Aug 3, 2014

nalur kanthaN 3NAL

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...

வேல் தர்மா: அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Cl...: ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்...

Jul 28, 2014

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

Jun 26, 2014

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

Pendrive வை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட
நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Jun 23, 2014

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது


இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி குணமாக்குவது?
உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை.

வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”என்றார்.
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.

” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.இவ்வளவு தானா… இல்லை,

பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால்,
அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!.
அவ்வளவு தானா அதுவும் இல்லை, 

மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் எப்பொழுது வரும் என்று கூற முடியாது. ஒருவேளை இவ்வாறான இயற்கை அனர்ததங்களினால் தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்கும் போது “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று இதற்கு தான் சொன்னார்களா என்று யோசிக்க தோன்றுகிறதல்லவா???மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது.
” கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earthing the thunder) கலசங்களுக்கு கொடுக்கின்றன.
(நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்

Jun 22, 2014

'இரவில் படுத்ததும் இருமல் வருகிறதே'


இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
இரு காரணங்களால் இப்பிரச்னை வரலாம். முதல் காரணம், இரவில் நீங்கள் உறங்கும் போது சளி, மூச்சுக்குழாயின் பின்புறம் வழியாக நுரையீரலுக்குள் செல்வதால்
இருக்கலாம்.
இண்டாவதாக, இரவில் லேட்டாக சாப்பிட்டு, உடனே படுத்து விடுவதால் இருக்கலாம். உணவு சரியாக ஜீரணம் அடையாமல், படுத்தவுடன் உணவுத்துகள் மூச்சுக்குழாய்க்குள் வருவதால் தொந்தரவு ஏற்படும். எனவே உடன் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுக்கு தாமதமாக சாப்பிடும் பழக்கம் இருந்தால், உடனடியாக மாற்றிக் கொள்வதுதான். இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை பின்பற்றியும் இருமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும். இருதய பிரச்னையால் கூட இதுபோன்ற

Jun 20, 2014

பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்

பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள் !!!
பாதாம் பருப்பில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள் !!!

இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம்

Jun 19, 2014

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் தான் பார்த்துப்பார்த்து செய்வார்கள். குறிப்பாக ஜாதகப்பொருத்தத்தை  கவனமாக பார்ப்பார்கள். அந்த வகையில் திருமண பொருத்தத்தை நீங்களே (வாசகர்கள்) அறிந்து கொள்ள இதோ டிப்ஸ்...

1. தினப் பொருத்தம்: 


மணப்பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று  வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு. இதுதவிர பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண்  தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப்பொருத்தம்தான். இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தாலே தினப்பொருத்தம்தான்.  ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் இது பொருந்தாது.  மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தம்தான்.

2. கணப் பொருத்தம்: 

தேவகணம், மனித கணம், ராட்சஸ கணம் என்று மூன்று கணங்கள் உள்ளது. தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி,  அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்  இவை அடங்கும். மணமகன், மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் திருமணம் செய்யலாம். இருவரும் ராட்சஸ  கணத்தவராக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், கணப்பொருத்தமாகும்.

3. மகேந்திரப் பொருத்தம்: 

பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும்.  இதன் மூலம் புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: 

மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று  கொள்ளலாம். 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம்.

5. யோனிப் பொருத்தம்: 

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மிருக அம்சம் உண்டு. அதாவது, அசுவினி, சதயம் -குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி,  மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-  பசு; ஹஸ்தம், சுவாதி -  எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை  -மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி  -சிங்கம். இந்த  மிருக அம்சங்களில், குதிரை- எருமை, யானை- சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு -எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி- பாம்பு, மான்-நாய் ஆகிய இவை  ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம்  என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: 

மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம். எண்ணிக்கை எட்டாக இருத்தல்  கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசி யாக அமையுமானால் ஆறா மிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம்.  அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி  அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: 

மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால்  விசேஷம். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது.

8. வசியப் பொருத்தம்: 

ராசிகளில் உடன்பாடானவை, அல்லாதவை என்பதை அறிந்து பொருத்தம் அறியலாம். மேஷத்துக்கு  சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு  கடகம், துலாம்;  மிதுனத்துக்கு  கன்னி; கடகத்துக்கு  விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு  துலாம்; கன்னிக்கு  மிதுனம், மீனம்; துலாமுக்கு  கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு   கடகம், கன்னி; தனுசுக்கு  மீனம்; மகரத்துக்கு  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு  மேஷம், மீனம்; மீனத்துக்கு மகரம் என்று வசியப் பொருத்தம்  சொல்லப்பட்டிருக்கிறது.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: 

அசுவினி, மகம், மூலம் ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி  அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம்,  உத்திரட்டாதி  அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி  அவரோக உதர ரஜ்ஜு;  ரோகிணி, அஸ்தம், திருவோணம்  ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம்  அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்  சிரோ  ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,  ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் ; இரண்டு  நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் , ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு.

10. நாடிப் பொருத்தம்: 

அசுவினி, திரு வாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை.  பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம்,  ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால்  நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...