Sep 25, 2013

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்:-

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்:-

இலந்தை பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள்,மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளைமை போல் அரைத்து வெட்டுக்காயம்
மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக்கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

பித்த மயக்கத்தை போக்கும்

உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்து ம் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்:-


40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்:-

40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

உடல் எடை அதிகரித்தல்

மன அழுத்தம்

சர்க்கரை நோய்

அதிக அளவில் கொழுப்பு சேருதல்

உயர் ரத்த அழுத்தம்

இதய நோய்

எலும்பு மூட்டு நோய்கள்

புற்று நோய்

வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :

மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது

மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

News Serviceமூலநோய் என்பது மலக்குடலிலுள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கமாகும். மூலநோய் ஏற்படுவதற்கு ஆசனவாயின் நரம்புகளில் ஏற்படக்கூடிய அழுத்தம், குழந்தை பிறப்பு, நாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியான உடல் பருமன், வயிற்றுப்போக்கு, மிக கனமான பாரத்தை தூக்குதல், நீண்ட நேரம் நிற்கும் அல்லது அமரும் சூழ்நிலை, குடும்ப வரலாறு மற்றும் துரித உணவு போன்றவை காரணங்களாகும். மூலநோயை அறுவை சிகிச்சை, பேண்டிங் போடுதல் மற்றும் ஸ்டாப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளால் சரிசெய்யலாம்.

 
எந்தமாதிரியான உணவு உட்கொண்டால் மூலநோய் தவிர்க்கலாம்?

நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால் எந்த பிரச்னையுமில்லாமல் எளிதாக மலம் வெளியேறும். துரித உணவு மற்றும் தண்ணீர் சரியாக அருந்தாமலிருக்கும்போது மலம் இறுகி வெளிவருவதற்கு சிரமம் ஏற்படும். எனவே, கடினமாக முயற்சி செய்து மலத்தை வெளியேற்றும்போது மூலம்

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?


விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது.

பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு

Sep 24, 2013

virakesari.jpg (800×1132)

virakesari.jpg (800×1132)
 ஒரு ஏழு வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. உங்களுக்கு இதில் எந்தத்துறை ஆர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றதோ அதனை தேர்ந்தெடுத்து இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு இருக்குமேயானால் அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விருப்பமிருந்தால் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.comமற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

உங்கள் பாதுகாப்புக்காக தற்காப்பு போன்ற கலையையும் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

உங்களுக்கு நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால்www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

இந்து ஏழு இணைய தளமும் தன்னுடைய சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது..

யாருக்கு எதில் ஆர்வமோ அதனை முயற்சித்து பாருங்களேன்..!!!

Photography community, including forums, reviews, and galleries from Photo.net

www.photo.net

Photo.net is a photography community that includes forums, reviews, and galleries for members and casual viewers.

விண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இணைய தளங்களில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும், ரயில்வே டிக்கட் புக்கிங் தளம், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை வடிவமைத்துத் தந்துள்ளது. தற்போது இயங்கும் ஆன்லைன் தளத்துடன், புதிய தளமும் இயங்கும். 

சராசரியாக, நாளொன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் இணையம் வழியாகப் பதிவு செய்யப்படுகின்றன. சென்ற செப்டம்பர் 2 அன்று, மொத்தம் 5 லட்சத்து 72 ஆயிரம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர், சென்ற ஆகஸ்ட் 12 அன்று, பதிவு செய்யப்பட்ட, 5 லட்சத்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையே முதல் இடத்தில் இருந்தது. 
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும், புதிய தளக் கட்டமைப்பினால், டிக்கட் பதிவு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ஒரு கோடியே 35 லட்சம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டன. சராசரியாக நாளொன்றுக்கும் 4.34 லட்சம் டிக்கட்கள் வாங்கப்பட்டன. 
சென்ற ஆண்டில், இதே மாத காலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை, ஒரு கோடியே 23 லட்சமாகும். ஓராண்டில் இந்த வகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!



"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!


நெல்லிக்கனி
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-தேரையர்.

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ

உணவும் மருந்தும்...

உணவும் மருந்தும்...

எண்ணிலடங்கா அதிசியத்தையும், ஆச்சர்யத்தையும் நமது சித்தர்கள் நமக்கு காட்டிசென்றுள்ளனர். உணவே மருந்தாகச் செய்து நமது வாழ்வை ஆரோக்கியமாக வாழ வழி செய்தனர். சித்தர்களின் வழியை தற்போதைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அதில் ஒன்றுதான் நாம் பார்க்க இருப்பது.

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்

இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

ஒரு சிறிய விஷயத்தில் இத்தனை நல்லனவற்றை வைத்த சித்தர்கள் வாழ்க. அனால் இதை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பதே விடைதெரியாத கேள்வி.

Sep 23, 2013

கனடா - மிசிசாகாவில் அமைந்துள்ள ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவு!

News Serviceகடந்த 2012ம் ஆண்டின் மிகச்சிறந்த புதிய வானளாவிய கட்டிடம் என்ற கணிப்பீட்டில் மிசிசாகாவில் உள்ள "Marilyn Monroe" என்றழைக்கப்படும் ஜோடி கட்டிடங்கள் மிகச் சிறந்தவையென தெரிவாகியுள்ளது. Absolute World Towers என்ற இவ்விரு கட்டிடங்களும் வளைவான அமைப்புடையவை. ஜேர்மனியின் ஹேம்பர்க் (Hamburg) நகரத்திலுள்ள கட்டிட கணிப்பீட்டு நிறுவனமான Emporis ஆண்டு தோறும் உலக நாடுகளில் மிகச்சிறந்த கட்டிடங்களை தெரிவு செய்து விருது வழங்கி வருகின்றது.
  
இதன்படி 2012ல் நடத்தப்பட்ட கணிப்பில் கனடாவின் மிசிசாகாவில் அமைந்துள்ள இரு

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது! - ஆய்வில் தகவல்

பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஓரு தேநீர் கோப்பை அளவு, அதாவது 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஓருவரின் உயர் ரத்தஅழுத்தம் சுமார் 10 ஙம் அளவு குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  
News Serviceபதினைந்து பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஓரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட் சாற்றைகுடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...