Jul 18, 2012

சைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம் -2 --இய‌ற்கை வைத்தியம்


அதாவது அம்மான்பச்சரிசி என்னும் சிறு செடியினம் ஒன்று உ‌ள்ளது. இதன் தண்டுப்பகுதியை உடைத்தால் பால் வரும். அந்த பாலை கால் ஆணி உ‌ள்ள இடத்தில் சுமார் 20 முதல் 30 நாட்க‌ள் வரை தடவி வந்தால் முழுமையாக குணம் கிடைக்கும். இது எனது அனுபவ வைத்தியத்திற்கு நல்லதொரு சாட்சி. என்னுடன் பணிபுரியும் சிலருக்கு மூலம், சைனஸ் கோளாறுகளுக்காக சில மருந்துகளை செ‌ய்து கொடுத்து‌ள்ளேன். ஏற்கனவே எனக்கு வந்த சைனஸ் கோளாறுக்காக நான் செ‌ய்துகொண்ட மருத்துவம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிலருக்கு உ‌ள்ளுக்கு சாப்பிடும் மருந்து தயார் செ‌ய்து கொடுத்தேன். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, ஓமம், ஆகியவற்றை நன்றாக பொடி செ‌ய்து கொடுத்தேன். நல்ல நிவாரணம் கிடைத்தது.

மூல நோயால் அவதிப்பட்ட 2 பேருக்கு சாப்பாட்டில் கலந்து உண்ணும் பொடி ஒன்றை தயார் செ‌ய்து கொடுத்தேன். வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை போன்றவற்றை இளம் வறுப்பாக வறுத்து பொடி செ‌ய்து கொடுத்தேன். கூடுதலாக, துத்து இலையை கொடுத்து அதை விளக்கெண்ணெ‌ய்யில் வதக்கி பொறுக்கும் சூட்டில் வைத்து கட்டி வர சொன்னேன். இப்போதெல்லாம் அவருக்கு மூலத்தின் தொல்லையே கிடையாது.

அடுத்ததாக, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணிக்கு உடல்எடை கூடி அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொ‌ள்ளுப்பயறை ஒன்றிரண்டாக உடைத்து அதனுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய இந்துப்பு என்னும் பொருளை கலந்து கொடுத்தேன். இதை சாப்பிட்டு வந்த அவர் 20, 30 நாட்களில் நன்றாக எடை குறைந்திருப்பதாக கூறினார். இத்துடன் கூடுதலாக நெல்லிவற்றல், கடுக்கா‌ய் தோல், தான்றிக்கா‌ய் தோல் ஆகியவற்றை சம் அளவு எடுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொடுத்தேன். இதை இரவு உறங்கப்போகுமுன் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறை குடிக்கும்படி சொன்னேன். இதனால் அவருக்கு வயிற்றில் உ‌ள்ள பாரம் குறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக சொன்னார். 10 நாட்களில் 5 கிலோ எடை குறைந்ததாக சொன்னார். இடுப்பின் பின்பகுதி பெருத்து காணப்பட்ட அவருக்கு இப்போது சிறுத்து காணப்படுகிறது. இதை ப‌ள்ளி மாணவி ஒருத்திக்கும் கொடுத்து நல்ல பலனை அடைந்தேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சிலருக்கு எனது அனுபவத்தில் நான் கண்ட ஒரு மருந்து கைமேல் பலனை தந்திருக்கிறது. பெரிய நெல்லிக்கா‌ய் சாறு 10 மில்லி, பாகற்கா‌ய் சாறு 25 மில்லி எடுத்து இரண்டையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சொன்னேன். இப்படி 40 நாட்க‌ள் சாப்பிட்டு வந்த 7 பேருக்கு சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே அலோபதி மருத்துவத்தில் அவர்க‌ள் சாப்பிட்டு வந்த மாத்திரையை குறைத்துவிட்டு இயல்பாக வாழ்கிறார்க‌ள். சிலர் விரும்பும்போது இனிப்பு பண்டங்களை சாப்பிட்டும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்கிறார்க‌ள். சர்க்கரை நோ‌ய்க்காக நான் சொன்ன இந்த வைத்தியத்திற்காக இதுவரை நான் யாரிடமும் காசு வாங்கவில்லை எ‌ன்‌கிறா‌ர் மூ‌லிகை வை‌த்‌திய‌ர் தமிழ்குமரன். அவரை 95514 86617 எ‌ன்ற தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...