May 7, 2012

பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்


பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்
காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்.

தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்..

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

தந்தத்தால் ஆன அழகான அலங்காரப் பொருள்கள் நாளடைவில் மஞ்சள் நிறமடைந்து மங்கி விடும் இதற்கு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அப்பொருள் களின் மீது வைத்துஅழுத்தி தேய்த்தால் மஞ்சள் நிறம் போய் விடும் அசல் நிறம் கிடைக்கும்..

குடையில் ஒழுகும் படியான சிறு சிறு ஒட்டைகள் இருக்கா? கறுப்பு நிறப் பெயிண்ட்டை ஒரிரு முறை ஓட்டைகளில் அடைக்கவும். அரை மணி நேரம் காய வைத்து விட்டுப் பின் உபயோகப் படுத்தினால் குடை ஒழுகாது. பூப்போட்ட கலர் குடைகளாக இருந்தால் நேச்சுரல் கலர் நெயில் பாலிஷை ஓரிரு முறை தடவலாம்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

ரவையை வறுத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாள்களுக்கு பூச்சி புழுக்கள் வராமலிருக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...