Oct 2, 2013


மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான்.
பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வம்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர்.

பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.

நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான்.

பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி.

பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர்.

மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான்.

அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான்.

இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன்.

தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான்.

""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான்.

""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான்.

மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே!

துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்?

தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன்.

""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?''

""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன்.

பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர்.

குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான்.

யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான்.

தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான்.

""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன்.

""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!''

சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது.

மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே.

கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!
பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வம்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர் களைக் கருவறுக்கத் துடித்தான். எல்லா அரசர்களையும் தனது பக்கத்தில் கொண்டு வர வேண்டும்; பெரும் படை பலத் தைத் திரட்டி பாண்டவர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணம். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல அவன் செய்கைகளுக்குப் பக்கபலமாக கர்ணன், சகுனி, துச்சாதனன் போன்றவர்கள் இருந்தனர். தர்மம், நீதி போதித்த பீஷ்மர், துரோணர், விதுரர் போன்றோர் துரியோதனனின் இகழ்ச்சிக்கு ஆளாயினர். பாண்டவர்களும் வலுவான எதிரணியை உருவாக்கினர். அதைவிட பரந்தாமனின் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அவர் களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் எனலாம். நாடற்ற பாண்டவர் விராட நாட்டில், உபப்பிலாவியம் நகரில் இருந்து கொண்டு போருக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இரு திறத்தாருக்கும் நாளுக்கு நாள் படைபலம் பெருகிக் கொண்டிருந்தது. பாண்டவர்கள் படையைவிட, துரியோதனனின் படைபலமே அதிகரித்துக் காணப்பட்டது. படை திரட்டு வதிலும் பாண்டவர்கள் நேர்மையான வழியைப் பின்பற்ற, துரியோதனனோ குறுக்கு வழியையே பின்பற்றினான். பாண்டவர்களில் தருமன், பீமன், அர்ச்சுனன் இம்மூவரும் பாண்டுவின் மூத்த மனைவியான குந்தியின் புத்திரர்கள். நகுலனும் சகாதேவனும் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்கள். மாத்ரி மந்தர தேசத்து அரசன் சல்லியனின் உடன் பிறந்த சகோதரி. பாண்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசர் களுக்கு தூதர்கள் மூலம் ஓலையனுப்பி ஆதரவு கோரினர். ஆனால் அவர்கள் சல்லியனிடம் மட்டும் உதவி கேட்கவில்லை. தாய்மாமன்தானே, தங்களுக்கல்லாமல் வேறு யாருக்கு அவர் உதவி செய்யப் போகிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருந்து விட்டனர். மருமக்கள் உதவி கேட்காவிடினும் மாமன் உதவி செய்யாமலா இருப்பார்? துரியோதனனும் பாண்டவர்களும் படை பலத்தைப் பெருக்கு வதையறிந்த சல்லியன், தன் மருமக்களான பாண்டவர்களுக்கு உதவ பெரும் படையுடன் உபப்பிலாவியம் நோக்கி விரைந்தான். அலைகடல்போல் ஆர்ப்பரித்து, கண்ணுக் கெட்டிய தூரம் வரை நால்வகைப் படைகளும் அணிவகுத்து உபப்பிலாவியம் நோக்கி வீறுநடை போட்டுச் சென்றன. பெரும்படையுடன் தேவேந்திரனைப் போன்று சல்லியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன் புழுவாய்த் துடித்தான். அவனைத் தன் பக்கம் இழுத்துவிட்டால் பாண்டவர்களின் பலம் வெகுவாகக் குறைந்துவிடும்; பின் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என நினைத்து வஞ்சகத் திட்டம் தீட்டினான். தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், உபப்பிலாவியம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சல்லியனையும் அவன் படையினரையும் ஆங்காங்கே பெரும் வரவேற்பளித்து உபசரித்தான். இச்செயலில் தன்னுடைய பணியாளர்களை முழுமையாக ஈடுபடுத்தினான். படையினர் அனைவருக்கும் பருக சுத்தமான தண்ணீர், அறுசுவை உணவு, பானகங்கள், சல்லியனுக்கு சாமரம் வீச பணியாளர்கள் என அமர்க்களப்படுத்தினான். இத்தகைய உயரிய வரவேற்பு சல்லியனை பெருமகிழ்ச்சியடையச் செய்தது. இதற்கெல்லாம் காரணம் தனது மருமக்கள் பாண்டவர்களே என நினைத்து, அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். தனக்கும் தனது பெரும்படைகளுக்கும் சேவை செய்யும் பணியாளர்களின் தன்னலம் கருதா தன்மை கண்டு உள்ளம் பூரித்தான். மருமக்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! பாண்டவர்களுக்கு நிகர் பாண்டவர்கள்தான் என இறும்பூது எய்தினான். தனக்குப் பணிவிடை செய்த பணியாளர்களுக்குப் பரிசுகள் தரவிரும்பி, அவர்கள் எஜமானனின் உத்தரவு வாங்கிவர வேண்டினான். இந்தத் தருணத்தைத்தானே துரியோதனனும் எதிர்பார்த்தான். அவன் சல்லியன் முன்பு சென்று வணங்கி நிற்க, வியப்பும் திகைப்பும் அடைந்தான் சல்லியன். தனக்கு மரியாதை செய்த துரியோதனனைப் பாராட்டினான். துரியோதனனைப் பெருமை யாகப் பேசி, ""இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?'' என வினவினான். ""மந்தர தேசத்து அதிபதியே! நீர் எனக்கும் மாமன் உறவு முறையே... உமது தயவு எனக்குத் தேவை. நீர் எங்கள் பக்கம் சேர்ந்து எனக்கு வலுசேர்த்து பாண்டவர்களை எதிர்க்க வேண்டும்!'' என்று சொன்னான் துரியோதனன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், கொடுத்த வாக்கைக் காக்க சல்லியன் துரியோதனன் பக்கம் நின்று பாண்டவர்களை எதிர்ப்பதாக வாக்களித் தான். இருப்பினும் உபப்பி லாவியம் சென்று தன் மருமக்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவர துரியோதனனிடம் அனு மதி வேண்டினான். சல்லியனிடம் வாக்குறுதி பெற்றதும் துரியோதனன் தன் சுய உருவத்தைக் காட்டினான். ""நீர் எனக்கு வாக்கு கொடுத்துவிட்டீர்! அதை மறக்காமல் நிறைவேற்றுவீர்! அதிவிரைவில் சென்று, கண்டு, திரும்பி வருவீர்!'' என்று துரியோதனன் கட்டளையிட்டான். மனதில் பெரும் பாரத்துடன் தருமனைச் சந்தித்தான் சல்லியன். தக்க நேரத்தில் பெரும் படையுடன் மாமன் தங்களுக்கு உதவ வந்திருக் கிறான் என நினைத்து பாண்டவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் - குறிப்பாக நகுலனுக்கும் சகாதேவனுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. தங்கள் சொந்த தாய்மாமன் ஆயிற்றே! துரியோதனனால் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கவலையுடன் தெரிவித்தான் சல்லியன். தருமபுத்திரன் மிகவும் கவலையடைந்தான். காரணம் சல்லியன் மாவீரன் மட்டுமல்ல; தர்மத்தின் வழிநடப்பவன். நேர்மையும் நீதியும் தவறாதவன். தேரோட்டுவதில் பகவான் கிருஷ்ணனுக்கு நிகரானவன். அப்பேர்ப்பட்ட சல்லியன் ஓட்டும் தேரில் நின்று கர்ணன் போர் புரிந்தால் அர்ச்சுனன் நிலை என்னாகும்? தர்மனின் மனதைக் குறிப்பால் உணர்ந்த சல்லியன், ""தருமா! எல்லாம் விதிப்படியே நடக் கும். நான் உங்களை முழுமூச்சுடன் எதிர்ப்பேன். ஆனால் வெற்றித் திருமகள் நீதியின் பக்கமே நிற்பாள். நீ தம்பியர் புடைசூழ தேவேந்திரனைப் போல வீற்றிருக்கிறாய்! தேவேந்திரனுக்குக்கூட கிடைக்காத பேறு உனக்குக் கிடைத்துள்ளது. ஆம்! பகவான் பரந்தாமன் பக்கபலமாயுள்ளான்! யாருக்குக் கிடைக்கும் இந்த உயர்ந்த நிலை! தரும தேவதையும் வீரத் திருமகளும் நீ இருக்கும் இடத்தில் வாசம் செய்கிறார்கள். தர்மத்தின் வழி நடக்கும் உன்னை- தர்ம தேவனால் பாதுகாக்கப் படும் உன்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது'' என்றான் சல்லியன். ""மாமா! நான் கவலைப்படுவது அர்ஜுனனைக் குறித்தே! உங்கள் துணைகொண்டு மட்டுமே கர்ணன் அர்ஜுனனை வீழ்த்த முடியும். தாங்கள் நடத்தும் தேரில் நின்று போரிடுபவன் ஒரு நாளும் தோற்க மாட்டான் என்பது எனக்குத் தெரியாதா?'' ""தருமா! நீ வீண்பயம் கொள்ளத் தேவையில்லை. என்னால் அர்ஜுனன் உயிர் காப்பாற்றப்படும்! நான் நடத்தும் தேரில் நின்று கர்ணன் போர் புரிவானா னால் அவனது வீரத்துக்குப் பழுது ஏற்படும். இதை நீ பார்க்கத்தான் போகிறாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும்'' என மருமக்களை ஆசீர்வதித்து, துரியோதனன் இருக்குமிடம் வந்தடைந்தான் சல்லியன். பாரதப் போரில் கௌரவ சேனைக்கு முதலில் பீஷ்மரும், அவருக்குப் பிறகு துரோணரும், துரோணருக்குப் பின் கர்ணனும், கர்ணன் மறைவிற்குப் பிறகு சல்லியனும் தலைமை தாங்கினர். குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், பதினேழாம் நாள் கர்ணனும் அர்ஜுனனும் கடும் போர் புரிந்தனர். கர்ணனின் தேரை சல்லியன் நடத்தினான். யுத்தம் தொடங்கும் முன்பே கர்ணன் பேசிய பேச்சுக்களால் சல்லியன் கோபம் கொண்டான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ""இன்றைய யுத்தத்தில் அர்ஜுனன் என்னிட மிருந்து தப்ப முடியாது! என்னுடைய வீரத்தின் முன்பு காண்டீபன் நிற்கத் தகுதியற்றவன். அவனை இன்று எமனுக்குப் பரிசளித்தே தீருவேன்!'' என்று கர்ணன் கர்ஜனை செய்ததும், சல்லியன் கோபாவேசமானான். தேரோட்டியின் மகன் கர்ணன், தன் மருமகன் அர்ஜுனனைப் பழித்ததும் சல்லியன் பொறுக்க முடியாமல், ""ஏ கர்ணா! நீ தகுதிக்கு மீறிய பேச்சு களைப் பேசுகிறாய்! முதலில் பேச்சை நிறுத்தி செயலில் காட்டு. அர்ஜுனனின் காண்டீபம் பொழியும் பாணங்களை உன் பேச்சால் தடுத்து நிறுத்த முடியாது!'' என்று கோபாவேசமாகக் கூறினான். ""சல்லியனே! எனக்கு நிகரான வில்லாளி எந்த உலகிலும் கிடையாது. தேவாசுரர்கள்கூட என்னைப் பார்த்து நடுங்குகின்றனர்'' என்று ஏளனமாகச் சொன்னான் கர்ணன். ""கர்ணா! பேசுவது எளிது; வாய்ச் சொல்லில் வீரமில்லை. எந்த மாவீரனும் தன்னைத்தானே புகழ்வதில்லை. உன்னை நம்பி துரியோதனன் கெடப் போகிறான். ஏ கர்ணனே! பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த விற்போட்டியில் இலக்கை அடிக்க முடியாமல் தோல்வியுற்றுத் திரும் பினாய். உன்னால் முடியாததை அர்ஜுனன் செய்து காட்டினான். நீ அர்ஜுனனை எள்ளி நகையாடுகிறாய். அவன் ஆலகாலம் உண்ட லோகநாயகன் சிவனையே எதிர்த்துப் போரிட்டவன். சிவனைத் தழுவியதால் அதீத பலத்தைப் பெற்றவன். முக்கண்ணனின் கரங்க ளினால் பாசுபதாஸ்திரம் பெற்றவன். உன்னை ஓடஓட விரட்டிய சித்திரசேனன் என்ற கந்தர் வனிடமிருந்து துரியோதனனை மீட்டவன். உன்னால் காப்பாற்ற முடியாத உன் எஜமானனை அவனால் மட்டுமே அன்று காப்பாற்ற முடிந்தது. விராட நாட்டில் பசுக்கூட்டங்களை மகாவீரர்கள் பலருடன் சேர்ந்து, பெரும் படையெடுத்துச் சென்று வஞ்சகமாகக் கவர நினைத்தீர்கள். அன்று அர்ஜுனன் தனியொருவ னாக நின்று உங்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அன்று அவனுக்குத் தேரோட்டியது பால்மணம் மாறாத பாலகன் உத்தரன். ஆனால் இன்று பார்த்தனுக்குத் தேரோட்டுபவன் பார் போற்றும் பரந்தாமன்! உத்தரன் தேரோட்டியபோதே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புறமுதுகிட்டு ஓடிய நீ, கண்ணன் நடத்தும் தேரில் நிற்கும் பார்த்தனை என்ன செய்ய முடியும்? யுத்தம் என்பது வஞ்சகமாக சூதாட்டத்தில் பகடை வீசுவதும், குலமகளின் ஆடையை மன்றில் களைவதுமல்ல... கர்ணா! வாய்ச் சொல்லில் வீரம் வேண்டாம்! போர் புரிந்து அர்ஜுனனை வெல்லப் பார். அல்லது யுத்தக்களத்தை விட்டு வெளியேறு!'' சல்லியனின் பேச்சு கர்ணனை நிலைகுலையச் செய்தது. அவன் தன்னிலையிழந்து, மனம் சோர்ந்தான். அடுத்து என்ன செய்யப் போகி றோம் என்பதை மறந்தான். பரசுராமரிடம் கற்ற அஸ்திரங்களை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். நினைத்து நினைத்துப் பார்த்தான்; நினைவில் வரவில்லை. இறுதியாக சல்லியன் நடத்திய தேர்கூட ஓட மறுத்து, சக்கரம் மண்ணில் புதையுண்டது. கர்ணனின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றன. காண்டீபம் பொழிந்த பாணங்கள் அவன் உயிரைக் குடித்தது. மனோதத்துவ விதிப்படி, ஒருவன் சுமாராகச் செய்யும் செயலை ஊக்கப்படுத்தினால், அடுத்து அவன் அச்செயலை முன்னிலும் சிறப்பாகச் செய்து வெற்றியடைவான். நன்றாகச் செய்யும் செயலை இகழ்ந்து பழித்தால், அடுத்து அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏற்பட்டு தோல்வியடைவான். இதுவே கர்ணனுக்கும் நடந்தது. கர்ணனின் மனதை நிலைகுலையச் செய்தது சல்லியனின் பேச்சுகளே. கர்ணனை சல்லியன் புகழ்ந்து பேசி உற்சாகப் படுத்தியிருந்தால், போரின் போக்கே மாறியிருக்கக் கூடுமல்லவா? சல்லியனின் இகழ்ச்சியான- ஏளனமான பேச்சுகள் கர்ணனைப் புண்படுத்தி, அவன் மனதில் எதிர் அலைகளைத் தோற்றுவித்து, போரில் அவன் உயிரிழக்கக் காரணமாயிற்று. இப்படி நடக்க வேண்டும் எனக் கருதியே சல்லியனை எதிரணிக்குக் கொண்டு சென்றார் அந்த பரந்தாமன்! நடப்பதெல்லாம் அவன் செயலன்றி வேறொன்றுமில்லையே!

Sep 26, 2013

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்




விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை.

இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது.

இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.


1. ஸ்டார்ட் ஸ்கிரீன்:

முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான

எதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்





டிஜிட்டல் உலகில், அதன் தொழில் நுட்பத்தின் பரிமாணங்களும், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களும் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன. 

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கின்ற ஒரு சாதனம், குறுகிய காலத்திலேயே மிகப் பழைய சாதனமாக, எந்த வகையிலும் பயனற்ற ஒன்றாக மாறி வருகிறது. இப்போது யார் டயலைச் சுழற்றி தரைவழி இணைப்பு தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர்? 

பலருக்குத் தங்கள் மொபைல் எண்களே மறந்து போகின்றன. நமக்கு நெருக்கமான மனைவி மற்றும் நம் குழந்தைகளின் தொலைபேசி எண்களைக் கூட நினைவில் வைக்காமல், அவற்றைப் பயன்படுத்தும் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். 

கம்ப்யூட்டர்களின் இடத்தில் லேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன் என சுழன்று வருகின்றன. இணையத் தொடர்பின் வேகம் மின்னலுக்கு ஒப்பாகி வருகிறது. டிஜிட்டல் திரைகள் விரிந்து, நம் விழிகளின் அசைவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் நாள் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இவ்வாறு விரியும் டிஜிட்டல் சாதனங்கள் இனி எப்படி அமையும் என்பதை இங்கு காணலாம்.


1. லேப்டாப்:

லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் பிசிக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வேகமாகக் குறைந்து வருகிறது. அமைதியாக இணைய உலா வர, மின்னஞ்சல் நிர்வகிக்க, பாட்டு கேட்க, படம் பார்க்க என டேப்ளட் பிசிக்கள் பயன்படுத்தப்பட்டன, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றின் மூலம் அறிவுத் திறனாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால்

விண்டோஸ் 8 - டாஸ்க் மானேஜர் அப்கிரேட்

விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம்.

ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl + Shift + Esc கீகளை அழுத்தவும். உடன், கிடைக்கும் விண்டோவில், மாறா நிலையில், புதிய Process tab அழுத்தப்பட்டு கிடைக்கும்.

இந்த டேப்பில் புரோகிராமின் பெயர், அது சி.பி.யுவில் பயன்படுத்தும் திறன், பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் மெமரி பயன்பாடு, டிஸ்க்கில் பயன்பாட்டிற்கான இடம் மற்றும் நெட்வொர்க் பயன்பாடு ஆகிய தகவல்கள்

Sep 25, 2013

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்:-

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்:-

இலந்தை பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள்,மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளைமை போல் அரைத்து வெட்டுக்காயம்
மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக்கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

பித்த மயக்கத்தை போக்கும்

உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்து ம் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்:-


40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்:-

40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

உடல் எடை அதிகரித்தல்

மன அழுத்தம்

சர்க்கரை நோய்

அதிக அளவில் கொழுப்பு சேருதல்

உயர் ரத்த அழுத்தம்

இதய நோய்

எலும்பு மூட்டு நோய்கள்

புற்று நோய்

வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :

மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது

மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

News Serviceமூலநோய் என்பது மலக்குடலிலுள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கமாகும். மூலநோய் ஏற்படுவதற்கு ஆசனவாயின் நரம்புகளில் ஏற்படக்கூடிய அழுத்தம், குழந்தை பிறப்பு, நாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியான உடல் பருமன், வயிற்றுப்போக்கு, மிக கனமான பாரத்தை தூக்குதல், நீண்ட நேரம் நிற்கும் அல்லது அமரும் சூழ்நிலை, குடும்ப வரலாறு மற்றும் துரித உணவு போன்றவை காரணங்களாகும். மூலநோயை அறுவை சிகிச்சை, பேண்டிங் போடுதல் மற்றும் ஸ்டாப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளால் சரிசெய்யலாம்.

 
எந்தமாதிரியான உணவு உட்கொண்டால் மூலநோய் தவிர்க்கலாம்?

நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால் எந்த பிரச்னையுமில்லாமல் எளிதாக மலம் வெளியேறும். துரித உணவு மற்றும் தண்ணீர் சரியாக அருந்தாமலிருக்கும்போது மலம் இறுகி வெளிவருவதற்கு சிரமம் ஏற்படும். எனவே, கடினமாக முயற்சி செய்து மலத்தை வெளியேற்றும்போது மூலம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...