May 14, 2012

தீராத தலைவலிக்கு


தீராத தலைவலிக்கு
*********************
தினமும் காலையில் சிறிது சுக்கு, மிளகு திப்பிலியை தூள் செய்து பசும்பால் அல்லது ஆட்டுப்பாலுடன் கலந்து சாப்பிடவும்.
பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வேப்பெண்ணையை தலையில் சேர்த்து சீயக்காய்த்தூள் உபயோகித்து குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி புகை போட்டு தலையைக் காய வைக்க வேண்டும்.பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கழுத்திற்கு வேப்பெண்ணையைத் தடவி தவிடு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அல்லது

காலையில் துளசி இலை ஜந்து, வேப்பிலைக் கொழுந்து ஜந்து, மிளகு ஒன்று இவற்றைச் சேர்த்து சாப்பிடவும்.
வெந்நீர் ஒரு டம்ளர் காய வைத்து, அது ஆறிய பின் ஒரு எலுமிச்சம்பழச்சாறு, ஒரு ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றிக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஆட்டுப்பால், அவல், கொடிவேர்க்கடலை மூன்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும்.
கழுத்தின் பின்பகுதி மற்றும் உடல் முழுக்க வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், ஒரு நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றைக் கலந்து தேய்த்து வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும். அதன்பின் எலுமிச்சம்பழத்துடன் பாசிப்பருப்புப் பொடியைச் சேர்த்து தேய்த்துக் குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...