Feb 15, 2014

.சீனாவில் ரூ.2லட்சத்து 22 ஆயிரம் கோடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதை


பீஜிங் உலகிலேயே மிக நீளமாக நீருக்கு அடியில் சுரங்க ரயில் பாதையை சீனா ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடியில் அமைக்க முடிவு செய்துள்ளது.சீனாவில் உள்ள போகாய் கடல் பகுதியில் லியாவ்னிங் மாகாணத்தில் உள்ள தாலியாங் நகரத்தில் இருந்து ஷான்டாங் மாகாணத்தில் யண்டாய் நகர் வரை நீருக்கு அடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதையை அமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சீனாவின் சுரங்க ரயில் பாதை நிபுணர் வாங்மெங்சு கூறுகையில், Ô2012ம் ஆண்டு முதல் இந்த பாதையை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி கிடைத்ததும் 2015 அல்லது 2016ல் பணிகள் தொடங்கும். கடலுக்கு அடியில் 123 கிமீ தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க சுமார் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் மிக நீளமான நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதையாக இருக்கும் என்றார்.ஏற்கனவே நீருக்கு அடியில் ஜப்பானின் ஷெய்கான் சுரங்க பாதையும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கடலுக்கு அடியிலான சுரங்க ரயில் பாதையும்தான் மிக நீளமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ராட்சத்தின் உண்மை தன்மை


ருத்ராட்சத்தின் உண்மை தன்மை
ருத்ராட்சத்தின் சிறப்பு அதன் முகங்களேயாகும். இயற்கையாகவே அதன் மேற்பரப்பில், உருவாகும் நெடுக்கான கோடுகளே அதன் முகங்கள் எனப்படும். அவை ஒரு முகத்திலிருந்து, இருபத்தியோரு முகங்கள் வரையிலும் உள்ளன.

(அதற்கும் மேற்பட்ட முகங்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் உள்ளன) ஒரு இலந்தைப் பழத்தின் அளவில் இருப்பது மத்தியமான தரம் உள்ளதாகும். அதிலிருந்து அளவு கூடக்கூட அதன் தரமும் கூடும். அதிலிருந்து

Feb 12, 2014

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தியானுக்கு அழகாக அமைக்கப்படவுள்ள ஏழுதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு வைபவத்தின் முழுமையான வீடியோப்பதிவு!



1620539_10202102396179603_1312105875_n

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-அழகுற அமைக்கப்படவுள்ள-ஏழுதள இராஜகோபுரத்திற்கான   அடிக்கல் நாட்டும் வைபவம் 22-01-2014 புதன்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது நீங்கள் அறிந்ததே!
வடமாகாணத்தில் பிரபலமான  ஸ்தபதி சிற்பக சிந்தாமணி  அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்)அவர்களினால்  21 மாத கால ஒப்பந்த அடிப்படையில்

வியப்பைத் தரும் விண்டோஸ் 8


windows-8-logo 
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.
வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன. அவற்றில் http://news.cnet.com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/என்ற முகவரியில் உள்ள தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.
சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ்

தெருப்பார்வைக்கு வருகிறது தாஜ்மஹால!

!

உலக அதிசயங்களில் ஒன்றாக
விளங்கும் இந்தியாவின் தாஜ்மஹால்
விரைவில் கூகுள்
தெருப்பார்வைக்கு வருகிறது.

இனி வீட்டிலிருந்தே எந்த செலவும்
இல்லாமல் தாஜ்மஹாலை சுற்றிப்
பார்க்கலாம்.
கூகுள் மேப்பில் உள்ள தெருப்பார்வை
(Street View) வசதியைப்
பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உலகத்தில் உள்ள பிரபல கட்டிடங்கள்,
பாரம்பரிய சின்னங்கள் மற்றும்
சாலைகளை 360 டிகிரி படங்களாக
நேரில் பார்ப்பது போன்ற வசதி.
தற்போது தாஜ்மஹால் உள்பட
இந்தியாவில் உள்ள நூறு பாரம்பரிய
புராதான
சின்னங்களை தெருப்பார்வைக்கு கொண்டு
வரப்போகிறது கூகுள். இதற்காக
இந்தியத் தொல்லியல்
ஆய்வகத்துடன் (Archaeological
Survey of India (ASI) )
இணைந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.

தாஜ்மஹாலை சுத்தி பார்க்க
தயாரா?

இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல்



இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்தி வருவது போன்று இருப்பதால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தினமும் இதே பிரச்னை... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகர்

இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இ
டையில் வால்வு ஒன்று இருக்கிறது. இந்த
வால்வு பழுதுபட்டால் இந்தப் பிரச்னை வரும். இதனை ‘எதுக்களித்தல்’

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?



உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கும் தன்மை புற்றுநோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ராஜா. புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின் தன்மை குறித்து இதோ அவரே விளக்குகிறார்... புற்றுநோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.

அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது. மரபணு, பரம்பரை... என பல அம்சங்கள் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்களாய் இருக்கின்றன. பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப்படுத்த முடியும்.

Feb 11, 2014

கூகுள் தேடலில் அடிப்படைகள்



இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். 

இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம்.


முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம் தரும் தகவல்களின் படி, கூகுள் சர்ச் என்னும் பிரிவு, 1997ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin). 

இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இந்த தேடல் தளம் வழியாக 300 கோடிக்கும் மேற்பட்ட தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த

ரத்தம் எனும் உயிர்த் திரவம்!



ரத்தம் எனும் உயிர்த் திரவம்!
உயிரினங்களின் உடல் இயக்கம் ரத்த ஓட்டத்தின் வழியே நடக்கிறது என்றால் வியப்பில்லை. உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை ரத்தமே. கழிவுகளை அகற்றுவதற்காக சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் ரத்தமே. ரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவமும், ரத்த செல்கள் எனும் நுண்பொருட்களும் உள்ளன. பிளாஸ்மா மஞ்சள் நிறம் கொண்டது.

பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. இந்த புரதப் பொருட்கள் குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். காயம்பட்ட இடத்தில் ரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம். குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!


இஞ்சியின் மருத்துவ குணங்கள்!

இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியது. இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது

மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்

மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்
திடீரென உயிரைப் பறிக்கும் அபாயம், மாரடைப்பு. இன்று மாரடைப்பு, அரிய மனித உயிர்களைப் பறித்துவருவதை கண் முன்னால் காண்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணிகள்.

அதாவது, இயற்கையாகவே அமைந்த காரணிகள். இவற்றை நாம் மாற்ற முடியாது. உதாரணமாக, ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் போன்றோருக்கு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...