Apr 22, 2014

புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல்


புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மஹராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ளது சந்ரபூர் கிராமம், கிராமத்திற்குள் நுழைந்த புலி ஒன்று மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதையும், கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் கிராமவாசி ஒருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். 

வீடொன்றிக்குள் நுழைந்த புலி கூரை ஊடாக மேலே வருவதும் பின்னர் அங்கிருந்த மனிதர்களை தாக்குவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.  - See more at: f

Kanavinilum Thedukinrean கனவினிலும் தேடுகின்றேன் (Even




Kanavinilum Thedukinrean கனவினிலும் தேடுகின்றேன் (Even


Apr 20, 2014

தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்கோலாலம்பூர், ஏப்.21-

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 'எம்.எச்.192' என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தும் 'கியர்' செயலிழந்ததால் தொடர்ந்து நான்கு மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தது.

போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க 'லேண்டிங் கியர்' திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.

இந்நிலையில், இதை கவனித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தகவல் வழங்கியதை தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)

மனிதன் எங்கிருந்து வந்தான்? (வீடியோ இணைப்பு)

வரலாற்றில் இன்றைய தினம்: 1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
1918 - உலகிலேயே முதன்முதலாக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் நியூயார்க் நகரில் செயல்படத் துவங்கின.
1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1882 - பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை கண்டறிந்த சார்லஸ் டார்வின் இறந்த நாள்.

கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.



கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன.
கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார்.
அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார்.
கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர்.
மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான், போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள்.
அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர்.
அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி,"அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்'' என்றார்.
பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.
தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர், தோமாவோ இதை நம்பவில்லை.
அப்போது இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி “சந்தேகப்படாதே” என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார்.
அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி,"கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று கூறினார்.
அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்.
ஈஸ்டர் முட்டை
முட்டையானது ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் கருதப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
ஈஸ்டர் விழா அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.
அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது.
ஆனால் தற்கால வழக்கில் சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

Apr 19, 2014

மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்

மகளின் கர்ப்பத்தால் குஷியில் இருக்கும் கிளிண்டன்
மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34).
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் செல்சியா தற்போது முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரியும் தாத்தா– பாட்டி ஆக போகும் சந்தோசத்தில் இந்த தகவலை 2 நாட்களுக்கு முன்பு முறைப்படி அறிவித்தனர்.
செல்சியாவுக்கு இந்த அண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மானை வேட்டையாடிய சிறுத்தை இந்திய போட்டோகிராபர் எடுத்த அபூர்வ படங்கள்

மானை வேட்டையாடிய சிறுத்தை இந்திய போட்டோகிராபர் எடுத்த அபூர்வ படங்கள்

Apr 15, 2014

இந்த காரில் உள்ள அதி நவீன தொழில்நுட்பத்தை பாருங்கள்



என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர் பிறை வடிவம்  இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை க் குறிக்கும். நகங்களில் சொத் தை விழுந்து கறுத்து காணப் பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச்
சத்துகள் கிடைக்கவில் லை என்று பொருள்.
நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்ப தைக் காட்டுகிறது. 
விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதய ம் பலவீனமாக இருப்பதா க அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளி கள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப் பதற்கு அடையாளம்
கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற் கான அடையாளம்.
- ஹேமா மேனன்

ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம்

உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய்.
உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும்.
அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் உறையாமலே இருக்கும் பிரச்சினைதான் ஹீமோபீலியா. பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்நோய், பரம்பரை சம்பந்தப்பட்டது.
தேவை எச்சரிக்கை
பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் ஆனாலும் உறையாது. "பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாஸ்கரன்.
இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமசோம்களாகவும், பெண்கள் உடலில் xx குரோமசோம்களாகவும் இருக்கும். X குரோமசோமில் ஏற்படும் குறைபாடே இந்நோய்க்கு முதன்மைக் காரணம். x குரோமசோமில் உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் என்பதால், ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்தப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...