May 19, 2012

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் அறிதுயில் மருத்துவம் !


நோய்களைக் குணப்படுத்துவதில் ஹிப்னாசிஸ் என்னும் அறிதுயில் மருத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. இந்த அறிதுயில் மருத்துவம் பொதுவாக அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பும் நோயாளிக்கு அளிக்கப்படுகிறது. இதனால் நோயாளி வலியும் கவலையும் இல்லாமல் விரைந்து குணமாகிறார்.

250 ஆண்டுகளுக்கு பிறகு விரைந்து குணப்படுத்தும் மருத்துவ முறையாக ஹிப்னாசிஸ் இடம்பிடித்துள்ளதாம். பொது நிகழ்ச்சிகளில் மேஜிக் செய்பவர் எல்லோரையும் எளிதில் அறிதுயிலில் ஆழ்த்திவிடுவதால் தான் இன்னும் மேஜிக் என்பது நம்பமுடியாத விஷயமாக இருந்து வருகிறது. மருத்துவத்திலும் இதே அறிதுயில் நம்ப முடியாத அளவுக்குப் பலன்களைத் தந்து இதன்மதிப்பை அதிகரித்துவிட்டது.


ரோமில் உள்ள ஸான் பைட்டோ மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் அந்தோனினோ ஸோடாரோ என்பவரும், ரோமின் டார் வெர்கெட்டா பல்கலைக்கழகத்தின் அறுவைச்சிகிச்சை நோய்கள் பற்றிய நோய்க்குறி ஆய்வு டாக்டர்களும் அறிதுயில் முறை மருத்துவம் மிகவும் பயனுடையதாக உள்ளதை உறுதி செய்துள்ளனர்.


“இது மாயவித்தை அல்ல. எல்லாப் பிரிவு மருத்துவ முறைபோல கவனமாகப் படிக்க வேண்டிய ஒன்றுதான் ஹிப்னாசிஸ். அறுவைச் சிகிச்சை செய்யும் கத்தி எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிவதைப்போல, இந்த அறிதுயில் மருத்துவத்தையும் பயன்படுத்த டாக்டர் நன்கு அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ஸோடாரோ.


இயற்கையாகவே ஹிப்னாசிஸ் முறையால் நோயாளி உடல் ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் குணமாகிவிடுவார். ஹிப்னாசிஸ் அந்த அளவுக்கு உடலையும் மனதையும் பாதிக்கிறதாம். குணப்படுத்துகிறதாம்!


ஹிப்னாசிஸ் எப்படி வேலை செய்கிறது?


டாக்டர் நோயாளியைப் பார்த்து, என் கண்களையே உற்றுப்பார் என்று சொன்னால் பல நோயாளிகள் சோர்ந்து போய்விடுவார்கள். அதற்குப் பதிலாக மருத்துவர்கள் ஏதேனும் ஓர் ஓவியத்தையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ உற்று நோக்கிக் கவனம் சிதறாமல் பார்க்கச் சொல்வார்கள். நோயாளி ஒருமுகப்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கும்போது டாக்டர் நோயாளியின் மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளையும் பிற சிந்தனைகளையும் அழித்த துடைத்து நீக்கி விடுவார். பிறகு நோயாளியிடம் மிருதுவான குரலில் ஓய்வு அளிக்கும் விதத்தில் மெதுவான சத்தத்துடன் டாக்டர் பேசுவார்.


சில நிமிடங்களில் அல்லது பெரும்பாலும் சில நிமிடங்களுக்குள்ளேயே நோயாளியின் மனது ஓய்வு நிலையை எட்டிவிடும். டாக்டர் சொல்வதையும் ஏற்றுக்கொண்டுவிடும். அப்போது அறிதுயில் முறை சரியானபடி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.


அறிதுயில் நிலைக்கு நோயாளி வந்தவுடனேயே அவருடைய மூளையில் உள்ள நியூரோ டிரன்ஸ்மீட்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும். ஒரு நரம்பிலிருந்து இன்னொரு நரம்பணுவிற்குத் தொடர்ச்சியாக இயக்கத்தூண்டுதல் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும். நாடி நரம்புகளில் எழும் இந்த அலை போன்ற தூண்டுதலால் உடல்நலம் சரியாகும். ஹிப்னாஸிஸோ இயற்கைக் கோளாறுகளை கட்டுப்படுத்தும் அளவில் செயல்பட்டு, படைக்கும் திறமையுடன் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மைகளை வாரி வழங்கும். முக்கியமாக, மயக்கமாக மருந்து கொடுத்து உணர்விழக்கச் செய்தது போல நோயாளி இருப்பதால் உடலுக்குள் உள்ள இயக்க அமைப்புகள் சரியாக பழுது பார்க்கப்பட்டு நல்ல நிலைக்கு வந்துவிடும். இதனால் நோயாளி உடலில் வலியின்றி இருப்பார். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இந்த அறிதுயில் சிகிச்சை அளிக்கவேண்டும்.


ஹிப்னாசிஸ் சிகிச்சையின் மூலம் உண்மையில் உடல் நோயையும் உடம்பு வலியையும் இயற்கையாகக் குணமாக்கும் இயற்கைப் பொருட்களை மூளையில் இருந்து சுரக்கச் செய்கிறார்கள்.


மூளைக் கோளாறு, பயங்கள், நரம்புக்கோளாறு, மனக்கவலை, ஒவ்வாமை நோய்கள் முதலியவற்றை அறிதுயில் சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.


ஸான் பைட்ரோ மருத்துவமனையில் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அறுவைச் சிகிச்சை நோயாளிகளை இந்த ஹிப்னாசிஸ் மருத்துவம் மூலம் குணப்படுத்தியுள்ளனர்.


அறுபது சதவிகித நோயாளிகள் அறிதுயில் சிகிச்சையின் மூலம் விரைந்து குணமாகிவிட்டார்கள். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே! மொத்த சிகிச்சையாளர்களில் 12% பேர்களுக்கு இந்த சிகிச்சை பயனளிக்கவில்லை.


இன்று, நோயாளியால் நன்கு மூச்சுவிட முடிகிறதா என்பதை உடனே தெரிந்துகொள்ளச் சில நிமிடங்களில் ஹிப்னாசிஸ் செய்து கண்டுபிடிக்கின்றனர். நோயாளி அந்த நேரத்தில் ஒரே பொருள் பற்றி ஒருமுகமாகச் சிந்திப்பதால் மூளை, நரம்பணுக்களில் செய்தியை உடனே அனுப்புவதால் நோயாளி முதல் சந்திப்பிலே நாடி நரம்புகளில் அதிர்வலைகள் ஏற்பட்டுக்குணம் பெற்று விடுகிறார்.


கண்களை மூடிக்கொண்டு பத்து நிமிடங்கள் மனக்கண்ணால் உங்கள் தொப்புளையே பார்த்துக்கொண்டிருந்தால் அறிதுயில் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் நன்மைகளில் சிறிதளவேனும் உங்களுக்கும் கிடைக்கும்.


கோபத்தை உங்கள் சொத்தாக மாற்றமுடியும்!


நியூயார்க்கை சேர்ந்த மரியம்மிடல்மேன் என்ற மனோதத்துவ நிபுணர் கோபத்தை உடனடிச் சொத்தாக மாற்ற சில வழிகளைக் கூறியுள்ளார். அவை :


1. முதலில் உங்கள் மீது ஏற்பட்ட கோபத்திற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் யார் மீதும் உடனடியாகக் கோபம் கொள்ளாதீர்கள்.


2. அப்படியே கோபம் வந்தால் முதலிலேயே நீங்கள் தடித்த வார்த்தைகளைக் கொட்டிவிடாதீர்கள். ‘உங்களுடன் எனது நல்லுறவு நீடிக்க வேண்டும். அதற்காகத்தான் உங்கள் மீது கோபம்’ என்று மென்மையாகச் சொல்லுங்கள். உங்கள் கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதிரொளி பேசினால் மனதிற்குள் உங்களுக்குப் பிடித்தமான பாட்டை ‘ஹம்’ செய்து அமைதியாக இருங்கள்.


3. கண்டவற்றை எல்லாம் பேசாதீர்கள். உனக்கு அப்படிச் செய்தேன்; இப்படிச் செய்தேன் என்று கோபப்படாமல், கோபத்திற்கான காரணத்தை மட்டும் தெளிவாகச் சொன்னால் போதும். விஷயத்திலிருந்து விலகாதீர்கள்.


4. கோபத்தினால் தொடர்ந்து வரும் துன்பங்களை அனுபவஸ்தர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கோபத்தினால் பொருட்களுடன் மனங்களும் உடைந்துவிடும். இதனால் கோபப்படும் போது அமைதியை இழக்காமல் இருக்க கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள்.


5. தாங்க முடியாது கோபம் ஏற்படும்போது வீட்டைவிட்டு வெளியேறுவது நல்லது அல்ல. வீட்டிலேயே ஒரு நோட்டில் எதையாவது எழுத ஆரம்பியுங்கள்.


6. உங்கள் கோபம் அல்லது பிறர் உங்கள் மீது கொண்டுள்ள கோபம் உங்களுக்கு எழுச்சியூட்டியுள்ளது எனில், முக்கியமான வேலைகளை அந்த நேரத்தில் தொடர்ந்து பாருங்கள். கோபத்தின் போது சக்தி அதிகம் வெளிப்படுகிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் வேலைகளை நீண்ட நேரம் பாருங்கள். அல்லது புதிய வேலை ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு பாருங்கள்.


7. கோபத்தை போது உங்களின் முக்கியமானப் பணிகளை அமைதியான மனதுடன் உறுதியாகப் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இலாபம் அதிகரிக்கும். நிதானம் இழந்தால் சிறிய விஷயங்களிலும் அடிதடி, மனஸ்தாபம் என்று ஆகிவிடும். சீற்றம் அதிகரிக்கும் போது வார்த்தைகளைக் கொட்டாமல் கட்டுப்படுத்தும் முறையை மட்டும் முதலில் கவனமாகப் பின்பற்றி வாருங்கள். மற்றதெல்லாம் மிக நன்றாக அமைந்துவிடும். கோபம் வந்தால் சாதனை புரியும் மனிதனாகவும் நீங்கள் உயர்ந்து விடுவீர்கள்.

1 comment:

  1. please intimate the self hypnosis specialists in tamil nadu

    ReplyDelete

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...