Nov 2, 2014

மருத்துவ செய்தி என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமா?




அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
இளமை என்று ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும்.
ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம்.
நிறைய பேர் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்காக நிறைய ஆன்டிஏஜிங் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை.
ஆனால் இந்த பிரச்னைக்கு உணவு,

நாள் முழுவதும் களைப்பா இருக்கா? இது தான் காரணமாக இருக்கும்



நாள் முழுவதும் களைப்பா இருக்கா? இது தான் காரணமாக இருக்கும்

சில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது அதிக சோர்வாக இருக்கும்.ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால் உடனே தங்களது உடல் மேல் கவனம் செலுத்துவது அவசியம்.
ஏனெனில் உடலில் தோன்றும் ஒரு சில பிரச்சனைகளால் தான் உடல்நாள் முழுவதும் களைப்பாக இருக்கும். இவை உடலில் இரத்த அழுத்தம் குறைந்துள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
மன அழுத்தம்
மன இறுக்கம் அதிகம் இருக்கும் போது, மூளையானது எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிடும். எனவே மன இறுக்கத்தில் இருந்து வெளிவர நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பிடித்தவருடன் நேரத்தை செலவழிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்று செய்யலாம்.
ஜங்க் உணவுகளை உண்பது
ஜங்க் உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதால் தான், அவற்றை உண்ட பின்னர் உடல் மந்தமாக இருக்கும். இப்படி இதனை அதிகம் உண்டு வந்தால், பின் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் பருமனடைந்துவிடும்.
இதய நோய் அறிகுறி
இதய நோய் இருந்தால், இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதுடன், உடலில் உள்ள செல்களுக்கு போதிய ரத்தத்தை செலுத்த முடியாமல், உடல் ஆற்றல் இன்றி களைப்பாக இருக்கும்.
காலை உணவை தவிர்ப்பது
தற்போது பலர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று, காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் 8 மணிநேர தூக்கத்திற்கு பின், உடல் சீராக செயல்பட ஆற்றல் தேவைப்படும். அத்தகைய ஆற்றல் காலை உணவின் மூலம் தான் கிடைக்கும்.
மற்ற நேரங்களில் வயிறு நிறைய உணவை உண்டாலும், அவை உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு பதிலாக, கொழுப்பை அதிகரித்து, உடலில் உள்ள களைப்பை நீக்காமல் இருக்கும். எனவே எப்போதும் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது.
உடற்பயிற்சியை தவிர்த்தல்
தற்போது அனைத்து அலுவலகங்களிலும் வேலைப்பளு அதிகம் இருப்பதால், இரவில் தாமதமாக தூங்குவதுடன், அதிகப்படியான அசதியினால் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், எப்போதும் சோர்வுடன் இருக்க நேரிடுகிறது. எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.
குறைவாக தண்ணீர் குடிப்பது
உடல் ஆற்றலின் அளவை சீராக பராமரிக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை சரியான அளவில் தினமும் பருகாமல் இருந்தால், உடலில் மெட்டபாலிசம் எதுவும் இல்லாமல், உடலுறுப்புக்கள் வறட்சியடைந்து, சரியாக செயல்படாமல் போகும். இதன் காரணமாக, உடலானது மிகுந்த சோர்வுடன் இருக்கும்.
வைட்டமின் பி12 குறைபாடு
நீங்கள் சைவமாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படக்கூடும். ஏனெனில் இந்த சத்தானது அசைவ உணவுகளில் தான் அதிகம் இருக்கும். எனவே சைவ உணவாளர்கள் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
அதிகப்படியான தூக்கம்
சிலர் விடுமுறை தானே என்று 10 முதல் 12 மணிநேரம் தூங்குவார்கள். இப்படி வார இறுதி நாட்களில் தூங்கியவாறே இருந்தால், அப்போது உண்ணும் உணவுகள் உடலில் எனர்ஜியை அதிகரிக்காமல், மாறாக கொழுப்புக்களாக உடலில் தங்கிவிடும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 8 மணிநேர தூக்கமே போதுமானது.

Oct 31, 2014

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப் பெரிய
அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

அடுத்த‍மாதம் (அதாவது டிசம்பர் மாதம்), நிகழ‌விருக் கும் மிகப் பெரிய அபாயம்-மக்களே சந்திக்க‍ தயாராக இருங்கள் – விஞ்ஞானிகள் எச்ச‍ரிக் கை
மனிதர்களுக்கு புலப்படாத புதிர்களில் ஒன்றுதான் இந்த விண்வெளி. என்ன‍தான் மனிதன், விண்வெளிக் கு சென்று வந்தாலும் அல்ல‍து இன்னொரு கிரகத்தி ற்கு செயற்கை கோள்கள் அனுப்பினாலு ம், அவனால், விண்வெளியில் நிகழும் புதிரை அறிந்துகொ ள்ள‍ பகீர பிரயத்தனம் செய்யவேண்டியுள்ள‍ து. சில ஆண்டுகளுக்குமுன், பூமியைநோக்கி ஒருஎரி நட்சத்திரம் வந்துகொண்டிருக்கிறது. அது பூமியின்மீது மோதினால், பூமியே அழிந் துவிடும் என்றும். ஒருசில ஆண்டுகளுக்கு மு ன்னால் சூரிய புயல் வருகிறது பூமியை அழி ந்து விடப்போகிறது என் பன போல் பல்வேறு செய்திகள் வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள். (என் நினை வுக்கு வந்தது இந்த இரண்டுதான், ஆனால் கேள்விப்பட்ட‍து எத்த‍ னையோ)
அனால் தற்போது ஒரு பிரச்சனை மிகவும் பூதாகாரமாகி விஸ்வரூ பமெடுத்து நிற்கிறது. அதுதான் சூரிய புயல் இந்த சூரிய மண்டலத்தி ல் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்புஏற்படும். பெரும்பா லான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற் கைக்கோள்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பய ங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.
டிசம்பர் மாதம் 16ம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22ம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ் ஞானிகள் கணித்துள்ளனர்.கடந்த 250 ஆண் டு கால வரலாற்றில் இல்லாத அளவுக் கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என் று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம் பிவிடும். தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப் பாகசூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும். இதன் காரண மாக டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந் த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ் ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய மண்டல புயல், பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதி ப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத் து மக்கள் பயப்படவேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய மண்டல புயலால் ஏற்படு ம் தூசி, துகள்கள் 220 மணிநேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்ட து போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டு கோள் விடுத்துள்ளது.

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல் || December 6 days world sinking into darkness nasa information

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல் || December 6 days world sinking into darkness nasa information

Modern U.S. Nuclear Submarine Design (720p)

Oct 26, 2014

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்

அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்துவிடும்.

அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.

இராகு கேது பெயா்ச்சி 2014 உங்களுக்கு எப்படி | TAMILKINGDOM

இராகு கேது பெயா்ச்சி 2014 உங்களுக்கு எப்படி | TAMILKINGDOM

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று
ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். 

பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். 

ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும். செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும். 

உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. 


காரட்

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு


மாதுளை


புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து

நாவல்பழம்


நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளுக்கோசைட் உள்ளது.இதன் செயல்பாடு மூலம் உடலுக்குள் ஸ்டார்ச்சைசர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.தினமும் நாவல் பழ விதையை காயவைத்து பொடி செய்து தயிரில்கலக்கி இருவேலை குடித்தால் சிறுநீரிலும்,ரத்ததிலும் இருக்கும் குளுகோஸ் பெருமளவு குறையும் என்கிறார்கள் ல்க்னோவில் உள்ள நீரழிவு ஆராய்ச்சி மையத்தில்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...