Jan 3, 2022

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – அதிரவைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழிமுறைகளும்!

 

கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – அதிரவைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழிமுறைகளும்!


கணிணியில் பணிபுரிபவரா நீங்க? – உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவலும்! தப்பிக்கும் வழி முறைகளும்!
நாம் எப்போதெல்லாம்
கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னு ம், கழிவறையைப் பயன்படு த்தியபிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்தபிறகு எனத் தே ர்ந்தெடுத்த சில வேலைக ளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டு மென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பய ன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினை க்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச் சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக் கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நி னைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிக ள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக் டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசு வோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூ ட்டரில்தானே வேலை பார்க்கி றோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இரு ந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும்.
கிருமிகளின் பட்டியல்
லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுக ளைப்பரிசோதனைக்கு உட்படுத் தினார்கள். அதில் ஒரு கம்ப்யூ ட்டரில் அனுமதிக்கப்பட்ட பாக்டீ ரியா அளவை விட 150 மடங்கு அதிகமான கிருமிகள் இருந்திரு க்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன.
அவற்றில் கழிவறைக் கதவின் கைப்பிடியிலும் கழிவ றை பேஸினிலும் காணப்படக்கூடிய ஈகோலி, கோலி பார்ம்ஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரஸ், எண்டிரோ பாக்டீரியா போன்ற கிருமிகள் இருப் பதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்க ளே அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இப்படிக் கிருமிகள் நிறைந்திருக்கும் கீ போர்டைத் தொடர்ந்து பயன்படுத் தி வந்தால் வயிற்று வலி, தொடர்ச்சியா ன வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவர் கள் எச்சரிக்கிறார்கள்.

சுத்தத்துக்குப் பேர் போனவர்கள் என்று நாம் நினைக் கும் வெளிநாடுகளில் இந்த நிலைமை என்றால், நம் அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன் படுத்தும் கம்ப் யூட்டர்களைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப்பாருங் கள்.
சுத்தம் உங்கள் கையில்
தனிநபர்கள் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறு த்தே கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதற்குள்ள வாய்ப் பும் அமைகிறது. பலர் கழிப்பறை யைப் பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்த ம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட் டரின் முன்னால் அமர்ந் து கொண்டு கைக்குட்டை யால் முகத்தை மூடாமல் இருமுவதும் தும்முவது ம் சகஜம்.
இதுபோன்ற பழக்கங்களா லும் கீ போர்டில் கிருமிகள் பல்கிப் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளி யோ,இரப்பை குடல்அழற்சியோ இருந்தால், அவர்பயன்படுத்திய கீபோர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போ தும். அவருடைய நோய்கள் நம க்கும் மிக எளிதாகத் தொற்றி  விடும்.
நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கொ ண்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வ துதான், நமக்குக் கைவந்த கலையா யிற்றே. அதனால் கம்ப்யூட்டரில் வே லை செய்துகொண்டே எதையாவது கொறிப்பது அல்லது குடிப்பது என்ப தைப் பலரும் வழக்கமாக வைத்திரு க்கிறார்கள்.
அப்படிச் சாப்பிடும் உணவுப்பொருள் தெரியாமல் கம்ப் யூட்டர் கீ போர்டில் விழுந்துவிடும். அப்படி விழுகிற உண வுத் துணுக்கை ஆதாரமாகக் கொண் டு பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி விடும்.
சுய சுத்தத்தை விடுங்கள். நம்மில் எத்தனை பேர் கம்ப் யூட்டரையும் மவுஸையும் அடிக்கடி சுத்தம் செய்கி றோம்? கீ போர்டில் தூசுப் படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார் த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல் லையென்றால் இது அலுவ லக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள் வார்கள் என்றநினைப்பு, சுத்தத்தைத்துரத்திவிடுகிறது.
சிலஅலுவலகங்களில் இடம்மாறியோ, வேலைநேரம் மாறியோ ஷிப்ட்களில் வேலை செய்வார்கள். அப்போது ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படு த்த நேரிடும். இதுபோன்ற சூழ்நி லையில் சுத்தம் செய்வது எவ்வ ளவு தூரம் கேள்விக்குறியோ, அவ்வளவு தூரம் கிருமிகள் பரவுவதும் நிச்சயம்.
என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட கால இடைவெளி யில் கீ போர்டு, மவுஸ், செல் போன் ஆகியவற்றைச்சுத்தப் படுத்தவேண்டும். கீபோர்டை த் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூல ம் அதனுள்ளே சிக்கியிருக்கு ம் உணவுத் துணுக்குகளையோ, சிறியகுப்பையையோ அகற்றலா ம். மெல்லிய துணியின் மூலம் இவற்றைத் துடைத் தெடுக்கலாம்.
  • இவை அனைத்தையும்விட ரொம்ப முக்கியம் சுயச் சுத் தம். எங்கெல்லாம் கிருமித்தொ ற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்றுவந்த பி றகு கைகளைச் சுத்தம் செய்வது நல்லது. அதுவும் வெறும் தண் ணீரிலோ அல்லது சுத்திகரிப் பான் மூலமாகவோ சும்மா கழுவுவதால், பாக்டீரியாக் கள் முழுமையாக அழிவதில்லை. சுத்திகரிப்பானைப் பயன்படுத்திக்கு றைந்தபட்சம் 30 விநாடிகள் தேய்த்து க் கழுவ வேண் டும்.

அதேபோலச் சாப்பாடோ, கொ றிப்போ எதையும் தூசி பறக்கு ம், மனிதர்கள் அதிகம் நடமாடு ம் பகுதிகளிலோ சாப்பிடுவதை த் தவிருங்கள். இப்படிச் சுத்தத் தைப் பரா மரிக்கத் தவறினால் பின்னால், அவதிப்படப் போவது வேறு யாருமல்ல, நாம்தான்

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?

 

நில நடுக்கம் (பூகம்பம்) எவ்வாறு ஏற்படுகின்றது?



அது ஏற்படுவதற்கான காரணம் என்ன‍? அதனால் ஏற்பட்ட‍ பாதிப்பு கள் என்ன? சுனாமி என்றால் என்ன‍? அது எவ்வாறு ஏற்படுகின்றது?  சுனா மியில் ஏற்பட்ட‍ பேரழிவுகள் யாவை?
நில நடுக்கம்
ந‌மது பூமியின் மேற்பரப்பு ஆடாமல் அசையாமல் உறுதியாக இருப்ப‍தாகக் கருதுகிறோம். இதற்கான காரணத் தை நம்மால்அளிக்க‍முடியும். வானை த் தொடும் அளவுக்கு உயர்ந்த பல மாடிக்கட்டிடங்கள் பெரியநகரங்களில் கட்ட‍ப்பட்டுள்ள‍ன அல்ல‍வா ? பூமியின் மேற்பரப்பு உறுதியாகவும் அசையாமலும் இருப்ப‍தால்
தானே இக்கட்டிடங்கள் விழுந்து விடாமல் நிலைத்து நிற்கின்றன என்று கேட்டதும்புரிகின்றது.
ஆனால் அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வ‍ப்போ து நிலநடுக்கம் எனப்படும் பூகம்ப ம் ஏற்பட்டு பெருத்த‍ளவில் சேதங்கள் உண்டாகி வருவது நாம் அறி ந்ததே!
2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இந்தோனேஷியாவில் ஏற் பட நிலநடுக்க‍ம் மற்றும் அத னைத் தொடர்ந்து உண்டான சுனாமி அலைகளின் தாக்கு தலுக்கு 2 லட்சத்திற்கும் மே ற்பட்டோர் பலியாயினர்.
2001ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் காலை நாம் குடிய ரசு தின விழாக் கொண்டாட் டங்களைத் துவக்க‍ இருந்த சமயத்தில் குஜராத் மாநிலத் தில் ஏற்பட்ட‍ நில நடுக்க‍த்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரழ ந்தனர். 4,00,000 வீடுகள் இடிந்து விழுந்தன•
1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் அதிகாலை அனைவரும் உறங் கிக் கொண்டிருந்தனர். அப்போது மகா ராஷ்டிர மாநிலம்லாத் தூர் பகுதியில் ஏற்பட்ட‍ நிலநடுக்க‍த்தில் 10,000 பேரு க்கு மேல் இடி பாடுகளுக்குஇடையே சிக்கி உயிரழந்தனர். 30,000க்கும் மே ற்பட் டோர் காயமடைந்தனர்.  
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் மு ழுவதும்பெரிய அளவிலான நிலநடுக் கங்களைத் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன• இதனால் ஏராளமான அளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் உண்டாகின்ற ன• ஆகபூமியின் மேற்பகுதியில் அ வ்வ‍ப்போது திடீரென நில அதிர்வு கள் ஏற்பட்டு பூமி ஆட்ட‍ம் காணும் நிகழ்வே நில நடுக்க‍ம் அல்ல‍து பூகம்பம் எனப்படும். பெரிய அளவில் முதல் நில நடுக் க‍ம் ஏற்பட்ட‍பி ன் சிறு அளவிலான அதிர்வுகள் நெடுநாள் வரை தொடர்ந்து நிகழ்ந் து கொண்டே இருக்கும். இவை பின் அதிர்வுகள் எனப் படும்.
நிலநடுக்கம் ஏன் எவ்வாறு ஏற்படுகின்றது?
பூமியின் உட்பகுதி பல அடுக்கு களைக்கொண்டிருக்க‍ அமைந் துள்ள‍து.
மேற்பரப்பான முதலடுக்கு திட த் தன்மையுடன் காணப்படுகின் றது. அதற்குக்கீழே அமைந்துள் ள‍ இரண்டாமடுக்கு ஓர் உலை களின்போல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்ப‍தால், இந் த அடுக்கு அதிக வெப்ப‍நிலையைப்பெற்றுள்ள‍து. (எரிமலைச்சீற்ற‍த்தின்போ து லாவா  எனப்படும் பாறக் குழ ம்புகள் வெளியேறுவது இதனா ல்தான் இதன் காரணமாக இங் குள்ள‍ பாறைகள், கனிம தாது ப்பொருட்கள் அனைத்தும் உரு கி, பாகுபோன்ற நிலையில் உ ள்ள‍ன• பூமியின் மேல் அடுக்கு இதன்மீது மிதந்த வாறு, தொட ர்ந்து அசைந்து கொண்டே உள் ள‍து. பூமியின்மேல் அடுக்கு பூமித்தட்டு என்றும் அழைக்கப்படும். பூமித்தட்டில் ஆங்காங்கே பிள வுகள் காணப்படுகின்றன• இப்பிளவுகளின் விளிம்பு எல்லையை ஓட்டி பூமித்தட்டுகள் அசைந் தவாறு நகர்ந்து கொண்டுள் ள‍ன•
ஒருசிறு மூங்கில்குச்சியை இ ருகைகளிலும் பிடித்துக் கொ ண்டு வளைத்தால் ஒரு குறிப் பிட்ட‍ அளவுக்கு அது வளைந் து கொடுக்கும். அதன்பின்ன‍ர் நாம் கொடுக்கும் அழுத்த‍ம் தாளமாட்டாமல், குச்சி இரண்டாக உ டைந்துவிடும் அதே போலத்தான் பூமித்தட்டுக்களின் இயக்க‍த்திலு ம் நிகழ்கின்றது.
இரண்டுபூமித்தட்டுக்கள் தத்தம் விளி ம்பு எல்லைகளை ஒட்டி வெவ்வேறு திசைகளில் நகரும்போது ஒரு குறிப் பிட்ட‍ எல்லைவரை அவை வளைந் து கொடுக்கும் பூமித்தட்டுக்களின் நகர்வு குறிப்பிட்ட‍ அளவைத் தாண் டும்போது மேலே சொன்ன‍ உதாரண த்தில்கூறியதுபோல் பூமித்தட்டுக்க ள் நகர்வு இயக்க‍த்தின் அழுத்த‍ம் தாங்கமுடியாமல் உடைந்து விடு ம். அப்போது அளவற்ற‍சக்தி வெளியேறுகின்றது. நிலநடுக்கம் ஏற் பட்டு நில அதிர்வுகள் உண் டாவது இதனால்தான். பூமியி ன் விழுகின்றன• இது தவிர எண்ண‍ற்ற‍ பாதிப்புகளும் உண்டாகின் றன•
பூமித்தட்டுக்கள் உடைந்து ஏற்பட்ட‍ வெடிப்பு  
ஜப்பான், இந்தோனேஜியா போன்ற நாடுகளில் அடிக்கடி நில நடுக்க‍ ங்கள் ஏற்படுகின்றன• இதற்கு காரணம் என்ன‍? பசிபிக் பெருங் கட லைச் சூழ்ந்துள்ள‍ பூமித்தட்டின் விளிம் புப்பகுதி நெருப்புவளையம் என்று அழை க்கப்படுகின்றது. இப்பகுதிகளில் பூமித் தட்டுக்களின் அசைவு இயக்க‍ம் அதிகமா க உள்ள‍து. இதனமைப்புத்தான் இந்நெ ருப்பு வளையத்தின்மீது அமர்ந்து உள்ள‍ ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நா டுகளில் அடிக்கடி பெரிய நில நடுக்கங்க ள் ஏற்படுகின்றன•
நிலநடுக்க‍ம் மற்ற‍ இடங்களுக்கு எவ்வாறு பரவுகின்றது.
நிலநடுக்க‍த்தின் போது பூமிக்குள் ஒரு குறிப்பிட்ட‍ புள்ளியிலிருந்து திடீரென்று அளவற்ற‍ஆற்ற‍ல் வெளிப்படும். இப்புள்ளிக்கு குவியம்  என்று பெயர். இப் புள்ளியில் தோன்றும் நிலநடு க்க‍மானது, அதிர்வலைகள் மூலமாக மற்ற‍ இடங்களுக் கும் பரவச் செய்கின்றது. இப் புள்ளிக்கு நேர் செங்குத்தாக பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள‍ இடம் வெளி மையம் எனப்ப டும்.
குவியம், வெளி மையம்
குளத்து நீரில் கல்லைப் போட்டா ல் நீரில் கல் விழுந்த இடத்திலிரு ந்து அலைகள் உருவாகி வட்ட‍ வடிவில் பரவிஃ செல்வதைக் கா ணலாம். இவ்வாறுதான் நில நடு க்க‍த்தின் அதிர்வு அலைகளும் பரவிச் செல்கின்றன• நீர்நிலைகள் அதன் மேற்பரப்பில் கிடைமட்ட‍மாகப் பரவிச் செல்லும். நில அதிர்வு அலைகள் முப்ப‍ரிமாண வடிவில் அனைத்து திசைகளிலும் பரவிச் செல்லும். ஆற்ற‍ல் வெளிப்படும் குவியப் புள்ளியிலிருந்து தூரம் அ திகரிக்கும்போது அதற்கும்மோது அதற்குத் தகுந்தவாறு அதிர்வு அலைகளின் சக்தியும் குறைந்து கொண்டே செல்லும்.
குவியப்புள்ளி பூமியின்வெகு ஆழ த்தில் இருந்தால் அதிர்வலைகள் பூமியின் மேற்பரப்பை வந்தடையு ம்போது அவற்றின் ஆற்ற‍ல் பூமியின் மேற்பரப்பை வந்தடையும்போ து அவற்றின் ஆற்ற‍ல் குறைந்துவிடு ம். இதன் காரணமாக ஏற்படும் பாதிப் புகளும் குறைவாக இருக்கும். குவிய ப் புள்ளி பூமியின் மேற்பரப்புக்கு வெகு அருகில் இருந்தால் நில அதிர்வு மிக வும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இத ன் பாதிப்புகளும் தீவிரமாக இருக்கும்.
நில நடுக்கம் பதிவு செய்யும் விதம்
நில அதிர்வுமானி  என்ற கருவியின் மூலம் நிலநடுக்க‍த்தின்போது ஏற்ப டும் அதிர்வலைகள் பதிவு செய்ய‍ப் படுகின்றன• நம்மால் உணர இயலா த மிகவும் துல்லியமான அதிர்வுக ளைம் இக்கருவி அறிந்துகொள்ளும் .
நில நடுக்க‍ அதிர்வலைகள் இக்கரு வியினால் உணரப்பட்டு மின் அலை களாக மாற்ற‍ப்படும் பின்ன‍ர் இவை மின் கருவியில் பதிவு செய்ய‍ ப்படும். கணிணியின் உதவிகொண்டு இப்பதிவுகளை ஆய்வு செய் தால் நிலநடுக்க‍ம் ஏற்பட்ட‍ இடம், ஏற்பட்ட‍ நேரம், நிலநடுக்க‍ சக்தி யின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள‍லாம். குறைந்தது மூ ன்று வெவ்வேறு இடங்களில் செய்ய‍ப் பட்ட‍ பதிவுகள் தேவைப்ப டும்.
நிலநடுக்க‍ம் சக்தியை அளவீடு செய்யும் விதம்
நிலநடுக்க‍ம் எந்த அளவு சக்தி வா ய்ந்தது என்பது அது வெளியிடும் ஆற்ற‍லைப் பொறுத்து மதிப்பீடு செ ய்ய‍ப்படுகின்றது. இவ்வாறு மதிப்பிடப்பட்டு நடைமுறைக்குக் கொ ண்டு வரப்பட்ட‍து. தான் ரிக்டர் அளவு கோல் ஆகும். அமெரிக்கா வைச் சேர் ந்த சார்லஸ் ரிக்டர் என்ற புவி அறிவி யல் ஆய்வாளர் 1935ஆம் ஆண்டு இந் த அளவுகோல் முறையைக் கண்டறி ந்து நடைமுறைக்குக் கொண்டு வந் தார். இதன் வரையறை 1லிருந்து 10 வகை மதிப்புடையதாக உள்ள‍து. ரிக் டர் அளவுகோலில் 1 என்பது குறைந்த சக்திகொண்ட நில நடுக்க‍ த்தைக் குறிக்கும். இதை நாம் உணர இ யலாதளவுக்கு மிகவும் குறை வாக இருக்கும். அதிகபட்சமாக 9.3வரை நிலநடுக்க‍ங்கள்பதிவு செய்ய‍ப்பட்டுள்ள‍ன• இது தீவிர மான நில நடுக்க‍த்தைக் குறிக் கும்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் இந்தோனேஷியாவில் நில நடுக்க‍ம் மற்றும் அதனைத் தொ டர்ந்து ராட்சத அளவில் சுனாமி அலைகள் ஏற்பட்ட‍ன• அல்ல வா? இவற்றின் பாதிப்புகளால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்த‌து நாம் அறிந்த தே!
ரிக்டர் அளவுகோலில் இந் நில நடுக்க‍த்தின் சக்தி 9 எண் கொ ண்டதாக பதிவுசெய்ய‍ப்பட்ட‍து. இதன்சக்தி 1500 ஹிமோஷிமா அணு குண்டுகளுக்கு சமமானதாகும். எனவே இதன் தீவிரத்தன் மையை நீங்களே கற்பனை செய்துபார்க்க‍லாம்.

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்

 

YouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச மென்பொருள்


இணையத்தில் Youtube இலிருந்து காணொளிகளை ன்றும் பல ஆவணங்களை பல்வேறுபட்ட வடிவங்களில் தரவிறக்கவென பல்வேறு இணையத்தளங்கள், மென்பொருட்கள் உள்ளன. ஏற்கனவே எனது இடுகைகளில் அத்தகைய பல தகவல்களை பதிவிட்டுள்ளேன். அத்தகைய ஒரு இணைய வழியிலான மென்பொருள் சம்பந்தமான இணையம் பற்றித்தான் இன்றைய பதிவை இடவுள்ளேன்.
catch YouTube இது ஒரு இணையவழியிலான மென்பொருள் என்று குறிப்பிடலாம். இதிலிருந்து நீங்கள் YouTube காணும் காணொளிகளை பார்த்து மகிழலாம். இதிலுள்ள சிறப்பம்சம் mpg,mov,3gp,mp3,dvd,wav,mp4 போன்ற வடிவங்களில் இந்த தொகுப்புக்களை நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம். நீங்களும் தரவிறக்கி பார்த்து மகிழுங்கள்.

உங்கள் செல்போனில் IMEI நம்பர்

 

உங்கள் செல்போனில் IMEI நம்பர் இருப்பது தெரியும்,.? But ICE நம்பர் இருக்கிறதா?


நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.
சர்வ தேச அளவில் பின்பற்றக்கூடிய ஓரு நல்ல பழக்கத்தை நாமும் பின்பற்றவோம்.!

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்

 

பேஸ்புக்கில் வலம் வரும் போலி முகங்கள்


இணையப் பயணர்களின் இணை பிரியாத பங்காளி தான் இந்த பேஸ்புக் (Facebook) எனப்படும் சமூக வலைத் தளம். இணையத்தைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அநேகமாக இங்கு ஒரு கணக்கு இருக்கும். (இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாளுக்கு நாள் இதன் அங்கத்தவர்கள் பெருக, கூடவே இந்தத் தளம் சம்பந்தமான சர்ச்சைகளும் பெருகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் 24x7 ஆன்லைன் (online) ஆசாமிகளின் ஆட்டம் இருக்கும் வரை இந்தத் தளம் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சரி இனி தலைப்பிற்கு வருவோம்.

இவ்வாறான Fake Profiles எனப்படும் போலி முகங்கள் இணையத்தில் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்போலிகள் பேஸ்புக்கையும் விட்டு வைக்கவில்லை. இது சம்பந்தமான நான் அறிந்த அனுபவ ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கையைப் பொருத்தமட்டில் இப்போலி கணக்குகள் அதிகம் ஆண்களாலேயே உண்டாக்கப் படுகின்றன. (பெண்களுக்கு போலிக் கணக்குகள் இல்லை என்று சொல்ல வரவில்லை).

பொதுவாக பெண்கள் முகம்தெரியாத ஆண்களிடமிருந்து வரும் Friend Request களை Accept பண்ணுவதில்லை. ஆனால் இதே ஒரு முகம்தெரியாத பெண்ணாக இருந்தால் அவர்கள் அவ்வளவாக சிந்திப்பதில்லை. ஆனால் இவ்வாறு பெண்களின் பெயர்களாலேயே ஆண்கள் அதிகம் போலிக் கணக்குகளை வைத்திருப்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஒரு சில சூட்சுமமான ஆசாமிகள் ஒரு படி மேல் சென்று போலியாக உண்மையான ஒரு பெண்ணின் பெயரை வைத்தே போலிக் கணக்கை உண்டாக்கின்றனர். இதனால் அந்தப் பெண்களைச் சார்ந்தவர்களுடன் இந்தப் போலி ஆசாமிகள் இலகுடன் தொடர்புகளை உண்டுபண்ண சந்தர்ப்பம் கிட்டுகிறது. எனவே பெண்களே உஷார்...!!!

அடுத்ததாக இவ்வாறு பெண்கள் பெயர்களில் உண்டாக்கப்படும் போலிக் கணக்குகளால் இவர்கள் ஆண்களையும் ஏமாற்றுகின்றனர். பெண்களின் பெயரில் Request வந்தால் பாய்ந்து சென்று அதை Accept பண்ணும் நபர்களே இதன் மூலம் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். ( எனக்கு தெரிந்த ஒரு நபர் இவ்வாறு ஒரு போலிக் கணக்கினால் ஏமாற்றப் பட்டு குறித்த அந்தக் கணக்கை வைத்திருக்கும் நபரின் கைப்பேசிக்கு ஆயிரக்கணக்கான ரூபாக்களை மீள்நிரப்பி (Reload) விஷயம் தெரிந்த பின் கை சேதப் பட்டது வேறு கதை )

சரி இனி இவ்வாறான போலிக் கணக்குகளிலிருந்து தவிர்ந்து கொள்ள எனக்கு தெரிந்த சில முறைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்;

ஆண்களோ பெண்களோ சரி, யாராவது தெரியாத பெயர்களிடமிருந்து Request வந்தால் உஷாராகி விடுங்கள். அந்தக் கணக்கின் பின்னணியை தேடுங்கள். உண்மையான Profile Pic போடப்பட்டுள்ளதா என கவனியுங்கள். (சிலர் உண்மையான வேறு நபர்களின் படங்களை கொண்டும் போலிக் கணக்குகளை உருவாகின்றனர்.)
குறித்த கணக்கில் எதாவது ஆபாச ரீதியான வாசகங்கள் அல்லது படங்கள் இருந்தால் கொஞ்சம் உன்னிப்பாக இருங்கள். எந்த நபரும் தன் ஆபாச நிலைகளை படம் போட்டு காட்ட விரும்புவதில்லை.
பெண்களே, உங்கள் தோழியின் பெயரிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப் படலாம். இந்த ஆசாமிகள் சூட்சுமமாக பொதுவான நண்பர்கள் (Mutual Friends) பட்டியலைக் கூட்டிக் கொண்டு உங்களுக்கு Request கொடுக்கலாம்.ஆகவே எதாவது சந்தேகம் தோன்றினால் குறித்த உங்கள் நண்பிக்கு அழைப்பை எடுத்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஆண்களே, தெரியாத பெண்கள் பெயரில் வரும் Request களை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டாம். (உங்கள் மனதை கொஞ்சம் கட்டிப் போடுங்கள்
உங்கள் நண்பர்களின் பெயரிலேயே போலிக் கணக்குகள் காணப்படுவதால் சந்தேகங்கள் ஏற்படும் சந்தர்பங்களில் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறான கணக்குகளை இனங்காண எனக்குத் தெரிந்த சில முறைகள்:

குறிப்பாக இந்தக் கணக்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அதிலும் அதிகம் ஆண்களே இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு பெண்ணுக்கு பெண்களை விட அதிகம் ஆண் நண்பர்கள், அதுவும் ஆயிரத்தையும் தாண்டி.. உஷார் ..!!!

ஆபாசமான படங்கள் காணப்படும். அதிலும் அந்த ஆபாசமான படங்களிற்கு கொடுக்கப் பட்டிருக்கும் ஆபாசமான பின்னூட்டல்களிற்கு (comments) அந்த நபரும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருப்பார்.
குறித்த கணக்கின் Profile, இலகுவான பாதுகாப்பு நிலைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது அக்கணக்கின் சுவரை (wall) யாருக்கும் பார்க்கலாம், நண்பர் இல்லாவிடினும்.

குறிப்பாக சிலர் உண்மையான படங்கள் இல்லாததனால் அதிகம் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். (தான் பெண் என்று நிரூபிக்க

பொதுவாக Looking for, Interested in பகுதிகளில் எல்லா தெரிவுகளையும் தெரிவு செய்து இருப்பார். (குறிப்பாக Looking for a relationship)
அடிக்கடி கொஞ்சம் அப்புடி இப்படியான Pages, Groups களில் இணைவாங்க.

அதோட கொஞ்சம் கவர்ச்சியான யாரோ ஒருத்தரின் படங்களை தன் படம் என்று பகிந்து கொள்வாங்க. (இதுக்குப் போய் சில அப்பாவிப் பசங்க Hai, u r soooo beautiful என்று சொல்லும் கொடுமை இருக்கே... அப்பா சொல்லிப் பிரயோசனம் இல்லை

முக்கிய குறிப்பு: இவ்வாறான தன்மை கொண்ட எல்லா கணக்குகளும் போலி என்று சொல்லி விட முடியாது. இப்படியான தன்மைகளுடன் உண்மையான கணக்குகளை வைத்திருப்பவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிரபல நபர்களின் Wall, நண்பர் இல்லாவிடினும் பார்க்கக் கூடிய பாதுகாப்பு தன்மையையே கொண்டிருக்கும். (Open to Everyone)

அது சரி இவ்வளவு சொல்லும் என் கணக்கிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட போலி ஆசாமிகள் குந்தி இருக்கிறார்கள். ஏன் இன்னும் தூக்காம இருக்கிறேன் என்று கேக்குறீங்களா..? பதிவிட அவர்களின் தொழிற்பாடுகளைப் பற்றி அனுபவம் இருக்க வேண்டும் தானே...!

(இங்கு வாசிப்பவரின் இலகு கருதி தேவையான இடங்களில் ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி உள்ளேன். பேஸ்பூக்கிற்கு மூஞ்சிப் புத்தகம் அல்லது முகநூல் என்று தமிழாக்கம் செய்வதில் இஷ்டமில்லை. Yahoo, Google, Orkut... இதுக்கெல்லாம் தமிழாக்கம் கேட்டா வில்லங்கம் தானே...

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்

 


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.

* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.

* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…

* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin)  இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.

 * தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)

 * இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.

இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்.

Dec 28, 2021

 

வலி

வலி


தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி
வயதானால் முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது. இதனால் முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால் மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம் மரத்தும் போகிறது.

இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவே நியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு.காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அவஸ்தைகள் அதிகரிக்கும்.இது தங்களது சர்க்கரை நோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும் தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).

நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும் குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறது என்று அர்த்தம்.இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாக உணர்கிறீர்கள். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின்மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. களிம்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குத்தான் லாபம்.
காரணம் அறிதல்பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப்பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால் வந்த வலியா என்பதைப் பெரும்பாலும் கண்டு பிடித்துவிட முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம
ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை 'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.
ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்தது போல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்க முடியும்.வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகிவிடும்.

சிறப்பு சிகிட்சைமேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான் செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.

ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டு வடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும். ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்வது அவசியமாகிறது.நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி இருக்கும்.அப்போது தான் கால் மற்றும் இடுப்பு வலி குறையும்.

பல்வேறு வலிகள் பற்றி மேலும் அறிய
http://www.spine-health.com/pain-causes-and-treatments-a-z

வலிப்பு நோய் (epilepsy)

 

வலிப்பு நோய் (epilepsy)


            மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

         வலிப்பு நோய் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நோய் அறிகுறிகள் : இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.
  • கை, கால் இழுத்தல்
  • வாயில் நுரை தள்ளுதல்
  • சுய நினைவு மாறுதல்
  • உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)
  • கண் மேலே சொருகுதல்
  • சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்
  • திடிரென மயாக்கமடைந்து விழுதல்
  • கண் சிமிட்டல்
  • நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்)
  • மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோயின் அறிகுறிகள்.
வலிப்பு நோய் எதனால் வருகிறது?
  • மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)
  • மூளையில் காச நோய் (Tuberculoma)
  • தலைக் காயம் (Head Injury)
  • குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)
  • மூளை காய்ச்சல் (Brain Fever)
  • மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது
  • மூளையில் புற்று நோய் (Brain Tumer)
  • உறக்கமின்மை
  • போதைப் பொருள் உபயோகித்தல்
மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

இது பரம்பரை வியாதியா?
     பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.

இந்த நோய் எந்த வயதில் வரும்?
       இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

செய்ய வேண்டிய சோதனைகள்?
    முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,
  • EEG: மூளையின் மின் அதிர்வைப் வரைபடமாக்குதல்.
  • CT Scan: மூளையின் பாகங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.
  • MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையின் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
வலிப்பு நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?
      அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தித்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோதனைகள் மூலம் அறிந்து மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் எனன செய்யலாம்?
  • தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.
  • பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.
  • விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
  • திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம்
  • உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
  • நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.
  • நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் என்ன செய்யக் கூடாது:
  • உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
  • நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
  • தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
  • மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.
  • நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது.
  • அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.
எவ்வளவு காலம் மருந்து உட்கொள்ள வேண்டும்?
     இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடுகிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவையான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறைத்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
       தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்து அவர்களின் ஆலோசனைப்படி மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
       தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் ·போலிக் ஆசிட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தரிக்கும் முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?
    வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.

முறையான சிகிச்சை செய்ய வில்லை என்றால்?
         ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

--ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை,சேலம் - 636 004-

குடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்

 

குடல் புண் (அல்சர்) -சில உண்மைகள்


குடல் புண் என்றால் என்ன?
 நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது.   இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள  மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் 

குடல் புண் எதனால் ஏற்படுகிறது?
  • பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். 
  • புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல்   குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.
  •  சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
  •  கலப்பட உணவு, அசுத்த குடிநீர்,மோசமான சுற்று சூழலாலும்  ஹெலிகோபேக்டர்  பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.
  • அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம்
  • கவலை மன அழுத்தம் காரனமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்
குடல் புண் எத்தனை வகைகள்?
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
  1. வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .(Gastric ulcer)
  2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.(Duodenal ulcer)
பொதுவாக இரண்டையும் சேர்த்து பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்பார்கள்

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?
 வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும்  வலியிருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர்.மாறாக வலி அதிகரித்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர்.
வாந்தி ,குமட்டல் ,வாயுக்கோளாறு,உடல்  எடை குறைதல் சாப்பிடும் விருப்பமின்மை, காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வும்  இருந்தால் குடல் புண்ணுக்கான அறிகுறி.இந்தப்  அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப் படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.
சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலி காலை உணவுக்கு  முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக இருக்கும்..சில நேரங்களில் அமில நீர் வாந்தியாவதும் உண்டு.
 குடல் புண் வலியோடு மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் இல்லாவிட்டாலும் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.
ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வு  குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

 தேவைப்படும் டெஸ்ட் என்ன?
குடல் புண் இருப்பதாக தோன்றினால் வாய் வழியாக் குழாய் செலுத்தி செய்யப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் திசு மாதிரி எடுத்து (பயாப்ஸி) சோதனை செய்து அது எந்த மாதியான புண் என உறுதிப் படுத்திக்கொண்டு அதற்கேற்ற சிகிட்சை செய்வது ‘நல்லது.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.   புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப் படிதான் சாப்பிட வேண்டும்.

மருத்துவம் செய்யாவிட்டால்?
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும்  ஏற்படும். இதனால் , கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்,   ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரணி சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து , வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..
நாள் பட்ட அல்சர் புற்று நோயாக மாறுமா?
சாதாரணமாக டியோடினல் அல்சர் அல்லது காஸ்ட்ரிக் அல்சர் புற்று நோயாக மாறுவதில்லை ஆனால் எச் பைலோரி கிருமிகள் நீண்ட நாட்கள் வயிற்றில் தங்கி இருந்து அழற்சி ஏற்பட்டு முற்றிய நிலையில்  (Chronic Gastiritis) 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து புற்று நோயாக மாறுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். ஜாக்கிரதை

செய்யக்கூடாதவை 
  •  புகைபிடிக்கக் கூடாது.
  • மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
  • அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
  • பட்டினி கிடக்ககூடாது.
  • காரம் ,எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும் 
  • பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
  • சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
  • சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
  • இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
  • மனநிலையை தடுமாற விடக் கூடாது.
  • அவசரப்படக் கூடாது.
  • கவலைப்படக் கூடாது.
  • மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
  • சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள்  படுக்ககூடாது
செய்ய வேண்டியவை
  • குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
  • அதிகம் தண்ணீர்  குடிக்க வேண்டும்.
  • அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
  • தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
  • இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
  • இருக்கமாக உடை அணியக் கூடாது.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
  • யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
  • மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்சியோடு இருக்க வேண்டும்.
  • அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
  • சுகாதாரத்தை பேண வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
பொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
  • சத்தான சரிவிகித உணவு.
  • குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
  • காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.
  • வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.
  • மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
  • பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
  • பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
  • பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

 


இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?



இரத்தத்தில் சேரும் அதிக கொழுப்புச் சத்து ரத்தக் குழாய்களை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இ ரத்தத்தில் கொழுப்பு சத்து சேருவதற்கும் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள், கீழ்க்கண்டவாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்:-
  • எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
  • கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்" போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.
  • பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.
  • ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.
  • தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
    தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது.
    தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.
  • எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
  • அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது.
  • முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

    ‘சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாயந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unssaturated Fat) முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டொனால்ட் மெக்மைரா.
  • இதய நோயாளிகள் கோழிக்கறி சாப்பிடலாம், ஆனால் அதை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்டு சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே .
  • மாமிசத்திலுள்ள தோல்கள் மற்றும் கொழுப்பை, சமைப்பதற்கு முன்னர் நீக்கிவிட வேண்டும்
  • மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். கொழுத்த மீன் சாப்பிடுவது கொலெஸ்ட்ரால், ரத்த அழுத்தம், ரத்த உறைவதை பெருமளவு குறைத்து இதயத்தைப் பாது காக்கிறது. குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது மீன் சாப்பிட வேண்டும்.
  •  சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் .சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
  •  மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.
  • கொட்டை வகைகள்: முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். 
  • பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவில் அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருக்கிறது. இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது
  • பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.
  • ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்
  • எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.
  • கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.
  • டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.
  • பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.
  • வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.
  • உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.
  • இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.
  • ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.
  • வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது -நல்லது
உணவு வகையில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு

* மூளை - 2000 (mg /100gm)
* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)
* சிறுநீரகம் (Kidney)-375 (mg /100gm)
* கல்லீரல் (Liver)-300 (mg /100gm)
* வெண்ணெய் -250 (mg /100gm)
* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)
* லோப்ஸ்டெர்-200 (mg /100gm)
* இறால் (Shrimp)-170 (mg /100gm)
* இருதயம்-150 (mg /100gm)
* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)
* இளம் ஆட்டிறைச்சி (Lamb) -70 (mg /100gm)
* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)
* கோழியிறைச்சி-62 (mg /100gm)
* பாலாடைக் கட்டி (chedder cheese) -100 (mg /100gm)
* குழைவான பாலாடைக்கட்டி (cheese Spread) -70 (mg /100gm)
* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)
* Margarine (2/3 விலங்கினக் கொழுப்பு, 1/3 தாவர கொழுப்பு)-65 (mg /100gm)
* மயோனஸ் (1 மேசைக் கரண்டி)-10 (mg /100gm)
* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)
* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)
* நிறைக் கொழுப்புப் பால்பொடி (1 குவளை)-85 (mg /100gm)
* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)
* பிரெட்-1 (mg /100gm)
* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)
* சாக்லேட் பால்-90 (mg /100gm)

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

 

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-1

நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-3

முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.

Also Read:  ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைக்க
 
அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.

hardlywork-app-use-facebook-in-excel-sheet-2

1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)
2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும். 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...