Oct 28, 2012

மந்திரி சபை விரிவாக்கம்: ஆந்திராவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
இன்று நடந்த மத்திய மந்திரி சபை மாற்றத்தின் போது 22 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த 22 பேரில் பல்லம் ராஜு, நடிகர் சிரஞ்சீவி, ஜெயசூர்ய பிரகாஷ்ரெட்டி. சர்வேஸ் சத்ய நாராயணா, பொரிசா பல்ராம் நாயக், கிருபா ராணி கில்லி ஆகிய 6 பேர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே மத்திய மந்திரிசபையில் அதிக மந்திரிகளை அதாவது 8 மத்திய மந்திரிகளுடன் ஆந்திரா முதல் இடத்தில் இருந்தது. இன்று ஆந்திராவுக்கு மேலும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இன்று ஆந்திராவை சேர்ந்த மேலும் 6 பேர் மத்திய மந்திரி பதவி ஏற்றிருப்பதால் அந்தமாநிலத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
 
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் கடும் போட்டியை சமாளிக்கவே சோனியாகாந்தி ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு மத்திய மந்திரி பதவியை வாரி, வாரி வழங்கி இருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...