Sep 19, 2012

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு

மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது: சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத், செப். 20 -
 
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவே காரணம். ஆளும் காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எந்த வலிமையையும் இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள நிலையில் மூன்றாவது அணி அமைவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...