின் ஒரு புறத்தில் பார்த்தால், இந்த பூட்டு இருப்பது தெரிய வரும். பொதுவான கார்டின் வண்ணத்திலிருந்து இது வேறான வண்ணத்தில் இருக்கும். இதனை எளிதாக இழுத்தால், கார்ட் பூட்டிக் கொள்ளும். மீண்டும் இதனைத் திறந்தாலே பயன்படுத்த முடியும்.
5. மெதுவாக இயங்கும் கார்ட் ரீடர்: 
எஸ்.டி.கார்ட்களை அதற்கான ரீடர் சாதனத்தில் வைத்துப் பயன்படுத்துகையில், அந்த ரீடரின் செயல் வேகம் மிகவும் மெதுவாக இருந்தால், கார்டைப் பயன்படுத்துவது வீண் போலத் தெரியும். மிகப் பழைய கார்ட் ரீடரை வைத்திருப்பவர்கள் இந்த சூழலைச் சந்தித்திருக்கலாம். இந்த பிரச்னையைச் சந்திப்பவர்கள், வேகமாக இயங்கும் எஸ்.டி.கார்டினையும், அதற்கான ரீடரையும் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டும். 


6. கார்டின் செயல் வேகம் குறைவு: 
மிகப் பழைய எஸ்.டி. கார்ட்கள் எனில், அவற்றில் டேட்டா எழுதப்படும் வேகமும் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, நம் பணி விரைவில் முடிக்கப்படாமல் இருக்கும். இதற்கு ஒரே தீர்வு, வேகமான டேட்டா பரிமாற்ற வேகம் கொண்டுள்ள புதிய கார்ட் ஒன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான்.

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்




விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. 

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. 

இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. 

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்

கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?


உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 

அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.

சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க
யுவான் சுவாங்
இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு வலு கொடுத்து அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,கண்டங்கத்திரி இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு வலு கொடுத்து அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,கண்டங்கத்திரி இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...