Aug 6, 2012




செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி: முதல் படத்தை எடுத்து அனுப்பிய
அமெரிக்காவின் ரோவர் விண்கலம் சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் புவி வட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது.

இந்த கிரகம் தொடர்பாக 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுக்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதன் மூலம், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம் ‌குறித்து மு‌ழுமையாக ஆய்வு செய்ய இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அதுதொடர்பான தகவல்களை நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்ப இருக்கிறது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன், தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி.


க்யூரியாசிட்டி: ரோவர் விண்கலத்தில் க்யூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த க்யூரியாசிட்டி வாகனத்தில் அதிநவீன தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 6 சக்கரம் வாகனம் ‌போன்று வடிவ‌மைக்கப்பட்டுள்ள இந்த க்யூரியாசிட்டியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன.

செவ்வாயில் இருக்கும் மண்ணை ஆய்வு செய்வதற்கு தேவையான ட்ரில்லர், மண் பரிசோதனை சாதனம் உள்ளிட்ட அனைத்து வகை அம்சங்களும் இந்த க்யூரியாசிட்டியில் உள்ளது.

க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும்.

















  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...